search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவட்டார்"

    • 108 வைணவ ஸ்தலங்களில் சிறப்புமிகுந்த திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் சுமார் 450 வருடங்களுக்கு பிறகு நடக்கிறது.
    • திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், அமைச்சர் மனோதங்க ராஜை சந்தித்து கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறை விட மனு

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் சிறப்புமிக்கது. இங்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி சுமார் 450 வருடங்க ளாகி விட்ட நிலையில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று திரு ப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்து வதற்கு முதலமைச்சர் உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்க்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், அமைச்சர் மனோதங்க ராஜை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், அனைத்து தரப்பினரும் கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள வசதியாக ஜூலை 6ந்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.

    பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அன்றைய தினம் திருவட்டார் டாஸ்மார்க் கடையை மூட வேண்டும். திருவட்டார் பஸ்நிலைய சந்திப்பிலிருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெருக்கடிகளை சரி செய்ய வேண்டும்.

    கோயிலை சுற்றி பக்தர்களின் பாதுகாப்புக்காக நிரந்தரமாக கண்காணிப்பு கேமரா க்கள் அமைக்க வேண்டும்என குறிப்பிட்டுள்ளார்.

    • கடன் தொல்லையால் பரிதாபம்
    • போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:


    குலசேகரம் அருகே கல்வெட்டான்குழி, கூடைதூக்கி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் (வயது 32) இவருக்கு அபிநயா என்ற மனைவியும் 6 வயதில் ஒரு மகனும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் பெயின்டிங் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார்.


    இவர் அந்த பகுதியில் உள்ள சுய உதவி குழுக்களில் கடன் வாங்கியிருந்தார். சரிவர வேலை இல்லாததால் குழுவில் பணம் கட்ட முடியவில்லை இதனால் மன விரக்தியில் இருந்தார். நேற்று மனைவியையும் பிள்ளைகளையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டு வீட்டின் பின்பக்க வாசல் மூலம் வீட்டில் வந்து உத்திரத்தில் கயிற்றில் தூக்கில் தொங்கி இருந்தார்.


    இரவு மனைவியும் பிள்ளைகளும் வந்து கதவை திறந்து பார்க்கும் போது ராஜேஸ் இறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.


    இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • தேவ பிரசன்னம் பார்க்கப்பட்ட போது கும்பாபி ஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி நேற்று பரிகார பூஜைகள் நடைபெற்றது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்ட போது அப்போது கும்பாபி ஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.


    அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்று வந்தது திரிகால பூஜைகள், கணபதி பகவதி சேவை, தேவி பூஜை மணிக்கு சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் சர்ப்பபலி பூஜை ஆகியன நடைபெற்றது.


    நேற்று காலை கணபதி ஹோமத்தைத்தொடர்ந்து பரிகார பூஜைகளில் ஒன்றான சுகிர்த ஹோமம் நடைபெற்றது. கோவில் தந்திரி சஜித் சங்கர நாராயணரு மற்றும் நான்கு அர்ச்சகர்கள் சேர்ந்து சுதர்தன ஹோமம் நடத்தினர்கள்.


    கோவிலின் புனிதத்தை அதிகரிக்கச்செய்யவும், கும்பாபிஷேக விழா சிறப்புற நடைபெறுவதற்காகவும் நடத்தப்படும் சுகிர்த ஹோமம் இன்றும் காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. நேற்று நடந்து சுகிர்த ஹோம பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வேர்கிளம்பி பேரூராட்சியில் முண்ட விளை முதல் செங்கோடி வரை உள்ள சாலையானது சேதமடைந்து காணப்பட்டது.
    • இந்த சாலை சீரமைப்பு பணியை வேர்கிளம்பி பேரூராட்சி மன்ற தலைவர் சுஜீர் ஜெபசிங்குமார் தொடங்கி வைத்தார்

    திருவட்டார்:

    வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட முண்ட விளை முதல் செங்கோடி வரை சுமார் 3 கிலோமீட்டர் அளவில் சாலை உள்ளது. இந்த சாலையானது சேதமடைந்து குண்டும் குளியுமாக காணப்பட்டது.

    இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஒட்டிகள் தினமும் அந்த பாதையில் சென்று வர சிரமப்பட்டார்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் சுஜீர்ஜெபசிங்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர் அந்த கோரிக்கையை பேரூராட்சி மன்றத்தில் ஒப்பதல் பெற்று நிதி ஒதுக்கினார்.


    தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணியை வேர்கிளம்பி பேரூராட்சி மன்ற தலைவர் சுஜீர் ஜெபசிங்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஐ. ரெகுகுமார், பேரூராட்சி துணைத் தலைவர் துரைராஜ் மனுவேல், வார்டு உறுப்பினர் சுந்தர் சிங், மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு அறிவித்த உத்தரவுபடி ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களை பயன்படுத்த கூடாது.
    • திற்பரப்பு அருவி அருகில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மை படுத்தினார்கள்.

    கன்னியாகுமரி:

    தமிழக அரசு அறிவித்த உத்தரவுபடி அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களை பயன்படுத்த கூடாது. அனைவரும் மஞ்ச பையை தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    அதன்படி திற்பரப்பு பேரூராட்சி மூலம் திற்பரப்பு அருவி அருகில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி அந்த பகுதி முழுவதும் தூய்மை படுத்தினார்கள். அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடமும் அந்த பகுதியில் உள்ள கடை நடத்தும் வியாபாரிகளிடமும்,

    பொதுமக்களிடமும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் சுகாதார சீர் கேடுகள் போன்றவற்றை எடுத்து கூறினார்கள் அனை வரும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மாற்று பொருள்களை பயன்படுத்த வேண்டும் தமிழக அரசு அறிமுகபடுத்திய மஞ்ச பை திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பெத்ராஜ், தலைவர் பொன் ரவி, துணைத் தலைவர் ஸ்டாலின்தாஸ், வார்டு உறுப்பினர் கிருஷ்ணவேணி, பேருராட்சி தூய்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    ×