search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223472"

    • விருதுநகர் மாவட்ட அணிக்கு பாராட்டு விழா நடந்தது.
    • சார்பு ஆய்வாளர் தேவதாஸ், சிவராமன் ஆகியோரை, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டி கவுரவித்தார்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 28-வது மாநில அளவிலான தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடந்தது.

    இதில் மதுரை சரகம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஊர்காவல் படையினர் கலந்து கொண்டனர். இறகுப்பந்து போட்டியில் துணை வட்டாரத் தளபதி அருள்செல்வி மாநில அளவில் 2-வது இடமும், முதலுதவி தொழில் முறை போட்டியில் 2-ம் இடமும், கயிறு இழுக்கும் போட்டி பெண்கள் பிரிவில் முதலிடமும், கயிறு இழுக்கும் போட்டி ஆண்கள் பிரிவில் தொடர்ச்சியாக 26 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்த விழுப்புரம் சரகத்தை வீழ்த்தி முதலிடமும் பெற்றனர்.

    ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளில் 2-ம் இடமும், ஒட்டுமொத்த தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் 2-ம் சேர்ந்து அதிக புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும் பெற்ற மதுரை சரகம் சார்பில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினரை மதுரை சரக துணை தளபதி ராஜபாளையத்தை சேர்ந்த ராம்குமார்ராஜா, விருதுநகர் மாவட்ட வட்டார தளபதி அழகர்ராஜா வட்டாரத் துணைத் தளபதி டாக்டர் அருள்செல்வி, சார்பு ஆய்வாளர் தேவதாஸ், எழுத்தர் சிவராமன் ஆகியோரை, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டி கவுரவித்தார்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 96.22 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 3-வது இடத்தை பிடித்தது.
    • 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 307 மாணவர்கள், 12 ஆயிரத்து 612 மாணவிகள் உட்பட 24 ஆயிரத்து 919 பேர் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 662 மாணவர்க ளும், 12 ஆயிரத்து 315 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 94.76 சதவீதம் பேரும் மாணவிகளில் 97.65 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள னர். சராசரி அடிப்படையில் 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஆதிதிராவிட நலப்பள்ளி மாணவர்கள் 97.7 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 97.79 சதவீதமும், அரசு பள்ளி களில் 93.13 சதவீதமும், நகராட்சி பள்ளிகளில் 96.02 சதவீதமும், பகுதியாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் 97.45 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 99.27 சதவீத மும், சுயநிதி பள்ளிகளில் (மாநில பாடத்திட்டம்) 98.47 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 50). இவர் தனது 2-வது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்காக செலவுக்கு அவரது தந்தை சேவுகன் மற்றும் தாய் வள்ளியம்மாளிடம் பணம் கேட்டு சென்றார். ஆனால் அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறி விட்டனர். இதனால் முத்துப்பாண்டி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுபோதையில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்துப்பாண்டி மனைவி மாரியம்மாள் ெகாடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நல்லூர்பட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (30). இவருக்கு ஒரு வருடத்திற்கு மேலாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா கொடுத்தபுகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியாபுரம் சாரதா நகரை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவரது மகன் ஜெகநாதன் (20). இவர் உறவினர் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு வீட்டாரும் பேசி பெண்ணின் படிப்பு முடிந்த பின்னர் திருமணத்தை உறுதி செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர். அதுவரை பெண்ணை தொந்தரவு செய்யாமல் இருக்கும்படி ெஜகநாதனுக்கு அறிவுரை கூறி உள்ளனர். ஆனால் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனை இருவீட்டாரும் கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த ஜெகநாதன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
    • இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே புளிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது65). இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். அதனை பார்த்த அவரது மனைவி ராமு விரைந்து வந்து தடுக்க முயன்றார்.

    ஆனால் அதற்குள் அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டார். உறவினர்கள் உடனடியாக அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    சிவகாசி பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன்(45). இவரது மனைவி, குழந்தைகள் மதுரையில் வசித்து வருகின்றனர். வெள்ளையன் தனது தாயாருடன் வசித்து வந்தார். வெளியூர் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இந்தநிலையில் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் எறும்பு பொடி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வெள்ளையனின் சகோதரர்கள் பழனிசாமி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை, விருதுநகர், சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
    • 81 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் 81 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    இதில் விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சிவக்குமார் மதுரை டி.கல்லுப்பட்டி மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் உதவி இயக்குநர் மற்றும் விரிவுரை யாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் விருதுநகரில் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வரும் சாந்தி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குநராகவும், வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் ராஜ்மோகன் மதுரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமிக்கப் பட்டுள்ளார்.

    மதுரை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலு வலராகவும், வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் இளங்கோவன் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடு மற்றும் சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

    • விருதுநகர்:முதல் முறையாக புத்தக கண்காட்சி நடக்கிறது.
    • புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் ன்று உத்தரவிட்டார்.

    அதனடிப்படையில் விருதுநகரில் முதல்முறை யாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர்- மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை மாபெரும் புத்தக திருவிழா நடைபெற இருக்கிறது.

    இதில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. இந்த கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்கு தனித்தனியாக 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சி படுத்தப்படுகின்றன. இந்த கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும்.

    இந்த புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் இடம் பெறுகின்றன.

    பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்த புத்தகத் திருவிழாவை சிறப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15-ந் தேதி தி.மு.க., முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இந்த முப்பெரும்விழா நாளை மாலை 4 மணிக்கு விருதுநகர் பட்டம் புதூரில், அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுஅரங்கத்தில் நடைபெறுகிறது.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தி.மு.க. உருவாக்கப்பட்ட நாள், தந்தைபெரியார் பிறந்த நாள் என ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15-ந் தேதி தி.மு.க., முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிடமாடல் அரசின் மக்கள் நல திட்டங்கள் அமல்படுத்தி எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை அடைவதற்குஅயராது உழைத்துவரும் தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கியும், கழக முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவாகவும், திராவிட மாடல் புத்தக வெளியிட்டு விழாவாகவும், முதல்-அமைச்சர் பேருரை ஆற்றும் விழாவாகவும் நடைபெற உள்ளது. இந்த முப்பெரும்விழா நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு விருதுநகர் பட்டம் புதூரில், அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுஅரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் நிர்வாகிகளும், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும், சார்பு அணிகளின் நிர்வாகிகளும், கிளை கழக நிர்வாகிகளும், கழக முன்னணியினரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் செயல்படும் ‘திடீர்’ அம்மா உணவகம் செயல்படுகிறது.
    • அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விருதுநகர்

    தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. குறைந்த விலையில் இங்கு உணவுகள் விற்கப்பட்டதால் ஏழை-எளிய மக்கள் பயனடைந்தனர்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தற்போதும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.விருதுநகர் நகரில் அரசு ஆஸ்பத்திரி பகுதியிலும், ரெயில்வே பீடர் ரோட்டிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் ஏழை-எளிய மக்கள், தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் உணவு சாப்பிட்டு வருகின்றனர். ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் பெண்கள் உள்பட 12 பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெயில்வே பீடர் அம்மா உணவகத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.2000-க்கும் குறைவாக விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அம்மா உணவகத்தில் நாள்தோறும் குறிப்பிட்ட தொகைக்கு உணவுகள் விற்கப்பட வேண்டும். விற்பனை குறைந்தால் அம்மா உணவகம் மூடப்படும் என நகராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அந்த உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விற்பனையை அதிகரிப்பதற்காக ரெயில்வே பீடர் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார நிலையம் முன்பு ஊழியர்கள் தினமும் விற்பனை செய்து வருகின்றனர்.

    சாலையோர கடை போல் இயங்கும் இங்கு பொதுமக்கள், பயணிகள் உணவருந்தி செல்கின்றனர். சாப்பிட்ட பின் இலையை அங்கேயே வீசிவிட்டு நடுரோட்டிலேயே கை கழுவி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தற்காலிக உணவகம் அமைந்துள்ள பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கியுள்ளன. எனவே விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திடீர் அம்மா உணவகத்தை சுகாதாரமான முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஏழை எளிய மற்றும் பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் விற்கப்பட்டு வருவதால் உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    • மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே வல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பனையடிப்பட்டிக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அந்த பஸ் முன்னதாக சென்று விட்டதால் அவர் குறுக்குப்பாதையில் நடந்து சென்றுள்ளார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்ற வாலிபர் மாணவியை வழிமறித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். மாணவி சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி ஆசிரியை பாண்டியம்மா தேவியிடம் தெரிவித்துள்ளார்.

    அவர் உனது பெற்றோரை அழைத்துச் சென்று போலீசில் புகார் செய் என்று தெரிவித்துள்ளார். அதன்படி சாத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார்.

    அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • புதிய நிர்வாகிகளை நியமித்து தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நகர் பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    விருதுநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அருப்புக்கோட்டை நகர் பகுதி அவைத்தலைவராக கணேசன், செயலாளராக மணி, பொருளாளராக பெரியசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    ராஜபாளையம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக பிச்சைக்கனி, செயலாளராக மணிகண்ட ராஜா, பொரு ளாளராக செந்தில்குமார் ஆகியோரும், ராஜபாளையம் தெற்கு மாவட்ட அவைத்தலைவராக பிச்சை, செயலாளராக ராமமூர்த்தி, பொருளாளராக புதிய ராஜ் ஆகியோர் நியமிக்க ப்பட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அவைத் தலைவராக பலராமன், செயலாளராக முனீஸ்வரன், பொருளாளராக பாலமுருகனும், சாத்தூர் அவைத்தலைவராக நாச்சியப்பன், செயலாளராக குருசாமி, பொருளாளராக நாகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட விருதுநகர் நகர் அவை த்தலைவராக காசிராஜன், செயலாளராக தனபாலன், பொருளாளராக துளசி ராம் ஆகிய நியமனம் செய்ய ப்பட்டுள்ளனர்.

    • லயன்ஸ் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
    • காமராஜர் குறித்த விழிப்புணர்வு நாடகம், கலைநிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தாளாளர் வெங்கடாஜலபதி, பள்ளி முதல்வர் முருகன், நிர்வாக உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரங்கராஜா, குணசேகரன், லயன்ஸ் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த், ரஞ்சித் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் காமராஜர் குறித்த விழிப்புணர்வு நாடகம், கலைநிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள் எலிசபெத், ரோஸ்லின்மேரி, ராமகிருஷ்ணன், மாரீஸ்வ ரன், காளிமுத்து, மயில்ராணி, மாரீஸ்வரி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்ததால் வனத்துறை கேட் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜ பாளையம், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடி ப்படை வசதிகளை கோவில் நிர்வா கத்தினர் செய்திருந்தனர்.

    ×