search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223470"

    • எனக்கு வாங்கி வந்த மதுவை அருந்தியதால் கொன்றேன்
    • ஆரல்வாய்மொழி போலீசில் தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்பு தூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு சொந்தமான செங்கல்சூளை கட்டளைக்குளம் பகுதியில் உள்ளது.

    பெண் அடித்துக்கொலை

    இங்கு வட மாநிலத்தை சேர்ந்த 2 குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வந்தனர். இதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த வசந்தி பகாடியா (வயது 29) நேற்று காலை வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீ சார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது வசந்தி பகாடியா அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரது கணவர் டெபுராய் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைதான டெபுராய், மனைவியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட வசந்தி பகாடியா, எனது 3-வது மனைவி ஆவார். எனது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்தபோது, அங்கு பணியாற்றிய எனது மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    திருமணமான அவரிடம் ஆசை வார்த்தை கூறி, ஆரல்வாய்மொழி அழைத்து வந்தேன். அவரை 2-வது திருமணம் செய்து கொண்டு இங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தேன். அப்போது நாங்குநேரி மகளிர் போலீசார் வந்து, அடுத்தவர் மனைவியை நீ எப்படி அழைத்து வந்தாய்? எனக் கேட்டு என்னுடன் இருந்த பெண்ணை பிரித்து அழைத்துச்சென்று விட்டனர்.

    அதன்பிறகு எனக்கு வேலைவாய்ப்பு இல்லாததால், மீண்டும் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டேன். அங்கு திருமணமாகி 7 வயது மகன் சிவாவுடன் வசித்து வந்த வசந்தி பகாடியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை 3-வது மனைவியாக்கி கொண்டு, ஆரல்வாய்மொழி அழைத்து வந்தேன். இங்கு செங்கல்சூளையில் தங்கி வேலை பார்த்து வந்தேன்.

    இரவில் வேலை முடிந்ததும் நான் மது அருந்துவேன். வசந்திக்கும் அந்தப் பழக்கம் இருந்ததால் அவரும் என்னுடன் அமர்ந்து மது அருந்துவார். நான் வீட்டில் இருக்கும் போது, எனது மாநிலத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு செல்போனில் பேசுவேன்.

    ஆனால் இதனை வசந்தி சந்தேகப்பட்டாள். நான், நாங்குநேரியில் இருக்கும் போது பழக்கமான பெண்ணுடன் தான் பேசுவதாக கூறி அடிக்கடி தகராறு செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்ப வத்தன்று நான் மது வாங்கி வீட்டில் வைத்திருந்தேன்.

    அதனை எனக்கு தெரியாமல் வசந்தி பகாடியா குடித்துவிட்டார். இது எனது ஆத்திரத்தை மேலும் அதிகமாக்கியது. குடிபோதையில் இருந்த நான், வசந்தியின் உடலில் பல இடங்களில் கடித்தேன். அவள் வலியால் கூச்சலிட்டதால், அருகில் கிடந்த கட்டையை எடுத்து அடித்ேதன். பின்னர் நான் படுத்துவிட்டேன்.

    காலையில் எழுந்து பார்த்தபோது, வசந்தி பகாடியா சுய நினைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது ரத்தம் தோய்ந்த ஆடையை மாற்றிவிட்டு, காயங்களில் திருநீறை பூசினேன். அதன்பிறகும் பயம் நீடித்ததால், செங்கல் சூளை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தேன். அவர் வந்து பார்த்துவிட்டு போலீசில் புகார் செய்தார்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • 600 மது பாட்டில்கள் பறிமுதல்
    • நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை

    நாகர்கோவில் :

    தொழிலாளர் தினத்தை யொட்டி டாஸ்மாக் கடை கள் நேற்று மூடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அனுமதி இன்றி குமரி மாவட்டத்தில் மது விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ராஜாக்கமங்கலம் பகுதி யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அனுமதி இன்றி மது விற்பனை செய்து கொண்டி ருந்த பரமார்த்தலிங்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆலங்கோட்டை பகுதியில் மது விற்ற நாகராஜன் என்பவரை கைது செய்த வுடன் அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களையும், ஈத்தங்காடு பகுதியில் மது விற்ற நாகராஜன் என்ப வரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 111 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீ சார் என்.ஜி.ஓ.காலனி ஒத்தக்கடை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த கன்னியாகுமரி குண்டலை சேர்ந்த சண்முகசுந்தரம் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசாரின் அதிரடி சோதனை நடத்தினர்.

    அனுமதியின்றி மது விற்பனை செய்த 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 600 மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

    • ரெயில்-பஸ்களில் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
    • மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டால் அவர்களுக்கு பெரிய தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாநகரம் சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக விளங்கி வருகிறது. தெற்கு -வடக்கு மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதி யாக மதுரை திகழ்கிறது. மதுரைக்கு ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்ற னர்.

    இந்தநிலையில் மது குடித்துவிட்டு பஸ் மற்றும் ரெயில்களில் பயணம் செய்யும் சில பயணிகள் ரகளையில் ஈடுபடுவதால் அனைத்து பயணிகளும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    சமீபத்தில் சென்னையில் இருந்து மதுரை வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது குடித்து வந்த பயணிகள் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை வேறு வேறு பெட்டிகளில் போலீசார் பிரித்து வைத்த னர். இருந்த போதிலும் போதை அதிகமான ஒரு வாலிபர் மீண்டும் மீண்டும் வேறு பெட்டிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் அவரை ரெயில்வே போலீசார் எச்சரித்தனர். அவரது தொல்லை சில மணிநேரம் நீடித்ததால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை அடித்து வழிக்கு கொண்டு வந்தனர்.

    இதேபோல் நீண்ட தூரம் செல்லும் பஸ்களிலும் பயணிகள் மது குடித்துவிட்டு வந்து மோதலில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. மதுரை யில் இருந்து செல்லும் பஸ்களில் போதையில் பயணம் செய்யும் பயணிகள் அடிக் கடி ரகளையில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது.

    இத்தகைய சம்பவங் களால் பாதிக்கப்படும் பயணிகள் பஸ் மற்றும் ரெயில்களில் மது குடித்து விட்டு பயணம் செய்பவர் களை அனுமதிக்கக்கூடாது.

    மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டால் அவர்களுக்கு பெரிய தொகையை அபராதமாக விதிக்க வேண்டும் அல்லது சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகின்ற னர். இதனை நடைமுறைப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

    • புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • அதே ஊரை சேர்ந்தவீரமுத்துைவ (60)கைது செய்து அவரிடமிருந்து5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை அடுத்த ரெட்டிக்குப்பம் கிராமத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்தவீரமுத்துைவ (60)கைது செய்து அவரிடமிருந்து5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மது குடிக்க பணம் தராதவர் மீது தாக்குதல் நடந்தது.
    • தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    பழங்காநத்தம், பசும்பொன் நகர், சுருளி ஆண்டி தெருவை சேர்ந்தவர் குரு பரதன் (வயது 32). இவரும் தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரும் (36) நண்பர்கள்.நேற்று மதியம் குருபரதன் நண்பர்களுடன் பழங்காநத்தம், ராமர் கோவில் ஊரணிக்கு சென்றார். அப்போது அருண்குமார்,வேல்முருகன் ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டனர். இதற்கு குரு பரதன் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் உமேஷ் (31). சம்பவத்தன்று இரவு இவர் 'நல்உள்ளங்கள் கூட்டமைப்பு" சார்பில், கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கு அதே பகுதியில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை உமேஷ் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உமேசை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியது. இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாஸ், சையது அப்துல் என்ற தில்ரூபா, சம்சுதீன், சோட்டு, ஏழு மண்டை என்ற முகமது, காலித் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஜித்( 22) என்பவர் மது குடிக்க பணம் கேட்டு ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
    • உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.

    உடுமலை:

    உடுமலைஅருகே உள்ள சின்ன பாப்பனூத்து கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 49 ).இவர் ஐஸ்வர்யா நகர் சாலையில் நின்ற போது ஏரி பாளையத்தைச் சேர்ந்த அஜித்( 22) என்பவர் மது குடிக்க பணம் கேட்டு ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.

    • சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்
    • 10 மது பாட்டில்கள் எந்தவித அனுமதியும் இன்றி வைத்திருந்தது தெரியவந்தது

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீசார் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர் கையில் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தனர்.

    அதில் 10 மது பாட்டில்கள் எந்தவித அனுமதியும் இன்றி வைத்திருந்தது தெரியவந்தது. அதிக லாப நோக்கத்கோடு விற்பதற்காக அவற்றை வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த தோடு, மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் வடக்கு குண்டலை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 36) என்பது தெரியவந்தது.

    அவர் மீது வழக்குப்பதிவு செய்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
    • 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

    இதில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததாக வரப்பாளையம் புது அய்யம்பாளையத்தை சேர்ந்த நடராஜ் (50), திங்களூர் நல்லம்பாட்டி எல்.பி.பீ. வாய்க்கால் பகுதியை சேர்ந்த சுந்தரம் (56), சென்னிமலை வெப்பிலி பிரிவு சாலையை சேர்ந்த பழனிசாமி (62), சித்தோடு

    ஆர்.என்.புதூர் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (74), அதே பகுதியை சேர்ந்த தனகேஸ்வரன் மனைவி கருப்பத்தாள்(48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    • இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை குறிவைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கல் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை சுற்றி பல கிராமங்கள் இருப்பதால் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.

    கடந்த 2012 அ.தி.மு.க. ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    இதேபோன்று கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கடலாடி ஒன்றியத்தில் இருந்து சிக்கல் ஊராட்சியை தலைமையிட மாக கொண்டு யூனியன் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் நடக்கவில்லை.

    சிக்கல் ஒன்றிய மேம்பாட்டு குழு தலைவர் மிசா சைபுதீன், செயலாளர் பச்சம்மாள், பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் கிராம மக்கள் சிக்கல் ஊராட்சியை தலைமையிட மாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


    கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்கள்.

    ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதி-1 குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்்ந்த பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பட்டணம் காத்தான் பகுதி 1-ல் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்த பகுதியில் இளை ஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை குறி வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    மேலும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மாலை நேரங்களில் வீட்டுக்கு வருவதில் அச்சுறுத்தல் உள்ளது. சட்டவிரோமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீயணைப்பு துறையினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
    • ரெயில்வே மேம்பாலத்தின் மேல் பக்கவாட்டு சுவரில் அமர்வதும், தூங்குவதும் வழக்கம்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த கழுவன்திட்டை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மாலை நேரத்தில் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    அங்கு மது குடிப்பவர்கள் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் மேல் பக்கவாட்டு சுவரில் அமர்வதும், தூங்குவதும் வழக்கம். நேற்று இரவு மது அருந்தி வந்த ஒருவர் மேம்பாலத்தின் மேல் பகுதியில் அமர்ந்துள்ளார்.

    அப்போது திடீரென நிலைதடுமாறி அவர் பள்ளத்தில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள்அங்கு ஓடி வந்தனர். அவர்கள் பள்ளத்தில் விழுந்தவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் பள்ளம் மிகவும் ஆழமான பகுதி என்பதாலும், அங்கு மின் விளக்கு வெளிச்சம் இல்லாததாலும் அவரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் விழுந்த நபரை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடிபோதையில் பள்ளத்தில் விழுந்தவர் அருமனை பகுதியை சேர்ந்த செல்வன் (வயது 43) என தெரிய வந்தது.

    தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் அப்பகுதியில் முள்வேலி அமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மனநல சிகிச்சைக்காகவும் மறு வாழ்விற்காகவும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
    • நண்பர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள முகவரி இல்லா இளைஞரையும் மீட்டெடுத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோரின் உத்தரவின்படியும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படியும், நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தரராஜன் தலைமையில் ஆன மீட்பு குழுவினர் விஜயா, சக்திபிரியா, சரவணன், பாலா ஆகியோர் அனைவருக்கும் உரிய முன்னறிவிப்பு கொடுத்த பிறகு நேரில் சென்று நீண்ட நாட்களாக புகையிலை, மது பழக்கத்தினால் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிவதுடன் பொதுமக்க ளுக்கும் தொந்தரவும் இடையூறும் செய்து கொண்டிருந்த மூன்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து மீட்டெடுத்து நம்பிக்கை மனநலக் காப்பகத்தில் மனநல சிகிச்சைக்காகவும் மறு வாழ்விற்காகவும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.முதலில் என்கன் ஊராட்சிக்கு சென்று மது அருந்தி மனநலம் பாதிக்கப்பட்ட குமரவேல் என்பவரை குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார், ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மீட்டனர்.

    இதேப்போல் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை முன்னிலையில் திருவாரூர் பைபாஸ் ரோட்டில் முகவரி தெரியாத மனநல பாதிக்கப்பட்டவரையும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சூர்யா ரசிகர் மன்ற தலைவர் குணா மற்றும் நண்பர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள முகவரி இல்லா இளைஞரையும் மீட்டெடுத்தனர்.இப்பணியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் இன்ஸ்பெக்டர் மணிமேகலையை சந்தித்து உரிய ஆவணம் பெற்று மூன்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களையும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    • தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை அறிவிக்கப்படாத பாராக மாறிவிட்டது.
    • கண்ணாடி பாட்டில் உடைந்து கண்ணாடி துகள்கள் எங்கெங்கும் சிதறி கிடைக்கிறது.

    காரிமங்கலம்,

    காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் தனியார் கல்வி நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் இரு புறமும் சர்வீஸ் சாலை உள்ளது. இதில் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வரும் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை அறிவிக்கப்படாத பாராக மாறிவிட்டது.

    மாலை நேரம் தொடங்கியது முதல் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி வரும் குடிமகன்கள் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து அதை மது அருந்தும் கூடமாக மாற்றிவிட்டனர். இவ்வாறு சட்ட விரோதமாக மது அருந்தும் குடிமகன்கள் கூச்சலிட்டும் ஆபாச வார்த்தையில் பேசி வருவதால் சர்வீஸ் சாலை வழியே செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் அவ்வழியே செல்லும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கேலி கிண்டல் கலாட்டாவும் செய்து வருகின்றனர். போதை தலைக்கு ஏறி மது பாட்டில்களை சர்வீஸ் சாலை பகுதியிலேயே தூக்கி வீசி வருவதால் கண்ணாடி பாட்டில் உடைந்து கண்ணாடி துகள்கள் எங்கெங்கும் சிதறி கிடைக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்துவரும் சர்வீஸ் சாலை குடிமகன்களின் கூடாரமாக மாறி வருவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகம் மற்றும் டோல்கேட் பராமரிப்பு நிறுவனம், போலீசார் உரியகவனம் செலுத்தி சர்வீஸ் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×