search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம்"

    • 100 மீட்டர் ஓட்டம்.45 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம்.
    • காலை 8 மணிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - சர்வதேச அளவில் இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த இந்திய ஹாக்கி ஒலிம்பியன் மேஜர் தயான்சந் தை கவுரவிக்கும் வகையில், அவரின் பிறந்தநாளினை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு 29 -ந்தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதால், அதனை நினைவு கூறும் வகையில் கீழ்கண்டவாறு விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும்.

    இதில் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி மற்றும் 100 மீட்டர் ஓட்டம்.25 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர்கூடைப்பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்டம்.45 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குழு விளையாட்டிற்கு ஒரு குழுவாகவும், தனிநபர் போட்டிக்கு தனியாகவும் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை 28 -ந்தேதி பிற்பகல் 5 மணிக்குள் கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்பிவைத்து, போட்டி நடைபெறும் அன்று காலை 8 மணிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொலைதூர கல்வி முறையில் இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர்:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைதூர கல்வி முறையில் இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.எட்., உள்ளிட்ட அனைத்து பாட, மாத தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 28ந் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேணடும்.தொலைதூர கல்வி தேர்வு சார்ந்த விபரங்களை https://sde.b-u.ac.in/SSS/OLP/ என்ற பல்கலை க்கழக இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • குழந்தை சாதனையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    விருதுநகர்

    தேசிய அளவில் வீரதீர செயல் கள், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் பண்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கவுரவப்ப டுத்தும் வகையில் 2024-ம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி ராஸ்ட்ரிய பால் புரஸ்கார் விருது மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படவுள்ளது.

    இவ்விருது வீரதீர செயல் புரிந்த குழந்தைகளுக்கான விருது மற்றும் சிறந்த குழந்தைகளுக்கான விருது என 2 பிரிவுகளாக வழங்கப்பட வுள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://award.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இந்தியக்குடிமகனாக இருத்தல் வேண்டும், இந்தியா வில் வசிப்பவராக இருத்தல் வேண்டும், விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான 31-ந்தேதியன்று 18 வயதிற்குள் இருத்தல் வேண்டும், கடந்த 2 ஆண்டுகளுக்குள் விருதிற்கான சிறந்த செயல் மற்றும் சாதனை செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளன.
    • 3 நாள் சிறப்பு முகாமில் 48 ஆயிரம் பேர் பதிவு

    கோவை,

    தமிழகத்தில் பெண்க ளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என பெயரிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் வசிக்கும் ரேஷன்கார்டு தாரர்களுக்கு ஊழியர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க ப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன.

    கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 11 லட்சத்து 43 ஆயிரத்து 891 வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து கோவையில் உள்ள 839 கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் கட்ட முகாம் நடத்தப்பட்டது. அப்போது 6 லட்சத்து 33 ஆயிரத்து 525 கார்டுதார்களில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 480 பேர் விண்ணப்பத்தை பெற்று கொண்டனர்.

    அவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 354 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் பதிவு செய்தனர். ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 126 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. மீத முள்ள 562 கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட முகாம் நடத்தப் பட்டது. அங்கு 5 லட்சத்து 10 ஆயிரத்து 366 கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் 4 லட்சத்து 22 ஆயிரத்து 300 கார்டு தார்களே விண்ணப்பத்தை பெற்றனர். அவர்களில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 908 பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். மீதம் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 392 பெண்கள் விண்ணப்பத்தை ஒப்படைக்கவில்லை.

    கோவையில் நடத்தப்பட்ட 2 முகாம்களிலும் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 98 ஆயிரத்து 518 பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திரும்ப வழங்கவில்லை. அதே நேரம் முதல்கட்ட முகாமில் 68 ஆயிரத்து 45 கார்டுதாரர்கள், 2-ம் கட்ட முகாமில் 88 ஆயிரத்து 66 கார்டுதாரர்கள் என மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 111 பேர் விண்ணப்பமே பெறவில்லை என்பது தெரிய வந்து உள்ளது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் விடுபட்ட அனைத்து பெண்களும் விண்ணப்பம் பெற்று பதிவு செய்வதற்கு ஏதுவாக, தமிழக அரசு 3 நாள் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து இருந்தது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் 18, 19,20-ந்தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டு விண்ணப் பங்களை பெற்று பதிவு செய்து உள்ளனர்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் 3 நாளில் மட்டும் 48,687 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இங்கு கடந்த 18, 19, 20-ந்தேதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் மட்டும் தாலுகாவாரியாக பதிவான விண்ணப்பங்களின் விவரம் வருமாறு:

    ஆனைமலை-2808, அன்னூர்-1737, கோவை வடக்கு-13483, கோவை தெற்கு-7273, கிணத்துக்கடவு-1067, மதுக்கரை-5207, மேட்டுப்பாளையம்-4100, பேரூர்-5312, பொள்ளாச்சி-3499, சூலூர்-3732, வால்பாறை-469. கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் மாதாந்திர உரிமைத்தொகை பெறுவதற்காக 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது.

    இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், கோவையில் ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுவோரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து உள்ளனர். அத்தகைய விண்ணப்பங்கள் பரிசீலனையின் போது நிராகரிக்கப்படலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

    • விதிமுறைகளை சற்று தளர்த்தி இன்று மாலை வரை விண்ணப்பம் வழங்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
    • மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இதுவரை 60 சதவீத கார்டுதாரர்கள் விண்ணப்பம் வழங்கி இருக்கிறார்

    கோவை,

    தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

    இதற்காக கார்டுதாரர்களுக்கு வீடு தேடி சென்று படிவம் வழங்கி பூர்த்தி செய்து, திரும்ப பெற்று இந்த திட்டத்துக்கென வடிவமைத்துள்ள மொபைல் செயலியில் பதிவேற்றப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,401 ரேஷன் கடைகளில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 891 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

    839 கடைகளுக்கு உட் பட்ட பகுதிகளில் முதல் கட்ட முகாம் நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 33 ஆயிரத்து 525 கார்டுதார்களில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 480 கார்டுதாரர்கள் விண்ணப்பம் பெற்று கொண்டனர்.

    அதில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 354 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன. ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 126 விண்ணப்பம் பெறப்பட வில்லை.

    மீதமுள்ள 562 கடைக ுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட முகாம் நடத்தப்பட்டது. இந்த கடைகளில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 366 கார்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன.

    ஆனால் 4 லட்சத்து 22 ஆயிரத்து 300 கார்டு தார்களே விண்ணப்பத்தை பெற்றனர். இவர்களிலும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 908 பெண்கள், விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தி ருக்கின்றனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 392 பெண்கள் விண்ணப்பம் வழங்க வில்லை.

    இரு முகாம்களிலும் சேர்த்து 2 லட்சத்து 98 ஆயிரத்து 518 பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திரும்ப வழங்க வில்லை.

    இவர்களுக்காகவே விதிமுறைகளை சற்று தளர்த்தி இன்று மாலை வரை வழங்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதே நேரம் முதல்கட்ட முகாமில் 68 ஆயிரத்து 45 கார்டுதாரர்கள், 2-ம் கட்ட முகாமில் 88 ஆயிரத்து 66 கார்டுதாரர்கள் என மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 111 குடும்பத்தினர் விண்ணப்பமே பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறியதாவது:-

    மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இதுவரை 60 சதவீத கார்டுதாரர்கள் விண்ணப்பம் வழங்கி இருக்கிறார். விடுபட்டோருக்கு நடத்தப்படும் சிறப்பு முகாமில் கூடுதல் விண்ணப்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையில் பூர்த்தி செய்து திரும்ப பெற்றுள்ள விண்ணப்பங்கள் அதிகம். ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக ஆண்டு வருவாய் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். அத்தகைய விண்ணப்பங்கள் பரிசீலனையின் போது நிராகரிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • முகாமில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • 1541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிைம திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந் தோறும் 1000 உதவி தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெற சேலம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக முகாம்கள் நடந்தது. முதல்கட்டமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 846 மையங்களில் நடந்த முகாமில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து 2-வது கட்டமாக கடந்த 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 695 மையங்களில் நடந்த முகாமில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 213 விண்ணப் பங்கள் என மொத்தம் 1541 முகாம்கள் மூலம் 7 லட்சத்து 13 ஆயி ரத்து 662 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதற்கிடையே ஓய்வூதியம் பெறும் மாற்று திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம் இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று (18-ந் தேதி) முதல் வரும் 20-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஏற்கனவே முகாம் நடைபெற்ற அதே 1541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் இன்று காலை தொடங்கியது.

    ஏற்கனவே 2 கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் விடுபட்டவர்களும் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே விண்ணப்பங்களை பதிவு செய்யாதவர்கள் இன்று காலை முதல் இந்த முகாம்களில் திரண்டுள்ளனர். அவர்களிடம் விண்ணப் பங்களை பெற்று அதிகாரிகள் பதிவு செய்து வருகிறர்கள். இதனை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    • செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் உரிமம் பெற்றிட வேண்டும்.
    • 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் விடுதிகள் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ் உரிமம் பெறுவது கட்டாயம் ஆகும். எனவே, கடலூர் மாவட்டத்தில் அரசு சாரா, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 18 வயது வரையுள்ள மாணவ மாணவியருக்கான விடுதிகளானது வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் உரிமம் பெற்றிட வேண்டும்.

    அவ்வாறு உரிமம் பெற்றிடாமல் விடுதிகள் இயக்கி வரும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை தேர்விற்கு தயார்படுத்தும் நோக்கில் கல்வி நிறுவனங்களில் தற்காலிகமாக தங்கி பயில்வதற்கும் விடுதி உரிமம் பெறுவது கட்டாயமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இணையவழியாக வருகிற 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

    தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    அக்னிவீரர்களுக்கான இணையவழித்தேர்வு அக்டோபர் 13-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

    27.6.2003 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் 27.12.2006 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    கல்வித்தகுதி 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    அரசால் அங்கீகரிக்க ப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    உடல்தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும்.

    தேர்வானது மூன்று முறைகளை கொண்டது.

    எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது.இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம்.

    அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    இந்த பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணிமுடி ந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணி புரிய அனுமதிக்கப்படு வார்கள்.

    இந்த பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய விமானப்படை அக்னி பாத்தின் மேலே உள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    அவ்வாறு விண்ணப்பித்த வர்கள் தங்களது முழு விவரத்தை https.//form.gle/k9ynQSJ9NRJoWkoc7 என்ற லிங்கில் பதிவு செய்ய வேண்டும்.

    எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிகஅளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.
    • 17 வகையான விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.

    அதன்படி, பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக விளங்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

    எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம். சிறந்த டூர் ஆப்ரேட்டர், சிறந்த உள்நாட்டு டூர் ஆப்ரேட்டர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான கூட்டாளர், சிறந்த தங்குமிடம் என 17 வகையான விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27-ந் தேதி சென்னையில் வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

    விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலருக்கு 89251 58497 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
    • நாளை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் 35 வயதுக்கு உட்பட்ட பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

    மேலும் டேட்டா புளோ, எச்.ஆர்.டி சான்றிதழ்களில் சான்றோப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

    மேற்படி பணியா ளர்களுக்கு உணவு படி ,இருப்பிடம், விமான பயண சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை வேலை அளிப்ப வரால் வழங்கப்படும்.

    பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் www.omcmanpower.com என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்க ளை அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலை பேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ( 9566239685, 6379179200, 044- 22505886/ 22502267 ) .

    மேற்குறிப்பிட்ட பணிகளு க்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தஞ்சாவூரில் நாளை ( புதன்கிழமை ) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம்.

    மேலும் இந்த முகாமுக்கு வர முடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

    அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியை பொருத்து முன்னுரிமை வழங்கப்படும்.

    இந்த பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடம் இருந்து சேவை கட்டணமாக ரூ.35400 மட்டும் வசூலிக்கப்படும். மேலும் தொடர்புக்கு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண் 04362-237037-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பபதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
    • டோக்கன்களையும் அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினர்.

     காங்கயம்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பபதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 24.7.2023 முதல் 4.8.2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 ஊராட்சிகளில் முதற்கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று சுமார் 3,88,687 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    அந்த வகையில் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் தொடங்கப்பட்டு 31,509 விண்ணப்பங்கள் பெறப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் 24.7.2023 முதல் 5.8.2023 வரை 4,20,196 கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து இன்று 6.8.2023 முதல் 16.8.2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30வார்டுகளிலும், 6 நகராட்சி பகுதிகளிலுள்ள 147 வார்டுகளிலும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்குட்பட்ட 233 வார்டுகளிலும் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இந்த விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் உள்ள அரசுஅலுவலக கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் விண்ணப்பபதிவு முகாம்கள் நடைபெறும். இரண்டாம் கட்டமாக நடைபெறும் முகாம்களுக்கு 1.8.2023 முதல் 4. 8.2023 வரை ஆகிய நான்கு நாட்கள் விண்ணப்பப்படிவம் மற்றும் டோக்கன்களையும் அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினர்.

    இந்த டோக்கன்களில் டோக்கன் நம்பர், நாள் மற்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மையத்திற்கு வர வேண்டும் எந்த நாளில் வரவேண்டும் என்று டோக்கன்களில் எழுதப்பட்டு வழங்கப்படும். குறிப்பிடப்பட்ட அந்த மையத்திற்கு அந்த நாள் அந்த நேரத்திற்கு வந்தால் போதுமானது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பழனியப்பா திருமண மண்டபம், ராஜாஜி வீதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பகுதிகளில் நடைபெற்ற கலைஞர் உரிமைத்திட்டம் விண்ணப்பம் பதிவு மையத்தினை அமைச்சர் ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் வட்டாட்சியர் புவனேஸ்வரி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • குடும்ப அட்டைதாரர்களிடம் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டாரத்தி ற்குட்பமேடு ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 22 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் கீழசாலை, அஞ்சமன்னை முதல் முக்காவட்டம், நாராயணபுரம் வழியாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து காரைமேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் மேலசாலை வாய்க்கால் தடுப்பணை கட்டப்பட்டு வருவதையும், திருவாலி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் கூட்டுறவு பால் சேகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்து ஒப்பந்தகாலத்திற்குள் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் திருவாலி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இரண்டாம் கட்டம் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு முகாம் அலுவலர்கள், தன்னார்வலர்களிடம் குடும்ப அட்டைதாரர்களிடம் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.திருவாலி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சீர்காழி வட்டாரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளின் தற்போதைய நிலை,முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலக பொறியா ளர்களிடம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    இவ்வாய்வில் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ வன்,சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×