search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224097"

    • செங்காதலைபாலம்- வேதாரண்யம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
    • நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை கோட்டம், வேதாரண்யம் உட்கோட்ட த்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை திருச்சி, நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் விஜயலெட்சுமி தலைமையில் பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர். செங்காதலைபாலம்- வேதாரண்யம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளின் தரம் குறித்து தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது, தஞ்சாவூர், நெடுஞ்சாலை த்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சரவணன் மற்றும் நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டப்பொ–றியாளர் நாகராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

    • மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு பேரணி நடைபெற்றது.
    • உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் பண்டார வாடை அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமை வகித்து புற நோயாளிகளுக்கு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

    பண்டாரவாடை ஊராட்சியில் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினம் பேரணியும் நடைபெற்றது.

    இம்முகாமில் மருத்துவ அலுவலர் அழகு சிலம்பரசி பண்டாரவாடை ஊராட்சி மன்ற தலைவர் மரியம் பீவி ஊராட்சி செயலாளர் பார்த்திபன் வட்டார சுகாதார ஆய்வாளர் செல்லப்பா சுகாதார ஆய்வாளர்கள் நாடிமுத்து சுவாமிநாதன் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் தவ்பிக் அகமது, சாரதி கண்ணன் , அஸ்வின் குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், தொழில்நுட்ப உதவியாளராக 24 நபர்களுக்கும், இளநிலை உதவியாளராக (கணக்கு) 2 நபர்களுக்கும், மின் கணக்கீட்டாளராக 14 நபர்களுக்கும், தட்டச்சராக 1 நபருக்கும், களப்பணி உதவியாளராக 56 நபர்களுக்கும், உதவி வரைவாளராக 1 நபருக்கும், காவலாளியாக 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வேளாண் விரிவாக்க பணியாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்க ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    வேளாண் விரிவாக்க பணியாளர்களுக்கு காலநிலை மாற்றத்திற்கேற்ற சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை சேகரிப்பது மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான பயிற்சி ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது. வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி தலைமை தாங்கினார். காலநிலை மாற்றங்களை எவ்வாறு கணிப்பது? காலநிலை மாற்றங்களை விவசாயிகளுக்கு முன்னறிவிப்பாக அளிக்கும் சேவை,காலநிலை மாற்றங்களால் வேளாண்மையில் ஏற்படக்கூடிய மாறுதல்கள், வேளாண் உற்பத்தியின் பாதிப்பை குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை வளங்களை பாதுகாத்து கூடுதல் உற்பத்தி பெறுவதற்கான தொழில்நுட்பங்களாகிய எந்திர விதை விதைப்பு,நேரடி நடவு முறை, எந்திர நடவு முறை, நெல்லில் ஊடுபயிர், நெல்லில் சொட்டுநீர் பாசன முறை, கூடுதல் விதைப்பு விதைத்த வயலில் களை எடுக்கும் கருவி மூலம் சரியான பயிர் எண்ணிக்கை பராமரித்தல்,நெல் தரிசில் உளுந்து சாகுபடி மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், மாவட்ட வேளாண் வானிலைப்பிரிவு விஞ்ஞானி வெங்கடேசுவரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்க ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் செய்திருந்தார்.

    • தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
    • சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும்

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தொழில் பயிற்சி முன்பு நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    மாநில செயலாளர் நவநீதன் வாழ்த்துரை வழங்கினார்.

    மாநிலச் செயலாளர் கோதண்டபாணி தொடக்க உரையாற்றினார். முடிவில் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    இடைச் செல்வர்கள் ரெங்கசாமி, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பை வழங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் 12 மணி நேர வேலை மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர் புற நூலகர்கள், எம் .ஆர் .பி செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் ஏராளமான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக்கடை பணியாளர்களும் போராட்டம் நடத்த உள்ளோம்.
    • வருகிற 27-ந்தேதி மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் தேசிங்குராஜா தலைமை தாங்கினார்.

    மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் பிரகாஷ், மாநில இணை செயலாளர்கள் ராமலிங்கம், பாஸ்கர், குணசீலன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தஞ்சை மாவட்ட தலைவர் அறிவழகன் வரவேற்றார்.

    கூட்டத்தில் அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நியாய விலைக்கடைகளில் மத்திய அரசு அளிக்கும் பொருட்களுக்கு ஒரு பில், மாநில அரசு அளிக்கும் பொருட்களுக்கு ஒரு பில் என இரட்டை ரசீது முறை உள்ளதால் பணியாளர்கள், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    எனவே இரட்டை பில் முறையை ஒழித்து ஒரே பில் வழங்க வேண்டும்.

    பொருட்களை எடை போட்டு ரேஷன் கடைகளுக்கு கொடுக்காமல், பணியாளர்களை பழிவாங்கும் எண்ணத்தோடு, ஆய்வு செய்து இருப்பு குறைவு என்று கூறி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக்கடை பணியாளர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளோம்.

    எனவே தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை தீர்க்க முன்வர வேண்டும்.

    சட்டசபையில் நிறைவே ற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.

    அதை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் அருகே கோரிக்கை அட்டை அணிந்து அமைச்சு பணியாளர்கள் பணியாற்றினர்.
    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3நாட்கள் இந்த போராட்டம் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் உள்ள 11-வது பட்டாலியனில் பணியாற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.

    புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஆவடி, தாம்புரம் காவல் ஆணையரகம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்டங்களுக்கு கூடுதல் அமைச்சு பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

    காவல்துறை குடியிருப்புகளில் அமைச்சு பணியாளர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19, 20, 21-ந்தேதி ஆகிய 3நாட்கள் கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடந்தது.

    நேற்று 11-வது பட்டாலியனில் கிளை தலைவர் கண்காணிப்பாளர் பாலா, செயலாளர் முருகானந்தம் தலைமையில் 35அமைச்சு பணியாளர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களின் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றம் கல்வி மேம்பாட்டிற் காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உப தேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

    இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேருவ தற்கான விண்ணப்பப் படி வங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபனை் மையினர் நல அலுவல கங்கள், மாவட்ட சிறு பான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச் சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்ட ஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய் யப்பட்ட திருச்சபைகளிட மிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்காணும் திருச்சபை களின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

    மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பி னர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழி லாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் கட்டுப் பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங் கப்பட்டு வரும் நலத் திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

    கல்வி உதவித்தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சமும், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணம் உதவித் தொகை ரூ.20 ஆயிரமும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ. 5 ஆயிரமும், திருமண உதவித் ெதாகை ஆண்களுக்கு ரூ. 3 ஆயிரம் (ம) பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித் தொகை ரூ. 3 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 வழங்கப்படும்.

    மேலும், விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலையில் குழந்தைகளுக்கு கொழுக்கட்டை வழங்கப்பட–வில்லை.
    • மதிய உணவிற்காக எந்த வித தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் டி.

    மணல்மேடு அங்கன்வாடி மையத்தில் கடந்த 12-ந்தேதி மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டர்.

    ஆய்வின் போது டி. மணல்மேடு குழந்தைகள் மைய பணியாளர் ரமா மற்றும் உதவியாளர்லதா ஆகியோர் பணியில் மெத்த னமாக இருந்துள்ளனர்.

    உணவு பொருட்கள் பூச்சி மற்றும் வண்டுகள் இல்லாமல் பாதுகாக்கப்படவில்லை.

    பதிவேடுகள் பராமரிக்கப்ப டவில்லை. காலையில் கொழுக்க ட்டை வழங்கப்பட– வில்லை. மதிய உணவிற்காக எந்த வித தயாரிப்பு பணி களும் மேற்கொள்ளவில்லை என்று ஆய்வின் போது தெரியவந்துள்ளது.

    எனவே பணியில்குறைபாடுகள் காரணமாக டி. மணல்மேடு குழந்தைகள் மைய பணியாளர் ரமா மற்றும் குழந்தைகள் மைய உதவியாளர் லதா ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்.
    • 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம், கோவில்பத்து ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், துணை மேலாளர் தியாகராஜன், தர கட்டுப்பாடு மேலாளர் ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் அசோகன், சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பயிர் கடன், நகைக்கடன், சுய உதவி குழு கடன் ஆகியவைகளுக்கு வட்டி இழப்பு இன்றி சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டும்
    • ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    பயிர் கடன் வழங்குவதில் விதிமீறல் என்று கூறி பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும், கடன் தள்ளுபடி திட்டத்தில் பயிர் கடன், நகைக்கடன், சுய உதவி குழு கடன் ஆகியவைகளுக்கு வட்டி இழப்பு இன்றி சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டும், தவணை தவறிய நகைக்கடன்கள் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ஏற்பட்டுள்ள இழப்பு தொகைக்கு சங்க பணியாளர் பொறுப்பாக்கப்பட்டு ஓய்வு கால நிதி பலன்களை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், இழப்புத் தொகையை நட்ட கணக்கிற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சகாய திலகராஜ், பொருளாளர் வின்சென்ட் ராஜ், துணை தலைவர்கள் செல்வின் ஜோஸ், சந்திரகுமார், இணை செயலாளர்கள் ரமணி, வசந்த பிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அப்போது வெயில் சுட்டெரித்தது. எனினும் வெயிலை பொருட்படுத்தாமல் கையில் குடைபிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

    • மேட்டூர் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அல்லது பழைய ஒப்பந்ததாரருக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில் 99 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்ற பணியாளர்களு டன் சேர்ந்து தூய்மைப் பணியினை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த ஒப்பந்த பணியா ளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு இன்று பணி வழங்கப்படவில்லை என தெரிய வருகிறது.

    இதனை கண்டித்து மேட்டூர் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதற்கு மாற்றாக புதிய ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

    அல்லது பழைய ஒப்பந்ததாரருக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும். ஆனால் இது எதுவுமே நடந்ததாக தெரியவில்லை என்றனர்.

    இதற்கிடையே, ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பணியினையும் நிரந்தர பணியாளர்களே மேற்கொண்டு வருவதால், மேட்டூரில் துப்புரவு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    ×