என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் மோதல்"

    • கல்லூரி மாணவர்கள் மோதலில் மாணவன் பலியானது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    • குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கருத்து.

    கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

    பச்சையப்பன், மாநில கல்லூரி மாணவர்கள் இடையேயான மோதலில் மாணவன் பலியானது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    பல தலைவர்கள் படித்த புகழ்பெற்ற கல்லூரிகளில் குற்ற நடவடிக்கைகள் நடப்பது வேதனை அளிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

    மேலும், குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.

    • கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.
    • மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் ரிஷிவந்தியம் அருகே மேல தேவனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பஸ்சில் வந்த கோமாளூர் - சேரந்தாங்கல் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். ஓடும் பஸ்சில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருகிராமங்களை சேர்ந்த மாண வர்கள் 13 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பஸ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    விருத்தாசலம் அருகே சின்ன வடவாடியிலிருந்து இன்று காலை டவுன் பஸ் பொதுமக்களை ஏற்றி கொண்டு விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த கூட்டம் காரணமாக பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது வயலூர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்து வந்த போது பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவர்கள் மற்றும் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பஸ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் இருதரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். தகவல் அறிந்த அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்ைச அனுப்பி வைத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த 5க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அறிந்த பா.ம. க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள்சாலையில் அமர்ந்து மறியல்செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரசம்செய்தனர்.

    • பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மாணவரை கத்தியால் குத்திய மாணவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இன்று பள்ளியில் இடைவேளையின்போது மாணவர்கள் சாப்பிட்டு விட்டு கை கழுவி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அது மோதலாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த மாணவர் ஒருவர் சக மாணவரை கத்தியால் குத்தினார். இதனால் அந்த மாணவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று காயம்பட்ட மாணவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாணவரை கத்தியால் குத்திய மாணவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி முடிந்ததும் மாணவர்கள் கூட்டமாக அருகில் உள்ள பஸ்நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
    • திருத்தணி போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருவள்ளூர்:

    திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகை பகுதியில் அரசினர் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்கள் கூட்டமாக அருகில் உள்ள பஸ்நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பு மாணவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

    அப்போது வாலிபர் சிலரும் மற்றொரு மாணவர்களுக்கு ஆதரவாக கையில் கம்புடன் வந்து தாக்கினர். இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள பகுதியிலேயே மாணவர்கள் கோஷ்டிகளாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவர்கள் மோதிக் கொண்ட காட்சியை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    இது தொடர்பாக திருத்தணி போலீசார் விசாரணை நடத்தினர். வீடியோ காட்சியை வைத்து மோதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் மோதலுக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    • பொன்னேரி அருகே பெரியக்காவனம் ரெயில்வே கேட் அருகே சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
    • தாக்குதலில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் பகுதியை சேர்ந்த மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் ராஜ்குமார் என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    பொன்னேரி:

    சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    அவர்கள் தினந்தோறும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வது வழக்கம். ரெயிலில் ரூட்டு தல பிரச்சினையால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து கல்லூரி மாணவர்களிடையே மோதலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஓடும் மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் கட்டிப்புரண்டு மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையில் இருந்து சூலூர்பேட்டை நோக்கி மின்சார ரெயில் சென்று கொண்டு இருந்தது. இதில் மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    பொன்னேரி அருகே பெரியக்காவனம் ரெயில்வே கேட் அருகே சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். கம்பியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அவர்களது மோதல் நீடித்தது.

    இதையடுத்து பயணிகள் சிலர் ரெயில் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து மின்சார ரெயிலை நிறுத்தினர்.

    உடனே மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் ரெயிலில் இருந்து கிழே குதித்தனர். அப்போதும் அவர்கள் கற்களை வீசி மோதிக்கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் பகுதியை சேர்ந்த மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் ராஜ்குமார் என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    ஓடும் மின்சார ரெயிலில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் காரணமாக மின்சார ரெயில் சிறிது நேரம் தாமதமாக சென்றது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் மற்றும் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தாக்குதலில் காயம் அடைந்த மாணவனின் தாய் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் மனு அளித்து உள்ளார்.

    ரெயிலில் கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்க ரெயில்வே போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    • பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவு வருவதால் கூட்டம் நிரம்பி வழியும். நேற்று மாலையிலும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

    அப்போது பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவர்களை பிடித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இரு தரப்பினருக்கும் அறிவுரைகளை கூறி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் பஸ் நிலையத்தின் சுரங்கப்பாதை பகுதியில் 11-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.அப்போது மாணவிகள் இருவரும் மாறி மாறி வசை பாடினார்கள். இது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

    தகராறில் ஈடுபட்ட மாணவிகளை சக மாணவிகள் சமாதானம் செய்தனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்நிலையத்தில் தகராறில் ஈடுபடும் சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் பள்ளி மாணவர்கள் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் நடைபெற்றது.

    எனவே காலை, மாலை நேரங்களில் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    மேலும் பஸ் நிலையத்தில் உள்ள புறகாவல் நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் திறந்து வைப்பதுடன் அங்கு போலீசாரை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • இந்நிலையில் இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள ராமிரெட்டிபட்டி கிராமத்தில் அரசு மேல்நிலை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இங்கு தலைமைஆசிரிய ராக உமாராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் 30 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இதனால் மாணவர்கள் சிலர் ஆசிரியருக்கு ஆதரவாக இதை தட்டிக்கேட்ட னர். இதனால் அவர்க ளுக்கிடையே மோதல் உண்டானது.

    இதில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தாக்கப்பட்ட மாணவர்க ளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாண வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    இதனால் பள்ளியின் தலைமைஆசிரியர் உமாராணி 2 தரப்பு மாண வர்களின் பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று மாணவர்களிடம் எழுதி வாங்கியும், பெற்றோரிடம் மாணவர்களை கண்டிக்க வும் அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பாதை வழியாக நடந்து செல்வதில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • காயம்பட்ட மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அரசு தொழிற்கல்வி மையம்(ஐ.டி.ஐ.) மற்றும் அரசு பள்ளிகள் அருகருகே உள்ளது. இங்கு பின்புறம் உள்ள பாதை வழியாக நடந்து செல்வதில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் அங்கு படிக்கும் மாணவர்கள் 2 குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர், பின்னர் அது கை கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயம்பட்ட மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர், தொழிற்கல்லூரி மாணவர்கள் 4 பேர் 8 மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுதியில் கர்னூல் மற்றும் காவாலி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
    • விடுதியில் தங்கி உள்ள இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வரா கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு என தனியாக விடுதி நடத்தப்படுகிறது.

    இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த விடுதியில் கர்னூல் மற்றும் காவாலி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கர்னூல், காவாலி என்ற பெயரில் தனித்தனியாக குழுவாக செயல்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கல்லூரி உணவகத்தில் சமையல் செய்யப்படுகிறது.

    இந்த உணவுகளில் காரமான ஆந்திரா மிளகாயை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென கர்னூல் பகுதி மாணவர்கள் தெரிவித்தனர். அதன்படி அதிக அளவு மிளகாய் உணவில் சேர்க்கப்பட்டது.

    இதற்கு காவாலி பகுதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் உணவில் போதுமான அளவு மட்டுமே மிளகாய் சேர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சேர்க்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர் .

    இதனால் விடுதியில் தங்கி உள்ள இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் தாக்கினர்.

    இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் விடுதியில் இருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டது.

    உணவில் மிளகாய் சேர்ப்பது தொடர்பாக மாணவர்கள் மோதிக்கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.

    • மாணவர்களின் பெற்றோரை வரவழைத்த ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றி புகார் அளித்ததுடன், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
    • 9-ம் வகுப்பு மாணவனை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவனது மண்டை உடைந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேட்டில் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்கு படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த மாணவர்களின் பெற்றோரை வரவழைத்த ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றி புகார் அளித்ததுடன், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    இருப்பினும் நேற்று மாணவர்கள் இருதரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவனை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவனது மண்டை உடைந்தது.

    இதுபற்றி தகவலறிந்த ஆசிரியர்கள் காயமடைந்த மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர். மேலும் மாணவனை தாக்கிய மாணவர்கள் மீது பள்ளி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    போலீசார் விசாரணையில், யார் தலைவர் என்கிற போட்டியில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது தெரிய வந்தது.

    இந்தநிலையில் இன்று காலை இறைவணக்கத்தின்போது அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    திருப்பூர் அரசு பள்ளியில் இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு மாணவிடியை 4 பேர் காதலித்து வந்தனர்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    வாலிபர் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அந்த மாணவியை அதே நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மேலும் 3 பேர் காதலித்து வந்தனர்.

    அந்த மாணவியும் எல்லோரிடமும் காதலிப்பது போல் சரிசமமாக பேசி வந்துள்ளார்.

    இது குறித்து 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு தெரிய வரவே, அவர் மாணவியை கண்டித்து உள்ளார். இது தொடர்பாக மாணவியை காதலித்து வரும் மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், கரடிகுடியில் உள்ள 2-ம் ஆண்டு மாணவனின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படு காயமடைந்த மாணவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மாணவனின் பெற்றோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×