search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224003"

    • தடகள பயிற்சிக்காக 59 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • மாவட்ட விளையாட்டு அலுவலர் தகவல்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தடகள பயிற்சிக்கான தேர்வு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான விளையாட்டு மையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடகள பயிற்சிக்கான தேர்வு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    பயிற்சியை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் தொடங்கி வைத்தார்.

    தேர்வு தடகள போட்டிகளில் மாவட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 35 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 59 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவார்கள், என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்தார்.

    • மாணவர்கள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
    • பாஸ்போர்ட்டை பள்ளி கல்வித்துறையில் ஒப்படைக்க வேண்டும்.

    ஈரோடு, ஏப். 12-

    ஈரோடு மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் நடந்த கலைத்திருவிழா, விளையாட்டு போட்டி, மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ-மாணவிகள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    இதன்படி ஈரோடு மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் நகுல், அ.பள்ளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி தனுஜா ஆகியோர் இலக்கிய மன்றம் சார்பில் தேர்வாகி உள்ளனர்.

    காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் ஸ்ரீசாந்த் விளையாட்டு பிரிவு சார்பிலும், பொன்னாத்தா வலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி சிந்துஜா, ஊசிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் அய்யப்பன் ஆகியோர் கலை மற்றும் கலாச்சார பிரிவு சார்பிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பி.பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவன் சையது இப்ராஹிம் வானவில் மன்றம் சார்பில் தேர்வாகியுள்ளார்.

    இவர்கள் அனைவரும் தமிழக அரசு சார்பில் வெளிநாடு செல்ல உள்ளனர்.

    இதற்கான பணிகளை அரசு துரிதப்படுத்தி உள்ளது. இவர்களின் பெற்றோர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து விபரம், பாஸ்போர்ட் எடுக்க வேண்டியது அவசியம் குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எந்த நாட்டுக்கு எத்தனை நாட்கள் செல்ல உள்ளனர் போன்ற விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    அதே சமயம் சுற்றுலாவுக்கு தேர்வான 6 பேரும் நாளைக்குள் தங்களது பாஸ்போர்ட்டை பள்ளி கல்வித்துறையில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • இந்தத் தேர்வை எழுதுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
    • கேட்கும் பகுதிக்கு 30 நிமிடங்கள் தரப்படும்.

    ரஷியா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஆங்கிலப் புலமை ஒரு பொருட்டல்ல. கல்விக்கும் தொழிலுக்கும் தாய்மொழியே அவர்களுக்குப் போதுமானதாக உள்ளது. இந்திய நிலைமை அப்படியல்ல. இங்கே ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழி. பல மொழி பேசும் மக்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், ஆங்கிலமே வெவ்வேறு மொழி பேசும் மக்களை இணைக்கிறது.

    அத்துடன், இந்தியாவில் இருந்து படிப்புக்காகவோ வேலைக்காகவோ வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகம் உள்ளது. அதற்குக் கல்வி அறிவும் தொழில் அறிவும் மட்டும் போதாது. ஆங்கில மொழிப் புலமையை நிரூபிக்கும் வண்ணம் ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். அதனால்தான், ஓராண்டுக்குச் சுமார் 30 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.

    சர்வதேச அளவில் ஒருவரின் ஆங்கில மொழிப் புலமையைப் பரிசோதித்து மதிப்பீடு செய்யும் அமைப்பே இந்த ஐ.இ.எல்.டி.எஸ். இந்த மதிப்பீடின்றி மேலை நாட்டுக் கல்லூரிகளில் நுழையவே முடியாது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

    கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் என்று இந்தத் தேர்வு நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். பேசுதல் தவிர்த்து மற்ற மூன்று பகுதி களுக்கான தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறும்.

    கேட்கும் பகுதிக்கு 30 நிமிடங்கள் தரப்படும். அந்தப் பகுதியில் நான்கு ஒலிப்பதிவுகள் ஒலிபரப்பப்படும். அந்த ஒலிப்பதிவுகளில் நடைபெறும் உரையாடல்களை சார்ந்து கேள்விகள் கேட்கப்படும்.

    வாசிப்புப் பகுதிக்கு 60 நிமிடங்கள் தரப்படும். நீண்ட கட்டுரையும் குறுகிய கட்டுரையும் வாசிப்பதற்கு கொடுக்கப்படும். பின்பு அதிலிருந்து 40 கேள்விகள் கேட்கப்படும். உங்கள் கிரகிக்கும் திறனையும் வாசிக்கும் தன்மையையும் அந்தக் கட்டுரையில் பொதிந்திருக்கும் கருத்துகளை நீங்கள் புரிந்துகொள்ளும் பாங்கையும் பரிசோதிக்கும் வண்ணம் அந்தக் கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    எழுதுதல் பகுதியில் உங்கள் இலக்கணத்திறனும் நீங்கள் பயன்படுத்தும் சொற்களின் செறிவும் மதிப்பீடு செய்யப்படும். இந்தப் பகுதிக்கு 60 நிமிடங்கள் தரப்படும்.

    பேச்சுப் பகுதிக்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் தரப்படும். இந்தத் தேர்வில் மட்டும்தான் நீங்கள் தேர்வாளரை எதிர்கொள்வீர்கள்.

    இந்த நான்கு பகுதிகளுக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த நான்கு பகுதிகளில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரியே உங்கள் ஒட்டுமொத்த மதிப்பெண். அந்தச் சராசரி ஏழுக்கு மேல் இருந்தால்தான், நல்ல பல்கலைக்கழகத்தில் உங்களால் சேர முடியும்.

    கூச்சம் வேண்டாம்

    ஆங்கிலத்தில் பேசும்போது, சொல்ல வரும் கருத்தில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். தொடக்கத்தில் மொழியின் இலக்கணத்திலோ உச்சரிப்பிலோ கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆங்கிலத்தில் பேசும்போது எழும் கூச்சத்தை/அச்சத்தைக் கடப்பதற்கு இதை முயன்றாலே போதும். மொழி என்பது வெறும் ஊடகமே. அறிவுக்கும் மொழியின் புலமைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இந்த அடிப்படை புரிதல் இருக்குமேயானால், ஆங்கிலப் புலமை நமக்கு எளிதில் கைகூடிவிடும்.

    • 10-ம் வகுப்பு பொதுதேர்வு முதல்நாளில் 160 பேர் தேர்வு எழுதவில்லை
    • 60 பறக்கும்படை மற்றும் 540 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 600 பேர் தேர்வு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

    பெரம்பலூர்

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. 10-ம் வகுப்பு அரசு தேர்வு நேற்று துவங்கியது. இந்த தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 143 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 288 மாணவர்களும், 3 ஆயிரத்து 905 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 193 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 60 பறக்கும்படை மற்றும் 540 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 600 பேர் தேர்வு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள், மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர போதிய பஸ் வசதிகள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல போலீஸ் பாதுகாப்பு போன்ற பணிகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று நடந்த தமிழ்பாட தேர்வினை 4 ஆயிரத்து 172 மாணவர்களும், 3 ஆயிரத்து 861 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 33 பேர் தேர்வெழுதினர். 116 மாணவர்களும், 44 மாணவிகளும் என மொத்தம் 160 பேர் தேர்வெழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 41,526 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
    • 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் தொடங்கி நடந்தது. இந்த தேர்வுகள் முடிந்த நிலையில் தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

    இந்த தேர்வுகள் வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடந்தது. இதனை தொடர்ந்து வருகிற 10-ந் தேதி ஆங்கில பாடத்துக்கான தேர்வும், 13-ந் தேதி கணிதம், 15-ந் தேதி மொழித்தேர்வு, 17-ந் தேதி அறிவியல், 20-ந் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது.

    கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் என கோவையை சேர்ந்த 388 பள்ளிகள், பொள்ளாச்சியை சேர்ந்த 138 பள்ளிகள் என 526 பள்ளிகளை சேர்ந்த 20,936 மாணவர்கள், 20,590 மாணவிகள் என மொத்தம் 41,526 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

    மேலும் பள்ளியின் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 150 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்காக 7 தேர்வு மையங்கள் என 157 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

    முதல் நாள் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிந்தது. தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 157 முதன்மை கண்காணிப்பாளர்கள், 157 துறை அதிகாரிகள், நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து மாணவ-மாணவிகளும் மையங்களுக்கு வந்தனர். பின்னர் ஹால் டிக்கெட்டை பரிசோதனை செய்த பின்னர் தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மொழி பாடத்தேர்வை மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் எழுதி விட்டு வந்தனர்.

    • தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கி வருகிற 20 ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
    • மொத்தம் 868 மாணவர்கள், 393 மாணவிகள் என மொத்தம் 1261 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கி வருகிற 20 ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கடலுார் கல்வி மாவட்டத்தில் 236 பள்ளிகள் மூலம் 10309 மாணவர்கள், 9570 மாணவிகள் மொத்தம் 19779 மாணவர்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 209 பள்ளிகள் மூலம் 7965 மாணவர்கள், 6950 மாணவிகள் மொத்தம் 14915 மாணவர்களும் என மொத்தம் 445 பள்ளிகள் மூலம் 18274 மாணவர்கள், 16520 மாணவிகள் மொத்தம் 34794 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.   இது தவிர தனித்தேர்வர்களாக கடலுார் கல்வி மாவட்டத்தில் 423 மாணவர்கள், 210 மாணவிகளும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 445 மாணவர்கள், 183 மாணவிகள் மொத்தம் 628 மாணவர்களும் என மொத்தம் 868 மாணவர்கள், 393 மாணவிகள் மொத்தம் 1261 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக கடலுாரில் 80 மையங்களும், விருத்தாச்சலத்தில் 69 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 7 தேர்வு மையத்தில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியதை யொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தேர்வு மையத்தை ஆய்வு செய்தார். பின்னர் தேர்வுகள் சரியாக நடைபெறுகிறதா? அனைத்து மாணவர்களுக்கும் கேள்வித்தாள் வழங்கப்பட்டுள்ளதா? அவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா? திடீர் மின்தடை ஏற்பட்டால் மாற்று நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதா? உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி ராமகிருட்டிணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 241 அரசுப் பளளியில் 8652 மாணவர்களும், 9104 மாணவிகளும், அரசு உதவி பெறும் 31 பள்ளிகளை சேர்ந்த 1607 மாணவர்களும் 1449 மாணவிகளும், 89 தனியார் பள்ளிகளை சேர்ந்த 2747 மாணவர்களும், 2068 மாணவிகளும் என ஆக மொத்தம் 25627 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 121 தேர்வு மையங்களும், தனித் தேர்வர்களுக்காக 4 மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 125 தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி நடந்து வருகிறது. மேலும், அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு, தடையில்லா மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், போக்குவரத்து வசதிகள், முதலுதவி சிகிச்சை போன்றவைகள் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • 8,193 பேர் 41 மையங்களில் எழுதவுள்ளனர்
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

    பெரம்பலூர்:

    தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. பிளஸ்-1 வகுப்புக்கு இன்றுடன் (புதன்கிழமை) தேர்வு முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு நாளை (வியாழக்கிழமை) அரசு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 143 பள்ளிகளை சேர்ந்த 4,288 மாணவர்களும், 3,905 மாணவிகளும் என மொத்தம் 8,193 பேர் 41 மையங்களில் எழுதவுள்ளனர். பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு குலுக்கல் முறையில் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள், மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர போதிய பஸ் வசதிகள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல போதிய போலீஸ் பாதுகாப்பு என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    • 10- வகுப்பு பொதுத்தேர்வு, நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது.
    • இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது.

    சேலம்:

    தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு, மார்ச் 13-ந்தேதி தொடங்கி கடந்த 3-ந்தேதி தேதி நிறைவடைந்தது. அதேபோல், பிளஸ்-1 பொதுத்தேர்வு, மார்ச் 14-ந்தேதி தொடங்கி, . இன்று முடிவடைந்தது.

    இதை தொடர்ந்து 10- வகுப்பு பொதுத்தேர்வு, நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது. சேலம் மாவட்டத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 44 ஆயிரத்து 564 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

    இதற்காக மாவட்டம் முழுவதும், 368 பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், 200 முதன்மை கண்காணிப்பாளர்கள், 200 துறை அலுவலர்கள், 3211 அறை கண்காணிப்பாளர்கள், 250 பறக்கும் படை உறுப்பி னர்கள், 20 கட்டுக்காப்பு மைய அலுவலர்கள், என மொத்தம் 4000 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர். மேலும், பொதுத் தேர்வு எழுதும் மையங்க ளுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வினாத்தாள் எடுத்துச் செல்லவும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்

    பட்டுள்ளது.

    தேர்வில் எவ்வித விதிமீறலும் நடக்காமல் இருக்க, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    • 100 பறக்கும் படை கண்காணிப்பு
    • நாளை 6-ந்தேதி தொடங்கும் பொது தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் பிளஸ்-2பொது தேர்வு கடந்த மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி நிறைவு பெற்றது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இதன் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு நாளை 6-ந்தேதி தொடங்குகிறது. இதை யடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது. நாளை 6-ந்தேதி தொடங்கும் பொது தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 66 மையங்களும் ஒரு தனித்தேர்வு மையத்திலும் மொத்தம் 11 ஆயிரத்து 827 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 48 மையங்களும் ஒரு தனி தேர்வு மையத்திலும் சேர்த்து மொத்தம் 11,497 பேர் எழுதுகிறார்கள். மாவட்டத்தில் 114 மையங்கள் 2 தனி தேர்வு மையங்களிலும் 23 ஆயிரத்து 324 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

    வினாத்தாள்கள் தேர்வு நடந்து தனித்தனி வாகனம் மூலமாக தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வை கண்காணிக்க மாவட்ட கல்வி அதிகாரி தொடக்க கல்வி அதிகாரி மற்றும் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் 100 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். தேர்வு மையத்திற்குள் தேர்வு எழுதுபவர்களை தவிர மற்றவர்கள் அனுமதிக்க பட மாட்டார்கள்.

    தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள்கள் பாது காப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மார்த்தாண்டம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி நாகர் கோவில் முதன்மை கல்வி அலுவலகத்தில் விடைத் தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

    • பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
    • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    திருமங்கலம்

    அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தேவர் திடலில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் தமிழ்ச்செல்வம், ஒன்றிய செயலாளர் வக்கீல் அன்பழகன், நகர செயலாளர் விஜயன், மாவட்ட பேரவைச் செயலாளர் சாத்தங்குடி தமிழழகன், மாவட்ட மீனவரணி செயலாளர் சவுடார்பட்டி சரவணபாண்டி, வர்த்தகர் பிரிவு செயலாளர் சதீஸ் சண்முகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் கரடிக்கல் ஆண்டிச்சாமி, மாவட்ட ஐ.டி. விங் செயலாளர் சிங்கராஜ் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம்.பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் வாகைகுளம் சிவசக்தி, பேரவை பாண்டி, வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேசுவரன், காளி, நிர்வாகிகள் சாமிநாதன் கோடீஸ்வரன் செக்கானூரணி சிவன்காளை, காசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
    • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    மேலூர்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து மேலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழரசன் தலைமையில் மேலூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மேலூர் யூனியன் சேர்மனுமான பொன்னுச்சாமி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மேலூர் செக்கடி கக்கன் சிலை முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில் மேலூர் நகர்மன்ற உறுப்பினர் திவாகர் தமிழரசன், நகர் பொருளாளர் கந்தசாமி, கிடாரிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி, பேரவை இணைச் செயலாளர் உதயசங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அரிசி கண்ணன், முன்னாள் நகர செயலாளர் நாகசுப்பிரமணியன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ஷாஜஹான், காதர்மைதீன், சக்கரவர்த்தி, பாலகிருஷ்ணன், ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன், தவபாண்டி, வழக்கறிஞர்கள் பாண்டிச்செல்வம், கண்ணன், திருமேனி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் அர்ச்சுனன், கிடாரிப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் பாண்டித்துரை, சரவணன், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும்.
    • படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது.

    தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும். தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். பதற்றம் ஏற்பட்ட உடன், அட்ரீனல், கார்டிசால் போன்ற ஹார்மோன்களால் பலவிதமான உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதயம் வேகமாக துடிப்பது, உடல் சூடாகி விடுவது, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை பெருகுவது, கண்மணிகள் விரிவதால் பார்வை சற்றே மங்கலாவது, பசி அறவே இல்லாமல் இருப்பது, நாக்கு வறண்டு விடுவது போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும்.

    நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும் போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.

    மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும். இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும், கேட்கும் பாடங்கள் சற்று குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும். குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள், அதிகமான அலைச்சுழலில் மனம் இருந்தால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது.

    பரீட்சை பயத்தை போக்குவது எப்படி?

    திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்காகத் தான். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக் கொள்ள வேண்டும்.

    மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும் போது ஆழ்ந்த மனதுடன், வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்குத் தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போது தான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும்.

    ×