search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடு"

    • மாநகராட்சி உயர் போலீஸ் அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
    • மாட்டின் உரிமையாளர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாநகரில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் ரோட்டில் நடந்து செல்பவர்களை முட்டி தூக்கி வீசும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

    திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் 10 நாட்களுக்கு பிறகு நேற்று பலியானார். இந்த உயிரிழப்பை தொடர்ந்து சென்னை மாநகர பகுதிகளில் மாடுகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

    சென்னை மாநகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் சாலையோரமாக கட்டி வளர்க்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. 200-க்கும் மேற்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் இது போன்று மாடுகளை ரோட்டில் கட்டி வைத்து பால் கரப்பது, அவைகளை குளிப்பாட்டுவது என மாட்டு தொழுவம் போல சாலையை பயன்படுத்துவது தெரிய வந்து உள்ளது.

    இது போன்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பரபரப்பான சாலைகள், நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகளை வளர்ப்பதற்கு தடை விதிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. கடந்த 2 மாதங்களில் மாடுகளை சாலையில் திரிய விட்ட அவர்களிடமிருந்து ரூ. 78 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட மாடுகளை யாரும் உரிமம் கொண்டாடாத நிலையில் அவைகளை கோசாலைகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாடுகளை வளர்ப்பவர்களில் சிலர் அந்த பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதும், ரெய்டு நடத்தச் செல்லும் போது முன்கூட்டியே மாட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகவும் மாநகராட்சி உயர் போலீஸ் அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கடந்த 3 நாட்களில் 34 மாடுகளை பிடித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் ரோட்டில் திரியும் மாடுகளுக்கு எதிராகவும், மாட்டின் உரிமையாளர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளனர்.

    • திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவங்கள் 4 இடங்களில் நடை பெற்றுள்ளன.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நடந்து செல்பவர்களை முட்டி தூக்கி வீசும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

    இது தொடர்பாக போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளுடன் தீவிர விசாரணை நடத்தி ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து வருகிறார்கள். இருப்பினும் ரோட்டில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்துவது சவாலாகவே இருந்து வருகிறது.

    இதன் காரணமாக திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவங்கள் 4 இடங்களில் நடை பெற்றுள்ளன. அந்த வகையில் கடந்த 18-ந் தேதி திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் மாட வீதியில் சுந்தரம் என்ற 80 வயது முதியவரை மாடு முட்டி தூக்கி வீசியது. இதில் வாய் பேச முடியாத அவர் பலத்த காயம் அடைந்தார்.

    ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் முதியவர் சுந்தரம் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 10 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை மாநகரில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் தொடர்ச்சியாக ரோட்டில் செல்பவர்களை முட்டி தூக்கி வீசிய சம்பவத்தில் சிறுமி உள்பட பலர் காயத்து டன் உயிர் தப்பி இருக்கும் நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • போலீசார் மாட்டின் உரிமையாளர் யார்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கடந்தசில நாட்களில் மாடுகளால் முட்டபட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவது இது 4-வது சம்பவம் ஆகும்.

    சென்னை:

    சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பொதுமக்களை முட்டி தூக்கிவீசும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது. திருவல்லிக்கேணியில் கடந்த வாரத்தில் வாய் பேச முடியாத முதியவர் ஒருவரை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசிய நிலையில் தற்போது அதே பகுதியில் மீண்டும் ஒரு முதியவரை மாடு முட்டி உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை திருவல்லிக்கேணி டி.பி. கோவில் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கன். முதியவரான இவர் இரவு அந்த பகுதி வழியாக சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மாடு ஒன்று அவரை முட்டி தூக்கி வீசியது.

    இதில் அவரது பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் கஸ்தூரி ரங்கனை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்தரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஐஸ் அவுஸ் போலீசார் மாட்டின் உரிமையாளர் யார்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் திருவல்லிக்கேனி பகுதிக்கு சென்று சாலையில் சுற்றியமாடுகளை பிடிக்க உத்தரவிட்டனர். அப்போது மாட்டின் உரிமையாளர்கள் சிலர் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே முதியவர் சுந்தரத்தை மாடு முட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கு அடுத்து செல்வி என்ற பெண் மீது மாடு முட்டி இழுத்து சென்றது. திருவல்லிக்கேணி பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் கடந்தசில நாட்களில் மாடுகளால் முட்டபட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவது இது 4-வது சம்பவம் ஆகும்.

    • மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து சென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அபராதமும் விதித்து வருகிறார்கள்.
    • ரோட்டில் திரியும் மாடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகரில் சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை தடுப்பதற்காக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து சென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அபராதமும் விதித்து வருகிறார்கள். இருப்பினும் மாடுகள் ரோட்டில் நடமாடுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டி தள்ளிய சம்பவம் நடைபெற்று உள்ளது. அதே பகுதியில் ஏற்கனவே போலீஸ்காரர் உள்பட 6 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு முட்டி தள்ளியது. நங்கநல்லூர் பகுதியிலும் இதே போன்று 3 பேரை மாடு முட்டு தள்ளிய சம்பவமும் நடை பெற்று உள்ளது. இந்த சம்பவங்களில் போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டிய சம்பவத்துக்கு பிறகு அந்த பகுதியில் போலீஸ் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும் ரோந்து சென்று ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 30 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் மாடுகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தனர். இதன் மூலம் ரோட்டில் திரியும் மாடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • பிடிபடும் மாடுகள் காலியாக உள்ள மாநகராட்சி இடங்களில் கட்டி வைத்து அபராதம் செலுத்திய பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
    • தாம்பரம், செம்பாக்கம் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை மாடம்பாக்கம் பகுதியில் கட்டி வைத்து வருகின்றனர்.

    தாம்பரம்:

    சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்களும், உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொ டர்ந்து சென்ைன மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிந்து வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு மீது மோதாமல் இருக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருப்பியபோது லாரியில் சிக்கி பலியானார். இதற்கிடையே சமீபத்தில் நடந்த தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தின்போது சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது. மேலும் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பிடிபடும் மாடுகள் காலியாக உள்ள மாநகராட்சி இடங்களில் கட்டி வைத்து அபராதம் செலுத்திய பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது. தாம்பரம், செம்பாக்கம் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை மாடம்பாக்கம் பகுதியில் கட்டி வைத்து வருகின்றனர். தற்போது சுற்றி உள்ள பல இடங்களில் இருந்து அதிக அளவு மாடுகள் பிடிக்கப்பட்டு கொண்டு வரப்படுவதால் இப்பகுதியில் தற்போது இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. வரும் சில நாட்களில் மாடம்பாக்கம் பகுதியில் மாடுகளை கட்டி வைக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பல்லாவரம், பம்மல் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை திருநீர்மலைப் பகுதியில் அடைத்து வைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சாலையில் பிடிபடும் மாடுகளை அடைத்து வைக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல தனியாக புதிய வாகனங்களும் வாங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சம்பவத்தன்று இவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார்.
    • சிகிச்சை பலனின்றி மதலைமேரி இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கடுவெளி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த அமலதாஸ் மனைவி மதலைமேரி (வயது 83). சம்பவத்தன்று இவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதலைமேரி இறந்தார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக அந்த மாட்டை மடக்கி பிடித்து கட்டிப் போட்டார்கள்.
    • நாய் கடித்ததால் மாட்டிற்கு வெறிபிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ரோடுகளில் அலையும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு மட்டுமில்லாமல் பொது மக்களுக்கும் ஆபத்து நேரிடுகிறது. சூளைமேட்டில் ரோட்டில் சென்ற ஒரு சிறுமியை குத்தி தூக்கி வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ரோட்டில் அலைந்து திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. மாடுகளை பிடித்து தொழுவத்தில் கட்டி வைத்து உரிமையாளர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் முழு அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை.

    ஐஸ் அவுஸ் பகுதியில் பெசன்ட் ரோட்டில் நேற்று மாலையில் ஒரு மாடு மதம் பிடித்த யானை போல் உறுமியபடி அங்கும் இங்கும் ஓடியது.

    கண்ணில் பட்டவர்களை முட்டி தள்ளியது. ஒருவர் பின் ஒருவராக மோதி தள்ளியதில் 5 பேர் ரோட் டில் விழுந்து உருண்டனர். அதை பார்த்ததும் பொது மக்கள் மாட்டிடம் இருந்து தப்பிப்பதற்காக தெறித்து ஓடினார்கள்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் விரைந்தனர்.

    மாடு நின்றதை பார்த்ததும் அவர்களும் மிரண்டனர். கிட்டே நெருங்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து மாட்டு உரிமையாளரை வரவழைத்தனர். அவர் அழைத்தபடியே மாட்டை நெருங்கினார். ஆனால் மாடு அவரிடமும் பணியாமல் மோத வந்தது. இதனால் அவரும் ஓட்டம் பிடித்தார்.

    நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக அந்த மாட்டை மடக்கி பிடித்து கட்டிப் போட்டார்கள்.

    அப்போதுதான் மாட்டின் உடலில் நாய் கடித்த தடம் இருந்ததை பார்த்தனர். எனவே நாய் கடித்ததால் மாட்டிற்கு வெறிபிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

    • முத்துசாமி விவசாய தொழில் செய்து வருகிறார்.
    • அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியம்மாள். இவரது கணவர் முத்துசாமி (வயது 70). விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்றார். அப்பொழுது அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அருகில் இருந்தவர்கள் மேல் நாரியப்பனூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலன்னிற்றி முத்துசாமி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பெரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிவந்த காளை மாட்டை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • திருவொற்றியூர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், பெரியார்நகர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பெரிய காளை மாடு ஒன்று நெடுஞ்சாலையில் சுற்றி வந்தது. சாலையில் செல்லும் வாகனங்கள், மாநகர பஸ்களை மறித்து நிற்பது வாடிக்கையாக இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர். மேலும் விபத்தில் சிக்குவதும் நீடித்து வந்தது. இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிவந்த காளை மாட்டை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்க வரும்போது அந்த காளைமாடு டிமிக்கி கொடுத்து தப்புவது வாடிக்கையாக இருந்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக அந்த காளைமாடு சாலையில் "ஹயாக"சுற்றி அனைவருக்கும் போக்கு காட்டியது.

    இந்த நிலையில் மண்டல சுகாதார அலுவலர்கள் அன்பழகன், சீனிவாச பாலகிருஷ்ணன் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயா ஆகியோர் மேற்பார்வையில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 10 பேர் இன்று காலை பெரியார் நகரில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த அந்த பெரிய காளை மாட்டை சுற்றி வளைத்தனர்.

    அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து தப்ப முயன்ற போது காளை மாட்டை கயிறு கட்டி லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை டிராலி மூலம் லாரியில் ஏற்றி பெரம்பூரில் உள்ள கால்நடை காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் திருவொற்றியூர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    • சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • மீறினால் பொது சுகாதார சட்டம் 1939-ன் படி கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.

    பூந்தமல்லி:

    அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, இளங்கோ தெரு வழியாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து தாயுடன் நடந்து சென்ற 4-ம் வகுப்பு மாணவியை மாடு ஒன்று முட்டி தூக்கியது. இதில் அந்த சிறுமி பலத்த காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவது குறித்து நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கால்நடைகள் அதிகமாக சுற்றித்திரிகிறது. தெருக்களில், சாலைகளில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் திரிய விடக்கூடாது. மீறினால் பொது சுகாதார சட்டம் 1939-ன் படி கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். அபராதத்தினை செலுத்தி மீட்காத உரிமையாளரின் கால்நடைகள் பிடித்த 3 நாளில், பகிரங்க பொது ஏலம் விடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் அதனை சரியாக பராமரிப்பது இல்லை. எனவே இந்த மாடுகள் ரோட்டின் நடுவே படுத்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கோத்தகிரியில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான வாகனஓட்டிகள் முன்விளக்குகளை ஒளிரவிட்டு செல்கின்றனர். அவர்களில் சிலருக்கு ரோட்டில் கால்நடைகள் படுத்து கிடப்பது தெரிவது இல்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கால்நடைகளை ரோட்டில் அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சேற்றுக்குள் சிக்கித் தவித்த பசு மாடு மீட்க்கப்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்திற்கு விரைந்து பசுமாட்டை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சேற்றுக்குள் இருந்து மீட்டனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே புன்செய் புகளூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 47). இவர் வடிவேல் நகர் தோட்டம் பகுதியில் தனக்கு சொந்தமான பசு மாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது கொடிக்கால் கிடங்கு சீரமைக்கப்பட்டு இருந்த சேற்று குழிக்குள் பசுமாடு இறங்கிவிட்டது. பின்னர் பசுமாடு அந்த சேற்றுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தது. அதைப் பார்த்த சேகர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து பசுமாட்டை சேற்றுக்குள் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்தார். இருப்பினும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்திற்கு விரைந்து பசுமாட்டை நீண்ட போராட்டத்திற்கு பிறகு சேற்றுக்குள் இருந்து மீட்டனர்.

    ×