search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224097"

    • செவிலியர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
    • செக்யூரிட்டிகள் மற்றும் நோயாளிகளும் முககவசம் அணிந்து வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இன்று முதல் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் அறிவித்தார்.

    அதன்படி இன்று தஞ்சைராசாமி ராசுதார் அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வரும் மருத்து வர்கள், செவிலி யர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தனர்.

    மேலும் மருத்துவமனை பணியாளர்கள், செக்யூரிட்டிகள் மற்றும் நோயாளிகளும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று மருத்துவமனை நிலைய அதிகாரி டாக்டர் செல்வம் அறிவுறுத்தினார்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.

    • முருங்கை சாகுபடி மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் குறித்து பேசினார்.
    • துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கொத்தங்குடியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதித்திட்டத்தின்கீழ் முருங்கை தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதில், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உயர்ரக விளைச்சல் திறன் கொண்ட ஆண்டுதோறும் காய்ப்புத்திறன் கொண்ட 200 முருங்கை கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சிமன்ற தலைவர் அமராவதிராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜ்குமார், மாவட்ட வள பயிற்றுநர் நிறுவன மேம்பாட்டு பாலமுருகன், முன்னோடி விவசாயி பாலசுப்ரமணியன், குத்தாலம் ஒன்றிய மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில், ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் உஷா திட்ட விளக்கவுரையாற்றி முருங்கை தோட்டம் அமைப்பதன் குறிக்கோள்கள் குறித்தும், முருங்கை சாகுபடியின் மூலம் கிடைக்க க்கூடிய வருமானம் குறித்தும், இத்தோட்டத்தினை மகளிர் குழுவினர் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதனை குறித்து விளக்கி பேசினார்.

    இதில், ஒருங்கி ணைந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருத்திகா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் மனுநீதிசோழன், கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதன் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டே ஷன் சிவான ந்தம் உள்ளிட்ட நிறுவன களப்பணியாளர்கள், கொத்தங்குடி ஊராட்சி தூய்மை பணியாளர்கள், பணிதல பொறுப்பாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அலுவலகத்திலுள்ள கோப்புகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • சுங்க இலாகா அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் உள்ள சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு நாகப்பட்டினம் சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு இணை கமிஷனர் செந்தில் நாதன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக துணை சூப்பிரண்டு இன்னாசி ஆரோக்கியராஜ் அனை வரையும்வரவேற்றார்.

    கட்டிடத்தை திருச்சி மண்டல சுங்க இலாகா ஆணையர் அனில் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து சுங்க இலாகா ஆணையர் அனில் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    பின்னர், அலுவலகம் உள்ளே சென்று அங்கிருந்தகோப்பு களை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

    இதில் சுங்க இலாகா அதிகாரிகள், அலுவலர்கள், பணியா ளர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
    • இறந்த சாலை பணியாளர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட தலைவர் வெங்கடேசன், சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சட்டையப்பன், மத்திய செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சட்ட மன்றத்தில் அறிவிப்போம் என வாக்குறுதி அளித்த தமிழக முதல்வர் அதை அமல்படுத்த வேண்டும்.

    இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். 50-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்களை பலி கொண்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.

    அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7500க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் காலி இடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சாலை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் வட்டத் தலைவர் கருணாகரன் கண்ணன் காமராஜ் கலைவாணன் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொரு–ளாளர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

    • 12 ஆயிரத்து 492 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 312 பேரும் அடங்குவர்.
    • 225 அலுவலக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 பொது தேர்வு தொடங்கியது.

    அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை தேர்வு நடக்கிறது.

    இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 225 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

    இதில் மாணவர்கள் 12 ஆயிரத்து 492 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 312 பேரும் அடங்குவர்.

    தேர்வு பணியில் 112 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 112 துறை அலுவலர்கள், 7 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 27 வழித்தட அலுவலர்கள், 139 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் 1961 அறை கண்காணிப்பாளர்கள், 194 சொல்வதை எழுது பவர்கள் மற்றும் 225 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
    • ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாத கருணை ஓய்வூதியம் ரூ. 4000 வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் செயல்படும் அனைத்து சங்க ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.

    ஐ.என்.டி.யூ.சி பொதுசெயலாளர் இளவரி தலைமை வகித்தார்.

    ஏ.ஜ.டி.யூ.சி சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், சி. ஐ. டி .யூ சங்க மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், பாட்டாளி சங்க தலைவர் முருகன், அம்பேத்கர் தொழிற்சங்க மாநிலத் தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

    ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாத கருணை ஓய்வூதியும் ரூ. 4000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள், சேமிப்பு நிலையங்கள், நவீன அரிசி ஆலைகள் முன்பு வருகின்ற 9-ந்தேதி ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

    இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் தரக் கட்டுப்பாடு மேலாளர் ஓய்வு வேணுகோபாலன், அன்பழகன், சிவானந்தம், மணியரசன், புவனேஸ் வரன், பாண்டியன், பழனிவேல், ராஜ்குமார், மணிமாறன், அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏஐடியூசி மாநில பொருளாளர் கோவிந்த ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

    • பொங்கல் போனஸ் ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும்.
    • தகுதி உள்ள சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு அரசு ஊழியர் விழிப்புணர்வு பிரச்சார ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வட்டத்தலைவர் கலைவாணன் தலைமை வகித்தார்.

    வட்டசெயலாளர் பாலு வரவேற்றார்.

    இணை செயலாளர் முருகவேல், முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் கே.மாரிமுத்து கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

    தொடர்ந்து 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தவேண்டும், பொங்கல் போனசை ௧௦ ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும், தகுதியுள்ள சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

    முடிவில் வட்டபொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.

    • வக்பு நிறுவன பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 180 வக்பு நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள், அடக்க தலங்கள், தைக்காக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் மானிய விலையில் 125 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்குவதற்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

    வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணி புரியும் உலமா நலவாரிய உறுப்பி னர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 45 வயதுக்குள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய கலெக்டர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உறுப்பினர் செயலர் கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பின ராகவும் மற்றும் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப் பாளர் உறுப்பினராகவும் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும்.

    மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற மனுதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரி டம் பெற்ற சான்று, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கு வக்பு கண்காணிப்பாளரின் சான்று மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப் பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • தூய்மை பணியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் ஒன்றியம், பெரும்பாண்டி ஊராட்சியில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார்.

    பெரும்பாண்டி ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு செயலாளர் சரோஜா பாஸ்கர் தலைமை தாங்கினார்.

    முகாமில் ரத்த அழுத்தம், சக்கரை நோய் அளவு, உப்பு அளவு, கண் நோய் பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    முகாமில் பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் அசோக்குமார் தலைமையில் செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

    இதில் 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர். பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை கள ஒருங்கி ணைப்பாளர் நாரயணவடிவு, அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.

    முடிவில் பெரும்பாண்டி ஊராட்சி செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

    • உதயமார்தாண்டபுரம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    உதயமார்தாண்டபுரம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மேற்பார்வையாளரக கலந்து கொண்டார்.

    ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தூய்மை ஊழியர்களுடன் இணைந்து ஊராட்சி மன்ற துைண தலைவர் புவனேஸ்வரி விஜயபாஸ்கர், 1-வது வார்டு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், 4-வது வார்டு உறுப்பினர் கவிதா தெய்வராஜன், 5-வது வார்டு உறுப்பினர் செல்லப்பா என்கிற தாஜுதீன், 6-வது வார்டு உறுப்பினர் அஜிரன் அலிமா காதர், 7-வது வார்டு உறுப்பினர் வாசுகிஅண்ணாதுரை, 8-வது வார்டு உறுப்பினர் ராயல்காதர், ஊராட்சியின் திட்ட ஒருங்கினைப்பாளர் உஷா பணி மற்றும் அனைத்து பணிதள பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஊராட்சியின் அனைத்து பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    முடிவில் ஊராட்சி செயலர் பிரவீனா நன்றி கூறினார்.

    • அரசு பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்துக்கு கலெக்டர் கேடயம் வழங்கினாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சி துறை சாா்பில் அரசுப் பணியாளா்களுக்கு தமிழ் ஆட்சி மொழிப் பயிலரங்கம் நடைபெற்றது.

    இப்பயிலரங்கத்துக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். இதில், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி வரலாறும் சட்டமும், கணினிப்பயிற்சி, ஆட்சிமொழி அரசாணை களும் செயலா க்கமும், மொழிபெயா்ப்பும் கலை ச்சொல்லாக்கமும், ஆட்சிமொழி ஆய்வும் குறை களைவு நடவடிக்கைகளும் மற்றும் தமிழில் குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் ஆகிய தலைப்புகளில் அரசுப் பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும், 2020 ஆம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாகத் தெரிவு செய்யப்பட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்துக்கு ஆட்சியா் கேடயம் வழங்கினாா். இக்கேடயத்தை அந்த அலுவலகம் சாா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன் பெற்றுக் கொண்டாா்.

    இக்கூட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இயக்குநா் எழிலரசு, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சபீா்பானு, மன்னா் சரபோஜி அரசுக் க ல்லூரி உதவிப் பேராசிரியா் அமுதா, அரசா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • டோக்கன்கள் வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.
    • வருகிற 8-ம் தேதி வரை அந்தந்த ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகின்ற தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்திற்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சரக்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் முழுக் கரும்பு ஒன்றினையும் சேர்த்து வழங்க தமிழக அரசால் ஆணையிட்டு உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 1-12-2022 தேதியில் புழக்கத்தில் உள்ள 7,00,505 குடும்ப அட்டைதரர்களுக்கும் 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை அந்தந்த ரேசன் கடைகள் மூலம் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கத்துடன் முழு கரும்பு ஒன்றும் வழங்கப்பட உள்ளது.

    இதற்கான டோக்கன்கள் வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. வருகிற 8-ம் தேதி வரை அந்தந்த ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் , தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 04362-245442 மற்றும் 04362-231336 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தங்களது புகாரினை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×