search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • கோவில் திருவிழாவையொட்டி ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த மாட்டு சந்தை தற்போது துவங்கியுள்ளது.
    • பழமையான மாட்டு சந்தையை பார்க்க கிராம மக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த ஓலப்பாளையம், கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு விக்ரம சோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடக்கிறது. இந்தாண்டு பொங்கல் விழா வருகிற 4ந் தேதியும், தேரோட்டம் 5-ந் தேதியும் நடக்கிறது. கோவில் திருவிழாவையொட்டி ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த மாட்டு சந்தை தற்போது துவங்கியுள்ளது.

    மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதோடு வாங்கியும் சென்று வருகின்றனர்.

    10ம் நூற்றாண்டில் (1088ம் ஆண்டு) அபிமான சோழ ராசாத்திராசனால் விக்கிரம சோழீஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வீர ராசேந்திர சோழனால் இக்கோவிலுக்கு கொடை வழங்கப்பட்டதற்கும், உழவர்கள், வணிகர்களுக்கு வரி விதிக்கப்பட்டதற்கும், விக்கிரம சோழீஸ்வரர் கோவில் தைப்பூச விழா உள்ளிட்ட பிற விழா நடந்ததற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.வரலாற்று சிறப்பு மிக்க கோவிலில் முருக கடவுள் ஆறுமுகங்களுடன் காட்சி தருவது சிறப்பு. சேரர்களின் முசிறி (கேரளா) துறைமுகம் முதல் சோழர்களின் பூம்புகார் துறைமுகம் வரை செல்லும் ராசகேசரி பெருவழிப்பாதையில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மாட்டு சந்தை பழமையானதாகும்.

    கொரோனாவுக்கு பின் கடந்த ஆண்டு கூடிய சந்தையை காட்டிலும் இந்தாண்டு மாடுகள் வரத்து அதிகமாகியுள்ளது. பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இன்னும் சில நாட்களுக்கு பின் இன்னமும் அதிக வரத்து இருக்கும். பழமையான மாட்டு சந்தையை பார்க்க கிராம மக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

    சந்தையை ஒட்டி கோவிலின் மணிகள், குஞ்சம், சாட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாடு வாங்க வரும் விவசாயிகள் மாடுகள் வாங்க முடியாவிட்டாலும், சாட்டையை வாங்கி செல்வதும் மாடு வாங்கும் விவசாயிகள் நேர்த்தி கடனாக மாரியம்மனுக்கு மொட்டை அடித்து கோவில் முன்பாக பூஜைகள் செய்து கொண்டு செல்வதும் குறிப்பிடத்தக்கது.

    பொதுவாக மாட்டு சந்தைகளில் மாடுகள் விற்பனையாவதை பார்க்கும் போது சாதாரண விற்பனை போன்று இருக்கும். ஆனால் அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் விஷயங்கள் எப்போதுமே ஒருவித ஆச்சர்யத்தை கொடுக்கும்.

    அதுபோன்ற சுவாரசியமான விஷயங்கள், கண்ணபுரம் மாட்டுச்சந்தையில் நடக்கிறது. மாட்டை விலை பேசும் போது வியாபாரிகள் இருவர் கைகளில் துண்டை போட்டு விலை பேசுகின்றனர். இது வழக்கமானதாக ஒன்றாக இருந்தாலும் இதற்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதில் சிலவற்றை ஒருவர் விற்பனை செய்ய, சந்தைக்கு மாடுகளை கொண்டு செல்வர். அங்குள்ள தரகர்கள் வியாபாரிகளை அழைத்து வந்து அந்த மாடுகளை காண்பிப்பர். மாடுகள் பிடித்து போனால் தோளில் இருக்கும் துண்டு கைக்கு வந்து விடும். தரகரும், வியாபாரியும் துண்டை போட்டு கொண்டு பேரத்தை துவங்குவர். வியாபாரி 5 விரல்களை கூட்டி பிடித்தால் 5 ஆயிரம் ரூபாய் என்பது அர்த்தம், மோதிர விரலையும், சுண்டு விரலையும் பிடித்தால் 7 ஆயிரம் ரூபாய் எனவும், சில்லறையை குறிக்க விரல்களில் உள்ள ஒவ்வொரு ரேகையையும் பிடித்து விலையை நிர்ணயம் செய்வது உண்டு. அப்போது தட்டை, வாச்சி, கொழுவு, பணயம் என்ற சொற்களையும் பேசி மாட்டின் விலை நிர்ணயிக்கப்படும். பரிமாறப்படும் சொற்களும் புரியாததாகவே இருக்கும். இத்தனை விரலுக்கு வராதுண்ணா... அதெல்லாம் வரும்ணா... இன்னும் கொஞ்சம் சேர்த்து முடிங்க, இப்படித்தான் விலை பேசப்படுமே தவிர விலையை பற்றி வெளியே தெரியாது.

    மேலும் பேரத்தின் போது மாட்டை பரிசோதிக்கும் போது மாட்டில் இவ்வளவு விஷயங்களா என்பது கொஞ்சம் ஆச்சர்யத்தைத்தான் கொடுக்கும். நிறம், கொம்பு, சுழி, பல் என பலவற்றையும் பார்த்துதான் ஒருவர் சந்தையில் இருந்து மாட்டை வாங்குவார். 

    • தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர்.
    • மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவ லர் கதிரவன் தலைமையி லான குழுவினர் ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதி களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர். மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.

    அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 13 வழக்கு களில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதித்து வருவாய் அலுவ லர் மேனகா உத்தரவிட்டார். அதில், தரமற்ற உணவு பொருள் விற்றது, தரமற்ற ஜவ்வரிசி விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளட்ட 13 வழக்குகளில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து, விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கடைகளில் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

    • உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காதபடி குளுமையை அளிப்பது மண்பானைகள்.
    • 200 முதல் 500 ரூபாய் வரை விற்பனை மண்பானை செய்யப்படுகிறது.

    உடுமலை :

    கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அனைவரையும் வாட்டி வதைக்கும் நிலையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காதபடி குளுமையை அளிப்பது மண்பானைகள் தான்.பொருளாதார வசதியில்லாத மக்களும், மண்பானை பயன்படுத்த முடிவதால் இவை ஏழைகளின் ஏ.சி., என அழைக்கப்படுகிறது.இத்தகைய பானைகளுக்கு கோடை காலம் துவங்கி விட்டதால் விற்பனையும் அதிகரித்துள்ளது. உடுமலையில் பஸ் நிலையம், ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு, தளிரோடு உள்ளிட்ட பகுதிகளில் மண்பானைகள் விற்கப்படுகிறது.அங்கு 200 முதல் 500 ரூபாய் வரை, அதன் அளவுகளுக்கு ஏற்றபடி விற்பனை செய்யப்படுகிறது.

    பானைகளிலும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மண்பாண்ட ஜக்குகள், குவளைகள் என பலவி தமான வடிவங்களிலும் உள்ளன.மடத்துக்குளம், கணியூர், கணக்கம்பா ளையம், பூளவாடி, உள்ளி ட்ட பகுதிகளிலிருந்து பானைகள் மொத்தமாக பெறப்பட்டு இங்கு சந்தை ப்படுத்தப்படுகின்றன. பொதுமக்களும் பானை களை பயன்படுத்துவதில் அதிகஆர்வம் காட்டுகின்றனர்.

    • வைக்கோல் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.
    • கட்டுகள் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை ஆகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெரியாறு கால்வாய் நீரை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டதை முன்னிட்டு சோழவந்தான் மற்றும் திருவலவாய நல்லூர், திருவேடகம், ஊத்துக்குளி, மேலக்கால், நாராயணபுரம், ராயபுரம், ரிஷபம், கருப்பட்டி, இரும்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் தீவிரமாக நடைபெற்றது.

    இருபோக சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் தற்போது அறுவடை பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து வயல்களில் உள்ள வைக்கோல்களை நவீன எந்திரம் மூலம் பிரிக்கும் பணி நடந்தது. 30 கிலோ எடையுள்ள கட்டுக ளாக கட்டப்பட்டு வைக்கோல் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த வைக்கோல் கட்டுகள் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் தற்போது தங்களது நிலங்களில் வைக்கோலை பிரித்து விற்பனை செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடு விற்பனை
    • புதுக்கோட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வாரச்சந்தை புதுக்கோட்டை சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி, காரைக்குடி, தேவக்கோட்டை, தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.இதில் பெட்டை ஆடுகளை விட கிடா ஆடுகளின் விற்பனை அதிகமாக இருந்தது. நேற்று ஒரு நாள் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.1 கோடிவரை வர்த்தகம் நடைபெற்றது. மேலும் அடுத்தவார சந்தையில் ஆடுகளின் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ரூ.5 கோடிக்கு விற்பனையானது.
    • கோவில் நிர்வாகம் பதில் அளித்து அறிக்கை ஒன்றை வழங்கி உள்ளது.

    மதுரை

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டு முழு வதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின் றனர். அப்போது அவர்கள் மீனாட்சி அம்மன்- சுந்தரே சுவரருக்கு பட்டுச்சேலை, வேஷ்டி, துண்டுகள் சாத்தி வழிபடுவது வழக்கம். இது தவிர கோவில் நிர்வாகம் சார்பாகவும் பட்டு சேலை கள், வேஷ்டி கள், துண்டுகள் சாத்தப்பட்டு வருகின்றன.

    மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சாத்தப்படும் வேட்டி, சேலை, துண்டுகளை கோவில் நிர்வாகம் வாரம் ஒரு முறை ஏலம் வாயிலாக விற்பனை செய்து வருகிறது.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர், "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பட்டு சேலைகள் விற்பனை மூலம் எவ்வளவு தொகை கிடைத்துள்ளது? என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் பதில் அளித்து அறிக்கை ஒன்றை வழங்கி உள்ளது. அந்த அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அன்பளிப்பாக வந்த பட்டுச்சேலை, வேஷ்டி, துண்டுகள் வகை யில் கோவில் நிர்வாகத்துக்கு கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் ரூ. 5 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 586 கிடைத்து உள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானம், கோவிலின் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழ் புத்தாண்டு விழா நாளை 14-ந்தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது
    • பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன.

    கடலூர்:

    தமிழ் புத்தாண்டு விழா நாளை 14-ந்தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்பட்டது.       இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 300 ரூபாய்க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு மல்லி 600 ரூபாய்க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ 300 ரூபாய்க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட அரும்பு 500 ரூபாய்க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ தற்போது 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க சென்றனர். மேலும், தொடர்ச்சியாக விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

    • ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
    • சுய உதவிக்குழு பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பணி நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த ஒரு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மதி அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும், கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் முதல் கட்டமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தஞ்சாவூர் மாநகராட்சி பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு விற்பனை மதி அங்காடியை திறந்து வைத்தார்.

    இந்த விற்பனை அங்காடியின் செயல்பாடுகள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மனதார பாராட்டினார்.

    இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மேலும் 4 இடங்களில் தஞ்சை தாரகைகள் விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது.

    தற்போது இந்த 5 தஞ்சை தாரகைகள் மூலம் இதுவரை ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பூ மாலை வணிக வளாகத்தில் செயல்படும் தஞ்சை தாரகைகள் விற்பனை அங்காடிக்கு சென்றார்.

    அங்கு பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழுவினரை பாராட்டினார். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் முதன்முதலாக தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் விற்பனை மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.25,94,106-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து இரண்டாம் கட்டமாக புவிசார் குறியீடு பெற்றுள்ள உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக இந்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய ரயில் நிலையங்களில் ஒரு ரயில் நிலையம் ஒரு உற்பத்தி பொருள் என்ற திட்டத்தின் கீழ் தற்காலிக அங்காடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

    இந்த அங்காடி மூலம் தற்போது வரை ரூ.11,26,130 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    மூன்றாம் குட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பழமையான கல்லணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சை தாரகைகள் மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது.

    தற்போது வரை ரூ.6,11,619 வரை மகளிர் சுய உதவி குழு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    நான்காம் கட்டமாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மதி அங்காடியை பழுது நீக்கம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி புதுப்புலியுடன் தஞ்சை தாரகைகள் மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது வரை ரூ.7,60,807-க்கான மகளிர் சுய உதவிக் குழு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    5-ம் கட்டமாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் கடந்த ஜனவரி 14-ம் தேதி புதிய விற்பனை மையம் தொடங்கப்பட்டது.

    இன்று வரை அதில் ரூ.98,610-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இப்படி 5 தஞ்சை தாரகைகள் மூலம் இதுவரை ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . தொடர்ந்து இவற்றின் மதிப்பு அதிகரிக்கும்.

    மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அவர்களாலேயே சந்தை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் விதவைப் பெண்கள், கணவரால் கைவிட்ட பெண்கள் உள்ளிட்ட பல பெண்கள் வாழ்வில் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக கைவினை பொருட்கள் விற்பனை அங்காடி தொடங்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. சந்தை வாய்ப்பு, சுய உதவி குழு பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் மையப்படுத்தி இந்த பணி நடந்து வருகிறது.

    ரூ.51 லட்சத்தை தாண்டி பொருட்கள் விற்பனை செய்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், உதவி திட்ட அலுவலர் ஆசீர்வாதம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள், சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

    • இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • பிரபாகரன் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது, வடபாகம் கருப்பட்டி சொசைட்டி சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (29) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    உடனே தனிப்படை போலீசார் பிரபாகரனை கைது செய்து அவரிடமிருந்த 750 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்ச ந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10, கத்தரிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ. 30, உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.50, முட்டை கோஸ் ரூ.25, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டை க்காய் ரூ.60, இஞ்சி ரூ.100, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 30, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • கரூர் கிருஷ்ணராயபுரத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது
    • மாம்பழ சீசன் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்ப்பு

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் பகுதியில், மாம்பழம் சீசன் துவங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன் றியத்திற்கு உட்பட்ட சிந்தலவாடி, மகாதானபுரம், திருக்காம்புலியூர், மாயனுார், கட்டளை, சேங்கல், லாலாப்பேட்டை ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக மாமரம் சாகு படி செய்து வருகின்றனர். இந்த மா மரத்தில் தற்போது பூக்கள் பூத்து, மாங்காய்கள் காய்த்து வருகின்றன.மேலும் மாம்பழம் சீசன் துவங்கி உள் ளதால், முதிர்ந்த மாங்காய்களை விவசாயிகள் பறித்து விற்பனை கொண்டு வந்து ஒரு கிலோ, 60 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் வரும் நாட்களில் மாம் பழம் சீசன் மேலும் தீவிரமடையும். இதில் செந்தூரா மற்றும் இதர ரக மாம்பழங்கள் விற் பனைக்கு வந்து விடும். சீசன் காரணமாக மா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.

    • ராஜகோபால் நகர் பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார்.
    • முருகேசன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பெரியநாயகம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    ராஜகோபால் நகர் பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார். அவரை விரட்டி சென்று பிடித்து சோதனை செய்தபோது அவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன்(வயது 45) என்பதும், பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், அவரது இருசக்கிர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதேபோல் தூத்துக்குடி தென்பாகம் பகுதியில் போலீசார் தீவிரரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது இந்திரா நகரை சேர்ந்த லில்லி (32)ரங்கநாதபுரம் மாரி என்ற மாரியப்பன் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 650 கிராம் கஞ்சா, ரூ.8,630-ஐ பறிமுதல் செய்தனர்.

    ×