search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம்"

    • நேற்று முதல் விண்ணப்பித்தவர்கள் ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்க வேண்டி மீண்டும் விண்ணப்பித்து வந்தனர்.
    • பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளுக்கு பணம் சென்று உள்ளதும் தெரியவந்துள்ளது

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வேண்டி விண்ணப்பித்த ஏராளமான பெண்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர்அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உதவி மையம் தொடங்கப்பட்டு, அங்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்ததை தொடர்ந்து நேற்று முதல் விண்ணப்பித்தவர்கள் ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்க வேண்டி மீண்டும் விண்ணப்பித்து வந்தனர்.

    இன்று காலை கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்து சென்றனர். இந்த நிலையில் ஏராளமான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டன. ஆனால் விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட வங்கி கணக்கில் பணம் செல்லாமல் அவர்கள் ஏற்கனவே தொடங்கி இருந்து பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளுக்கு பணம் சென்று உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கடும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதற்கான நிரந்தர தீர்வை ஏற்படுத்தி உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

    • எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு வினியோகிக்கப்படும்.
    • அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணிக்கு எழுத்து தேர்வு முதன் முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டன.

    685 பணி இடங்களுக்கு கடந்த ஒரு மாதமாக விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பிக்க நேற்றுடன் அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்தது.

    தமிழகம் முழுவதும் அரசு பஸ் டிரைவர் பணிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். ஆன்லைன் வழியாக 10,121 பேரும், வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகம் மூலம் 1600 பேரும் விண்ணப்பித்து இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சாலை போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது. இதையடுத்து எழுத்துத் தேர்வு நடத்தி தகுதியான டிரைவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எழுத்து தேர்வை 10 மையங்களில் நடத்த திட்டமிட்டு உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வை நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு வினியோகிக்கப்படும்.

    அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணிக்கு எழுத்து தேர்வு முதன் முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • 1 கோடியே 45 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர்.
    • இரு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், காமாட்சி மூர்த்தி, பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கிவைத்து, பயனா ளிகளுக்கு திட்டத்தின் வங்கி கணக்கு பற்று அட்டை வழங்கி பேசினார்.

    அப்போது அமைச்சர் பேசியதாவது: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடும் விதமாக, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன் போன்ற பல திட்டங்கள் மூலம் பெண்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    தமிழ்நாட்டில் 39 லட்சத்து 40 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை, அமைப்புசாரா தொழி லாளர் உதவித்தொகை என மாதம் ரூ.1200 வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் நேரடி யாக 1 கோடியே 45 இலட்சம் குடும்பங்கள் பயன்பெற்ற வருகின்றனர்.

    ஆகவே, சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் பேசினார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் பேசியதாவது:

    நமது மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்திட்டம் விண்ணப்பங்கள் வழங்க இரு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்யப்பட்டது.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுக வினர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் கண்மணி நன்றி கூறினார்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • விண்ணப்பம் அளிக்க தவறியவர்களுக்கும் விண்ணப்பம் அளிக்க ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்

    குளச்சல் :

    குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    தமிழக முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டா லின் தேர்தல் வாக்குறுதிப்படி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 வழ ங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இது ஏழை, எளிய பெண்கள், உழை க்கும் இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தை நடத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. இந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு மேல் பெண்கள் பயனடைகின்றனர். இதனை நான் வரவேற்கிறேன். ஆனால் குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு தான் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது.

    மீதி 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவர்களின் செல்போ னுக்கு குறுஞ்செய்தி வரவி ல்லை. மகளிர் உரிமை தொகை கிடைக்கா தவர்கள் குழப்ப மடைந்து ள்ளனர். தகுதி யானவர்களுக்கு கிடைக்கா ததால் பீதியடைந்துள்ளனர். இவர்கள் வங்கிக்கு சென்று தங்கள் கணக்கு குறித்து வி பரம் கேட்கும் நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். இதனால் வங்கிகளில் கூட்டம் கூடு கிறது. தொ கை கிடைக்கா தவர்கள் இன்று முதல் ஒரு மாதத்தி ற்குள் மேல் முறையீடு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்து ள்ளார்.

    மேல் முறையீட்டில் தகுதி உள்ள விண்ணப்ப ங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு உரிமை தொகை வழங்க வேண்டும். தொழி லாளர் நல வாரியத்தில் சேர்ந்தவர்கள், விதவை பென்சன் வாங்கு பவர்க ளின் விண்ணப்ப ங்கள் நிராகரிக்கப்பட்டு ள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தொகை பெற விண்ணப்பம் அளிக்க தவறியவர்களுக்கும் விண்ணப்பம் அளிக்க ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் பெண்களின் சமூக நீதி காப்பாற்றப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மதி அங்காடி விற்பனை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • அங் காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் தேர்வு செய்யப்படும்

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காளையார்கோவில், சிவகங்கை அரண்மனை வாசல், கீழடி ஆகிய இடங்க ளில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட் களை விற்பனை செய்திடும் பொருட்டு மதி அங்காடி – விற்பனை மையம் மகளிர் திட்டம் வாயிலாக அமைக் கப்பட உள்ளது. அவ் விற்பனை மையம் அமைந் துள்ள உள்ளாட்சி அமைப்பு பகுதியில் உள்ள சுய உதவிக் குழு, கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

    தேசிய ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டாவது பூர்த்தி செய்து ஒரு வங்கிக்கடன் இணைப் பாவது பெற்று இருத்தல் வேண்டும்.

    அங்காடியின் உரிமம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்திடம் மட்டுமே இருக்கும். அங் காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் தேர்வு செய்யப்படும் சுய உதவிக் குழு, கூட்டமைப் பிற்கு 6 மாதங்களுக்கு வழங்கப் படும்.

    பின்னர் சுழற்சி முறையிலும், விற்பனை மற்றும் திறன் அடிப்படையிலும் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சித் துறை ஒருங்கிணைந்த கட்டிட வளாகம், வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகை அருகில், சிவகங்கை-630 562 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    மேலும், கூடுதல் விபரங்களுக்கு 04575 240962 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விடுப்பட்டவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • தஞ்சை மாவட்டத்தில் 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அரங்கத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வங்கி பற்று அட்டைகள் (ஏ.டி.எம் அட்டைகள்) வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழநிமா ணிக்கம் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது :-

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது.

    குடும்பத்திற்காக வாழ்நா ளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.

    ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது, பெண்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியா தையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.

    தஞ்சை மாவட்டத்தில் 549869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இதில் பெண்களுக்கு அவரவர் கொடுத்த வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டு உள்ளது.

    விடுப்பட்டவர்களுக்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கிடைக்காதவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் அணுகி மேல்முறையீடு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கல்யாண சுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி .கே .ஜி நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) உமா மகேஸ்வரி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தவவளவன் மற்றும் அலு வலர்கள், வங்கியாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • பயிற்சியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.
    • அதிகாரபூர்வ இணையதளமான www.tncuicm.com மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெறுகிறது. இந்த 12 மாத பயிற்சியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். வரும் 22-ந்தேதி பிற்பகல் 5 மணி வரை அதிகாரபூர்வ இணையதளமான www.tncuicm.com மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100-யை அரசுடமையாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் செலுத்திவிட்டு அதற்கான செலானை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    விண்ணப்பத்தில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்தும் செலுத்தலாம்.

    பதிவேற்றம் செய்யப்பட்ட செலான் நகல் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து அதில் சுய கையொப்பமிட்டு பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் அல்லது கொரியர் மூலம் மட்டுமே 22.09.2023 தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரில் அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
    • விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

    சீர்காழி:

    சீர்காழி மின்வாரிய செயற்பொறியா ளர் லதா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது சீர்காழி கோட்டத்தில் விவசாயம் மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்ப முள்ள விண்ணப்பதா ரர்கள் விரைந்து விவசாயம் மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடை முறைப்படு த்தப்பட்டு விவசாயம் மின் இணைப்பு கள் வழங்கப்பட்டு வருகிறது.தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளு க்கும் மற்றும் தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயி களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாயம் மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாயம் மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பம் உள்ள விவசாய மக்கள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாயம் மின் இணைப்பு பெற தங்கள் பகுதியில் செயற்பொ றி யாளரை தொடர்பு கொள்ளு மாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு ள்ளது.

    • 04.09.2023 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அரசாணை எண்:118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அனுமதியற்ற மனைப் பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட் டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன் னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவு களை வரன்முறைப்படுத்த. ஏற்க னவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பி டப்பட்ட 2017 -ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லா மல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 04.09.2023 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அரசாணை எண்:118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புப வர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படு கின்றது. இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ் வாறு செய்திகுறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு
    • வருகிற 20-ந் தேதி கடைசி நாள்

    வேலூர்:

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பி யாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்குபெறுகின்றனர்.

    அதேபோல் தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்தி க்கொள்ளும் வகையில் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்த தேர்வில் கலந்து கொள்ள 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வி த்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 வருடங்க ளுக்கு வழங்கப்படும்.

    இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்க ளிலும் மாவட்ட தலைந கரங்களில் இந்த தேர்வு நடக்கும். அதன்படி இந்த ஆண்டு தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி நடக்கிறது.

    இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அரசு பள்ளி, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி. உள்பட பிளஸ்-1 வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் மாணவர்கள் விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து, வருகிற 20-ந் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 89 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக வுள்ளது.
    • ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் கீழ்க்கண்ட விவரப்படி 76 இடை நிலை ஆசிரியர், 7 பட்டதாரி ஆசிரியர், 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர் என மொத்தம் 89 ஆசிரி யர்கள் பணியிடம் காலியாக வுள்ளது. கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகம், கடலூர், சிதம்பரம், விருத்தா சலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப் பட்டுள்ளது. மேற்கண்ட காலிப் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்த னையின் அடிப்படை யிலும் நிரப்பப்படவுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரிய ருக்கு ரூ.12,000 பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000 மற்றும் முது கலை பட்டதாரி ஆசிரிய ருக்கு ரூ.18,000 வீதம் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இடைநிலை ஆசிரியர், பட்ட தாரி ஆசிரியர், ஆசிரியர் களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வாளராக இருப்பவர்க ளுக்கு முன்னுரிமை அளிக் கப்படும். (இல்லையெனில்) வரையறுக்கப் பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலி னத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    முதுகலை பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதி களைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று மதிப்பெண் சரி பார்ப்பில் கலந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (அல்லது) அந்த ஒன்றியத்திற்குள் வசிப்பவர்கள் (அல்லது) அந்த மாவட்டத்திற்கு எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியடங்களை சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித் தகுதி பெற்ற நபர்களை மட்டுமே மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வாறு பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக நிரப்பிக் கொள்ள வேண்டும்.

    மேலும் மேற்கண்ட இந்த தற்காலிக பணி நியமனம், தேர்வு செய்யப்படும் இடைநிைல பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணி நியமனம் செய்யப்படும் நாள்முதல் ஏப்ரல் 2024-ம் மாதம் வரை மட்டும் தேர்வு செய்யப்படும். பணி நாடு நர்கள், ஆசிரியர் காலிப்பணி யடங்களை கடலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகம், மற்றும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சி யர் அலுவலகங்களில் தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட காலிப்பணி யிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதிச் சான்று ஆவணங்க ளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 4-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்ப டைத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.10 ஆயிரம் கடன் உதவி பெற சாலையோர வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தகவல் தெரிவித்தார்
    • ஈரோடு மாநகரா ட்சிக்கு உட்பட்ட பகுதிக ளில் உள்ள சாலையோர வியாபாரிகள் மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு,

    ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதா வது:- ஈரோடு மாநகரா ட்சிக்கு உட்பட்ட பகுதிக ளில் உள்ள சாலையோர வியாபாரிகள் மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஈரோடு மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் தகுதி உள்ள சாலையோர வியாபா ரிகள், மாநகராட்சி சமு தாய அமைப்பாளர்க ளை ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படும், வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவ ணங்களுடன், அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொ லைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×