search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
    • 3-ம் நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஜார் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து காட்டன் சூதாட்டத்தை நடத்தி வருகின்றனர். தினமும் கூலி வேலைக்கு செல்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி, பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள், கட்டிட வேலை செய்பவர்கள் என இவர்களை குறிவைத்தே காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது.

    இதில் நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் புரளுவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் காட்டன் ஜாக்பாட் என்ற பெயரில் நடத்தி வரும் சூதாட்டத்தை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த காட்டன் சூதாட்டம் விற்பனை மதியம் 1.30 மணிக்கு மேல் தான் சூடு பிடிக்க தொடங்குகிறது.

    அந்த சமயத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் அவர்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு அந்த சூதாட்டம் நடக்கும் தெருவில் சென்று லாட்டரி சீட்டுகளை அங்கு இருக்கும் ஏஜென்ட்கள் மூலமாக மாறி மாறி எழுதி விட்டு செல்கின்றனர்.

    சூதாட்ட கும்பல் தங்களிடம் எழுத வரும் நபர்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய் அளவிற்கு பணத்தை கட்டணமாக பெற்றுக் கொள்கின்றனர்.

    குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகளவில் காட்டன் சூதாட்டம் மூன்றாம் நம்பர் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    "அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை விஷாரம் என மாவட்டம் முழுக்க காட்டன் குதாட்டமும், மூன்று நம்பர் லாட்டரியும் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த காட்டன், 3-ம் நம்பர் லாட்டரி இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது. காட்டன் என்பது 2 எண்கள் எழுதித்தர வேண்டும். உதாரணமாக, ஒரு பெட்டிக்கடைக்கு சென்று 35 எனச்சொன்னால் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு அந்த எண்ணை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தந்துவிடுவார்கள் நாம் சொன்ன எண் தேர்வாகியிருந்தால் 700 ரூபாய் கிடைக்கும். ஒரு எண்ணுக்கு 10 ரூபாய் என்பதால் பலரும் 35, 44. 55 என 10 முதல் 20 விதமான இரட்டை இலக்க எண்களை எழுதி அதற்கான பணத்தைத் தந்துவிடுவார்கள்.

    இதில் ஒப்பன், குளோஸ் என மற்றொரு வகை உள்ளது. ஓப்பன் என்றால், 2 எண்களில் முதல் எண்ணை மட்டும் குறிப்பிடுவது. அதாவது 1 முதல் 9 வரை என ஏதாவது ஒரு எண்ணை சொல்லி பணம் கட்டுவது. உதாரணமாக 4-ம் எண் மீது பணம் கட்டியிருந்தால் இதில் 40, 41, 42 என வந்தாலும் முதலில் 4 வந்தால் அதற்கு பரிசு தருவார்கள்.

    அதாவது 10 ரூபாய் கட்டினால் 350 ரூபாய் கிடைக்கும். குளோஸ் டைப் என்பது, கடைசி எண் 1 முதல் 9 வரை ஏதாவது ஒரு எண்ணை குறித்துத் தர வேண்டும். உதாரணமாக 5 என வைத்துக் கொள்வோம் 45, 55, 65, 15 என எது வந்தாலும் கடைசியில் 5 என முடிந்தால் பாதித் தொகை கிடைக்கும்.

    நீங்கள் 10 ரூபாய்தான் கட்டவேண்டும் என்கிற கட்டாயமில்லை. 100. 500 கூட கட்டலாம். பரிசுத்தொகை அப்படியே 10 மடங்கு அதிகமாகத் தருவார்கள் 3-ம் நம்பர் லாட்டரி என்பது, ஒரு எண்ணுக்கு 10 ரூபாய் செலுத்த வேண்டும்.

    உதாரணமாக, 567 என எழுதித் தந்தால் 567 குலுக்கலில் வந்தால் அந்த எண்ணை எழுதித் தந்தவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 5 மட்டுமே வந்தது என்றால் 30 ரூபாய் தருவார்கள். S6 என 2 எண்கள் வந்திருந்தால் 500 ரூபாய் தருவார்கள்.

    100 ரூபாய்க்கு டோக்கன் எழுதினால். எழுதும் புரோக்கருக்கு 30 ரூபாய் கிடைப்பதால், தொழிலாளர்கள் அதிகம் புழங்கும் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், பஸ் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் தனி அறைகளை எடுத்தும் பலர் எழுதுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    3-ம் நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • ஆடு வளர்ப்பு தொழிலில் கிராம மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • பக்ரீத் பண்டிகை வருவதால் விற்பனைக்கு கிராமங்களில் ஆடுகள் வளர்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி, கொம்பூதி, சடைமுனியன் வலசை, பிரப்பன் வலசை, தேர்போகி உள்பட பல்வேறு பகுதியில் உள்ள கடலோர கிராமப்புற மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை பிரதான தொழிலாக செய்து வந்தனர். இந்நிலையில் கூடுதலாக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் வருவாய் அதிகமாக கிடைப்பதால் தற்போது பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக கிராமங்களில் ஆடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எடையை வைத்து ஆடுகளுக்கு பணம் வழங்கப்படுவதால் எடை அதிகரிக்க தீவனமாக சோளம், அகத்தி கீரை போன்ற உணவுகள் கொடுக்கப்படுகிறது.

    பண்டிகை நாட்களில் மட்டும் இறைச்சி தேவை அதிகரித்து வந்த நிலையில், தற்போது வாரத்தில் ஒரு நாள் இறைச்சியை உணவாக சேர்த்துக்கொள்ளும் முறையை ஏராளமானோர் கடைபிடிப்பதால் தேவை அதிகரித்து, ஆடுகள் விலை உயர்ந்து இறைச்சி விலையும் எகிறியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ இறைச்சி ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.800 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை குறிப்பிட்ட சமூக மக்கள் ஆடு வளர்ப்பு தொழிலை செய்து வந்தனர். இதில் வருவாய் அதிகமாக கிடைப்பதை அறிந்த மக்கள் வீடுகள் தோறும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். அதிகமான ஆடுகள் இருந்தாலும் தேவை அதிகரிப்பால் விலை குறைவதற்கான வாய்ப்பு கிடையாது.ஆடுகளை நோய்கள் தாக்காத நிலையில், சுகாதாரத்துடன் வளர்த்து வந்தால் நல்ல விலைக்கு ஆடுகளை விற்பனை செயது வருகின்றனர். தற்போது பக்ரீத் பண்டிகை வருவதால் விற்பனைக்கு கிராமங்களில் ஆடுகள் வளர்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

    • கோவில் நிலங்களை எந்த ஒரு பொதுக்காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • கோர்ட்டு உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை எந்த ஒரு பொதுக்காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தி.மு.க. அரசு கோவில் நிலங்களை விற்க திட்டமிடுகின்றது.

    கோவில் நிலத்தை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. கோர்ட்டு உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

    ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணை முடிந்த பின்புதான் உண்மை தெரியவரும். ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமா செய்யவில்லை. இதுகுறித்து கேட்காத திருமாவளவன் ரெயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மதிப்பிலான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
    • திட்டங்களை வழி வகுத்து செயல்படுத்தி வருவதால் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறி வருகின்றனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் மனுநீதினால் முகம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். முகாமில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,027 பயனாளிகளுக்கு 5 கோடி 12 லட்சம் மதிப்பிலான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில்:-

    மனுநீதி நாள் முகாம்களில் மக்களின் குறைகளை போக்குவதற்கு அவர்களின் பகுதிகளிலேயே நேரடியாக சென்று அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் மக்கள் நலதிட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு தகுந்த தீர்வு காண்பதற்கு ஏதுவாக இதுபோன்ற குறை தீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மக்களுக்காக பல்வேறு முன்னேற்ற திட்டங்களை வழி வகுத்து செயல்படுத்தி வருவதால் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறி வருகின்றனர். வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் அதிக இலாபம் பெறலாம். இதனை வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை மற்றும் விவசாயிகள் இணைந்து செயல்படுத்த அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் நமது பாரம்பரிய சிறுதானிய வகை உணவிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் கேட்டுக்கொண்டார். இதில் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ, உதவி ஆட்சியர் (சிதம்பரம்) சுவேதா சுமன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலைப்புதூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.38 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது
    • வியாபாரிகள், எண்ணெய் முகவர்கள் கலந்து கொண்டனர்

     கரூர்

    கரூர் மாவட்டம், சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில் 72.47½ குவிண்டால் எடை கொண்ட 19 ஆயிரத்து 475 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.85-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.10-க்கும், சராசரி விலையாக ரூ.18.71-க்கும் என மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 428-க்கு விற்பனையானது. அதேபோல் 130.52½ குவிண்டால் எடை கொண்ட 290 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.77.01-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.35-க்கும், சராசரி விலையாக ரூ.76.69-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.75.15-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.57.05-க்கும், சராசரி விலையாக ரூ.70.10-க்கும் என மொத்தம் ரூ.9 லட்சத்து 28 ஆயிரத்து 142-க்கு விற்பனையானது. 197.58 குவிண்டால் எடை கொண்ட 266 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.140.11-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.125.99-க்கும், சராசரி விலையாக ரூ.134.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.148.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.125.52-க்கும், சராசரி விலையாக ரூ.144.59-க்கும் என மொத்தம் ரூ.27 லட்சத்து 31 ஆயிரத்து 758-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.37 லட்சத்து 92 ஆயிரத்து 328-க்கு விற்பனையானது.

    • சுமார் 50-க்கும் மேற்பட்ட மினி ஆட்டோகளில் வைத்து பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்கின்றனர்.
    • இவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் ரெக்கார்டு செய்யப்பட்ட விலைப்பட்டியலை வெங்காயம், பூண்டு என விலை கூறி விற்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் சிவா தியேட்டர் கார்னர் பகுதிகளில், சுல்தான்பேட்டை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மினி ஆட்டோகளில் வைத்து பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்கின்றனர்.

    இவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் ரெக்கார்டு செய்யப்பட்ட விலைப்பட்டியலை வெங்காயம், பூண்டு என விலை கூறி விற்கின்றனர்.

    ஸ்பீக்கர் அதிக சத்தத்துடன் ஒலிப்பதால் அப்பகுதி மக்களும், சாலையில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    மேலும் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் வகையில் சாலையிலேயே காலை முதல் மாலை வரை வண்டிகளை நிறுத்தி வைப்பதால் விபத்தும் ஏற்படுகின்றது.

    எனவே மினி ஆட்டோவில் உள்ள அதிக சத்தத்துடன் ஒலிக்கும் ஸ்பீக்கரை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஆட்டோ வியாபாரிகள் பதிவு செய்யப்பட்ட குரலை திரும்பத் திரும்ப ஒலிப்பதால் இதை கேட்கும் எங்களுக்கு மனநிலை பாதிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே இடத்தில் நின்று கொண்டு சத்தத்துடன் ஸ்பீக்கரில் ஒளிபரப்புகின்றனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மதுரை மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் சிக்கினர்.
    • மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பகுதியில் சினிமா தியேட்டர் எதிரே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் 2-வது தெருவைச் சேரந்த காஜா மைதீன் (40) என்பது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா, ரூ.9,740 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்ற குற்றத்திற்காக காஜா மைதீனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் ரோடு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாகமலை மேலக்குயில்குடியை சேர்ந்த முருகன் (54) என்பவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவையும், ரூ.14 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் 4-வது தெருவை சேர்ந்த திவ்யதர்ஷன் என்பவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மது விற்பனை

    மதுரை அவனியாபுரம், திருநகர், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், திலகர்திடல், கரிமேடு, அண்ணாநகர் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விறபணை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது மது விற்பனை செய்த 26 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நகை மற்றும் செல்போன் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
    • 45 பவுன் நகை மற்றும் 10 ஐ போன்களை மரைக்காயரிடம் கொடுத்து அதனை பர்மா பஜாரில் உள்ள கடை ஒன்றில் கொடுக்குமாறு மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தார்.

    போரூர்:

    சென்னை அசோக் நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் முஸ்தாக் அகமது. இவர் தனது வீட்டின் கீழே பழைய நகை மற்றும் செல்போன் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லாமுனார் மரைக்காயர் என்பவர் கடந்த 5 மாதங்களாக தங்கி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் முஸ்தாக் அகமது தன்னிடம் இருந்த 45 பவுன் நகை மற்றும் 10 ஐ போன்களை மரைக்காயரிடம் கொடுத்து அதனை பர்மா பஜாரில் உள்ள கடை ஒன்றில் கொடுக்குமாறு மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் மரைக்காயர் திரும்பி வரவில்லை. மேலும் அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அவர் நகை மற்றும் செல்போன்களை சுருட்டிக் கொண்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ. 20.50 என்ற விலையில் மிண்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் விற்பனை செய்து கொடுக்கப்பட்டது.
    • ஏலத்தின் மூலம் ரூ.70,06 விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனனக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பட்டுக்கோட்டை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பிரதி புதன் கிழமை அன்று தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் தஞ்சாவூர் மற்றும் பேராவூரணி சரகத்திற்கு உட்பட்ட 3 விவசாயிகளிடமிருந்து 3418 கிலோ தேங்காய் ( குடுமியில்லாதது) கிலோரூ. 20.50 என்ற விலையில் மிண்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் விற்பனை செய்து கொடுக்கப்பட்டது.

    இம்முறை மறைமுக ஏலத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் பேராவூரணி பகுதியைச் சார்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மறைமுக ஏலத்தின் மூலம் ரூ.70,06 விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

    மேலும் விவசாயிகள் அனைவரும் தங்களது தேங்காயினன இம்மறைமுக ஏலத்தின் மூலம் அதிகபட்ச விலைக்கு விற்பனன செய்து பயனடையுமாறு விற்ப னனக் கண்காணிப்பாளர் முருகானந்தம் கேட்டுக் கொண்டார்.

    • ஒரு கும்பல் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல் அந்த சிறுமியை 15 பேருக்கு விற்பனை செய்துள்ளது.
    • கைதான அசோக் பட்டேல் கும்பலின் தலைவராக செயல்பட்டுள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள கன்பா கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

    புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் காந்தி நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அந்த சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    ஒரு கும்பல் அந்த சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல் அந்த சிறுமியை 15 பேருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை விற்பனை செய்த கும்பலை சேர்ந்த அசோக் பட்டேல், அவரது மனைவி ரேணுகா (வயது 45), இவர்களது 16 வயது மகன் மற்றும் ரூபல் மெக்வான் (34) என்ற பெண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களது கூட்டாளிகளான மான்சா பகுதியை சேர்ந்த மோதி சென்மா (50) மற்றும் பாலன்பூரை சேர்ந்த அம்ரத் தாகூர் (70), சேகர்சிங் சோலங்கி (34) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான அசோக் பட்டேல் இந்த கும்பலின் தலைவராக செயல்பட்டுள்ளார். மேலும் மெக்வான் சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி நைசாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் பின்னர் அந்த சிறுமிகளுக்கு நிறைய பரிசுகள் மற்றும் ஆடைகள் கிடைக்கும் என்று கூறி அவர்களை பலருக்கு விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கடந்த 2015-ம் ஆண்டு முதலே இந்த கும்பல் இதே போன்று சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சம்பாதித்து வந்துள்ளனர்.

    மேலும் சில சிறுமிகளை திருமண ஆசை காட்டி மணமகள் என கூறி ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள இந்த கும்பலின் கூட்டாளிகள் மூலம் பல ஆண்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளில் இந்த கும்பல் 8 சிறுமிகளை கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் சிறுமிகளை தலா ரூ. 2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கும்பலின் பிடியில் உள்ள சிறுமிகளை மீட்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
    • நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது.

    அபிராமம்

    கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பனைமரங்கள் பரவலாக இருந்தாலும் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் பலவித நன்மை தரும் நுங்கு களை அபிராமம் பகுதி மக்கள் பெரிதும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

    இந்த நிலையில் ராமநாத புரம், ராமேசுவரம் பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி கமுதி, அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நுங்கு விற்பனை அமோக மாக நடைபெறுகிறது. அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கோடை வெயிலின் தாக் கத்தினால் ஏற்படும் தாகத்தை தணிக்க நுங்கு களை வாங்கி சாப்பிடுகின்ற னர்

    நுங்க சிறப்பு பற்றி முதியவர் ஒருவர் கூறுகை யில், பனைமரங்களில் பெண்பனை மரங்களில் மட்டும்தான் நுங்குகள் காய்க்கு. ஒரு பனை மரத்துக்கு 10 குலைகள் தள்ளும். நுங்கு உடல்நலத துக்கு நல்லது.

    பெரும்பா லானோர் அதன் வெள்ளைச் சோற்று பகுதியை மட்டுமே பிரித்துச் சாப்பிடுகிறார்கள். மாறாக அதன் மேல் ஒட்டுத் தோலையும் சேர்த்துச் சாப்பிடுவதே மிகமிக நல்லது.

    நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது. நுங்கில் உள்ள நீரானது பசியைத் தூண்டும். மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே இது சிறந்த மருந்து. உடல் வெப்பத்தைத் தணிக்க வல்லது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோயினை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடியது. ரத்த சோகை நோய்க்கு நூங்கு இயற்கையான மருந்தாகும்.

    நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன.

    கோடைகாலங்களில் பலருக்கும் வியர்க்குரு மற்றும் வேணல் கட்டிகள் உருவாகும். நுங்குத் தண்ணீ ரும், மேல் ஓட்டுடன் கூடிய நுங்கையும் உடலில் வியர்க் குரு மற்றும் வேனல் கட்டி கள் இருக்கும் இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் என்றார்.

    • மண் எடுக்கும் நபர் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
    • விதிகளை மீறுவோருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

    ஆலங்குளம்:

    விவசாய மேம்பாட்டுக்காக குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்து ள்ளது. இதற்கு மண் எடுக்கும் நபர் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வரவேண்டும் என்ற விதி உள்ளது.

    அதேபோல் விவசாயம், மண்பாண்டம் தயாரித்தல் மற்றும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு விவசா யிகள் இலவசமாக மண் எடுத்து செல்லலாம் எனவும் அரசு விதி வகுத்து ள்ளது.

    மேலும் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவல ர்களால் மண் வெட்டி எடுக்க வரையறுக்கப்பட்ட பகுதியில் இருந்து மட்டுமே மண் வெட்ட வேண்டும். விதிகளை மீறுவோருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் இருந்து கடந்த ஒரு வார காலமாக வண்டல் மண் வெட்டி எடுத்துச் செல்லப்ப டும் நிலையில், அந்த வாகன ங்கள் எவ்வித விதிகளையும் பின்பற்றுவ தில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.

    தனி நபர் ஒருவர் உரிய அனுமதி பெற்றுள்ள நிலையில் சுமார் 15 ஜே.சி.பி. வாகனங்கள், சுமார் 100 டிராக்டர்களை கொண்டு அதிக அளவு வண்டல் மண் எடுக்கப்படுகிறது எனவும், அந்த வாகனங்கள் சாலை களில் அதிவேகத்தில் செல்லும்போது வண்டல் மண் கட்டிகள் சாலையில் விழுவதால் விபத்து அபாயம் இருப்பதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவிக்கி ன்றனர்.

    விவசாயத்திற்கு, மண்பா ண்டம் செய்ய, வீட்டு சொந்த உபயோ கத்திற்கு மட்டுமே பயன்படு த்தப்பட வேண்டிய மண், வர்த்தக ரீதியாக டிராக்டர் லோடு ஒன்று ரூ. 700 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை செய்யும் அரசியல் பிரமுகர்களுக்கு சில அதிகாரிகளும் உடந்தை யாக இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு மண் எடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலக்தில் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் தற்போது பொது ப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி த்துறை வசம் அனுமதி பெற்றாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாகவே அதிக முறைகேடு உருவாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே கலெக்டர் நேரடி விசாரணை நடத்தி, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து தகுதியான விவசாயிகள் மட்டுமே குளத்தில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 

    ×