search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224003"

    • நாளை மதியம் 1 மணிக்கு பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன், தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வு நாளை (ஞாயிற்று க்கிழமை) மதியம் 1 மணிக்கு பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

    விருப்பம் உள்ள 21.5.1999-க்கு பிறகு 21.5.2010-க்கு முன் வரை பிறந்தவர்கள் உரிய பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் தொடர்புக்கு 9363374174, 9940946946, 9994300671 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஆர்.காளிதாஸ் வாண்டையார் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்ட மதிமுக செயலாளராக ஜெயசீலன் தேர்தெடுக்கப்பட்டு உள்ளார்
    • 5வது அமைப்பு தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான 5-வது அமைப்பு தேர்தல் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் கூட்டரங்கில் நடந்தது.இதில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வந்தியத்தேவன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்களான ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகளாக மாவட்ட அவைத்தலைவராக அய்யலூர் சுப்பிரமணியனும், மாவட்ட செயலாளராக செ.ஜெயசீலனும், மாவட்ட பொருளாளராக பேரளி சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி கவுன்சிலர் ரபியுதினும், மாவட்ட துணைச் செயலாளர்களாக ஆசிரியர் காமராஜ், கே.எஸ்.ரெங்கராஜ், அடைக்கப்பட்டி எல்.ஐ.சி. பாண்டியன், மங்கையர்கரசி சிகமணி ஆகியோரும், தலைமை பொதுக்குழு உறுப்பினர்களாக மெடிக்கல் முத்து, வெண்மணி ராஜசேகர், பம்பரம் பழனிமுத்து, அம்மாபாளையம் ஆசிரியர் துரைராஜ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் அனைவரும் சென்னை சென்று ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, உயர்நிலை குழு உறுப்பினரும், அரியலூர் சட்டமன்ற உறுப்பினரான சின்னப்பா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஏற்கனவே ம.தி.மு.க. தலைமை பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளராக ஜெயசீலனை நியமித்த நிலையில் இப்பொழுது. அமைப்பு தேர்தலின் மூலம் அவர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சி.பி.எஸ்.இ. தேர்வில் மாவட்ட அளவில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வேதச பள்ளி முதலிடம் பிடித்தது.
    • ஆசிரியர்கள் பாராட்டினர்.

    காரைக்குடி

    மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தது. பிளஸ்-2 மாணவர் லோகேஷ் 483/500 மதிப்பெண்களைப் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றார்.

    ஆங்கிலத்தில் 96, கணிதம் 95, உயிரியல் 97, இயற்பியல் 95, வேதியியல் 100 என மதிப்பெண்களை பெற்றார். 2-ம் இடத்தை மாணவர் கவுரிசங்கர நாராயணன் 482/500 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவர் பிரியதர்ஷன் 481/500 மதிப்பெண் பெற்றார்.

    10-ம் வகுப்பு தேர்வில் மாணவர் தியாகராஜன் 493/500 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அவர் ஆங்கிலம் 99, பிரெஞ்சு 100, கணிதம் 99, அறிவியல் 97, தகவல் தொழில்நுட்பம் 100 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

    2-ம் இடத்தை விஷால் 487 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவி சுவாதி 485 மதிப்பெண் பெற்றார். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் நிறுவனர் செல்லப்பன், தாளாளர் செ.சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன், கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு, காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு பொது நூலக கட்டிடத்தில் நூலக வாசகா் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு, காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வாசகா் வட்ட தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், வாசகர் வட்ட துணைத்தலைவா் ஆதிமூலம், இணைச்செயலாளா் செண்பகக்குற்றாலம், போட்டித்தேர்வு பொறுப்பாளா் விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    தொடர்ந்து செங்கோட்டை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 23 மாணவ, மாணவிகள், குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 13 மாணவ, மாணவிகள், காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகள், ரெயில்வே தேர்வில் 1 மாணவர் என மொத்தம் 43 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, ஜே.பி.கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி, அகாடமி இயக்குநர்கள் மாரியப்பன், அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், எஸ்.எம்.எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவஹர்லால்நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். நுாலகர் ராமசாமி நன்றி கூறினார்.

    • ஒவ் வொருவரும் தனித்தனியாக பயிற்சி மேற்கொள்கின்றோம்.
    • தமிழகம் முழுவதும் 4 பேரை தேர்வு செய்துள்ளோம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் அக்ஹாரபுதூரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (23), காங்கயத்தை சேர்ந்தவர் லட்சுமண காந்தன் (50). மாற்றுத் திறனாளிகளான இவர்கள், இந்திய கிரிக்கெட் மாற்றுத்திறனாளிகள் அணிக்கு தேர்வாகியு ள்ளனர். சாகுல் ஹமீது இடதுகைபேட்ஸ்மேன், பவுலர். இவர், ஆல்ரவுண்டர் பிரிவிலும், லட்சுமிகாந்தன் வலது கை சுழற்பந்து வீச்சாளராகவும் தேர்வாகியுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:- சென்னை அளவில் பல்வேறு மாற்றுத்திற னாளிகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். அடுத்த மாதம் சிங்கப்பூர், மலேசியா நாடுகளின் கிளப் அணிகளுக்கு எதிராக நடை பெறும் மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளோம்.

    இந்த இரு நாடுகளுக்கு எதிராக நடைபெறும் டி-20 போட்டி களில் பங்கேற்க உள்ளோம். ஒவ் வொருவரும் தனித்தனியாக பயிற்சி மேற்கொள்கின்றோம். தேர்வுக்குழு எங்களை தேர்வு செய்துள்ளது.எங்களுடன் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பி.கார்த்திக் (30), மதுரையை சேர்ந்த சச்சின்சிவா (37) ஆகியோரும் தேர்வாகியு ள்ளனர். ஜூன் 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை மேற்குறிப்பிட்ட நாடுகளின் கிளப் அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகளில் பங்கேற்கிறோம்' என்றனர். இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் மேலாளர் பி.ஹரிசந்திரன் கூறும்போது, மாவட்டத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 4 பேரை தேர்வு செய்துள்ளோம். மதுரையை சேர்ந்த பேட்ஸ்மேன் சச்சின் சிவா கேப்டனாக செயல்பட உள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அப்பாஸ் அலி பயிற்சியாளராக உள்ளார் என்றார்.

    • வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.
    • 13 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டமா வட்ட கிரிக்கெட் சங்க, மேலாளர், வேல்முருகன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருப்பூர் மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி, அவிநாசி, பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.

    1999, மே 14ல் அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள், 2010, மே, 14 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள்; அதாவது, 13 முதல், 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.பிறப்புச் சான்றிதழ், ஆதார் அல்லது பாஸ்போர்ட் நகல், போட்டோவுடன் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். நாளை (13ம் தேதி)மாலை, 6:00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். நாளை மறுநாள் (14ம் தேதி) வீராங்கனைகள் தேர்வு நடக்கும்.தேர்வு நடக்கும் நாளில், தங்கள் கிரிக்கெட் உடையில் வர வேண்டும். ஷூ, சீருடை முக்கியம். தேர்வுக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு முன்னதாக மைதானத்தில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு பயிற்சி தரப்படும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

    • பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

    பரமக்குடி

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ராமநாதபுரம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி லக்சிதா ஸ்ரீ 579 மதிப்பெண்களும், மாணவர்கள் அதீஸ்வரன் 576 மதிப்பெண்களும், பாலாஜி 571 மதிப்பெண்களும் பெற்றனர்.

    அதேபோல் தரணி என்ற மாணவி பொருளியல், கணக்குப்பதிவியல் ஆகிய படங்களில் தலா 100 மதிப்பெண்களும், மாணவன் பிரவீன் பாண்டி வணிகவியல், வரலாறு ஆகிய பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தனுஸ்ரீ என்ற மாணவி கணிப் பொறியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி துர்கா கணிப்பொறியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவன் இந்திரஜித் தாவரவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி பிரியா வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.

    இந்த மாணவ-மாணவிகளை பள்ளியின் கல்வி குழு தலைவர் ராசி போஸ், இணைத்தலைவர் பாலுசாமி, பள்ளியின் தாளாளர் லெனின் குமார், ஆயிர சபை செயலாளர் செல்வராஜ், கவுரவ செயலாளர் வக்கீல் செந்தில்குமார், தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், உதவி தலைமை ஆசிரியை சுமதி, கல்விக்குழு உறுப்பினர்கள் சுதர்சன், பூபாலன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

    • ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
    • தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எப் துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பணியிடங்களைத் தேர்வு செய்ய மே 8-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

    அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்து தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    சி.ஆர்.பி.எப் எனப்படும் துணை ராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.

    அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு 621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    திருப்பூர் :

    சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு 621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம்1.6.2023 முதல்விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கூடுதல் தன்னார்வ பயிலும் வட்டம் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை, எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4.5.2023 அன்று முதல் திங்கள் - வெள்ளி வரை தினமும் 2மணி முதல் 3.30 மணி வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    மேற்காணும் இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், இப்பயிற்சி வகுப்பில் மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • போட்டியின்றி வெல்லமண்டி சோமு தேர்தெடுக்கப்பட்டார்
    • மாவட்ட, பகுதி நிர்வாகிகளும் அறிவிப்பு

    திருச்சி,

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தலைமைக்கழகச் செயலாளர் துரை.வைகோ ஆகியோரது வழிகாட்டலில் திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ம.தி.மு.க. அலுவலகமான மண்ணச்சநல்லூர் நடராஜன் மாளிகையில் தலைமை கழக பிரதிநிதி ம.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ஆசைத்தம்பி வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டு, முடிவுகளை அறிவித்தார்.அதன்படி திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக வெல்லமண்டி சோமு (எ) இரா.சோமசுந்தரத்தை போட்டியின்றி தேர்ந்தெடுத்து அறிவித்தார். அதேபோல் திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவராக புலவர் வே.தியாகராசன், மாவட்ட பொருளாளராக யானை கண்ணன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்களாக கவுன்சிலர் அப்பீஸ் (எ) முத்துக்குமார், எல்லக்குடி அன்புராஜ், துரை.வடிவேல், மலர்விழி ராஜன்,தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் கவுன்சிலர் முகமது முஸ்தபா, திலகவதி கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர்களாக பெல் பத்மநாபன், துரைராஜ், க.செல்வராஜ்,இரா.மனோகரன், ஜான்சன், மதலைமுத்து ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.மேலும் புதிய பகுதிச் செயலாளர்களாக ராமமூர்த்தி, சிவானந்தம், மனோகரன், கரிகாலன், ஆசிரியர் முருகன், கோபாலகிருஷ்ணன், காஜா மைதீன், சோமு, ஜெயச்சந்திரன், எப்.எஸ்.ஜெயசீலன், மெடிக்கல் முத்துகிருஷ்ணன், ஆடிட்டர் வினோத்குமார் மற்றும் நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

    • 5 ஆயிரத்து 440 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.
    • மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இன்று ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சை தாமரைப் பன்னாட்டு பள்ளி, தஞ்சை பிளாசம் பப்ளிக் பள்ளி, வல்லம் சாஸ்திரா பல்கலைக்கழகம், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி, கும்பகோணம் மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி, பட்டுக்கோட்டை பிரில்லியண்ட் பள்ளி ஆகிய 7 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    5440 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.

    மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    முன்னதாக தேர்வு மையத்திற்கு காலையில் வந்த மாணவ- மாணவிகள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை தேர்வு நடை பெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் 10,400 மாணவர்கள் நீட் தேர்வை உற்சாகமாக எழு தினர்.

    சேலம்:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வரு கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை தேர்வு நடை பெற்றது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் 10,400 மாணவர்கள் நீட் தேர்வை உற்சாகமாக எழு தினர். இதற்கான சேலம் மாவட்டம் முழுவதும் 17 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த மாண வர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், கெங்க வல்லி, கொளத்தூர், சங்க கிரி உள்ளிட்ட பகுதி களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் நீட் தேர்வை எழுதினர்.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 5000 பேர் தேர்வு எழுதினர். மாணவ, மாணவிகள், ஹால்டிக்கெட்டில் உள்ள படி குறிப்பட்ட நேரத்தில் வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கம்போல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடைபெற்றது.

    ×