search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • சிறுமியை பெற்றோர் சிறுமியின் பெரியம்மா வீட்டில் விட்டு வெளியூருக்கு சென்றனர்.
    • போலீசார் சாமிநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி.

    சிறுமியை சம்பவத்தன்று அவரது பெற்றோர் சிறுமியின் பெரியம்மா வீட்டில் விட்டு வெளியூருக்கு சென்றனர். இதையடுத்து சிறுமி, தனது பெரியம்மாவுடன், அவரது வீட்டில் இருந்தார்.

    சிறுமியின் பெரியம்மா வீட்டின் அருகே சாமிநாதன்(வயது68) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி தனது பெரியம்மா வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சாமிநாதன், சிறுமியிடம் நைசாக பேசி, தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சாமிநாதன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியான சிறுமி, அவரிடம் இருந்து தப்பி பெரியம்மா வீட்டிற்கு வந்து, நடந்த சம்பவங்களை கூறி அழுதார்.

    இதை கேட்டு அதிர்ச்சியான சிறுமியின் பெரியம்மா சம்பவம் குறித்து கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சாமிநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.32.20 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
    • மனுநீதி நாள் முகாமில், தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபா ன்மையினர் நலத்துறையின் சார்பில், இதுவரை 529 பயனாளிகளுக்கு கிராமப்புற பெண் கல்வி ஊக்க த்தொ கையாக ரூ.3.26 லட்சமும், 540 பயனாளி களுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.32.20 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர 431 பயனாளி களுக்கு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலும், 129 பயனாளிகளுக்கு கிறுஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ரூ.22 லட்சம் மதிப்பிலும், 4,898 பயனாளி களுக்கு ரூ.152.28 லட்சம் மதிப்பில், கல்வி உதவி த்தொ கை வழங்கப்பட்டுள்ளது.

    2021-2022-ம் கல்வியாண்டில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் 1,294 மாணவி யர்களுக்கு சார்ந்த 1,082 மாணவர்களுக்கு மற்றும் என மொத்தம் ரூ.121 லட்சம் மதிப்பில் 2,376 மிதிவண்டி களும், மிக பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் இனத்தைச் சார்ந்த ஏழை, எளிய 68 மகளிருக்கு ரூ.3.76 லட்சம் மதிப்பில், தையல் எந்திரம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    தையல் எந்திரம் பெற்று பயனடைந்த பயனாளி மேக்லின் சத்யபிரியா கூறியதாவது:-

    நான் எனது கணவருடன் குன்னூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நான் குன்னுார் உப்பாசி எம்.பி.ஏ பாலிடெக்னிக்கில் தையல் பயிற்சி பெற்றேன். எனது ஊரில் நடந்த முகாமில் தையல் எந்திரம் வேண்டி விண்ணப்பித்தேன்.

    அதனைதொடர்ந்து, எனக்கு பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் சார்பில், அதிகரட்டி பேரூராட்சி காட்டேரி கிராமத்தில், நடந்த மனுநீதி நாள் முகாமில், தையல் எந்திரம் வழங்கப்பட்டது. இதன் மூலம் தையல் தொழில் செய்து வருகிறேன். இதில் வரும் வருமானம் எனக்கும், எனது குடும்பத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னைப் போன்றவர்கள் சுய தொழில் செய்து வாழ்க்கையில், முன்னேற உதவிய முதல்-அமைச்ச ருக்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தையல் இயந்திரம் பெற்ற ஹரிப்ரியா கூறுகையில், நான் கோத்தகிரியில், உள்ள காஸ்ட்லி எஸ்டேட்டில் வசிக்கிறேன். எனது கணவர் சிவா லாரி டிரைவராக உள்ளார். எங்கள் குடும்பம் எளிமையான குடும்பம். முதல்-அமைச்சரின் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்படுத்தப்படுவதை உறவினர்கள் மூலம் தெரிந்து கொண்ட நான், அதற்காக விண்ணப்பம் செய்திருந்தேன். இதனை பரிசீலனை செய்த அதிகாரிகள், எனக்கு விலையில்லா தையல் எந்திரத்தினை வழங்கினர். இதன் மூலம் நான் துணியாலான பைகளை தைத்து, வாழ்வாதாரத்தில் முன்னேறி வருகிறேன். எங்களின் இந்த முன்னேற்றத்திற்கு உதவிய முதல்-அமைச்சருக்கு நன்றி என்றார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசு, பிற்படு த்தப்பட்ட, மிகப்பிற்படு த்தப்பட்ட/ சீரமரபினர் மற்றும் சிறுபா ன்மையின சமூகத்தினர் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, வாழ்வாதராம் பொருளா தாரம் முன்னேற்றம் அடைந்த நீலகிரி மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    • சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
    • விதிகளை மீறும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறை அபராதம் விதிக்க வேண்டும்.

    ஊட்டி

    ஊட்டி கூடலூர் சாலையில் தலைகுந்தா பகுதியில் அமைந்துள்ள பைன் மரக் காடு, பலநூறு ஆண்டுகள் பழமையான பைன் மரங்களின் தோப்பாகும்

    இந்த இடம் திரைப்படங்கள் மூலம் பிரபலமான சுற்றுலா தலம் ஆகும். இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்

    மேலும் காமராஜர் அணை உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் விதியை மீறிய செயலில் ஈடுபட்டு வருகின்றனர் ஆபத்தை உணராமல் புகைப்படங்களை எடுப்பது அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள பாறையின் மேல் அமர்ந்து புகைப்படம் எடுப்பது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    உயிர் சேதத்தை தவிர்க்கும் வகையில் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க வனதுறை தடை விதிக்கும் அறிவிப்பு பலகைகளை வைப்பதோடு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

    • முதுமலை புலிகள் காப்பக கோப்பையில், 1,200 மீ., துாரம் இலக்கை நோக்கி, 8 குதிரைகள் ஓடின.
    • கோடை மழையால், 5 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு குதிரை பந்தயம் ஏப்., 1 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

    நேற்றைய குதிரை பந்தயத்தில், முதுமலை புலிகள் காப்பக கோப்பையில், 1,200 மீ., துாரம் இலக்கை நோக்கி, 8 குதிரைகள் ஓடின. 'கிங் சன்' என்ற குதிரை, 1.22 நிமிடத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர், ஜாக்கிக்கு முதுமலை புலிகள் காப்பக கோப்பையை, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா பங்கேற்று வழங்கினார். ஊட்டியில் திடீரென பெய்த கோடை மழையால், 5 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    • மாநில அளவிலான மூத்தோர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடந்தது.
    • அந்த அணிகளுக்கு இடையேயான போட்டி நிறுத்தப்பட்டது.

    தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், மாநில அளவிலான மூத்தோர்களுக்கான கூடைப்பந்து போட்டி ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

    இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 38-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு உள்ளன. இந்தநிலையில் நேற்று கோவை-மதுரை அணிகள் மோதியது. மதுரை அணி வீரர் நேரு (வயது 60) விளையாடி கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதனால் வீரர்கள் சோகம் அடைந்தனர். மேலும் அந்த அணிகளுக்கு இடையேயான போட்டி நிறுத்தப்பட்டது.

    • அந்த பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்தன.
    • ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் பகுதி உள்ளது.

    இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மதியத்திற்கு குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த இடி, மின்னல் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.

    தொடர்ந்து, இடி, மின்னலின் சத்தம் அதிகமாகவே இருந்தது. அப்போது, தனியாருக்கு சொந்தமான அந்த எஸ்டேட்டில் பயங்கர வெடி சத்தத்துடன் மின்னல் தாக்கியது.

    சிறிது நேரத்தில் அந்த பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்தன.

    தீ வேகமாக அந்த பகுதி முழுவதும் பரவி பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியை புகைமூட்டமாக காணப்பட்டது.

    இதை பார்த்து அச்சம் அடைந்த பொதுமக்கள், தோட்டத்தில் இந்து மோட்டார் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    • 78-வது ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கேரள சேவா சங்கத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.

    குன்னூர்,

    குன்னூரில் தந்தி மாரியம்மன் கோயில் 78-வது ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது.

    குன்னூா் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை தோ்த்திருவிழாவை ஒட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது. குன்னூா் வி.பி. தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பஞ்ச வாத்தியம், சிங்காரி மேளம் முழங்க, பூ காவடி, பால் காவடி, தேவி ரக்ஷா மற்றும் முத்துக் காளைகளுடன் அபிஷேக பொருள்கள் ஊா்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு மாரியம்மனுக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமானோா் அம்மனை வழிபட்டனா். முத்துபல்லக்கு ஊர்வலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மிகவும் கவர்ந்தது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கேரள சேவா சங்கத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.

    • வனப்பகுதிகளில் இருந்து பழங்களை உண்பதற்காக யானைகள் அதிகம் வர தொடங்கியுள்ளன.
    • காட்டு யானை ஒன்று பலா தோட்டத்திலேயே தஞ்சமடைந்துவிட்டது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த தட்டப்பள்ளம் பகுதியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான சாலையில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் நீடித்த வண்ணம் உள்ளது.

    தற்போது பலாப்பழ சீசன் என்பதால் முள்ளூர் பகுதியை சுற்றியுள்ள பலா தோட்டங்களில் பலாப்பழங்கள் மரங்களில் காய்த்து தொங்குகின்றன. இதனால் இப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து பழங்களை உண்பதற்காக யானைகள் அதிகம் வர தொடங்கியுள்ளன. மாதக்கணக்கில் அப்பகுதியிலேயே சுற்றிவந்த காட்டு யானை ஒன்று பலா தோட்டத்திலேயே தஞ்சமடைந்துவிட்டது.

    பள்ளி விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வர தொடங்கியுள்ள நிலையில் இப்பகுதியில் உலா வரும் காட்டு யானைகளை பார்க்க வாகனங்களை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்று விடுகின்ற னர்.

    இதேபோல் நேற்று மாலை முள்ளூர் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானையை படம்பிடிக்க சுற்றுலா பயணிகள் சிலர் வாகனத்தில் இருந்து இறங்கி யானையின் மிக அருகில் சென்றனர். அந்த யானை அவர்களை துரத்தியது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றதால் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை.

    சுற்றுலா வரும் பயணிகள் எந்த இடங்களில் யானைகள் இருக்கிறது என்பது தெரியாமல் சாலைகளின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி சுற்றிப்பார்க்க சென்று விடுகின்றனர். எனவே யானைகள் உலா வரும் இது போன்ற பகுதிகளில் வன பாதுகாவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு வழிவகுக்க வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • பொதுநிதி செலவினம் போன்ற பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மங்குழி பகுதியில் மூலதன மானிய நிதிதிட்டத்தின் கீழ் பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சமும், பொது நிதியில் இருந்து ரூ.26 லட்சமும் என மொத்தம் ரூ.1.13 கோடி மதிப்பில் 35 மீட்டர் நீளம் மற்றும் 5.15 மீட்டர் அகலத்தில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியினையும், வேடன் வயல் பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் 12 மீட்டர் நீளம் மற்றும் 6 மீட்டர் அகலத்தில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியையும், தலைகுந்தா, கல்லட்டி, தெப்பக்காடு சாலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.199 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியையும் நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜல்ஜீவன் மிஷன், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பொதுநிதி செலவினம் போன்ற பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, கூட லூர் வருவாய் கோட்டாட்சியர் முகம்மது குதுரதுல்லா, கூடலூர் நகராட்சி ஆணை யாளர் பிரான்சிஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பொறியாளர் ஆல்துரை, கூடலூர் தாசில்தார் சித்த ராஜ், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 நிமிடத்திற்கும் மேலாக புலி ஒன்று அப்பகுதியில் உலா வந்த வண்ணம் இருந்துள்ளது.
    • புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியை ஒட்டிய வனப்பகுதி தமிழ்நாடு கர்நாடகாவை இணைக்கும் ஒரு முக்கிய வனப்பகுதியாக உள்ளது.

    இந்த வனப்பகுதியில் அதிகப்படியான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.

    காட்டு எருமை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் அடிக்கடி சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவது வாடிக்கையான ஒன்று.

    ஆனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டும் வாழக்கூடிய புலியின் நடமாட்டம் கோத்தகிரி கோடநாடு வனப்பகுதியில் தற்போது தென்பட்டுள்ளது.

    நேற்று மாலை அப்பகுதியில் நிலஅளவை பணிசெய்து கொண்டிருந்த ஊழியர்கள் பணிமுடிந்து வரும் போது சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக புலி ஒன்று அப்பகுதியில் உலா வந்த வண்ணம் இருந்துள்ளது.

    இதனை ஊழியர் ஒருவர் தனது செல்போன் காமிராவில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ அந்த பகுதியில் பரவி வருகிறது. புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • வனப்பகுதியில் விதிகளை மீறி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்ததாகக் கூறப்படுகிறது.
    • கோத்தகிரி வனத்துறையினர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    குன்னூர்,

    சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமார். கீழ் கோத்தகிரி மேநாடு பகுதியில் உள்ள இவரது எஸ்டேட்டுக்குச் செல்லும் வழியில் வனப்பகுதியில் விதிகளை மீறி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்ததாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக எஸ்டேட் மேலாளர் பாலமுருகன், ரோடு ரோலர் மற்றும் பொக்லைன் டிரைவர்களான உமர் பரூக், பங்கஜ்குமார் சிங் ஆகிய 3 பேர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிந்திருந்தனர்.

    இந்த நிலையில், சாலை விரிவாக்கப் பணியின்போது தான் அந்த இடத்தில் இல்லை என்றும், தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்றும், தோட்ட உரிமையாளரும் சுற்றுலாத் துறை அமைச்சரின் மருமகனுமான சிவகுமார் வனத்துறையினரின் விசாரணையில் விளக்கம் அளித்திருந்தார்.

    கோத்தகிரி வனத்துறையினர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்தநிலையில் கோத்தகிரி நீதிமன்றத்தில் சிவகுமார் நேரில் ஆஜராகி முன்ஜாமீன் கோரினார். அவருக்கு கோத்தகிரி நீதிபதி வனிதா முன்ஜாமீன் வழங்கினார்.

    • சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உல்லத்தி, மசினகுடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ரூ.47.53 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக அரசின் உத்தரவின் படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சாலை வசதிகள், குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதலாவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித், ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.38 லட்சம் மதிப்பீட்டில், தலைக்குந்தா மெயின் ரோடு முதல் எம்.ஜி.ஆர் நகர் வரை சிமெண்ட் நடைபாதை மற்றும் சாலையோர தடுப்பு சுவர் அமைக்கும் பணிகனளயும், ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில், எம்.ஜி.ஆர் நகர் சலீமா வீடு முதல் மோகன் வீடு வரை முடிக்கப்பட்ட நடைபாதை பணியினையும், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கெம்பலை மெயின் ரோடு முதல் கெம்பலை கிராமம் வரை நடைபெற்று வரும் பணிகளையும், சிமெண்ட் நடைபாதை பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட கல்லட்டி பகுதியில் ரூ.14.44 இலட்சம் மதிப்பீட்டில்,பால் உற்பத்தியாளர் சங்கம் கட்டட பணியினையும், பி.ஜி.எப் திட்டத்தின் கீழ், கல்லட்டி பால் உற்பத்தியாளர் சங்கம் அருகில் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் கல்வெட்டு பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்,கல்லட்டி மெயின் ரோடு முதல் தகன எரியூட்டும் மைதானம் வரை ரூ.7.71 இலட்சம் மதிப்பீட்டில், முடிக்கப்பட்ட சாலை பணியினையும், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மசினகுடி ஊராட்சியில், ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில், வாழைத்தோட்டம் பகுதியில், சமுதாய சுகாதார வளாக கட்டுமான பணிகளையும் பார்வையிட்டும், பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடையினையும் மற்றும் மசினகுடி சாலை பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சோக்பிட் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சி மற்றும் கூடலுார் ஊராட்சி ஒன்றியம் மசினகுடி ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஆக மொத்தம் ரூ.47.53 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர், ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சி கெம்பலை கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் 51 குடியிருப்புகளுக்கு ரூ.7.46 லட்சம் மதிப்பீட்டில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாம் சாந்தகுமார், கூடலுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், விஜியா, கூடலுார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், அண்ணாதுரை, உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்நோஷ் குமார், ஊட்டி தாசில்தார் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×