search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள்"

    • பட்டாசுகளுக்கு 63 ஆயிரத்து 475 ரூபாய்க்கான பில் அவரிடம் வழங்கப்பட்டது.
    • அதற்குள் பட்டாசு பார்சலை காரில் வைக்குமாறு கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மெயின்ரோட்டில் தனியார் எடைமேடை அருகில் பட்டாசு கடை உள்ளது. இதனை விக்கிரவாண்டியை சேர்ந்த வாசு (என்கிற) நாகராஜ் நடத்தி வருகிறார். இங்கு நேற்று இரவு 10 மணிக்கு அரசு எம்பலம் பொறித்த கார் ஒன்று வந்தது. அதில் வருமான வரித் துறை என எழுதப்பட்டிருந்தது. அதில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க டிப் டாப் ஆசாமி இறங்கினார். பட்டாசு கடையை சுற்றிப் பார்த்த டிப் டாப் ஆசாமி, குழந்தைகளுக்கு தேவையான கலசம், கம்பி மத்தாப்பு, பேன்சி வெடிகள் போன்றவைகளை எடுத்துள்ளார். இதற்கு பில் போட சொன்னார். அவர் எடுத்து வைத்த பட்டாசுகளுக்கு 63 ஆயிரத்து 475 ரூபாய்க்கான பில் அவரிடம் வழங்கப்பட்டது.

    அந்த பில்லினை செக் செய்த டிப் டாப் ஆசாமி, பட்டாசுகளை பார்சல் செய்து காரில் வையுங்கள், நான் ஜிபே செய்கிறேன் என கூறியுள்ளார். அவர் அங்கிருந்த கிஆர் கோடினை ஸ்கேன் செய்து பணம் போட முயற்சித்தார். அதற்கு சர்வர் பிசி என வந்துள்ளது. இதையடுத்து அங்கேயே அமர்ந்து 10 நிமிடம் கழித்து முயற்சித்தார். அப்போது பணம் அனுப்ப முயற்சித்தபோது பெயில்டு என வந்துள்ளது. சுமார் அரை மணி நேரம் முயற்சித்தும் பணத்தை அனுப்ப முடியவில்லை. உடனடியாக தனது பர்சை எடுத்த டிப்டாப் ஆசாமி, அதிலிருந்த பணத்தை எண்ணத் தொடங்கினார். அதில் ரூ.7 ஆயிரம் மட்டுமே இருந்தது. அங்கிருந்த பட்டாசு கடைக்காரரிடம், பர்சில் குறைவான பணம் மட்டுமே உள்ளது, காரில் பணம் இருக்கிறது, அதை எடுத்து வருகிறேன். அதற்குள் பட்டாசு பார்சலை காரில் வைக்குமாறு கூறினார்.

    இதனை நம்பிய பட்டாசு கடை ஊழியர்கள் பார்சல்களை காரில் ஏற்றினர். காருக்குள் அமர்ந்த டிப்டாப் ஆசாமி, காரிலிருந்த பையை திறந்து பணத்தை எடுப்பது போல பாசாங்கு செய்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில், காரினை எடுத்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டார். பட்டாசு கடை ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை எடுப்பதற்குள், டிப் டாப் ஆசாமி வந்த கார் சாலையில் இருந்து மறைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாசு, விக்கிரவாண்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், பட்டாசு கடைக்கு அருகில் இருந்த எடைமேடையில் இருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • உரிய கல்வி தகுதி, அனுபவம் இருந்தும் 35 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் நகராட்சி தெருவிளக்கு ஊழியர்கள் பரிதவிக்கின்றனர்.
    • முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி தெரு விளக்குகளை கடந்த 1989ம் ஆண்டு வரை மின்வாரியம் மூலம் பராமரிப்பு செய்து வந்தது. மின்வாரியத்தில் பணி சுமை அதிகமாக இருப்பதால் நகராட்சி பகுதிகளில் உள்ள அதிக அளவு தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாமல் இருள் சூழ்ந்த நிலை இருந்து வந்தது.

    இதனால் நகராட்சி மக்கள் பிரதிநிதிகள் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் நகராட்சியே தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் நகராட்சி ஊழியர்களை நியமித்து தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் நகராட்சிகளில் தெருவிளக்கு பராமரிப்பு செய்ய ஊழியர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கினார்.

    நகராட்சிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட தொழிற்கல்வி பெற்றவர்களை மின்கம்பியாளர்களாகவும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை மின்கம்பி உதவியாளர்களாகவும் நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் வேலைவாய்ப்புதுறை மூலம் பணி நியமனம் செய்யப் பட்டனர். ஆனால் பணி விதிகள் ஏதும் உருவாக்கப்படவில்லை. பின்பு நகராட்சி தெருவிளக்கு பராமரிப்பு பணி ஊழியர்கள் பணி விதிகள் மற்றும்பதவி உயர்வு வழங்க பல்வேறு கட்டபோராட்டங்கள் அரசு ஊழியர் சங்கத்துடள் இணைந்து நடத்தினர்.

    அதன் விளைவாக கடந்த 2008-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதுறை அரசு ஆணை 113-ல் மின்கம்பியாளர்க ளுக்கு மின்பணியாளர் நிலை மின்கம்பியாளர்களாக வும் 1-ம், மின்கம்பி உதவியாளர்களுக்கு பயிற்சி அளித்து உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட பிரச்சினையில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தடை ஆணை வழங்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டது.

    அதன்பிறகும் மின்கம்பியாளர்களுக்கும், மின் பணியாளர் நிலை 2ல் உள்ளவர்களுக்கும் முறை முன்னுரிமை பட்டியல் வெளியிட்டும் பதவி உயர்வு வழங்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசு ஆணை 10ல் மின்கம்பி யாளர் பணியிடம் இல்லாமல் செய்து விட்டனர்.

    தற்போது மின்பணியாளர் நிலை 2ல் உள்ளவர்களுக்கு மட்டும் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மின்கம்பி யாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளநிலை உதவியாளர்கள் இன்று ஆணையாளர் வரை பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஆனால் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்த மின்கம்பியாளர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட தொழில் பயிற்சி முடித்தும் இதுவரை பதவி வழங்கப்படவில்லை.

    இதனால் நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எனவே தமிழக முதல்வர் நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு ஊழியர்கள் மீது கருணை கொண்டும் 35வருட பணியை கருத்தில் கொண்டும் விரைவில் ஒய்வு பெறும் நாட்களை நெருங்கி விட்ட ஊழியர்களுக்கு தற்போது நகராட்சியில் அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என நகராட்சி மாநகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்கள் சங்க தலைவர் ஐவன் மற்றும் பொதுச் செயலாளர் திருமூர்த்தி ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இ.டெண்டர் முறையை ரத்து செய்து ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு ( சி.ஐ.டி.யூ) சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத் தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் கோவிந்தராஜு, மண்டல செயலாளர் ராஜாராமன், வட்ட செயலாளர் காணிக்கராஜ், பொருளாளர் சங்கர், துணைத் தலைவர் ஆரோக்கிய சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார்.இந்தப் போராட்டத்தில் இ.டெண்டர் முறையை ரத்து செய்து ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. இதில் கோட்டத் தலைவர்கள் ஆறுமுகம் , கலைச்செல்வன், கோட்ட செயலாளர்கள் சேக் அகமது உஸ்மான் உசேன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட செயலாளர்கள் அறிவழகன் நன்றி கூறினார்.

    • ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாத மின் வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    சீர்காழி தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் ஃபெடரேஷன் சார்பில் ஆள் பற்றாக்கு றையை போக்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாத மின்சார வாரியத்தை கண்டித்தும், கூடுதல் பணி செய்ய நிர்பந்திக்கும் சீர்காழி மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்தும், மின் விபத்து மற்றும் உயிரிழப்பு களை தடுக்க தவறிய மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கோட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாய்ஸ் பெடரேஷன் மாநிலத் துணைத் தலைவரும், நாகை மின் திட்ட தலைவருமான செல்வராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் நூற்றுக்கு மேற்பட்ட மின்சார வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • ரூ.1.83 கோடி செலவில் கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டது.
    • பணியில் இருக்கும் ஊழியர்கள் மீது காரைகள் பெயர்ந்து விழும் சூழல் நிலவுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகாமையில் தாசில்தார் அலுவலகம் இயங்கிவந்தது. 94 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு சான்றிதழ் தேவைகளுக்காக தாசில்தார் அலுவலகம் வந்து செல்கின்றனர்.

    பழமையான இந்த கட்டிடத்தை அகற்றி வேறு புதிய கட்டிடம் கட்ட கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2018-ம் ஆண்டில் ரூ.1.83 கோடி செலவில் கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டது.

    இதனையடுத்து தாசில்தார் அலுவலகம் பிடாரி தெற்கு வீதியில் உள்ள சட்டைநாதர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருமண அரங்கில் இடம் மாற்றம் செய்யப்பட்டு அது முதல் இயங்கிவருகிறது.

    அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மறு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.4 கோடி வரை கூடுதல் நிதி கோரப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் புதிய கட்டடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.

    இதனிடையே கடந்த 6 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏதும் இல்லாத நிலையில் உள்ளது.

    அலுவலகத்தின் உள்ளேயும் ஆஸ்பெட்டாஸ் கூரை உடைந்தும், அதன் கீழ் உள்ள தெர்மாகோல் பால்சீலிங் வேலைபாடுகள் உடைந்தும் தொங்கிகொண்டுள்ளது.

    வளாகத்தின் சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் அவ்வபோது உள்ளே புகுந்து அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.

    தற்போது துணை வட்டாட்சியர்கள் அலுவலக கான்கிரீட் மேற்கூரைகள் சிமென்ட் காரைகள் அவ்வபோது பெயர்ந்து திடிரென கீழே விழுந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது.பணியில் இருக்கும் அலுவலர்கள், ஊழியர்கள் வந்து செல்லும் பொதுமக்கள் மீது சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் கூறுகையில், சீர்காழி தாசில்தார் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மேற்கூரை சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் வேறு கட்டடத்திற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை மாற்றிடவும், உடனடியாக புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்திடவும் வேண்டும் என்றார்.

    • மாவட்ட கருவூலத்துறை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரியும் நிலை உள்ளது.
    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகம் எதி ரில் உள்ள மாவட்ட கருவூ லத்துறை கட்டிடத்தில் தபால் அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், கூட்டு றவு இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், கனிம வளத்துறை அலுவலகம், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குனர் அலுவல கம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்படுகின்றன.

    கட்டிடத்தில் பல இடங் களில் சிமின்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலை யில் உள்ளது. முறையான பராமரிப்பின்றி சேத மடைந்த பகுதியில் மரங்களும் முளைத்து வருகின்றன.

    இதனால் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில்தான் உள்ளது.

    இதனால் இங்கு பணி யாற்றும் ஊழியர்கள் அச்சத் தில் உள்ளனர். எனவே, உடனடியாக சேதமடைந்த கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் செய்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். என அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் அந்தந்த பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • தாரமங்கலம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு கிளை தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.

    தாரமங்கலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் அந்தந்த பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தாரமங்கலம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு கிளை தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மைய சங்க பொருளாளர் சேகர், கிளைச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியா ளர்களை நியமிக்க கூடாது, போதுமான பணியாளர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கிளை பொருளாளர் விஸ்வ நாதன், முருகன், காளிதாஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பாலிசிதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது.
    • சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவின் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக த மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். விழாவில் அஞ்சல் துறையால் முழுமையாக பயன்பெறும் இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் கடந்த மாதத்தில் 26,126 சேமிப்பு கணக்குகளும், 8899 பேருக்கு ஆதார் சேவையும், 454 ஜிஏஜி பாலிசிகளும், 4576 ஐபிபிபி கணக்குகளும், 326 பேருக்கு மிண்ணனு உயிர் வாழ் சான்றிதழும், 5400 பேருக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆதார் மூலம் பண பரிவர்த்தனையும், ஆயுள் காப்பீட்டில் 2961 பாலிசிதாரர்கள் மூலம் புதிய பாலிசிக்கான பிரிமீயம் தொகை ரூ.1 கோடியே 34 லட்சத்து 55 ஆயிரத்து 552 -ம் , 2412 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டார்கள்.

    தூய்மை இயக்கம் 3.0 அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பரிசு வழங்கி சிறப்பிக்கபட்டனர். முடிவில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மதுரை மாவட்டத்தில் 13ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப் பட்டது. இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

    ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார அளவில் பணி புரிபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடந்தது. கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.

    • நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
    • ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு 41 மாத பணி நீக்ககாலத்தை ஓய்வூதியத்திற்கு பொறுந்தும் வகையில் முறைப்படுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கவேல் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு 41 மாத பணி நீக்ககாலத்தை ஓய்வூதியத்திற்கு பொறுந்தும் வகையில் முறைப்படுத்த வேண்டும்.இறந்த சாலை பணியாளர்களுக்கு விதிமுறையை தளர்த்தி வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வட்டாட்சியரை இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
    • ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளக்கு றிச்சி வட்டாட்சியர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    இப்போ ராட்டத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், தனித்துணை வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம், வட்ட வழங்கல் அலவலகம், உள்ளிட்ட அனைத்து வரு வாய் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
    • தனிதா சில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கி ரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இவற்றை நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 9-ந்தேதி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தார் மனோஜ் முனியன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

    அப்போது அங்கு பட்டா இடத்தில் கட்டப்பட்ட3 வீடுகளின் முன்பகுதி சுவர் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்ததாக தெரிகிறது.அதனை அகற்றியபோது, அந்த வீடுகளின்பிற பகுதியும் சேதமடைந்ததாக தெரிகிறது.இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தனிதா சில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணா மலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 300- க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம்முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், தனிதாசில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்து அவருக்கு அதே இடத்தில் பணி வழங்கக்கோரியும் கலெக்டர் அலுவலக ம் உள்ளே சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்ததுணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்ற வருவாய்த் துறை அதிகாரிகளை கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கேட்டை இழுத்து மூடினர்.

    ஆனால் அதனை மீறி அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்க ளுக்கும் போலீசா ருக்கும்இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் வருவாய்த்து றை அதிகாரிகள் கேட்டை தள்ளி திறந்து உள்ளே புகுந்தனர். அதன்பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகஅறை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்ளிட்ட 149 பேரை போலீசார் நேற்று இரவு 8 . 30 மணியளவில் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்பு நள்ளிரவு 12 மணியளவில் அனைவரும் விடுவிக்க ப்பட்டனர். இவ்வாறு கள்ளக்குறிச்சியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறையினர் பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுப டட்டனர். கள்ளக்கு றிச்சி யிலும் இன்று வருவாய் துறையினர் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இதனால் மாவட்ட ங்களில் உள்ள தாலுக்கா அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக த்தில் அதிகாரிகள் பணிக்கு வந்தும் எவ்வித பணிகளும் நடைபெற வில்லை. இதனால் பொது மக்கள்ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்றிய தாசில்தாரின் இடைக்கால பணிநீக்க த்தைரத்து செய்ய வலியுறுத்தி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் அறவழியில் காத்திருப்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவா ய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை கைது செய்த நடவடி க்கைகளை கண்டித்தும், தாசில்தார் மனோஜ் முனியன் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இன்று (புதன்கிழமை)காலை 10 மணிக்கு திட்டக்குடி வருவா ய்த்து றை அலுவ லர்கள் வருகை பதிவேட்டில் கை யொப்ப மிட்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்" உள்ளி ட்ட அனைத்து பணிகளையும் 100 சதவீதம் புறக்கணிப்பு செய்து திட்டக்குடி தாசில்தார் ரத்னகுமார், துணை தாசில்தார் ஜெயச்சந்திரன் தலைமையில் ஊழியர்கள் தாசில்தால் அலுவலகம் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போரா ட்டம் நடத்தி னர். இதனால் தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து பணிகளும் முடங்கின.

    ×