search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223923"

    • ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் வென்யூ மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.
    • புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடலில் சன்ரூஃப் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய எஸ்யுவி மாடல் முதல் முறையாக கொரியாவில் ஸ்பை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் புதிய கார் அதன் ப்ரோடோடைப் வடிவில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வெர்ஷன் இந்தியாவில் உருவாக்கப்பட்டு இங்கிருந்து கொரியாவில் உள்ள தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    ஹேச்பேக் மாடல்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மற்ற ஆட்டோ உற்பத்தியாளர்களை போன்றே ஹூண்டாய் நிறுவனமும் அனைத்து பிரிவுக்கும் ஏற்றவாரு எஸ்யுவி மாடலை உருவாக்கி வருகிறது. இதுவரை பெயரிடப்படாமல் இருக்கும் ஹூண்டாய் எஸ்யுவி மாடல் கிராண்ட் i10 மாடலுக்கு இணையாக இருக்கும் என்றும் இது இந்திய சந்தையில் ஹூண்டாயின் மிகச் சிறிய எஸ்யுவி-யாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் Ai3 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று தொடங்கும் முன்பு தான் இந்த காரின் உற்பத்தியை துவங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. டெஸ்ட் செய்யப்படும் மாடலை பார்க்கும் போது, கேஸ்பர் மாடலை விட சற்று வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என்றெ தெரிகிறது. இதன் ஸ்டைலிங் முற்றிலும் வித்தியாசமாகவும், அதிக எஸ்யுவி பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது.

    இந்த மைக்ரோ எஸ்யுவி மாடலில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள், வென்யூ போன்ற ஹெட்லேம்ப் அதன் கீழே பொருத்தப்பட்டு இருக்கிறது. டேடைம் ரன்னிங் லைட்கள் H வடிவம் கொண்டிருக்கின்றன. இதே போன்ற செட்டப் சாண்டா ஃபெ எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்களிலும் காணப்பட்டது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எல்இடி டிஆர்எல் ஆக இருக்கும் என தெரிகிறது.

    பக்கவாட்டு பகுதிகளில் முன்புற ஃபெண்டர்கள் கேஸ்பர் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. பின்புறம் கதவு சற்றே உறுதியானதாகவும், டோப் ஹேண்டில் செவ்வக பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறம் சற்றே ஆங்குலர் டிசைன் கொண்ட டெயில் லேம்ப்கள், பின்புற பம்ப்பர் முற்றிலும் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது. டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 மாடல்களை போன்றே இந்த காரிலும் போட்டியை ஏற்படுத்தும் அம்சங்களான சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    Source : Rushlane | 악군TV

    • ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது கார் விவரங்களை தொடர்ந்து அதன் ஸ்பை படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
    • புதிய ஹூண்டாய் கார் கனெக்டெட் டெயில் லேம்ப்களுடன் குறிப்பிடத்தக்க வெளிப்புற மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது மேம்பட்ட கிராண்ட் i10 நியோஸ் மாடலை இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக கிராண்ட் i10 நியோஸ் மாடல் தற்போது விளங்குகிறது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மட்டுமின்றி ஹூண்டாய் நிறுவனம் தனது i20 பிரீமியம் ஹேச்பேக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    முற்றிலும் புதுிய i20 மாடல் நவம்பர் 2020 ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது ஃபேஸ்லிஃப்ட இந்த காருக்கான முதல் மிக முக்கிய அப்டேட் ஆகும். தற்போதைய ஸ்பை படங்களின் படி புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், முன்புற பம்ப்பர் சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்களை பெற்று இருக்கிறது.

    இத்துடன் புதிய அலாய் வீல்கள், இண்டீரியரை பொருத்தவரை இந்த காரில் டிரன்க் மற்றும் ரியர் பம்ப்பர் காணப்படுகிறது. இத்துடன் எல்இடி லைட்னிங் ஸ்ட்ரிப்கள் டெயில் லைட்களுடன் இணைகிறது. இது ஹூண்டாய் வென்யு மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. 2023 ஹூண்டாய் i20 மாடலின் கேபினிலும் அதிக அம்சங்கள் வழங்கப்படும் என எகிர்பார்க்கலாம்.

    • இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
    • ஏற்கனவே இந்த கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா வருகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் வாகனத்திற்கான முன்பதிவு இந்தியாவில் டிசம்பர் 20 ஆம் தேதி துவங்கும் என அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே இந்த காரின் டெஸ்டிங் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் இந்திய விலை விவரங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    கியா நிறுவனத்தின் EV6 மாடல் உருவாக்கப்பட்ட E-GMP பிளாட்ஃபார்மிலேயே புதிய ஐயோனிக் 5 மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் பானரோமிக் சன்ரூஃப், 20 இன்ச் அளவில் பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் அலாய் வீல்கள், முழு சார்ஜ் செய்தால் 412 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டிருக்கிறது. இதன் உள்புறம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டிசைனை பொருத்தவரை ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், ஃபிளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், பிக்சலேட் டிசைன் கொண்ட எல்இடி டெயில் லைட்கள், இண்டகிரேடெட் ஸ்பாயிலர், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, ஃபௌக்ஸ் முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறம் பெரிய கன்சோலில் ஒரு ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்றும் மற்றொரு ஸ்கிரீன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபுளோடிங் செண்டர் கன்சோல், 2-ஸ்போக் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் 2023 ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், RWD மற்றும் AWD வெர்ஷ்ன்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இந்த இரு வேரியண்ட்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐயோனிக் 5 மாடல் உள்நாட்டிலேயே அசெம்பில் செய்யப்படும் என தெரிகிறது. 

    • ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் புது கார் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • புதிய ஹூண்டாய் கார் K1 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றி சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த மாடல் சிட்ரோயன் C3 மற்றும் டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். மேலும் இந்த கார் கிராண்ட் i10 நியோஸ் மாடலுடன் நிலை நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய பி1 செக்மெண்ட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம். புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் ஹூண்டாய் Ai3 CUV எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நியோஸ் மற்றும் ஆரா மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கும் பிளாட்ஃபார்மிலேயே புதிய காரும் உருவாக்கப்பட இருக்கிறது.

    அந்த வகையில், இந்த கார் கிராண்ட் i10 நியோஸ் மாடலில் வழங்கப்படும் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும் இந்த மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை எஸ்யுவி என்ற பெருமையை பெறும்.

    புதிய ஹூண்டாய் காரில் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜ், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஹூண்டாய் புளூ லின்க், கூல்டு ஸ்டோரேஜ் கன்சோல், எலெக்ட்ரிக் வசதியுடன் ORVM போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் மாடலை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டெஸ்டிங் இந்திய சாலைகளில் நடைபெற்று வருகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு மிட்-லைஃப் அப்டேட் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கான டெஸ்டிங் துவங்கி இருக்கிறது. புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சென்னை அருகில் உள்ள ஹூண்டாய் ஆலை பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய ஸ்பை படங்களில் புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இந்த காரில் பூமராங் வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் பம்ப்பரின் ஓரத்தில் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இதன் முன்புற கிரில் தற்போது ஹெக்சகோனல் டிசைன் கொண்டிருக்கிறது.

    பக்கவாட்டில் புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய அலாய் வீல் டிசைன் கொண்டிருக்கிறது. காரின் பின்புறம் அதிகளவு மறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரில் புதிய டிசைன் கொண்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக ஜெர்மனியில் எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் இந்த ஹேச்பேக் மாடல் ஸ்கை புளூ நிறம் கொண்டிருந்தது. இந்த நிறம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இது முற்றிலும் புதிதாக இருக்கும். இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படும் மாடல் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கிராண்ட் i10 நியோஸ் மாடல்- டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், அக்வா டியல், ஃபியரி ரெட் மற்றும் போலார் வைட் என ஐந்து வித நிறங்களிலும், டூயல் டோன் நிற ஆப்ஷனிலும் கிடைக்கிறது. தற்போதைய ஸ்பை படங்களில் காரின் இண்டீரியர் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், புது காரின் இண்டீரியரும் மாற்றப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.

    Photo Courtesy: Rushlane

    • ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் ஐயோனிக் 5 மாடல் இந்தியா வருகிறது.
    • ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் E-GMP பிளாட்பார்மை சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தி இருந்தது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய தயாராகி விட்டது. மேலும் இது ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    ஏற்கனவே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது E-GMP பிளாட்பார்மில் உருவான முதல் கார் ஐயோனிக் 5 இந்தியா வர இருக்கிறது. இதே பிளாட்பார்மில் தான் கியா EV6 மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐயோனிக் 5 மூலம் ஹூண்டாய் E-GMP பிளாட்பார்மையும் இந்தியா கொண்டு வருகிறது. இதே பிளாட்பார்மில் ஹூண்டாயின் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கப்பட இருக்கிறது.

    புதிய ஐயோனிக் 5 மாடலில் உள்ள அதிவேக எலெக்ட்ரிக் மோட்டார் மணிக்கு அதிகபட்சம் 185 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 5-லின்க் ரியர் சஸ்பென்ஷன், காரில் பயணம் செய்வோருக்கு தலைசிறந்த சவுகரியத்தை வழங்குவதோடு, சிறப்பான ஹேண்ட்லிங் வழங்குகிறது. மேலும் இந்த காரை 350 கிலோவாட் DC சார்ஜர் மூலம் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும்.

    "மொபிலிட்டி துறையில் சாத்தியமானவற்றுக்கு சவால் விடும் எங்களின் பானி, எலெக்ட்ரிக் குளோபல் மாட்யுலர் பிளாட்பார்ம் -E-GMP-இல் தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்தியாவில் E-GMP அறிமுகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர முடியும். இந்தியாவில் உள்ள புது தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் தலைசிறந்த எலெக்ட்ரிக் வாகனங்களை E-GMP உருவாக்கும்." என ஹூண்டாய் மோட்டார் இந்தியா தலைவர், தலைமை செயல் அதிகாரி அன்சூ கிம் தெரிவித்து இருக்கிறார்.

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புது மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது மைக்ரோ எஸ்யுவி ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    டாடா பன்ச் மைக்ரோ எஸ்யுவி-க்கு போட்டியை ஏற்படுத்தும் புது காரை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த கார் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் வெளியீடு அடுத்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

    ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் கார்களான கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேச்பேக் மற்றும் ஆரா காம்பேக்ட் செடான் மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மை பயன்படுத்தும் மூன்றாவது கார் மாடல் என்ற பெருமையை பெறும். இந்த கார் Ai3 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் காம்பேக்ட் யுடிலிட்டி வாகனமாக நிலை நிறுத்தப்படும். இது எஸ்யுவி பிரிவில் குறைந்த விலை மாடலாக இருக்கும். பட்ச் ஸ்டைலிங் மற்றும் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்டவை ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி காரின் முக்கிய அம்சங்களாக இருக்கும். தோற்றத்தில் இந்தகார் கேஸ்பர் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய கேஸ்பர் மாடலை ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை எஸ்யுவி மாடலாக புதிய மைக்ரோ எஸ்யுவி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 மாடலின் டீசல் வேரியண்ட் விற்பனையை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய புகை விதிகள் அமலுக்கு வர இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் புதிய பிஎஸ்6 புகை விதிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக பல்வேறு காம்பேக்ட் மற்றும் மிட்-சைஸ், சில ஆடம்பர வாகனங்களில் டீசல் என்ஜின்கள் நிறுத்தப்பட்டது. அதிக முதலீடு மற்றும் டீசல் திறன் வாகனங்களுக்கான மோகம் குறைவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதே போன்று அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய புகை விதிகள் அமலுக்க வர இருக்கிறது. அடுத்த ஆண்டு ரியல் டிரைவிங் எமிஷன் விதிகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சிறிய டீசல் என்ஜின் கொண்ட வாகனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருக்கிறது.

    இவ்வாறு புதிய புகை விதியில் பாதிக்கப்படும் முதல் கார் மாடலாக ஹூண்டாய் ஐ20 டீசல் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் என இரு ஹேச்பேக் கார்கள் மட்டும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் டைக்கின்றன. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸ், ஆரா மாடல்களின் டீசல் வேரியண்ட் விற்பனையை நிறுத்தியது.

    இவற்றில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட 75 பிஎஸ் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. ஹூண்டாய் ஐ20 மாடலில் தற்போது இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின்கள் மற்றும் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய செடான் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • புதிய ஹூண்டய் செடான் மாடல் சொனாடா மாடலின் மேல் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பிளாக்‌ஷிப் செடான்- கிராண்டியர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதே கார் தென் கொரியாவை தவிர மற்ற நாடுகளில் அசெரா என அழைக்கப்பட இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை செடான் மாடல் முந்தைய தலைமுறை கார்களை விட அதிகளவு மாற்றங்களை பெற்று இருக்கிறது. இந்த காரின் வெளிப்பும் மற்றும் இண்டீரியர் விவரங்கள் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் புதிய கிராண்டியர் மாடலின் முன்புறம் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டேரியா எம்பிவி போன்றே காட்சியளிக்கிறது. இதில் ஃபுல் விட்த் எல்இடி டிஆர்எல் லைட் பார், ஃபுல் லென்த் கிரில்-இடையில் ஹெட்லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் அழகான தோற்றம், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், மிக சிறிய கட் மற்றும் கிரீஸ்கள் காணப்படுகின்றன.

    வெளிப்புறத்தை போன்றே இண்டீரியரிலும் கிராண்டியர் மாடல் டூயல் ஸ்கிரீன் செட்டப், செண்டர் கன்சோலில் கிளைமேட் செட்டிங்களை மாற்ற டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளது. இது ஒரிஜினல் மாடலில் உள்ளதை போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. முந்தைய மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருந்தது.

    அந்த வகையில் இந்த மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இதில் பிளக்-இன் ஹைப்ரிட் வேரியண்ட் இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த காரின் சர்வகதேச வெளியீடு அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் என தெரிகிறது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புது வெர்னா மாடல் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான செடான் மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் வெர்னா இருந்து வந்தது.

    ஹூண்டாய் வெர்னா மாடல் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இது மட்டுமின்றி ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடலாகவும் வெர்னா விளங்கியது. எனினும், கடந்த சில ஆண்டுகளாக ஹூண்டாய் வெர்னா மாடல் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் வென்யூ எஸ்யுவி மாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதை அடுத்து ஹூண்டாய் வெர்னா விற்பனை சரிவடைந்து இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் செடான் பிரிவில் புது மாற்றங்களுக்கு ஏற்ப ஹூண்டாய் வெர்னா அப்டேட் செய்யப்படவில்லை. இது செடான் கார்களை வாங்குவோரை கவர மறுத்துவிட்டது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூண்டாய் நிறுவனம் அடுத்த தலைமுறை ஹூண்டாய் வெர்னா செடான் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் சோதனை நடத்தப்படும் படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன. அந்த வகையில் புதிய ஹூண்டாய் வெர்னா செடான் மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    வெளிப்புறம் மட்டுமின்றி காரின் உள்புறத்திலும் அதிக மற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதில் பெரிய இன்போடெயின்மெண்ட் யூனிட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய ஹூண்டாய் வெர்னா மாடலில் எல்இடி ஹெட்லைட்கள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூப், ஆர்கமிஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், 8 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, பின்புறம் ஏசி வெண்ட்கள், வெண்டிலேடெட் சீட்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVM-கள் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என தெரிகிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.
    • சிறப்பு சலுகை மற்றும் பலன்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹூண்டாய் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. கோனா எலெக்ட்ரிக் எஸ்யுவி, ஆரா செடான், கிராண்ட் ஐ10 நியோஸ் மற்ரும் ஐ20 ஹேச்பேக் கார் மாடல்களுக்கு ஹூண்டாய் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    அக்டோபர் மாதத்திற்கான சலுகைகள் எக்சேன்ஜ் போனஸ், தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இதில் கோனா எலெக்ட்ரிக் மாடலுக்கு தள்ளுபடி சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த காரை வாங்குவோருக்கு எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. கோனா எலெக்ட்ரிக் காரை வாங்கும் போது ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை வாங்கும் போது ரூ. 48 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கார் மூன்று விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 100 ஹெச்பி பவர் வழங்கும் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 83 ஹெச்பி பவர் வழங்கும் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் ஆரா மாடலை வாங்குவோருக்கு ரூ. 33 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ஆரா மாடல் மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஹூண்டாய் ஐ20 வாங்கும் போது ரூ. 20 ஆயிரம் வரை பலன்கள் கிடைக்கும். இதில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடி சலுகை ஐ20 மாடலின் மேக்ரனா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஐ20 மாடல் மாருதி சுசுகி பலேனோ, டாடா அல்ட்ரோஸ் மற்றும் டொயோட்டா கிளான்சா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் தனது ஐயோனிக் சீரிசில் புது எலெக்ட்ரிக் காரை சில மாதங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தியது.
    • இந்த எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக டீசர்கள் வடிவில் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    ஹூண்டாய் நிறுவனம் ஜூலை மாத வாக்கில் முற்றிலும் புதிய ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரை சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தி இருந்தது. நான்கு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் செடான் மாடலான ஐயோனிக் 6 ஸ்வூபிங் ரூப்லைன் கொண்டிருக்கிறது. காரை காட்சிப்படுத்தியதோடு ஐயோனிக் 6 அம்சங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அந்த வகையில் புதிய ஐயோனிக் 6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதன் 2WD வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 614 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் 18 இன்ச் மற்றும் 20 இன்ச் என இருவித வீல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 20 இன்ச் வீல் கொண்ட வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 545 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    ஹூண்டாய் ஐயோனிக் 6 AWD வேரியண்ட் (20 இன்ச் வீல்) முழு சார்ஜ் செய்தால் 583 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதன் 20 இன்ச் வீல் கொண்ட வேரியண்ட் 519 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதன் பேஸ் வேரியண்டில் 53 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதன் 18 இன்ச் வீல் கொண்ட வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 429 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    சார்ஜிங்கை பொருத்தவரை ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடலை 800 வோல்ட் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜர் கொண்டு 10 இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும். புதிய ஐயோனிக் 6 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், ஹூண்டாய் நிறுவனம் விரைவில் ஐயோனிக் 5 கிராஸ் ஒவர் மாடலை வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ×