search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223931"

    • அப்போது பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று சத்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் தகராறு ஏற்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள கரண்டிபாளையம், முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பழனிச்சாமி (வயது 35).

    இவருக்கு திருமணமாகி சத்தியா என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். பழனிச்சாமிக்கும், சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பழனிச்சாமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டார். அப்போது பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று சத்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சத்தியா கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் சதயா மீண்டும் வீட்டுக்கு வர வில்லை.

    இதனால மன வேதனை யில இருந்த பழனிச்சாமி நேற்று வீட்டின் சமையல் அறையில் தூக்கு மாட்டி கொண்டார். இதனைக் கண்ட அவரது மகன் அபிஷேக் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் பழனிச்சாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாகடர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தார்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • கணவன்- மனைவி தகராரில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38), ஆட்டோ டிரை வர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, திரு வண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலுக்கு விர தம் இருந்து நடைபயணம் செல்வதற்காகரமேஷ் மாலை அணிந்தார். ஆனால் சிலகாரணத்தினால் மனைவிக்கு தெரியாமல் அவர் மாலையை கழற்றியதாக கூறப்படுகிறது.

    இதன்காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த கவிதா நேற்று முன்தினம் வீட்டின் அறைக்குள் சென்று தூக்குப் போட்டு கொண்டார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் டவுன் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    • மனம் உடைந்து காணப்பட்ட சங்கர் கம்பெனி குடோனில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    சேலம் மாவட்டம் வீரக னூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சங்கர் (வயது 25). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

    இவர் டிப்ளமோ படித்து விட்டு கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள கொளப்பலூர் பகுதயில் ஒரு கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு சிகிச்சை பெற்று வீடு திரும் பினார்.

    ஆனால் அப்போது இருந்தே சரியாக வேலை செய்ய முடியாமல் அவதிப் பட்டு வந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தாராம்.

    இந்த நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட சங்கர் நேற்று கம்பெனி குேடானில் திடீரென நைலான் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நவநீதகிருஷ்ணன் வெளியே சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது சேலையால் தூக்கிட்ட நிலையில் திவ்யா தொங்கி கொண்டிருந்தார்.
    • திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே காலனி குடியிருப்பை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன். ஈரோடு ெரயில்வே யார்டூ மாஸ்டர் அலுவலக எழுத்தர் ஆக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி திவ்யா வயது (24). கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. நவநீதகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இது தொடர்பாக கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சமாதான மாகியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை நவநீதகிருஷ்ணன் வெளியே சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது சேலையால் தூக்கிட்ட நிலையில் திவ்யா தொங்கி கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு திவ்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது. 

    • அழுகிய நிலையில் பிணம் கண்டெடுப்பு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    அணைக்கட்டு தாலுகா, டி.சி.குப்பம் அடுத்த கரடிகுடி காட்டுப்பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரி யாத நபர் தூக்கில் தொங்கினார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் இறந்து பல நாட்களாகி இருக்கும் என தெரிகிறது.

    இதுகுறித்து வருவாய்த்துறையினர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோபிநாதன், தனிப் பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந் தசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    ஒடுகத்தூர் அடுத்த சேர் பாடி கூட்ரோடு கல்லுட்டை பகுதியில் ஆள் இல்லாத வீட்டின் முன்பு, அடையா ளம் தெரியாத 52 வயது மதிக்கத்தக்க நபர் தூக்குமாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    உடல் அருகே மது பாட் டில்கள் கிடந்தன. இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விஏஓ சரளா வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் அன் பழகன், ஏட்டு முத்துகுமரன் மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
    • பொத்தனூருக்கு வந்து கடந்த 6 நாட்களாக தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

    பரமத்தி வேலூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த வர் ராஜாங்கம் (வயது 55). இவரது மனைவி உமாதேவி( 50 ). இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இவரது தாயார் வீடான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூருக்கு வந்து கடந்த 6 நாட்களாக தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

    நேற்று மாலை கழிவறைக்கு சென்ற உமாதேவி கழிவறையில் உள்ள கொக்கியில் சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார் . வெகுநேரமாகியும் வராதால் அவரது பெற்றோர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தபோது கழிவறை தாழிட்டு இருந்தது. அப்போது கழிவறையின் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உமாதேவி இறந்து விட்டதாக தெரிவித்த னர். அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர்.புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்டகாஜனூர் நாயக்கர் வீதியை சேர்ந்த ரங்கநாயக்கர் மகன் சித்தராஜ்(19). லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். சித்தராஜ்க்கு கடந்த 3 மாதங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்தது.

    இதனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. கடந்த 4-ந் தேதி இரவு கடுமையான வயிற்று வலி காரணமாக வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, சித்தராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.
    • அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அம்மாபேட்டை சோழன் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). ஆட்டோ டிரைவரான இவருக்கு ரேகா (37) என்ற மனைவி உள்ளார். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று மாலை வழக்கம் போல் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சுரேஷ் பொன்னம்மாபேட்டை புது தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் சுரேஷ் இறந்து விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடும்ப பிரச்சினையால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் துரை நகர் இளங்கோ என்பவரின் மகள் ஐஸ் வர்யா ( வயது 21 ) இந்த ஆண்டுசென்னையில் என்ஜினீயரிங் முடித் துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக திடீரென்று நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • அரியாங்குப்பத்தில் கட்டிடத் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • கண்ணம்மாள் என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் கட்டிடத் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அரியாங்குப்பம் கலைஞர் நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலு. (வயது 52). கட்டிடத் தொழிலாளி இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.

    இதற்கிடையே பாலுவிற்க்கு குடி பழக்கம் காரணமாக இடது காலில் காயம் ஏற்பட்டதால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பாலுவிற்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காண்பித்த போது அவருக்கு வயிற்றில் கேன்சர் கட்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அது முதல் பாலு மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலு அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் குடும்பத்தினர் தேடினர். பின்னர் விசாரித்த போது பாலு மணவெளி சாராயக்கடை பின்புறம் சென்றதாக சிலர் தெரிவித்தனர்.

    இதையடுத்து அங்கு சென்று தேடிய போது அங்குள்ள தென்னந் தோப்பில் பூவரச மரத்தில் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி கண்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போக்சோ வழக்கில் போலீசார் தேடியதால் பயந்து போன டெய்லர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் ஏழுமலையை எதிரியாக சேர்த்து அவரை முத்தியால்பேட்டை போலீசார் தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    போக்சோ வழக்கில் போலீசார் தேடியதால் பயந்து போன டெய்லர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை முத்தியால் பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது47). டெய்லர். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் ஏழுமலையை எதிரியாக சேர்த்து அவரை முத்தியால்பேட்டை போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து ஏழுமலை தனக்கு முன் ஜாமீன் கேட்டு புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஏழுமலையை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

    இதனையறிந்த ஏழுமலை கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் மன உளைச்சல் காரணமாக போலீசுக்கு பயந்து போய் இருந்த ஏழுமலை தான் வேலை பார்க்கும் டெய்லர் கடை உரிமையாளர் தேங்காய்திட்டை சேர்ந்த சதாசிவம் என்பவர் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தன்னை போலீசார் கைது செய்தால் உறவினர்கள் மற்றும் தனது சமுதாயம் ஏளனமாக பார்ப்பார்களே என வேதனையடைந்த ஏழுமலை நேற்று காலை சதாசிவம் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்திருக்கும் அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விபரீத முடிவு
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தனுஸ்ரீ (வயது 20).வீட்டில் தனியாக இருந்தபோது தனுஸ்ரீ நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசாரின் விசாரணையில் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×