search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் வருகிற ஜூன் 3-வது தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • கலைஞர் புகைப்படத்திற்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு. முபாரக் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் 100-வது பிறந்தநாள் வருகிற ஜூன் 3-வது தேதி நடக்க உள்ளது.

    இதனை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்திலும் அறிவுரை வழங்கி உள்ளனர்.

    திராவிட இயக்கத்தை கண் இமைப்போல பாதுகாத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடைசி மூச்சு வரை பாடுபட்ட மகத்தான தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா, கழக தோழர்கள் வெகு சிறப்புடன் கொண்டாட வேண்டிய பொன்நாள். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்து உள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து நகர-ஒன்றிய-பேரூர் –ஊராட்சி பகுதிகளிலும் கல்வெட்டுகள் அமைத்து, கட்சிக்கொடியேற்றறி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    பொது இடங்களில் கலைஞர் புகைப்படத்தை அலங்கரித்து வைத்து, கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    ஜூன் 3-ந்தேதி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் காணும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அதில் நகர-ஒன்றிய-பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

    கலைஞருக்கு மலர் அஞ்சலி செய்வதோடு, அன்னாரின் அடிச்சுவட்டை பின்பற்றி, கழகத்தை காத்து வரும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகம் உயர உழைப்போம் என்ற உறுதி மொழியை நாம் அனைவரும் ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    • இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • மரம் முறிந்து ஒரு வீட்டின் மீது விழுந்ததில் மேற்கூரை சேதம்

    பந்தலூர்

    நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதலே பந்தலூர் பகுதியில் வெயில் அடித்தது. பின்னர் மதியத்துக்கு மேல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழையாக பெய்தது.

    பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, பாட்டவயல், அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், சேரம்பாடி, எருமாடு, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் கால்வாய்களில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. கொளப்பள்ளி குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலையொட்டி உள்ள மரம் முறிந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த செவ்வந்தி என்பவர் சத்தம் கேட்டு உடனே வெளியே ஓடி வந்தார். இதில் வீட்டின் மேற்கூரைகள் உடைந்தன. அதிர்ஷ்டவசமாக பெண் உயிர் தப்பினார். தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.

    இதேபோல் புஞ்சகொல்லியில் ஒரு வீட்டின் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. பலத்த மழையால் பிதிர்காடு அருகே ஆணையப்பன் சோலையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் கம்பிகள் மீது மரம் சாய்ந்ததால், மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    ஊட்டியில் நேற்று மதியம் 12 மணியளவில் மழை பெய்தது. 3 மணி நேரம் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள், வேலைக்கு சென்ற பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • கோடை விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது
    • ரூ.45 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    கோத்தகிரி

    நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்கிறது. இதனால் கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி தலைமையில் போலீசார் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, குன்னூர் சாலையில் வாகன தணிக்கை மேற்க்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள், ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு மொத்தம் ரூ.45 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    • கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலையும் கிடைத்து உள்ளது.
    • மேரக்காய் கிலோ ரூ.15-க்கு கொள்முதல் கிடைப்பது சிறப்பு என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் கக்குச்சி,உயிலட்டி, கூக்கல், நெடுகுளா, எரிசிபெட்டா, இந்திராநகர், வ.உ.சி நகர், கூக்கல்தொரை, மசக் கல்,மானியட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் (சவ்சவ்) பயிரிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் அந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. எனவே காய்கறி தோட்டங்கள் மீண்டும் பசுமைக்கு திரும்பி, மேரக்காய் விளைச்சலும் அதிகரித்து வருகிறது. இதற்கு கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலையும் கிடைத்து உள்ளது.

    இதனால் விவசாயிகள் உற்சாகமாக அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோத்தகிரி காய்கறி மண்டிகளில் மேரக்காய் கிலோவுக்கு ரூ.15, ரூ.16 வரையும் தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இது விவசாயிகளுக்கு போதுமான விலையாக உள்ளது. கடந்த ஆண்டு கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.25முதல் 30 வரை கொள்முதல் விலை கிடைத்தது. அதே போல கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேரக்காய் கிலோ ரூ.15-க்கு கொள்முதல் கிடைப்பது சிறப்பு என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    • மலர் கண்காட்சி நடக்கும் பூங்காக்களில் பெரியவருக்கு ரூ.100, சிறியவருக்கு ரூ.50 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
    • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு கூடுதலாக ரூ.1.20 கோடி கூடுதல் வருவாய் கிடைத்து உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி ஆகியவை நடந்தது.

    தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட்ட கண்காட்சிகளில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பல்வேறு வகை மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. எனவே தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் திரளாக வந்திருந்தனர்.

    ஊட்டி பூங்காக்களில் பெரியவருக்கு ரூ.50, சிறியவருக்கு ரூ.30 நுழைவு கட்டணம் வசூலிப்பது வழக்கம். ஆனால் மலர் கண்காட்சி நடக்கும் பூங்காக்களில் பெரியவருக்கு ரூ.100, சிறியவருக்கு ரூ.50 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    அந்த வகையில் நடப்பாண்டு கோடை விழாவில் மலர் கண்காட்சி நடந்த பூங்காக்களுக்கு கடந்த 2 மாதங்களில் மட்டும் சராசரியாக 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். இதன்மூலம் தோட்டக்கலை துறைக்கு ரூ.6.20 கோடி வருமானம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு கூடுதலாக ரூ.1.20 கோடி கூடுதல் வருவாய் கிடைத்து உள்ளது.

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடந்த பழக்கண்காட்சியை காண சுமார் 2 லட்சத்து 216 பேர் வந்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 ஆயிரம் பேர் அதிகமாக சிம்ஸ் பூங்காவுக்கு வந்து உள்ளனர். பழக்கண்காட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தாசில்தார் சிவக்குமார் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார்.

    • அம்பேத்கர் நகரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
    • அனைத்து அரசு அதிகாரிகளிடமும் பொதுமக்கள் சார்பில் மனு தரப்பட்டது.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள சோலூர்மட்டம், அம்பேத்கர் நகரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு போதிய நடைபாதை வசதிகள் இல்லை.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளிடம் மனு தரப்பட்டது. ஆனாலும் பலனில்லை. இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு போதிய நடைபாதைகள் இல்லை.

    எனவே நாங்கள் காட்டுவழி பாதையில் சென்று திரும்ப வேண்டி உள்ளது. எனவே அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, எங்களுக்கு ஊருக்குள் வசதியான நடைபாதைகள் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கி பேசினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஊட்டி,

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறுகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மக்கள் நலனில் அக்கறை காட்டுவது இல்லை. சுற்றுலாபயணிகள் அதிகமாக வரும் நீலகிரியில் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் கடும் அவதிப்படுகின்றனர்.

    நீலகிரியில் போதைப் பொருட்கள் பழக்கம் அதிக அளவில் உள்ளது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்றார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ச்சுணன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்சீலன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    இதில் பாசறை மாவட்ட செயலாளரும், மாவட்ட துணை செயலாளர் கோபாகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு மற்றும் நகர, ஒன்றிய, கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தடுப்பு சுவர் கட்டும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
    • ரூ.1.39 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ரூ.1.39 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அங்கு நடக்கும் கட்டுமான பணிகளை பார்வை யிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, மின்சாரம், கழிப்ப றை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. அங்கு நடக்கும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடர்ந்து கண்காணித்து, அதனை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு-தென்மேற்கு பருவ மழை காலங்களில் அதிக மழை பெய்வதால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சாலைகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு, இத்தலார் ஆகிய ஊராட்சியில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டது. அப்போது தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வை யிட்டு, கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கினர். அப்போது அந்த பகு தியில் வசிக்கும் பொதுமக்கள், கனமழை யால் ஏற்படும் சேதத்தை தடுக்கவும் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்கவும் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விவரங்களை சேகரித்து, தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்அடிப்படையில் அரசிடம் உரிய அனுமதி பெற்று ஊரக வளர்ச்சி முகமை சார்பில், நஞ்சநாடு அம்மனட்டி கிராமத்தில் ரூ.1.39 கோடி மதிப்பில் 3 பணிகளும், இத்தலார் ஊராட்சியில் ரூ.1.21 கோடி மதிப்பில் 5 பணிகளும் என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பில் 8 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மழை காலம் தொடங்குவதற்கு முன்ன தாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் அறிவுறு த்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாம கேஸ்வரி, செய ற்பொறியா ளர் செல்வகு மரன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், வட்டாட்சியர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஸ்ரீதரன், நந்தக்குமார், நஞ்சநாடு ஊராட்சித்தலைவர் சசிகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆண்டுக்கான பந்தயம் முன்னதாகவே ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தொடங்கியது.
    • நேரில் வர முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பந்தயத்தை பார்த்தனர்.

    ஊட்டி.

    ஊட்டியில் கோடை சீசனையொட்டி நடைபெற்ற குதிரை பந்தயம் நிறைவு பெற்று உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.

    அப்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இவர்களை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விழாவைெயாட்டி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் மலர் மற்றும் ரோஜா கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி ஆகியவை நடைபெற்றது.

    கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயம், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி குதிரை பந்தயம் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டு மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தானதால், இந்த ஆண்டுக்கான பந்தயம் முன்னதாகவே ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. தி நீல்கிரிஸ் 1000 மற்றும் 2000 கீன்னீஸ் உள்ளிட்ட பந்தயங்கள் மற்றும் முக்கிய பந்தயங்களில் ஒன்றான 'தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்' கிரேட்-1 குதிரை பந்தயம் நடந்து முடிந்தது.

    இதைத்தொடர்ந்து கடைசி குதிரை பந்தயம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் குளோரியஸ் கிரேஸ் முதலிடம் பிடித்தது. பின்னர் ஜாக்கி உமேஷ் மற்றும் பயிற்சியாளர் செபஸ்டின் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக திரளான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு குதிரை பந்தயத்தை கண்டு ரசித்தனர். மேலும் நேரில் வர முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பந்தயத்தை பார்த்தனர். பந்தயம் நிறைவு பெற்றதால் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகள் வாகனங்கள் மூலம் மீண்டும் அங்கேயே கொண்டு செல்லப்படுகிறது.

    • கிராமத்திற்கு அமைக்கப்பட்ட சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
    • பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஊட்டி.

    ஊட்டியில் கோடை சீசனையொட்டி நடைபெற்ற குதிரை பந்தயம் நிறைவு பெற்று உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.

    அப்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இவர்களை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விழாவைெயாட்டி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் மலர் மற்றும் ரோஜா கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி ஆகியவை நடைபெற்றது.

    கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயம், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி குதிரை பந்தயம் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டு மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தானதால், இந்த ஆண்டுக்கான பந்தயம் முன்னதாகவே ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. தி நீல்கிரிஸ் 1000 மற்றும் 2000 கீன்னீஸ் உள்ளிட்ட பந்தயங்கள் மற்றும் முக்கிய பந்தயங்களில் ஒன்றான 'தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்' கிரேட்-1 குதிரை பந்தயம் நடந்து முடிந்தது.

    இதைத்தொடர்ந்து கடைசி குதிரை பந்தயம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் குளோரியஸ் கிரேஸ் முதலிடம் பிடித்தது. பின்னர் ஜாக்கி உமேஷ் மற்றும் பயிற்சியாளர் செபஸ்டின் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக திரளான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு குதிரை பந்தயத்தை கண்டு ரசித்தனர். மேலும் நேரில் வர முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பந்தயத்தை பார்த்தனர். பந்தயம் நிறைவு பெற்றதால் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகள் வாகனங்கள் மூலம் மீண்டும் அங்கேயே கொண்டு செல்லப்படுகிறது.

    • கார் மற்றும் மோட்டார் சைக்கிளை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
    • வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    ஊட்டி

    கூடலூர் அருகே ஓவேலி கிளன்வன்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் காட்டுயானை நுழைந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுயானையும் பொதுமக்களை விரட்டியவாறு இருந்தது. இந்த சமயத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதனால் பரபரப்பு காணப்பட்டது. மேலும் பெண்கள், குழந்தைகள் காட்டு யானையை கண்டு வீட்டுக்குள் ஓடி பதுங்கி கொண்டனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை ஊருக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் வருகின்றனர்.

    • கோடை கால நிகழ்ச்சிகள் மே 2-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • நேற்று நடந்த முகாமில் மொத்தம் 110 போ் கலந்து கொண்டனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் குழந்தைகளுக்கான 10 நாள் கோடை கால சாகச முகாம் நடந்தது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் வெலிங்டன் ராணுவ முகாம் சாா்பில் கோடைக்கால நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    அதுபோல இந்த ஆண்டிற்கான கோடை கால நிகழ்ச்சிகள் மே 2-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நடந்த முகாமில் மொத்தம் 110 போ் கலந்து கொண்டனர்.

    இதில் குதிரை சவாரி, ஏா் ரைபிள் மற்றும் பிஸ்டல் ஷூட்டிங், ட்ரெக்கிங், படகு சவாரி, உடற்பயிற்சி என பல்வேறு சாகச போட்டிகள் நடந்தது. மேலும், நாய்களை கையாளுதல், காயம்பட்ட விலங்குகளை பராமரித்தல் மற்றும் முதியோா் இல்லத்தில் ஒரு நாள் முழுவதும் சேவையில் ஈடுபடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்று நடும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

    குழந்தைகளை பொறுப்புள்ள குடிமகனாக மாற்றும் வகையில் சாகச உணா்வையும், சமூக விழிப்புணா்வையும் ஏற்படுத்த இந்த முகாம் நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

    ×