search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஸ்லிம்"

    • இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.
    • தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது.

    தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    அரசின் இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கு 3 லட்சமும் மத தலைவர்களுக்கு 5 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    தஜிகிஸ்தான் அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சகம் இஸ்லாமிய உடை மற்றும் மேற்கத்திய பாணி மினி ஸ்கர்ட் இரண்டையும் மாணவர்களுக்கு தடை செய்தபோது ஹிஜாப் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    1991 ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த போது தஜிகிஸ்தான் நாடு உருவானது. இந்நாட்டில் 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

    கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உட்பட பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்துள்ளது.

    • பக்ரீத் அன்று ஆடுகள் விற்பனை களைகட்டும்.
    • பக்ரீத் அன்று வெட்டப்படும் ஆடுகளை காப்பாற்ற ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிலர் முடிவு செய்தனர்.

    டெல்லியில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மட்டுமில்லாமல் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மக்களும் கணிசமாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் ஆட்டை வெட்டி பிரியாணி செய்து அனைவருக்கும் பகிர்ந்து அழிப்பார். அதனால் ஆடுகள் விற்பனை அப்போது களைகட்டும்.

    டெல்லியில் நடைபெற்ற ஆடுகள் விற்பனையில் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

    டெல்லியில் வசித்து வரும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிலர் பக்ரீத் பண்டிகை அன்று வெட்டப்படும் ஆடுகளை காப்பாற்ற முடிவு செய்தனர். அவர்களால் எல்லா ஆடுகளையும் காப்பாற்ற முடியாது என்று தெரிந்திருந்தும் முடிந்த அளவு ஆடுகளை காப்பாற்றலாம் என்று முடிவு செய்து நிதி திரட்ட ஆரம்பித்தனர்.

    கிட்டத்தட்ட 15 லட்சம் நிதி திரட்டியவர்கள், முஸ்லிம் போல வேடமிட்டு 124 ஆடுகளை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதன் மூலம் 124 ஆடுகளின் உயிர்களை நாங்கள் காப்பாற்றியுள்ளோம் என்று ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

    தற்போது வாங்கிய 124 ஆடுகளை என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் முழித்து வருகின்றனர். ஜெயின் சமூகத்தினரின் இந்த செயலை சிலர் பாராட்டினாலும், பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

    • பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
    • பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு ஆன மோடியை ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கேட்டுக்கொண்டார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.

    இந்நிலையில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால், இந்த அரசு 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்" என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களில் ஒருவர் கூட பாராளுமன்ற தேர்தலில் வென்று எம்.பி.யாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் மாநிலத்தில், ஓபிசி இடஒதுக்கீடு பெறும் இஸ்லாமிய சமூகத்தினரின் பட்டியல் இது.
    • தேர்தல் தோல்விக்கு பயந்து, இப்போது என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பிரதமர் வெளிப்படையாக மிரட்டுகிறார்.

    எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை இந்தியா கூட்டணி முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று பிரதமர் மோடி பேசிவரும் நிலையில், குஜராத் அரசும் முஸ்லிம்களுக்கு ஓபிசி இடஒதுக்கீடு கொடுத்து வருகிறது ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் மோடிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை தேஜஸ்வி யாதவ் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் குஜராத்தில் ஓபிசி முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு பட்டியலை இணைந்துள்ளார்.

    அக்கடிதத்தில், "குஜராத் மாநிலத்தில், ஓபிசி இடஒதுக்கீடு பெறும் இஸ்லாமிய சமூகத்தினரின் பட்டியல் இது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல், குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக இருந்து, தற்போது பிரதமராக இருக்கும் மோடிக்கு தெரியாதா?

    தனியார் துறையில் இடஒதுக்கீடு விவகாரத்தையும் பிரதமர் புறக்கணித்துள்ளார். பீகாரில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் படி இடஒதுக்கீட்டை அதிகரிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் பிரதமர் அதனை நிராகரித்தார்.

    அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவின் கீழ் அரசு வேலைகளில் மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்கும், ஆனால் பாஜக அரசு ரயில்வே, ராணுவம் மற்றும் பிற அரசு துறைகளில் இருந்து அரசு வேலைகளை நீக்கியதன் மூலம் இடஒதுக்கீடு மறைமுகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

    எருமைமாட்டை பறித்து விடுவார்கள், தாலியை பறித்துவிடுவார்கள் என்று பேசிய மோடி இப்போது முஜ்ரா நடனத்தை பற்றி பேசுகிறார். இந்த நாட்டின் பிரதமரின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டுமா? நீங்கள் யோசித்து முடிவு செய்யுங்கள்.

    தேர்தல் தோல்விக்கு பயந்து, இப்போது என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பிரதமர் பேசுகிறார். மத்திய விசாரணை அமைப்புகள் மோடியின் விருப்பப்படி செயல்படுகின்றன என்பதற்கு உங்களது பேச்சே ஆதாரமாகும்" என்று எழுதியுள்ளார்.

    • நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளர்களை சாதித்து கார்கே உரையாடினார்.

    நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிப் பேசி வருவதால் அரசியல் களம் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரதமர் மோடி உடன்பட பல பாஜக தலைவர்கள் வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையம் இதுகுறித்து பாராமுகம் காட்டுவதாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மோடி பிரச்சாரங்களில் பேசி வருவது குறித்து விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளர்களை சாதித்து கார்கே உரையாடினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி, இந்து- முஸ்லிம், மட்டன்- சிக்கன் என பிரச்சாரத்தில் பேசுவதை விட்டுவிட்டு நாட்டில் உள்ள மக்கள் பிரச்சனயை பற்றி பேச வேண்டும்.

    அவரது பிரச்சாரத்தில், மட்டன், மாட்டிறைச்சி,சிக்கன், மீன், பெண்களின் தாலி உள்ளிட்ட வார்த்தைகளையே கேட்க முடிகிறது. அவர் மக்களிடம் இந்து- முஸ்லிம் விளையாட்டை விளையாடுவதை விட்டுவிட்டு நாட்டுக்கு பாஜக செய்த்வற்றைப் பற்றி பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், நாட்டில் நடந்து முடித்த 4 கட்ட வாக்குப்பதிவைப் பார்க்கும்போது இந்தியா கூட்டணி வலிமையுடன் இருப்பதாக தெரிவித்தார். 

    • கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை
    • வடமாநிலங்களில் பா.ஜ.க. எதிர்ப்பு அலை தலை தூக்கியிருக்கிறது

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "மக்களவைத் தேர்தலின் முதல் மற்றும் இரண்டாம் கட்டம் முடிந்த நிலையில் மிகுந்த பதற்றத்துடனும், தோல்வி பயத்தினாலும் பிரதமர் மோடி அடிப்படை உண்மைகளுக்கு புறம்பாக ஆதாரமற்ற அவதூறான கருத்துக்களை தேர்தல் பரப்புரையின் போது பேசி வருகிறார். நேற்று மும்பையில் உரையாற்றும் போது, நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன் என்று பேசியிருக்கிறார்.

    10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி இடஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல என்பது புரியாமலேயே ஆட்சி நடத்தியிருக்கிறார். சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அந்தந்த மாநில அரசுகள் அமைக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்குகிற தரவுகளின்படி அந்தந்த மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குகின்றன. இந்த அடிப்படையை புரிந்து பேசுகிறாரா ? அல்லது திட்டமிட்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறாரா என்று தெரியவில்லை.

    2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் மக்களை திசைத் திருப்புவதற்கு புல்வாமா, பாலகோட் தாக்குதலை பரப்புரையில் தவறாக பயன்படுத்தி வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தற்போது, இஸ்லாமியர்களுக்கு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று ஆதாரமற்ற நச்சுக் கருத்தை கூறி ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறார்.

    இந்தியாவை பொறுத்தவரை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்து அரசமைப்புச் சட்ட தயாரிப்புக்குழுவின் தலைவராக நியமித்து அவரது பரிந்துரைகளின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டம் உருவாக காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களான மகாத்மா காந்தி;, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் உள்ளிட்ட தலைவர்கள் தான். அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மையாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் அரசமைப்புச் சட்டம் உருவாகியிருக்காது என்று டாக்டர் அம்பேத்கர் இறுதி உரையில் குறிப்பிட்டதை எவரும் மறுத்திட முடியாது.

    அதேபோல, 1950 இல் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததும், தமிழகத்தில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த இடஒதுக்கீடு நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்ட போது, அதை எதிர்த்து போராடியவர் தந்தை பெரியார். இதிலுள்ள நியாயத்தை உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி 1951 ஜூன் 2 ஆம் தேதி அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் உறுப்பு 15 இல் உட்பிரிவு 4 சேர்க்கப்பட்டது. இதன்படி சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய குடிமக்களுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டிற்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. பிரதமர் நேரு கொண்டு வந்த முதல் திருத்தத்தின் மூலமே இந்தியாவில் சமூக நீதி பாதுகாக்கப்பட்டது.

    இதன்படி இந்து மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினரை அந்தந்த மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திரட்டுகிற புள்ளி விவரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சாதிகள் தேர்வு செய்யப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதே நடைமுறை தான் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.

    அதனடிப்படையில் தான் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம் மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. உண்மைநிலை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சி பின்தங்கியோரின் இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க சதித் திட்டம் தீட்டுகிறது என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி இந்தியாவின் கோயபல்ஸ் ஆக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சுகளின் மூலம் 10 ஆண்டுகாலம் பிரதமர் பதவி வகிக்கிற அவருக்கு வரலாற்றில் அழிக்க முடியாத கரையை ஏற்படுத்தி வருகிறார்.

    கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதுகுறித்து பிரதமர் மோடி பரப்புரையில் பேசுவதே இல்லை. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, போன்றவற்றின் காரணமாக மக்களிடையே பா.ஜ.க. மீது கடுமையான எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் பா.ஜ.க. எதிர்ப்பு அலை தலை தூக்கியிருக்கிறது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டை கொள்ளையடிப்பார்கள் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. நாட்டிலுள்ள சொத்துக்களை எல்லாம் 20, 25 கோட்டீஸ்வரர்கள் 45 சதவிகித மொத்த சொத்துகளை கொள்ளையடிப்பதற்கு துணை போனவர் இப்படி பேசுவது விந்தையாக இருக்கிறது. இதன்மூலம் தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திர நன்கொடை மூலம் ரூபாய் 8,000 கோடி கொள்ளையடித்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

    எனவே, 2024 மக்களவைத் தேர்தல் என்பது இந்திய மக்களுக்கு வாழ்வா ? சாவா ? என்பதே பிரச்சினை. இந்தியாவின் எதிர்காலமே மக்களவை தேர்தல் முடிவை பொறுத்திருக்கிறது. இந்தியாவில் சர்வாதிகார, பாசிச, மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டுமெனில் பா.ஜ.க.வை தோற்கடிப்பது மிகமிக அவசியம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது.

    மோடி எத்தகைய கபட நாடகத்தை ஆடினாலும் கடந்த 2014, 2019 இல் மக்கள் ஏமாந்ததைப் போல 2024 இல் மக்களை ஏமாற்ற முடியாது. மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் இந்தியா என்ன ஆகும் என்ற பயம் மக்களிடையே ஏற்படுவதற்கு அவரது உரைகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. பிரதமர் மோடியின் இத்தகைய மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதியாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கோவை - திருச்சி மெயின் ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
    • பல்லடம் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

    பல்லடம் :

    திருப்பூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால் ரோட்டில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் கோவை திருச்சி மெயின் ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    ×