search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223314"

    • கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்ததனால் மனவேதனை
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி: 

    இரணியல் அருகே உள்ள பேயன்குழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 38), தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் சாந்தி கடந்த 10-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சாந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாந்தியின் தாயார் ராமலட்சுமி (52) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள்சா மிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    மேலும் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த சாந்தி மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    • ரோட்டோரம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து உள்ளனர்.
    • கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தேவிகோடு தோரணவிளையை சேர்ந்த வர் செல்லன். இவது மகன் மகேஷ் (வயது 20).

    இவர் கடந்த 28-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.அப்போது டயர் பஞ்சர் ஆகி உள்ளது. எனவே மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்று உள்ளார்.

    நேற்று மோட்டார் சைக்கிளை எடுத்து வர ஊழியருடன் சென்றார். அங்கு அவரது மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரோட்டோரம் நிறுத்தி யிருந்த மோட்டார் சைக்கி ளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து உள்ளனர்.

    இது குறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் மகேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • படகில் சமையல் செய்யும்போது எதிர்பாராமல் திடீரென ஸ்டவ் டியூபில் தீப்பற்றியது.
    • தீ மளமளவென பரவி ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுள் பரவி எரிந்து நாசமானது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்தவர் டொனோட்டஸ் (வயது 38). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற இவரது படகு, நேற்று மாலை கரை திரும்பியது. படகை தொழிலாளர்கள் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்தனர்.

    பின்னர் படகின் சமையல் செய்யும் அறையில் தொழிலாளர்கள் கேஸ் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராமல் திடீரென ஸ்டவ் டியூபில் தீப்பற்றியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் பீதியில் படகிலிருந்து வெளியேறி வெளியே வந்தனர்.

    அதற்குள் தீ மளமளவென ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுள் பரவி எரிந்து நாசமானது. இதில் படகின் மேற்கூரையும் எரிந்து நாசமானது.உடனே மீனவர்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று படகில் பரவிய தீயை அணைத்தனர். அருகில் படகுகளுக்கு டெம்போவில் கொண்டு வரப்பட்ட தண்ணீரையும் மீனவர்கள் பீய்ச்சி அணைத்தனர். படகில் மீன்கள் பதப்படுத்தி வைத்திருந்த அறையில் தீ பரவவில்லை. இதனால் பிடித்து வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான மீன்கள் தப்பின. இந்த சம்பவத்தால் நேற்றிரவு குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 40 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் செல்கிறது.
    • நீரோடையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் நீரோடை செல்கிறது. இந்த நீரோடையின் மேல் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். குப்பைகளில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது.இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை எடுத்து தீயை அணைத்தனர். கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 40 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் செல்கிறது.இந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-நீரோடையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். குப்பைகளை கொட்டி நீரோடையை அசுத்தப்படுத்தி வருகின்றனர். மேலும் அடிக்கடி குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    மேலும் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குப்பைகளில் வைக்கப்படும் தீ பரவி வாகனங்களில் பட்டால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • விசாரணையில் டெம்போவை தீ வைத்து எரித்த வாலிபர் கைது

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த குழுமைகாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது.இதுபற்றி அப்பகுதி மக்கள் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

    இதில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் டெம்போவின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து தீ வைத்து எரித்து இருந்தது தெரியவந்தது .இது குறித்து தனிப்பிரிவு எஸ். ஐ. சிவசங்கர் தனிப்பிரிவு ஏட்டு சுஜி ஆகியோர் மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வில்லுக்குறி பகுதியில் நடந்து சென்ற வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்.

    அப்பொழுது குழுமைக்காடு பகுதியில் நிறுத்தி இருந்த டெம்போவை தீ வைத்து எரித்த நபர் அவர்தான் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடந்த விசாரணையில் தீ வைத்து எரித்த வாலிபர் ராஜேஷ் (வயது 27) என்பதும் அவர் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1¾ கோடி பொருட்கள் பாதுகாக்கப்பட்டன
    • தீயணைப்பு துறையினர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நாகர் கோவில், கன்னியா குமரி, திங்கள்சந்தை, தக்கலை, குளச்சல், குழித்துறை, குலசேகரம் மற்றும் கொல்லங்கோடு ஆகிய பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இங்கு வேலை பார்த்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் தீ விபத்து நடந்தால் தகவல் கிடைத்த உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் குளங்கள் மற்றும் ஓடைகளில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை மீட்பதிலும் தீயணைப்பு வீரர்களின் பங்கு முக்கிய மாக உள்ளது.

    குமரி மாவட்ட தீய ணைப்பு நிலையங்களுக்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 344 தீ விபத்து அழைப்புகள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று தீயை அணைத்ததின் மூலமாக ரூ.1.78 கோடி மதிப்பிலான பொருட்கள் பாதுகாக்கப்பட்டன. அதே நேரம் ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 500 மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.

    இதே போல கிணற்றில் தவறி விழுந்தது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது, குளத்தில் மூழ்கியது உள்ளிட்டவை தொடர்பாக 860 மீட்பு அழைப்புகள் வந்தன. அதில் உடனுக்குடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதில் 111 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    • நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது.
    • இங்கு நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது.இங்கு நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து நடப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது.தீ மள மளவென்று பரவி குப்பை கிடங்கு முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது.

    இது பற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டு இருந்தது.இதை யடுத்து திங்கள் சந்தை தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டு அங்கி ருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய போராடியும் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை..

    இன்று 2-வது நாளாக தீ எரிந்து கொண்டே உள்ளது. அதை அணைக்கும் பணியில் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    இன்று மாலைக்குள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீய ணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியில் கரும்பு தோட்டத்தில் இருந்த மீதி சருகுகள், சுள்ளிகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
    • அதில் பற்றி எரிந்த தீ , அருகே இருந்த அறுவடை செய்யப்படாத கரும்பு தோட்டத்தில் வேகமாக பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ் ( வயது 62). விவசாயி. இவரது வீட்டின் அருகே இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று கரும்புகளை அறுவடை செய்த பிறகு, தோட்டத்தில் இருந்த மீதி சருகுகள், சுள்ளிகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. அதில் பற்றி எரிந்த தீ , அருகே இருந்த அறுவடை செய்யப்படாத கரும்பு தோட்டத்தில் வேகமாக பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 வீடுகள் தீப்பற்றி எரிந்தன
    • தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீயை அணைத்தனர்

    பெரம்பலூர்

    குரும்பலூர் பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சோந்தவர் மாசி பெரியண்ணன் (வயது 48). இவரும், இவரது தம்பி ராஜாவும்(44) அருகருகே இருந்த குடிசை வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் மாசி பெரியண்ணனின் மகள் மிதுனா(11) மட்டும் வீட்டில் இருந்தபோது திடீரென்று குடிசை வீட்டின் மேற்கூரை தீப்பற்றி எரிய தொடங்கியது.

    இதனை கண்ட மிதுனா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு குடிசை வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். மேலும் அப்போது லேசான மழை பெய்ததால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீடுகளில் எரிந்த தீயை அக்கம், பக்கத்தினர் அணைத்து விட்டனர். இதில் 2 வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீப்பற்றியதை உடனடியாக கவனித்ததால் சிறுமி மிதுனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குப்பைகளுக்கு தீ வைத்தபோது எதிர்பாராத விதமாக செல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றியது.
    • சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மேல மாவிளையைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மனைவி செல்ல ம்மாள் (வயது 80).

    இவரது வீட்டின் பின் புறம் ஓலைகள் மற்றும் குப்பைகள் கிடந்து உள்ளன. அதனை அகற்ற செல்லம்மாள் திட்டமிட்டார்.

    இதற்காக நேற்று அனை த்தையும் ஓரே இடத்தில் சேர்த்தார். பின்னர் அந்த குப்பைகளுக்கு அவர் தீ வைத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக செல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறினார்.

    இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த னர். அவர்கள் தீயை அணைத்து செல்லம்மாளை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
    • தீ வைத்ததற்கான காரணம் என்ன?என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள பரமார்த்தலிங்கபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது35).இவர் மினி டெம்போ டிரைவர் ஆவார்.

    இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டதால்அந்த மோட்டார் சைக்கிளை கடந்த 16-ந்தேதி இரவு நேதாஜி காலனியில்நிறுத்திவிட்டு சென்றுஉள்ளார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அவர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அந்த மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் அக்கம் பக்கத்தினர் தேடிப் பார்த்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சுதாகர் நேதாஜி காலனியில் உள்ள சுடுகாட்டில் சென்று பார்த்தார்.அப்போது அவரது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சாம்பலானநிலையில் காணப்பட்டது.

    இது பற்றி சுதாகர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும்அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.இதில் நேதாஜி காலனியைச் சேர்ந்த 7 பேர் அந்த மோட்டார் சைக்கிளை உருட்டி சென்று சுடுகாட்டில் வைத்து தீ வைத்து எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் அந்த 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் நேதாஜி காலனியைச் சேர்ந்த வசந்தகுமார், அழகர், வசந்த், சுரேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.

    இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கும்பல் மோட்டார் சைக்கிளை தீ வைத்ததற்கான காரணம் என்ன?என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
    • நண்பரை பார்த்து விட்டு சென்ற போது சம்பவம்

    அரியலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் திரவுபதி அம்மன் ே காவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 42). இவர் தா.பழூரில் உள்ள நணபர் சந்தோஷ்குமாரை பார்ப்பதற்காக காரில் வந்துள்ளார். அவரை பார்த்த பின்னர் மீண்டும் த ா.பழூரில் இருந்து சிதம்பரம் நோக்கி க ாரில் புறப்பட்டு சென்றார். கோடங்குடி அணைக்குடம் இடையே வனப்பகுதி அமைந்துள்ள இடத்தில் சென்ற போது கார் திடீரென் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து பாலமுருகன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி உயிர் தப்பினார். சாலையில் கார் தீப்பற்றி எரிந்ததால் தா.பழூர் ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்கவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் வனப்பகுதி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×