search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
    • ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 3.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாகின.

    இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. ஏலத்துக்கு, 7,998 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 3,251 கிலோ. விலை கிலோ ரூ.21.15 முதல் ரூ.25.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.75.

    16 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 194 கிலோ. விலை கிலோ ரூ.61.10 முதல் ரூ.80.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.76.65. ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • 50 கிராம் கஞ்சா பறிமுதல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் தலைமை யில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இதற்காக சந்தே கிக்கப்படும் பகுதிகளில் போலீசார் ேராந்து சுற்றி வருகிறார்கள்.

    வேம்பனூர் அரசு உயர் நிலைப்பள்ளி அருகில் கஞ்சாவுடன் இரண்டு வாலி பர்கள் நிற்பதாக வெள்ளிச் சந்தை போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் வெள்ளிச்சந்தை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்ற போது சூரப்பள்ளம் அஜித் என்ற அஜித்குமார் மற்றும் தோப்புகளை சுதன் (வயது 23) ஆகிய இரண்டு பேரும் நின்று கொண்டிருந்தனர்.போலீசாரை கண்டவுடன் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை செய்தபோது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதற்காக நிற்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.

    இச்சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை எஸ்.ஐ. ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • ஈரோடு கருங்கல்பாளையத்தில் இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது.
    • இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

    மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வர்.

    இதேபோல் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    இன்று வழக்கம் போல் மாட்டு சந்தை கூடியது. 350 பசு மாடுகள், 150 எருமை மாடுகள், 50 வளர்ப்பு கன்றுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்கு வந்து இருந்தன. இது கடந்த வாரத்தை விட குறைவு.

    தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளன.

    எனினும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பசு மாடுகள் ரூ.45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையும், எருமை மாடுகள் ரூ.45 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்றுகள் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.20 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 4, 919 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 1,961 கிலோ.தேங்காய் கிலோ ரூ.19.10 முதல் ரூ.23.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.50.40 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,109 கிலோ. கொப்பரை கிலோ ரூ.50.15 முதல் ரூ.75.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.72.15.ஏலத்தில் மொத்தம் 50 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.20 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை
    • குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு மது விற்பனை செய்பவரர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று முன் தினம் திருவனந்தபுரம் அருகே உள்ள பலராமபுரம் சாமவிளை புத்தன்வீட்டை சேர்ந்தஅல் அமீன் (வயது 31) என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதே போல் நாகர்கோவில் வெட்டூணிமடத்தை சேர்ந்தவர் செல்வன் (23). சமீபத்தில் இவரை கஞ்சா விற்பனை செய்த வழக்கில் வடசேரி போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே இரணியல்போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதே போல் வாத்தியார்விளை சேர்ந்தவர் அஜித் என்ற அஜித்குமார். இவரையும் சமீபத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக வடசேரி போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இவர் மீதும், இரணியல் போலீஸ் நியைத்தில் வழக்குகள் உள்ளன.

    இவர்கள் இவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயில் அடைக்க உத்தரவிடுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று, இவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலகல் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் செல்வன், அஜித் ஆகிய இருவரையும் வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை. ஜெயிலில் அடைத்தனர்.

    • 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் செண்டிப்பூ சாகுபடி.
    • ஒரு கிலோ விலை கிலோ ரூ. 120 முதல் ரூ. 150வரை விற்பனையாகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர் பஞ்சநதிக்குளம் நெய்விளக்கு குரவப்புலம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் செண்டிபூ சாகுபடி நடைபெறுகிறது.

    நாள் தோறும் இங்கு விலையும் செண்டி பூக்கள் கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை, மற்றும் உள்ளூர் பூ வியாபரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இத்தொழிலில் ஏரளமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    வழக்கமாக இங்கு விளையும் சென்டி பூ ஒரு கிலோ 20 முதல் 40 வரை விற்பனையாகும் நேற்று தீபாவளியை முன்னிட்டு சென்டிபூக்களின் ஒரு கிலோ விலை கிலோ ரூபாய் 120 முதல் முதல் 150வரை விற்பனையாகிறது.

    நேற்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு செண்டி பூ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக விற்றது
    • தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 111 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த கடைகளில் ரூ.2 கோடி முதல் ரூ.2½ கோடி வரை தினமும் மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. பண்டிகை காலங்களில் விற்பனை அதிகமாக நடைபெறும்.

    தீபாவளி பண்டி கையையொட்டி கடந்த 3 நாட்களாக டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுபான பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.பீர் வகைகள் மதுபான வகைகள் அதிக அளவு விற்பனையாகி உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகளவு மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளன. 23-ந் தேதி ரூ.5 கோடியே 50 லட்சத்திற்கு மது பானங்கள் விற்று தீர்ந்து உள்ளது. கடந்த 22-ந் தேதி ரூ.4 கோடியே 75 லட்சத்திற்கும்,

    24-ந்தேதி ரூ.3 கோடியே 75 லட்சத்திற்கு என மொத்தம் 3 நாட்களில் ரூ.14 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

    இந்த ஆண்டு விற்ப னையை பொருத்தமட்டில் கடந்த ஆண்டு விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இவர் மேட்டூர், சேலம் கேம்ப், தங்கமாபுரிப்பட்டணம், குஞ்சாண்டியூர், புத்துசாம்பள்ளி பகுதிகளில் ஏஜெண்ட்டுகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
    • ஏஜெண்டுகளை கூண்டோடு பிடிக்க முடிவு.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் செல்போனில் தொடர்பு கொண்டால் இருக்கும் இடத்திற்கே வந்து கஞ்சா விற்கப்படுவதாக, மேட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேட்டூர் டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், எஸ்ஐ சேகர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    கஞ்சா வியாபாரிகளின் செல்போன் எண்ணை கண்டுபிடித்த போலீசார், கல்லூரி மாணவர்கள் போல் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினர். சிறிது நேரத்தில் மேட்டூர் காவிரி பாலத்தில், சொகுசு காரில் வந்த டிப்டாப் உடையணிந்த நபர்கள், ரூ.1000 பெற்றுக் கொண்டு, காரில் இருந்தபடியே 2 பொட்டலம் கஞ்சாவை வீசி விட்டு செல்ல முயன்றனர்.

    அப்போது அங்கு தயாராக இருந்த மேட்டூர் போலீசார், அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த சேலம் 5 ரோட்டை சேர்ந்த மனோகரன் மகன் விஜய்பரத் (வயது 28), மேட்டூர் குமரன் நகரைச் சேர்ந்த விக்னேஷ் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் விஜய்பரத் பி.இ. கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து விட்டு, சேலம் 5 ரோட்டில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். அவரது ஏஜெண்டாக செயல்பட்டு வரும் விக்னேஷ் (21) என்பவர், மேட்டூர் அனல் மின் நிலைய கண்காணிப்பு பொறியாளர் ஒருவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

    இருவரும் விற்பனைக்காக காரில் வைத்திருந்த தலா 25 கிராம் எடை ெகாண்ட 51 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜய்பரத் காரிமங்கலத்தை சேர்ந்த விஷ்வா என்பவரிடம் 4 கிலோ கஞ்சாவை கிலோ ரூ.4000-க்கு வாங்கி வந்து, 25 கிராம் எடை ெ காண்ட பொட்டலம் ரூ.500-க்கு விற்பனை ெ சய்து வந்துள்ளார். இவர் மேட்டூர், சேலம் கேம்ப், தங்கமாபுரிப்பட்டணம், குஞ்சாண்டியூர், புத்துசாம்பள்ளி பகுதிகளில் ஏஜெண்ட்டுகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

    ஏெஜண்டுகளை கூண்டோடு கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கைது செய்யபட்ட இருவரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • புத்தாடை வாங்குவதற்காக நெல்லை நகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    • கடைகளுக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பொருட்கள் வாங்க வந்திருந்தனர்.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கி ழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி கட்ட விற்பனை இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நாளை தீபாவளியை யொட்டி பொதுமக்கள் அதிகாலையில் புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். இதற்காக கடந்த 2 நாட்களாக இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக நெல்லை நகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கடைசி நாளான இன்றும் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

    மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட இடங்களில் பஜார் பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. இதனால் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டு இருந்தனர்.

    கூட்டம் அதிகரிப்பு

    மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு வரையிலும் தீபாவளி விற்பனை சூடுபிடித்து காணப்பட்டது. பாளை சமாதானபுரம் மார்க்கெட் முதல் வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சந்திப்பு, டவுன் ரதவீதிகள் வரை கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    ஜவுளிக்கடை மற்றும் பட்டாசு கடைகளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பொருட்கள் வாங்குவதற்காக வந்திருந்தனர். இதேபோல் பலகார கடைகள், பேக்கரிகள், பேன்சி கடைகள் மற்றும் மளிகை கடைகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    போலீஸ் பாதுகாப்பு

    இதனால் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையொட்டி மாநகர பகுதியில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். குறிப்பாக டவுன் ரதவீதிகள் மற்றும் வண்ணார்பேட்டையில் உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். சில இடங்களில் போலீசார் மோட்டார் சைக்கிள்களில் சென்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பயணிகள் கூட்டம்

    சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ரெயில் மூலமாக இன்று காலை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதனால் அதிகாலை முதலே அங்கும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இதனையொட்டி பட்டாசு ஏதேனும் கொண்டு வருகிறார்களா? என்பதை ரெயில்வே போலீசார் கண்காணித்தனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்காக சிறப்பு ரெயில்களும், கூடுதல் பஸ்களும் விடப்பட்டு இருந்தது.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அங்கும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆலங்குளத்தில் தென்காசி பிரதான சாலை, அம்பை சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளில் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தன.

    சங்கரன்கோவில் டவுன் ரதவீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ராஜபாளையம் சாலை, கழுகுமலை சாலைகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் சாலையில் இன்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பிரையண்ட் நகர், அண்ணா நகர் மற்றும் புதிய பஸ் நிலையங்களில் பொதுமக்கள் அலைமோதியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் டபுள்யூஜிசி ரோடு, சிவன் கோவில் பகுதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவித்தன. இதேபோல் திருச்செந்தூர், கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, விளாத்திகுளம், எட்டயபுரம், சாத்தான்குளம், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம் உள்பட புறநகர் பகுதிகளிலும் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    • ஆலங்குடியில் தீபாவளி விற்பனை களையிழந்து காணப்படுகிறது.
    • கலக்கத்தில் வியாபாரிகள்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சுமார் 20, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடலை மில்களும், நெல் அரவை மில்களும் அதிக அளவில் இ ங்கி வருகின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்க னோர் இங்கு கூலி வேலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் ஆலங்குடியில்

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக அளவில் வியா பாரம் நடைபெறும் என்று மளிகை, ஜவுளிஇ பட்டாசு வியபாரிகள் அதிகளவில் முதலீடு செய்து பொருகளை இறக்குமதி செய்து இருந்தனர்.

    ஆனால் தீபாவளிக்க ஒரு நாளே மீதமுள்ள நிலையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடிகிடக்கின்றன. மேலும் எதிர்பார்த்த அளவில் வியாபாரம் நடைபெறாததால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். கடைகளில் பொருட்களை வாங்க ஆட்கள் யாருமின்றி வியபாரிகள் வழி மேல் விழி வைத்து காத்துள்ளனர்.

    தீபாவளி வியாபாரம் அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் வட்டிக்கு பணம் வாங்கி முதலீடு செய்தவர்கள் எவ்வாறு பணத்தை திருப் பிக் கொடுப்பது என்று கலக்கமடைந்துள்ளனர். கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகையின்போது அதிக அளவில் வியாபாரம் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு வியாபாரம் இல்லாமல் போனதால் காரணம் புரியாமல் வியாபாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தீபாவளிக்கு மற்ற இடங்களில் வியாபாரம் களைகட்டியுள்ள நிலையில் ஆலங்குடியில் வழக்கத்தைவிட வியாபாரம் குறைந்துள்ளதால் வியாபாரிகள் என்ன செய்வதென்றே புரியாமல் தவித்து வருகின்றனர்.

    • ரெயிலில் கடத்தி வந்த 3½ கிலோ குட்கா பறிமுதல்
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் நேற்று வல்லன்குமாரவிளை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் இளங்கடையை சேர்ந்த அசோக் (வயது 25), வல்லன் குமாரன்விளையைச் சேர்ந்த அருள் செல்வன் (30), தியாகராஜன் பழவிளையை சேர்ந்த ஜெனித் (21) என்பது தெரிய வந்தது. போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கஞ்சா சென்னையிலிருந்து வாங்கி வருவதாக தெரிவித்த னர். தொடர்ந்து போலீசார் நான்கு பேரிடமும் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் ரெயில்வே போலீசார் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர்.நேற்று புனேவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் அனாதையாக பை ஒன்று கிடந்தது.போலீசார் அதை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3½ கிலோ புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புகையிலை கொண்டு வந்தவர்கள் குறித்த விப ரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • நிலக்கடலை பயிர் சாகுபடியில் ஒரு செடிக்கு 150 முதல் 160 கடலை விற்பனை செய்யப்படுகிறது.
    • எஸ்.புதூர் ஒன்றிய மேலாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள வலசுப்பட்டி பிள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னம்மாள் ராமன். இவர் தனது மானாவாரி நிலத்தில் நிலக்கடலை பயிர் செய்தார்.

    எஸ்.புதூர் ஒன்றிய வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உதவி அலுவலர் பால முருகனின் நவீன கடலை சாகுபடி அறிவுரைக்கு ஏற்ப, கடலை விதைகள் வரிசை முறையில் ஒரு அடி இடைவெளியில் விதைகள் பதிக்கப்பட்டு, விதை நேர்த்தி, உர நிர்வாகம், இலைவழி தெளிப்பு மற்றும் ஜிப்சம் இட்டு மண் அணைத்தல் உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் கடை பிடித்தார்.

    அவருடைய மானாவாரி நிலத்தில் பயிரிட்ட கடலை அறுவடை செய்யப்பட்டதில் ஒரு கடலை செடியில் சுமார் 150 முதல் 160 நிலக்கடலைகள் வரை சாகுபடி இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சரியான நேரத்தில் நவீன விவசாய தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்பட்டு சரியான அளவில் மண்ணை அணைத்து சாகுபடி செய்ததால் நிலக்கடலை விளைச்சல் அமோகமாக இருந்துள்ளது.

    இது விவசாயிகளிடையே மிகுந்த ஆச்சரியத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. ஏக்கருக்கு சுமார் 1500-ல் இருந்து 1600 கிலோ வரை மகசூல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விவசாயி ராமன் எஸ்.புதூர் ஒன்றிய மேலாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    ×