search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224097"

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • அவசர ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் பணியாளர்களுக்கு துணை ஆணையர் அருணாசலம், உதவி ஆணையர் யக்ஞநாரயணன் முன்னிலையில், மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன், மாரிமுத்து, தீயணைப்பு-மீட்பு பணிகள் துறை பணியாளர்களால், தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் தீயின் வகைகள், அவற்றை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? அவசர ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி தெரிவிக்கப்பட்டது. தீயின் தன்மைக்கேற்ப தீயணைப்பான்கள், கார்பன்-டை ஆக்ஸைடு, நுரை, பவுடர், ஈர சாக்குகள், தண்ணீர், மற்றும் மணல் கொண்டு தீயணைக்கும் பயிற்சி, நிலைய அலுவலரால் செய்து காண்பிக்கப்பட்டது.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது பக்தர்களுக்கு ஏற்படும் மூச்சு திணறல், மயக்கம், போன்றவற்றிற்கு எவ்வாறு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்புவது? பற்றியும் செயல்முறை விளக்கம் பற்றியும் அப்பல்லோ மருத்துவமனை முதலுதவி மருத்துவ நிபுணர் டாபிக், கோவிலின் முதலுதவி மருத்துவ மைய மருத்துவர்கள் ஜனார்த்தனன் ராஜா, சாம்ராட் பாலாஜி மற்றும் மருத்துவ குழுவினரால் நடத்தி காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் அயல்பணி கண்காணிப்பாளர்கள், காவல் துறை பணியாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்திய உணவு கழக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இணையாக கூலி வழங்க வேண்டும்.
    • ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.4000 ஊக்க ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் நாகேஷ், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சாமிக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொதுச்‌ செயலாளர் சந்திரகுமார்‌ சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் கிடங்குகள், திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் பணி புரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு , இந்திய உணவுக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இணையாக கூலி வழங்க வேண்டும், கொள்முதல் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்த வேண்டும், ‌ ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ. 4000 ஊக்க ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாநில பொருளாளர் கோவிந்தராஜன், மாநில செயலாளர்கள் கிருஷ்ணன், முருகேசன், ‌கலியபெருமாள், தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வம், தஞ்சாவூர் மாவட்ட பொருளாளர் தியாகராஜன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, மாவட்ட செயலாளர்கள் சிவகுருநாதன், ஆனந்தன் , புஷ்பநாதன், சம்பத், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வார்டுகளிலும் சிறப்பு துப்புரவு முகாம்.
    • குப்பைகளை சேகரித்து இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் பணி.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அலுமினிய கூடை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு தலைமை தாங்கினார். பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் 38 துப்புரவு பணியாளர்களுக்கு அலுமினிய கூடை வழங்கி பேசுகையில், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வார்டுகளிலும் சிறப்பு துப்புரவு முகாம் மக்களை இணைத்து உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

    மக்கும் குப்பைகளை தனியே சேகரித்து இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. இப்பணி சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும் பாலம் தொண்டு நிறுவனத்திற்கு நன்றி, என்றார். நிகழ்ச்சியில் பிரிவு அலுவலர் செந்தில்குமார், மேற்பார்வையாளர்கள் வீரையன், பெரமையன் ஈஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 314 நிரந்தர துாய்மை பணியாளர்கள் மற்றும் 250 வெளிக்கொணர்வு துாய்மை பணியாளர்கள் ஆகியோர்கள் தயார்.
    • பிளிச்சீங் பவுடர், பினாயில் மற்றும் நீர்த்த சுண்ணாம்பு ஆகியவை கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் நான்கு ஜே.சி.பி.க்கள், மூன்று காம்பாக்டர் லாரி, மூன்று டிப்பர் லாரி, இரண்டு மினி டிப்பர் லாரி, இரண்டு மினி ஹிட்டாச்சி, இரண்டு டிராக்டர், 46 டாடா ஏ.சி.இ., 100 எண்ணிக்கையிலான மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது.ஒரு ஜெனரேட்டர், 10 மரம் வெட்டும் இயந்திரமும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் வடகிழக்கு பருவமழை 2022 முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை பணிகள் தொடர்பாக 51 வார்டுகளுக்கும் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுடன் மீட்பு பணிக்கு அலுவலர்கள் பொறுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 14 துப்புரவு கோட்டங்களை சார்ந்த, 12 துப்புரவு ஆய்வர்கள், 10 துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், 314 நிரந்தர துாய்மை பணியாளர்கள் மற்றும் 250 வெளிக்கொணர்வு துாய்மை பணியாளர்கள் ஆகியோர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.

    தேவையான அளவு பிளிச்சீங் பவுடர், பினாயில் மற்றும் நீர்த்த சுண்ணாம்பு ஆகியவை கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. நான்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களிலும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் போதிய மருந்து பொருட்கள் இருப்பில் தயார் நிலையில் உள்ளது.மாநகராட்சியில் 24 மணி நேர அவசரகால பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தயார் நிலையில் உள்ளது. (தொலைபேசி எண்கள்-04362 232021 மற்றும் இலவச அழைப்பு எண்.1800 425 1100) .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களிடையே தொழுநோய், தேமல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நகரின் முக்கிய பகுதிக ளில் புகைமருந்து அடிக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி கிராமத்தில், ஒருங்கிணைந்த நோய் தடுப்பு, தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணிகள் கடந்த மூன்று நாட்களாக துணை இயக்குநர் டாக்டர். ஹேமச்சந்த காந்தி உத்தரவி ன்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.

    கிள்ளிவளவன் மேற்பார்வையில் நடைபெற்றது. இப்பணியை ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி செந்தில் தொடக்கி வைத்தார்.

    இதில் கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தூய்மை காவலர்கள், மஸ்தூர் பணியாளர்கள், நூறுநாள் திட்ட பணியாளர்கள் ஆகியோர் தேவையற்ற, டயர், பிளாஸ்டிக், பானை போன்ற பொருட்களை கண்டறிந்து ஒட்டு மொத்தமாக வண்டிகள் மூலம் அப்புறப்படுத்தினர்.

    மக்களிடையே தொழுநோய், தேமல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கீழத்தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் புகைமருந்து அடிக்கப்பட்டது.

    இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், வட்டார மருத்துவம் சாரா மேற்பா ர்வையாளர் கதிரேசன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், கதிரவன், பால சண்முகம், விக்னேஷ், ஊராட்சி செயலாளர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இப்பணியை மாவட்ட பூச்சி இயல் அலுவலர் சிங்காரவேலு ஆய்வு செய்தார். மேலும், பல்வேறு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    • அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியஅலுவ லகத்தில் தேசிய ஒருமை ப்பாடு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி ஒன்றி யக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை யில் நடைபெற்றது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இரும்பு தலை ஊராட்சியில் நடை பெற்ற உறுதிமொழி எடுக்கும் நிக ழ்ச்சி ஊராட்சி மன்ற தலை வர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு, ஊராட்சி பணியாளர்கள், வார்டு உறு ப்பி னர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.‌

    வடக்கு மாங்கு டி ஊ ராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகரா ஜன் தலைமையில் நடைபெற்ற உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் கார்த்திக், பணிதள பொறுப்பாளர் அம்பேத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அதுபோல கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலை வர்பழனி தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இதில் ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு.
    • அங்கன்வாடிக்கு தேவையான உபகரண பொருட்கள் வாங்கி சீர்வரிசையாக வழங்கினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் நம்பிக்கை தொண்டு நிறுவனம், தமிழ்நாடு இளம் குழந்தைகளின் பராமரிப்பு கூட்டமைப்பு இணைந்து அங்கன்வாடி தின விழா , அங்கன்வாடி சீர்திருவிழா ஐந்து மையங்களில் நடந்தது.

    விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட வேளாளர்விஜயா வரவேற்றார்.

    திருத்துறைப்பூ ண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அங்கன்வாடி திட்ட த்தையும் பணிகளையும் நம்பிக்கை கொண்டு நிறுவணம் தொடர்ச்சியாக செய்து வரும் பணிகளையும் பாராட்டி பேசி திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கலை நிகழ்ச்சி பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரச்சார வாகனம் அங்கிருந்து கலை நிகழ்ச்சிகளுடன் புறப்பட்டு கொக்காலடி, முள்ளூர், திருத்துறைப்பூண்டி டவுன் பள்ளிவாசல் ஆகிய அங்கன்வாடி மையங்க ளுக்கு சென்று அங்கன்வாடி பணியாளர்கள் உதவியா ளர்களை பொன்னாடை போற்றி நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்து அங்க ன்வாடிக்கு தேவையான உபகரணங்கள் பொருட்கள் வாங்கி சீர்வரிசையாக மேளதாள இன்னிசையுடன் எடுத்துச் சென்று வழங்கினார்கள்.

    இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரோட்டரி டெல்டா சங்க தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் காளிதாஸ், திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன் சங்க தலைவர் முகமது இக்பால், செயலாளர் தங்கமணி, பிசியோதெரபி டாக்டர் கருணாநிதி, போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கி ல்லி வளவன், அங்கன்வாடி மைய பார்வை யா ளர்கள், அங்கன்வாடி பணியா ளர்கள், பெ ற்றோ ர்கள், பொதுமக்கள், குழந்தைகள் அனைவரும் கலந்து கொ ண்டனர்.

    • குப்பைகள் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.
    • தற்காலிக வடிகால் அமைத்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடி ஊராட்சியில் உள்ள அரசு கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.

    தற்போது பெய்து வரும் பருவ மழையால் அரசு கட்டிடங்களில் மழைநீர் தேங்கி சேதமடைவதை தடுக்கும் வகையில் ஊராட்சி சார்பில் அரசு கட்டிடங்களில் சுத்தம் செய்யும் பணி நடை பெற்றது.

    ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள், நடுநிலைப்பள்ளி கட்டிடங்கள், ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் மேல்தளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க கட்டிடங்களின் மேல்தளத்தில் கிடந்த இலை, தழைகளையும், குப்பைகளையும் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.

    மேலும் சாலையிலும், தெருக்களிலும் ஆங்காங்கே தேங்கியிருந்த மழை நீரையும் தற்காலிக வடிகால் அமைத்து மழைநீரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஏற்பாடுகளை ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் செயலாளர்கள் செய்து இருந்தனர்.

    • பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் எனஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
    • தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் நன்மதிப்பை உயர்த்துவேன் என உறுதிமொழியேற்றனர்.

    திருப்பூர்:

    ஆண்டுதோறும் நவம்பர் மாதம், தரத்தை உறுதிப்படுத்தும் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இம்மாதத்தில் உற்பத்தி சார்ந்த மத்திய, மாநிலஅரசுத்துறையினர், தனியார் துறையினர் தங்களின் தரம் சார்ந்த விஷயங்களை உறுதிப்படுத்துவர்.

    அதன்படி 1,652 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில், 1,065 கி.மீ., தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணி, 6 இடங்களில் நீரேற்ற நிலையங்கள் என பணிகள் நடந்து வருகின்றன.

    இப்பணியை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் மேற்பார்வையில், எல் அண்டு டி நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் எனஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

    இந்நிலையில் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் தலைமையில், திட்டப்பணியை கண்காணிக்கும் பொறியாளர்கள், அன்னூரில் உள்ள 6-வது நீரேற்ற நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் உறுதிமொழியேற்றனர்.தரம் மட்டுமே அடிப்படை, தரத்தை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், உற்பத்தி திறன் மற்றும் வேலைத் திறனில் கவனம் செலுத்துவோம். தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் நன்மதிப்பை உயர்த்துவேன் என உறுதிமொழியேற்றனர்.

    • பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
    • தூய்மை பணியாளர்கள் மற்றும் பலரை பாராட்டி கவுரவித்தார்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றியம், உஞ்சியவிடுதி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு பேசியதாவது,

    முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

    அந்த வகையில் உஞ்சியவிடுதி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம்.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி சொத்து வரி செலுத்துதல், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதித்து. பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து கலெக்டர் தூய்மை பாரத் இயக்கம் திட்டத்தின் கீழ் கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்த நம்ம ஊரு சூப்பர் இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மைக் காவலர்கள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் கிராம சபை மூலம் பாராட்டி கவுரவித்தார்.

    இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நமச்சிவாயம், உதவி இயக்குனர் (வேளாண்மை துறை) சுதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், ஒன்றிய குழு தலைவர் செல்வம் சவுந்தர்ராஜன், ஊராட்சி தலைவர் வெங்கடாசலம், துணைத் தலைவர் மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானகிருஷ்ணன், குமரவடிவேல், ஊராட்சி செயலர் மருதாசலமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும், பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன்.
    • எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பை நல்குவேன்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர். தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இந்த உறுதிமொழியில் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.

    சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.

    எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் நலமாற உறுதி அளிக்கிறேன். என்று காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
    • பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்.

    திருப்பூர்:

    அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் சில விதிமீறல்கள் நடப்பதாக தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்த சில வழிகாட்டுதல்களை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் பஸ் இயக்கப்படும் போது லைெசன்ஸ் பெற்ற ஒரு பணியாளர் மட்டுமே பஸ்களை நகர்த்த வேண்டும். வேறு ஒருவர் இயக்க கூடாது. பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஓய்வறைகளில் புகை பிடிப்பது, மது அருந்துவது கூடாது. மீறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். மதுஅருந்திய நிலையில் பணிக்கு வருபவர் குறித்து பாதுகாவலர் கண்காணிக்க வேண்டும். பஸ்சில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள், வெடி பொருட்களை ஏற்ற எந்த நேரத்திலும் அனுமதிக்க கூடாது. பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தரப்பில் இருந்து திருப்பூர் உள்பட அனைத்து கிளை மண்டல மேலாளர்களுக்கு விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    ×