search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம்"

    • பி.எட்., படிப்பு 2023-25ம் ஆண்டு சேர்க்கைக்கான, விண்ணப்ப படிவம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
    • குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்விமுறையில் பி.எட்., படிப்பு 2023-25ம் ஆண்டு சேர்க்கைக்கான, விண்ணப்ப படிவம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.சேர்க்கை செயல்பாடுகள் அரசு மதிப்பெண் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் நடைபெறும்.இரண்டாண்டு, ஆசிரியர் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.

    2 ஆண்டுகள் முழு நேரம் தற்காலிகம் அல்லது நிரந்தர அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில்,ஆசிரியராக பணியாற்றி இருக்கவேண்டும்.இன வாரியாக பட்டப்படிப்பில், குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    கல்லூரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது.

    மேலும் விபரங்களை, https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.விண்ணப்பங்களை அக்டோபர் 5-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கைரேகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் மெஷின் ஒவ்வொரு மையத்திலும் வைக்கப்படும்.
    • வருகிற 24-ந் தேதிக்கு பிறகு இந்த மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கும்.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதன் முதற்கட்டமாக சென்னையில் வீடுவீடாக விண்ணப்பம் கொடுக்க தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை முழுமையாக பயன்படுத்த உள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களுடன் இணைந்து இவர்கள் வீடு வீடாக விண்ணப்பம் வழங்குவார்கள். பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் 2 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் 1,417 ரேஷன் கடைகள் உள்ளது. இதனால் மொத்தம் 3,550 மையங்கள் அமைக்க முடிவு செய்து உள்ளோம். வருகிற 24-ந் தேதிக்கு பிறகு இந்த மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கும்.

    கைரேகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் மெஷின் ஒவ்வொரு மையத்திலும் வைக்கப்படும். இந்த மையங்களுக்கு வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறினார்.

    • சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது.
    • மொத்தம் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு நடப்பாண் டில் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 ஆயிரம் கூடுதலாகும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் அந்தப் பணிகள் நிறைவடைந்து வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப் பிக்கும் நடை முறை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நேற்றுடன் (புதன்கிழமை) நிறைவடைந்தது.

    இந்நிலையில், விண்ணப்பங்களின் நிலவரம் குறித்து மருத்துவக் கல்வி தேர்வுக்குழுச் செயலர் ஆர்.முத்துச்செல்வன் கூறியதாவது:-

    நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26 ஆயிரத்து 805 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 394 பேரும் என மொத்தம் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 36 ஆயிரமாக இருந்தது.

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
    • விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    சேலம்:

    தமிழக கவர்னர் மாளிகை சார்பில் சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு 2024 குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் பாராட்டு சான்று மற்றும் ரொக்கம் பரிசு வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நிறுவனம் மற்றும் 3 தனி நபர் தேர்வு செய்யப்படுவர். நிறுவனத்துக்கு விருதுடன் ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தனி நபருக்கு விருதுடன் 2 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    தனி நபர்கள், அரசு சாரா நிறுவனங்கள், மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு செயலர் அல்லது அதற்கு கீழ் உள்ள அதிகாரி, மத்திய அரசு இணை செயலர் அல்லது அதற்கு மேல் நிலையில் உள்ள அதிகாரி, அதே நிலையில் ஓய்வு பெற்றவர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மாவட்ட கலெக்டர்கள் பரிந்துரைக்கலாம்.

    விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பப் படி வத்தை வருகிற 31-ந்தே திக்குள் கவர்னரின் துணை செயலர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், கவர்னர் செய லகம் சென்னை -600022 என்ற முக வரிக்கு அனு ப்ப வேண்டும்.

    • தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடை பெற உள்ளது.
    • மொத்தம் உள்ள 13000-க்கும் மேற்பட்ட துணை மருத்துவ இடங்களுக்கு 66,696 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரி களில் உள்ள பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடை பெற உள்ளது. மொத்தம் உள்ள 13000-க்கும் மேற்பட்ட துணை மருத்துவ இடங்க ளுக்கு 66,696 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம், நாமக்கல்

    இதில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இருந்து மாணவ- மாணவிகள் பலர் விண்ணப்பித்துள்ள னர். விண்ணப்பங்கள் அனைத்தும் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தர வரிசை பட்டியல் வெளி யிட்டு, விரைவில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி இயக்க கம் முடிவு செய்துள்ளது.

    தரவரிசை பட்டியல்

    மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதி காரிகள் கூறுகையில், எம்.பி.பி.எஸ்- பி.டி.எஸ் படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வருகிற 16-ந்தேதி வெளியிடப்பட்டு, அடுத்த நாள் முதல் கவுன்சிலிங் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும் துணை மருத்துவ படிப்பு களுக்கான தரவரிசை பட்டியல் விரைவில் வெளி யிடுவதற்கான நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

    • அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 30.6.2023 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்தவர்கள், முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்க ள் அனைவரும் தகுதி உடையவர்கள் ஆவர்.

    மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுதப்படி க்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.6.2023 அன்று ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

    அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளி களுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது.

    பயனாளிகள் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் படி ப்பவராக இருக்கக்கூடாது.

    இந்த தகுதிகளை உடையவர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளில் எழுத ப்படிக்க தெரிந்த மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,000-மும் வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்ற வர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பற்ற உதவித்தொகை வழங்க இயலாது.

    தகுதியுடைய பதிவுதாரர்கள் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பள்ளி, கல்லூரி அசல் மாற்றுச்சான்றிதழ், அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகை புரிந்து விண்ணப்பப் படிவத்தை தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணி ஒதுக்கீடு வழங்கும் போது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • விண்ணப்பப் பதிவு பணிக்கு தேவைப்படும் போது இவர்களை விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.

    இதன்படி வருகிற செப் டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார்-யார் தகுதியானவர்கள் என்ற விதிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ரேஷன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது.

    இந்த பணியை மேற்கொள்ள ரேஷன் கடைக்காரர்களுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம் பகவத் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப் பெற்று உள்ளன.

    சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

    இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதி யில் வசிக்கிறார்கள். என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்தில் இருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும். இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டிய பணிகள்:

    மாநில அலுவலகத்தில் இருந்து பகிரப்படும் தகவல் தொகுப்பில் ஒவ்வொரு நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கும் தன்னார்வலர்களின் விவரங்கள் இடம் பெற்று இருக்கும் சில நியாய விலை கடைப்பகுதிகளில் தேவைக்கு அதிகமான தன்னார்வலர்கள் தகவல் தரவு பதிவுப் பணிக்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். சில நியாய விலை கடை பகுதிகளில் போதிய தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.

    இவர்களுக்கான பணி ஒதுக்கீடு வழங்கும் போது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    ஒருவேளை இரண்டு கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் அவர்களுக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பணி வழங்கலாம்.

    தகவல் உள்ளீடு பணிகளுக்கும் கள ஆய்வுப் பணிகளுக்கும் விருப்பம் தெரிவித்த தன்னார்வலர்களை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு பணியின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது சம்மதத்தைப் பெற்று பணியில் அமர்த்துதல் வேண்டும். சில தன்னார்வலர்கள் தற்போது இந்தப் பணி செய்ய விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் அவர்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது.

    இது தொடர்பாக தகவல் பதிவை கூகுள் சீட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள வட்டாட்சியருடன் இணைந்து தன்னார்வலர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    வருவாய் வட்டாட்சியர்கள் செய்ய வேண்டிகள் பணிகள்-

    தன்னார்வலர்களின் தகவல் விவரம் கிடைக்கப் பெற்றவுடன் புதிய தன்னார்வலர்கள் இல்லாத நியாய விலை கடைப் பகுதிகளுக்கு புதிய தன்னார்வலர்களை கண்டறிய வேண்டும். குறிப்பாக நகரப் பகுதிகளில் போதிய இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் இல்லை. இப்பகுதிகளில் சுய உதவி குழு உறுப்பினர்கள், வேறு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மூலமாக அடையாளம் கண்டு நியமிக்கலாம்.

    வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல் பணி ஒதுக்கீடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என் அறிவுறுத்தப்படுகிறது.

    20 சதவீதம் கூடுதல் தன்னார்வலர்களைப் பதிலி தன்னார்வர்களாக பயன்படுத்துவதற்காக அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு உதவி மையத் தன்னார்வலர்கள் பொறுப்பு வழங்கலாம்.

    விண்ணப்பப் பதிவு பணிக்கு தேவைப்படும் போது இவர்களை விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    நியாய விலைக் கடை அளவிலான பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும். மேற்கண்ட தகவல்களை அனைத்து கள அலுவலர்களுக்கும் தெரியப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்கு விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.
    • சரியாக ரிட்டர்ன் தாக்கல் செய்வது உள்பட எந்த தவறும் செய்யாதபட்சத்தில் நோட்டீஸ் ஏதும் அனுப்ப மாட்டோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் வணிக வரித்துறை துணை கமிஷனர் முருககுமார் தலைமை வகித்து பேசியதாவது:-

    புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்கு விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். அரைகுறை ஆவணங்களுடன் விண்ணப்பிப்பதாலேயே பதிவு எண் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. புதிய பதிவு சார்ந்த கள ஆய்வின்போது சில வணிக நிறுவனங்களை கண்டறிய முடிவதில்லை. அனைத்து வர்த்தகர்களும் குறிப்பிட்ட நாட்களுக்குள் மாதாந்திர ரிடர்ன் தாக்கல் செய்ய வேண்டும். பல்வேறு காரணங்களுக்காக நோட்டீஸ் அனுப்பினால் உடனடியாக பதிலளிக்க வேண்டும். காலம்தாழ்த்தினால் நோட்டீஸ் உத்தரவாக மாறும். அபராதம் செலுத்தவேண்டிய நிலையும் ஏற்படும்.

    ஜி.எஸ்.டி., சார்ந்து எந்த சந்தேகம், விளக்கங்கள் தேவைப்பட்டாலும் வணிக வரி அதிகாரிகள், அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். சரியாக ரிட்டர்ன் தாக்கல் செய்வது உள்பட எந்த தவறும் செய்யாதபட்சத்தில் நோட்டீஸ் ஏதும் அனுப்ப மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பூர் மாவட்ட வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் பேசுகையில், காலதாமதமாக செலுத்தப்படும் வரிக்கு 18 முதல் 14 சதவீதம் வரை வட்டி தொகை வசூலிக்கப்படுகிறது. இதை 6 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு கருத்துரு அனுப்பவேண்டும்.

    தொழில்நுட்ப கோளாறுகளால் ஆன்லைனில் பதிவு சான்றுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றார். 

    • காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ளது.
    • வேதாரண்யம் தாலுகாவில் பிரிஞ்சிமூலை கிராமத்தில் முகாம் நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ளது.

    அதன்படி, கீழ்வேளூர் தாலுகாவில் காரப்பிடாகை வடக்கு கிராமத்திலும், நாகை தாலுகாவில் கொத்தமங்கலம் (கோதண்டராஜபுரம்) கிராமத்திலும், திருக்குவளை தாலுகாவில் வாழக்கரை கிராமத்திலும், வேதாரண்யம் தாலுகாவில் பிரிஞ்சிமூலை கிராமத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் மேற்படி முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் பொது விநியோக திட்டம் சார்ந்த அனைத்து கோரிக்கைகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படுவார்கள்.
    • பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு வருகிற 13 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் அவிநாசி, காங்கயம், பல்லடம், பொங்கலூா், திருப்பூா், வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் கீழ்கண்ட தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

    இதற்கு விண்ணப்பிக்க ஒரு பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 28 வயதுக்கு உள்பட்டவராகவும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இதுபோன்ற திட்டங்களில் பணியாற்றியிருக்கவும் வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.

    இந்த வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு (75 மதிப்பெண்) ஜூலை 20 -ந்தேதியும், நோ்முகத் தோ்வு (25 மதிப்பெண்) ஜூலை 24 ந்தேதியும் நடைபெறும்.

    ஆகவே இதற்கு தகுதிவாய்ந்த நபா்கள், இணை இயக்குநா்-திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், அறை எண் 305, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூா்-641604 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 13 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • குறைந்தபட்சம் 6 மாத கால கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இதற்கு கல்வி தகுதியாக ஏதாவது ஒரு பாடத்தில் பட்ட படிப்பு மற்றும் குறைந்தபட்சம் 6 மாத கால கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.

    28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.

    தொடர்புடைய வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டிருக்க வேண்டும்.

    பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    வருகிற 10-ம் தேதிக்குள் விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, இணை இயக்குனர் / திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்.223, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தஞ்சாவூர் -613010.மேற்குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்படையிலான காலி பணியிடங்களுக்கு மாவட்ட தேர்வு குழு வாயிலாக எழுத்துத் தேர்வு 75 மதிப்பெண்களுக்கும் மற்றும் நேர்முகத் தேர்வு 25 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும்.

    எழுத்து தேர்வில் 45 மதிப்பெண்கள் ( 75 மதிப்பெண்களுக்கு 60 விழுக்காடு ) பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலில் இடம் பெறுவார்கள். உரிய காலத்திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.1,500 வேலையளிக்கும் முகமைக்கு விடுவிக்கப்படும்.
    • மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டப்பணிகளை கண்காணிப்பதற்காக வெளிமுகமை முறையில் 100 எண்ணிக்கையிலான தொழில்நுட்ப உதவியாளர்கள் முற்றிலும் தற்காலிகமாக ஊக்க ஊதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

    இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணியிடத்திற்கான கல்வி தகுதிகள் டிப்ளமோ / பொறியியல் படிப்பில் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கட்டுமான பணியில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    5 வருடத்திற்கு மேலான அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வயது முதிர்வின் காரணமாக பணிஓய்வு பெற்றுள்ள உதவி பொறியாளர்கள் / பணி மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    ஊதியமுறைகளானவை பயனாளிகளின் வீட்டின் நிலைகளுக்கு ஏற்ப தவணை தொகைகள் விடுவிப்பதன் அடிப்படையில் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    ஒரு வீட்டிற்கான 4 நிலைகளில், ஊக்க த்தொகையாக பேஸ்மண்ட் நிலைக்கு 30 சதவீத தொகை ரூ.450-ம், ஜன்னல் மட்டம் நிலைக்கு 30 சதவீத தொகை ரூ.450-ம், கூரை மட்டம் நிலைக்கு 20 சதவீத தொகை ரூ.300-ம், பணி முடிவுற்ற நிலைக்கு 20 சதவீத தொகை ரூ.300-ம் ஆக கூடுதலாக ரூ.1,500 வேலையளிக்கும் முகமைக்கு விடுவிக்கப்படும்.

    இப்பணிக்காக ஊதியம் ஏதும் தனியாக வழங்கப்பட மாட்டாது.

    நிபந்தனை களானவை, நிலுவையிலுள்ள வீடுகள் "அனைவருக்கும் வீடு" மொபைல் செயலி மூலம் ஒவ்வொரு தொழில்நுட்ப உதவியா ளருக்கும் இணைக்கப்படும். பணியில் சேரும் தொழில்நுட்ப உதவியாளர்கள் வேலை யளிக்கும் முகமையின் கீழ் வந்ததாக கருதப்படுவர்.

    தனியார் எந்த வகையிலும் அரசுப்பணியில் உரிமை கோர இயலாது. (PMAY(G)) திட்டம் செயலாக்கம் முடிவுற்றதும் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.

    உரிய கல்விச்சான்று நகல் மற்றும் அனுபவ சான்று நகல் ஆகிய வற்றுடன் விண்ணப்பத்தை நேரடியாகவோ (அ) அஞ்சல் வழியாகவோ நாளை (05-ந் தேதிக்குள்) மேலாளர், மாவட்ட முகமை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவாரூர் என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×