search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம்"

    • பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
    • விடுதிகளில் மாணவர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் உணவு வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் கீழ் இயங்கும் 27 பள்ளி மாணவர் விடுதிகளும், 8 பள்ளி மாணவியர் விடுதிகளும் என மொத்தம் 35 பள்ளி மாணவ- மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

    2023-24-ம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலியின் மூலம் இணைய வழியில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளர் உதவியு டனோ விண்ணப்பிக்கலாம்.

    பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

    பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மாணவ, மாணவிகளுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் வழங்கப்படுகிறது.

    இணையதளத்தில் மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளில் சேர வருகிற 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை-வருகின்ற 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கபட்டுள்ளது
    • இப்பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியும் ஓராண்டு பயிற்சி பிரிவிற்கு 8- ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அறக்கொடை அறக்கட்டளை சார்பில் 2014- ஆம் ஆண்டு முதல் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய பயிற்சிக் குழும அங்கீகாரம் பெற்ற இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக் பிரிவுகளுக்கு 2 ஆண்டு பயிற்சியும், வெல்டர் பிரிவு மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியும் ஓராண்டு பயிற்சி பிரிவிற்கு 8- ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    இதில் சேர விரும்புவோர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற அனைத்து வேலை நாட்களிலும் நேரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், விபரங்களை தொழிற்பயிற்சி நிலையத்தின் 04324 - 296442 / 9486505953 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் ஜூன் 9 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு காகித நிறுவன அறக்கொடை தெரிவித்து கொள்கிறது.

    • வாகன அங்காடி அமைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடவும், சிற்றுண்டிகள், உணவு வகைகள், பழச்சாறு வகைகள் விற்பனை செய்திட ஏதுவாக நடமாடும் மதி அங்காடி (எக்ஸ்பிரஸ்) என்ற பெயரில் வாகன அங்காடி அமைத்து மாற்றுத்தி றனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே, நடமாடும் மதி அங்காடியை (எக்ஸ்பிரஸ்) இயக்குவதற்கும், பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை யில் ஆர்வமும், முன்அனு பவமும், சுயஉதவிக்குழுவில் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஒற்றைப்பெற்றோர் ஆகியோர்கள் தொடர்புடைய சுய உதவிக்குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களில் வராக்கடன் ஏதுமில்லை என்ற சான்றி தழுடன் விண்ணப்பங்களை தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்று வருகிற 31-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை ஒருங்கிணைந்த கட்டிடத்தில் தரைதளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் சமர்ப்பித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் காகிதக்கூழ் பிரிவில் கட்டணமில்லா தொழிற் கல்வி பட்டயப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டது
    • ஜுன்.1 அன்று 18 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்

    கரூர்,

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் 5 மாணாக்கர்கள் தேர்வு செய்து, அவர்கள் திருச்சி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக் கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் இலவச கல்வி பயில வழிவகை செய்யப்படுகிறது. மாணாக்கர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுகட்டணம் ஆகியவை காகித நிறுவனத்தால் கல்லூரிக்கு செலுத்தப்படும்.

    இந்த கட்டணமில்லாக் கல்வித்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, அலகு-1 ஐ சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ந.புகழூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, அலகு-II ஐ சுற்றி அமைந்துள்ள மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் முதன் முறையில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் தகுதியுடையவர்களாவர்.

    ஜுன்.1 அன்று 18 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மொத்தம் 5 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சிபெற விருப்பமுள்ள மாணாக்கர்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரம் அலகு-1-ன் மனிதவளத் துறையிலும் மற்றும் மொண்டிப்பட்டி அலகு-II-ன் கால அலுவலகத்திலும் பெற்று. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பங்கள் பெறப்பட்ட இடத்திேலயே 15.06.2023 (வியாழக்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்குமாறு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் 5 புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
    • கல்வி கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகே சேர்க்கை பூர்த்தியாகும்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராணி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-24 கல்வி ஆண்டிற்கு இணைய வழி மூலம் விண்ணப்பித்த மாணவர்க ளுக்கு மே 31 ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    முதல் நாளில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திற னாளிகள், தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. ஜூன் 2ம் தேதி பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 3ஆம் தேதி வணிகவியல், வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 5ஆம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவ லருடன் வர வேண்டும்.

    கலந்தாய்வுக்கு வரும்போது உரிய மதிப்பெண் சான்றி தழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ்கள், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் 5 புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

    கலந்தாய்வில் ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்ற பிறகு வேறு பாட பிரிவிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

    ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்ற பின்னர் வேறு பாடப் பிரிவிற்கு மாற்றம் செய்ய அனுமதிக்க இயலாது.

    கல்வி கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகே சேர்க்கை பூர்த்தியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் அமைய உள்ள நடமாடும் மதி அங்காடிகளில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகளை விற்பனை செய்ய விருதுநகர் மாவட்டத்தில் நடமாடும் மதி அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது.

    அதன்படி விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு 3 நடமாடும் மதி அங்காடிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடமாடும் மதி அங்காடிகளை இயக்க பின்வரும் விதிமுறை களுக்குட்பட்டு பயனாளிகள் தேர்வு செயயப்பட உள்ளனர். பயனாளிகள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்.

    மகளிர் மாற்றுத்திறனாளி கள், ஒற்றைப்பெற்றோர், கணவரால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகள், விதவை மாற்றுத்திறனாளி யாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர் சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் பயனாளிகள் சார்ந்த சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன்அனுபவ முடையவராக இருக்க வேண்டும்.

    உறுப்பினர் சார்ந்த சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓராண்டிற்கு மேல் நிறைவடைந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்மீது வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளில் வராக்கடன் ஏதும் இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகுதிகள் பெற்றிருக்கும் விருப்ப முள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வளாகம், விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    • பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 மற்றும் பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டு 1998-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2023-2024 கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இதில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இப்பள்ளியில் 12 முதல் 25 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.நாதசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளில் சேர தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசைப்பள்ளியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாணாக்கர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.400 வழங்கப்படுகிறது. அரசுப் பஸ்களில் இலவச பயண சலுகை பெறலாம்.

    பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 மற்றும் பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும்.இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்.1, மதனகோபாலபுரம், நான்காவது தெரு, பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலும், தொலைபேசி எண் 04328-275466 மற்றும் கைபேசி எண் 8072519559 ஆகிய எண்களின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
    • ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாப்செட்கோ) கடன் திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.பொது கால கடன் திட்டம் அல்லது தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும்.

    நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் ஆகும். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். மகளிர் திட்ட அலுவலரால் தரம் (கிரேடிங்) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள், அனுமதிக்கப்படுவார்கள்.பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்று கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறுபான்மையின மக்கள் டாம்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனி நபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    1-ன் கீழ் தனி நபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

    திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1½ லட்சம் கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையின மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/ முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிக பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் உதவி வழங்கப்படுகிறது.

    கடன் மனுக்களுடன் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெரும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் மேற்காணும் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பினால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கடன் விண்ணப்பங்களை பெற்று அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவர் திட்டத்தில் வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை முகவர் திட்டத்தை அறிவித்தார்.

    இத்திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.

    திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2¼ லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்ட தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3¾ லட்சம் மானியம் அளிக்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.co என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் ஆர்.டி.ஓ. வளாகத்தில் இயங்கி வரும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • 8,865 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • மனுக்கள் உரிய விசார ணைக்கு பின்னர் ஒருவார காலத்திற்குள் வழங்கபடவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கல்லூரியில் சேர்ந்திடும் பொருட்டு, இணையதளத்தின் வாயிலாக, சாதிச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த வானூர் வட்டம், தென்கொடி ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் சாருமதி மற்றும் சரண்யா ஆகியோ ருக்கு மாவட்டகலெக்டர் பழனி பழங்குடியி னருக்கான இருளர் சாதிச் சான்றித ழ்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் இணையதளம் வாயிலாக 10,515 சாதிச்சான்றிதழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,865 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்க அனுமதிக்க ப்பட்டுள்ளது. 11,428 வருமானச் சான்றி தழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 9,714 நபர்களுக்கு வருமானச்சான்றிதழ் வழங்க அனுமதிக்க ப்பட்டுள்ளது. 9,795 இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,685 நபர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க அனுமதிக்க ப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள விண்ணப்ப தாரரின் மனுக்கள் உரிய விசார ணைக்கு பின்னர் ஒருவார காலத்திற்குள் வழங்கபடவுள்ளது. அதனடிப்படையில், வானூர் வட்டம், தென்கொடிப்பாக்கம் கிராமத்தினைச் சேர்ந்த வீரப்பன் மகள்களான சாருமதி மற்றும் சரண்யா கல்லூரி மேற்படிப்பிற்காக சாதிச்சான்றிதழ் வேண்டி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் விண்ணப்ப ங்கள் உரிய பரிசீலனைக்கு பிறகு இரு மாணவிகளுக்கு பழங்குடியினருக்கான இருளர் சாதிச் சான்றி தழ்கள் வழங்கப்ப ட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்பர மேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சி யர்ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கங்களில் நடைபெறுகிறது.

    கீழக்கரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி, சத்தான உணவு வழங்குதல் கீழ்கண்ட நகரங்களில் விடுதிகள் நடைபெற்று வருகிறது.

    மாணவர்களுக்கு மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை ராமநாதபுரம், சென்னை, கோவை, உதகமண்டம் விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி உள்பட 17 நகரங்களிலும், மாணவிகளுக்கான விடுதி ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், சென்னை, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை நாகர்கோவில் உள்பட 10 நகரங்களிலும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மை விளையாட்டரங்கம் சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி மற்றும் நெல்லை மாணவிகளுக்கான முதன்மை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கம் மற்றும் ஈரோடு விடுதிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.

    மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 24-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கங்களில் நடைபெறுகிறது.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×