search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223986"

    • காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
    • வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பார்வையிட்டனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு வனசரகத்தில் யானை, காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களில் நடமாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    நடு ஹட்டி கிராமத்ைதயொட்டிய தேயிலை தோட்டத்தில் நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேயிலை தோட்டத்திற்குள் காட்டெருமை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    வனசரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பார்வையிட்டனர். பின்னர் காட்டெருமை இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, தேயிலை தோட்டம் வழியாக செல்லும் மின்கம்பி, அறுந்து கிடந்ததை பார்த்தனர். இதனால் காட்டெருமை மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேயிலை தோட்ட பகுதியில் மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. அப்போது தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை எதிர்பாரத விதமாக மின்சார கம்பியில் மோதி இறந்துள்ளது என்றனர்.

    இதையடுத்து வனத்துறையினர் இன்று காலை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் இறந்த காட்டெருமையின் உடலை உடற்கூராய்வு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    • 25.6 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்து மதுரை ரெயில்வே சாதனை படைத்துள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் பசுமை மின்சார பயன்பாட்டுக்காக, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே 5 காற்றாலைகளை நிறுவி உள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி, ரூ.74 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த காற்றாலைகள் தலா 2.1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் உடையவை.

    இந்த காற்றாலைகளில் இருந்து நடப்பாண்டில் 25.686 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.14.54 கோடி மின்சார செலவு குறைந்துள்ளது.

    கடந்த 3 1/2 ஆண்டுகளாக ஜூலை மாதம் வரை, ஒட்டுமொத்தமாக 91.564 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.48.54 கோடி சேமிக்கப்பட்டு உள்ளது.

    இந்த காற்றாலைகளில் இருந்து ஜூலை 13-ந் தேதி முதல் முறையாக அதிக அளவில் 2,61,412 கிலோ வாட் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார ரெயில்கள் இயக்குவதற்காக, கடந்த ஆண்டு 1.86 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • லேசான மழை பெய்தாலும் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டு விடுகிறது
    • வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு மாவட்ட பகுதியான அருமனை சுற்றுவட்டார பகுதியிலும் பல இடங்களில் மழை பெய்கிறது. இங்கு மழை பெய்ய தொடங்கியதும் உடனே மின்சாரம் தடை படுகிறது.

    லேசான மழை பெய்தாலும் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டு விடுகிறது. அதன்பின்பு மழை நின்ற பின்னரே மீண்டும் மின்சாரம் வருகிறது.

    அருமனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இதுபோல பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. நேற்று முன்தினம் பல இடங்களில் இரவிலும் மின்சாரம் தடை பட்டது. இதனால் வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.

    நேற்று காலையிலும் இதே நிலை நீடித்தது. மழை பெய்ய தொடங்கியதும் மின்சாரம் தடை பட்டதால் வியாபாரிகளும் பாதிப்புக்கு ஆளானார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் மின் தடைக்கான காரணத்தை கண்டுபிடித்து அதனை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மின் விபத்து அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த நிலையில் செக்கானூரணியில் 8-ம் வகுப்பு மாணவன் குளிர்சாதன பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    மதுரை செக்கானூரணி மனோகரன் மகன் பாலமுரளி (வயது 14). இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பாலமுரளியின் தந்தை மனோகரன், அதே பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பாலமுரளி இரவு கடைக்கு சென்றார். அப்போது மட்டன் கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியை தற்செயலாக திறந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பாலமுரளி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுரளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மின் பகிர்மான நிறுவனங்களுக்கு, 60,000 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளனர்.
    • முழு நாட்டையும் இணைக்கும் வகையில் சுமார் 1,70,000 சர்க்யூட் கிலோமீட்டர் டிரான்ஸ்மிஷன் லைன்கள் போடப்பட்டுள்ளன.

    டெல்லியில் 'உஜ்வல் பாரத் உஜ்வல் பவிஷ்யா - பவர் @2047' என்கிற நிகழ்ச்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் மட்டுமின்றி, முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு தலைமை வகித்து பேசினார்.

    அப்போது அவர் உரையாற்றியதாவது:-

    வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் பெரும் பங்காற்ற வேண்டிய எரிசக்தித் துறையை வலுப்படுத்த, சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் மின் பயன்பாட்டு நிலுவைத் தொகையை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

    அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் எரிசக்தி மற்றும் மின் துறைகள் பெரும் பங்கு வகிக்க உள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு மின்வாரியங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. மின்சாரம் உற்பத்தியில் இருந்து வீடு வீடாக விநியோகம் செய்வது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை சிக்கலில் சிக்கியுள்ளன.

    இந்த பணத்தை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். பல அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மின் பகிர்மான நிறுவனங்களுக்கு, 60,000 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளனர்.

    மின் விநியோகத் துறையில் இழப்புகள் இரட்டை இலக்கத்தில் இருக்கும் நிலையில், வளர்ந்த நாடுகளில் இவை ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

    மேலும், கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டில் சுமார் 1,70,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே தேசம் ஒரே மின் உற்பத்தித் திட்டம் இன்று நாட்டின் பலமாக மாறியுள்ளது.

    முழு நாட்டையும் இணைக்கும் வகையில் சுமார் 1,70,000 சர்க்யூட் கிலோமீட்டர் டிரான்ஸ்மிஷன் லைன்கள் போடப்பட்டுள்ளன. சௌபாக்யா திட்டத்தின் கீழ் 3 கோடி இணைப்புகளை வழங்குவதன் மூலம், நாடு செறிவூட்டல் இலக்கை நெருங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர் ஓடும் வீதிகளில் மின்கம்பிகள் குறுக்கே இருப்பதால் தேரோட்டத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
    • வைத்தீஸ்வரன் கோவில் மேலவீதி, கீழ வீதி, தெற்கு வீதிகளில் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் அவை கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடி அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்புச் செழியன், செயல் அலுவலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை தலைவர் அன்பு செழியன்: தேர் ஓடும் வீதிகளில் மின்கம்பிகள் குறுக்கே இருப்பதால் தேரோட்டத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் வருங்காலங்களில் மின் கம்பிகளை நிலத்திற்கு கீழே புதைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கென்னடி: வைத்தீஸ்வரன் கோவில் மேலவீதி, கீழ வீதி, தெற்கு வீதிகளில் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆனந்த்: வார்டு பகுதியில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். ராஜா கார்த்திகேயன்: காட்டுநாயக்கன் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்.

    செயல் அலுவலர் அசோகன்: பேரூராட்சி பகுதியில் இரண்டு இடங்களில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. குறைந்த அடியில் குடிநீர் எடுத்தால் நிதி குறையும் தவறு நடக்க வாய்ப்பில்லை. கவிதா: தட்டுப்பாடு இன்றி குடிநீர் ஏற்படுத்தி தர வேண்டும்.இதையடுத்து தலைவர் பூங்கொடி அலெக்ஸாண்டர் கூறும்போது:-உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கையும் படிப்படியாக நிறைவேற்றப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பகண்டைகூட்டுரோடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
    • கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்பதற்காக அருகே சென்றபோது கிணற்று மோட்டாருக்கு வரும் மின் ஓயரை எதிர்பாராதவிதமாக வெண்ணிலா மிதித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரத்தை அடுத்த பகண்டை கூட்டுரோடு அருகே மரூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வெண்ணிலா (வயது 40). இவர் அதே கிராமத்தை சேர்ந்த புகழேந்தி என்பவரின் கிணறு அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்பதற்காக அருகே சென்றபோது கிணற்று மோட்டாருக்கு வரும் மின் ஓயரை எதிர்பாராதவிதமாக வெண்ணிலா மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெண்ணிலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் பகண்டை கூட்டு்ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பரங்கிப்பேட்டை அருகே வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
    • கட்டிங் மெஷின் மூலம் இரும்பை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது.

    கடலூர்:

    பரங்கிப்பேட்டை அருகே உள்ள கீழ்அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (30). இவர் தனக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் கட்டிங் மெஷின் மூலம் இரும்பை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் வசந்தகுமார் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச் சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வசந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை ராமையன் கிள்ளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து மாடு-பன்றிகள் பலியாகின
    • மனித உயிர் பலி தவிர்க்கப்பட்டுள்ளது

    அரியலூர்:

    அரியலூரில் பெரம்பலூர் சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே ஒரு மின்கம்பம் உள்ளது. இந்நிலையில் இந்த மின் கம்பத்தை உரசிச்சென்ற ஒரு பசு மாடும், 2 பன்றிகளும் மின்சாரம் பாய்ந்து இறந்தன. அந்த வழியாக சென்றவர்கள், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசார் மற்றும் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து பார்த்தபோது, மின்கசிவு காரணமாக அந்த மின்கம்பம் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.அரியலூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினமும் அதே இடத்தில் ஒரு ஆடு இறந்ததால், மின்சாரம் பாய்ந்து அந்த ஆடு இறந்ததா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மனித உயிர் பலி தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்டுக்கொட்டையில் விளையாடியபோது அங்கிருந்த இரும்பு பைப்பை சிறுமி பிடித்துள்ளார். அப்போது அதில் மின்சாரம் தாக்கி சிறுமி சுதேசனா மயக்கமடைந்தார். ன்னர் மேல்சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
    • இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    பவானி லட்சுமி நகர் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமரைகண்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது ஒரே மகள் சுதேசனா (6). சம்பவத்தன்று சுதேசனா அருகே உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டுக்கொட்டையில் விளையாடியபோது அங்கிருந்த இரும்பு பைப்பை சிறுமி பிடித்துள்ளார். அப்போது அதில் மின்சாரம் தாக்கி சிறுமி சுதேசனா மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிட வேலை செய்ய பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வந்துள்ளார்.
    • அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்த நரியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் வீரமணி (வயது 19). இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது அவருக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கட்டிட வேலை செய்ய பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வந்துள்ளார். அங்கு தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நடைபெறும் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கட்டிடத்திற்கு தண்ணீர் விடுவதற்காக மின் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசி உள்ளது. இதனை அறிந்து அருகில் இருந்த தெற்கு அவினாசிபாளையம், தொட்டம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் காப்பாற்றச் சென்றுள்ளார். அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வீரமணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். சரவணனுக்கு காயம் மட்டுமே ஏற்பட்டு உயிர் தப்பினார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • ஸ்விட்ச் பாக்ஸ் ஓட்டையில் விரலை நுழைத்துள்ளான்.
    • எதிர்பா ராதவிதமாக மின்சாரம் கமல்நாத்தை தாக்கியது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள மாசி நாயக்கன்பட்டி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன். இவரது மகன் கமல்நாத் (வயது 7). நேற்று வீட்டில் சிறுவன் விளையா டிக்கொண்டிருந்த போது வீட்டில் இருந்த ஸ்விட்ச் பாக்ஸ் ஓட்டையில் விரலை நுழைத்து ள்ளான். அப்போது எதிர்பா ராதவிதமாக மின்சாரம் கமல்நாத்தை தாக்கியது. இதில் அலறி துடித்த சிறுவனை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு கமல்நாத் சிகிச்சை பெற்று வருகிறான்.

    ×