என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224334"

    • அரசின் நலத்திட்டங்கள் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.
    • ஓய்வூதியம் முறையாக பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்ற நிர்வாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அண்மையில் மறைந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலைப்புலி கோவிந்தராஜ், ஹேமலதா குமார், நெல்லை கணேசமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும், அரசு நலத்திட்டங்களை நாட்டுப்புற கலைஞர்களுக்கு பெற்றுத் தருவது பற்றியும் ஓய்வூதியம் போன்றவற்றை முறையாகப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில், சங்கத்தின் நிறுவனர் வளப்பக்குடி வீர.சங்கர் மாநிலத் தலைவராகவும் இந்து சமய அறநிலையத் துறை ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி கோவிந்தராஜூ கௌரவத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கருங்குயில் கணேஷ் மாநில பொதுச் செயலாளராகவும் திருப்பத்தூரான் சேவியர் மற்றும் ஜெயக்குமார் துணைப் பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    பொருளாளராக ஆலம்பாடி பாஸ்கரும், துணைத் தலைவராக திருக்காட்டுப்பள்ளி சுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டனர்.

    மகளிரணி பொறுப்பாளர்களாக செம்மொழி மற்றும் வல்லம் செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பழமார்நேரி கலையரசன் மாநில ஊடகத்துறை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    தமிழக நாட்டுப் புற கலைஞர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வரும் டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் சங்கத்தின் மாநில மாநாட்டை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    முடிவில் ஆரூர் அம்பிகா நன்றி கூறினார்.

    • துணைச் செயலாளர்களாக முத்துக்குமார், காளிமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • திருப்பூர் பல்லடம், உடுமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இனைத்து திருப்பூர் தெற்கு மாவட்டமாக அறிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழக முழுவதும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக மாவட்டத்தை தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நடிகர் விஜய் ஒப்புதலுடன் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்து வருகிறார்.

    அதன்படி திருப்பூர் பல்லடம், உடுமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இனைத்து திருப்பூர் தெற்கு மாவட்டமாக அறிவித்துள்ளனர். தெற்கு மாவட்ட தலைவராக ஜி.கே சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெற்கு மாவட்ட செயலாளராக ராம்குமார், துணைத்தலைவராக மகாதேவன், பொருளாளராக கிருஷ்ணன், இணைச்செயலாளராக கார்த்திக், தெற்கு மாவட்ட அமைப்பாளராக கவுதம், துணைச் செயலாளர்களாக முத்துக்குமார், காளிமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தெற்கு மாவட்ட தலைவர் ஜிகே சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனது 27 வருட மக்கள் இயக்க பணியை மதித்து என்னை திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்த தளபதி விஜய் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மக்கள் இயக்கத்திற்காக என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • ஆண்டிபாளையம்- பி. முருகசாமி, வீரபாண்டி- அ. கோவிந்தராஜ், முத்தணம்பாளையம்- எஸ். என். குமார்.
    • 15 வேலம்பாளையம்- கொ. ராமதாஸ், அண்ணா காலனி- அ. நாகராஜன், பாண்டியன்நகர்- வெ. ஜோதி.

    சென்னை:

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்விவரம் வருமாறு:-

    அவைத்தலைவர்- க. நடராசன், செயலாளர்- க. செல்வராஜ், துணைச்செயலாளர்கள் (பொது) குமார், (ஆதிதிராவிடர்) சொ. சேகர், (மகளிர்) ஜி.கே. நந்தினி, பொருளாளர்- க. சாமிநாதன்.

    தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்

    க. சரவணன், சி. கோவிந்தசாமி, ப.கு. கனகராஜ், பா. குணராஜ்.

    பொதுக்குழு உறுப்பினர்கள்

    ஆர். தங்கவேல், ப. சண்முகசுந்தரம், எம். எம். மஸ்ஊது, அ. அப்துல்ரகுமான், மு. முகமதுரபி, மு. நாச்சிமுத்து, செ. உமாமகேஸ்வரி.

    ஒன்றிய செயலாளர்கள்

    திருப்பூர் வடக்கு-என். விஸ்வநாதன், திருப்பூர் தெற்கு- பி. விஸ்வலிங்கசாமி, பொங்கலூர் கிழக்கு-சா. பாலுசாமி, பொங்கலூர் மேற்கு- பி. அசோகன்,

    நகரச்செயலாளர்கள்

    பல்லடம்- என். ராஜேந்திரகுமார்.

    பகுதி செயலாளர்கள்

    15 வேலம்பாளையம்- கொ. ராமதாஸ், அண்ணா காலனி- அ. நாகராஜன், பாண்டியன்நகர்- வெ. ஜோதி, கொங்குநகர்- ஆர். சம்பத்குமார், வாலிபாளையம்- மு.க. உசேன், நல்லூர்- மேங்கோ. அ. பழனிசாமி, கருவம்பாளையம்- வி. எ. அய்யப்பன், ஆண்டிபாளையம்- பி. முருகசாமி, வீரபாண்டி- அ. கோவிந்தராஜ், முத்தணம்பாளையம்- எஸ். என். குமார்.

    • கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
    • காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு துறையினருக்கு பொறுப்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் பேசும் போது கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மேலும் வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது.

    இதனால் காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு துறையினருக்கு பொறுப்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஊராட்சிகளில் 9,641 வீடுகள் உள்ளன. கொசு புழு ஒழிப்பு பணியாளர் தினமும் கொசு புழு ஒழிப்பு பணி செய்ய வேண்டும். இதனால் கொசு உரு வாகாத சூழ்நிலை ஏற்படும்.

    மாவட்டம் முழுவதும் 1032 கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். தற்சமயம் 245 கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    போதுமான தடுப்பு நடவடிக்கை எடுக்க இயலாத நிலை உள்ளதால் டிசம்பருக்குள் மேலும் 787 கொசு ஒழிப்பு களப்பணி யாளர்களை நியமித்து அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் கொசு உருவாகாத நிலை ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் மழை காலத்தில் தேவையில்லாத நீர் தேங்கி உள்ள பாத்திரங்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டி உள்ளதால் பணிசெய்யும் இடங்களில் தூய்மைபணியாளர்கள் அனுப்ப வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் கண்ட பகுதிகளில் உடனடியாக புகை மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்க ளுக்கு ஒரு முறை சுத்தம் செய்து குளோரின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    புகை மருந்து அடிக்கும் கருவிகளை பழுது நீக்கம் செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக புகை மருந்து அடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் அனைத்து வீடுகளிலும் கொசு ஒழிப்பு பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். குடிநீரில் குளோரின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    அங்கன்வாடி மையங்க ளுக்கு வரும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதார செவிலியரிடம் தெரிவிக்க வேண்டும்.

    மகளிர் சுய உதவி குழுக்களில் பணி புரிபவர்களின் பகுதியில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனே அரசு மருத்துவ மனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பள்ளியில் இறை வணக்க த்தின் போது மா ணவர்களுக்கு கொசுப்புழு உருவாகும் இடங்கள், கொசுவால் ஏற்படும் நோய்கள் குறித்து விளக்க வேண்டும்.

    கல்லூரி மாணவ- மாணவிகள் மூலம் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கொசு ஒழிப்பு பணியாளர்கள் தேவையற்ற நீர் தேங்கும் பொருட்களை சாக்கு பையில் கட்டி துப்புரவு பணியாளர்கள் எடுத்து செல்ல ஏதுவாக வீட்டின் முன்புறம் வைக்க வேண்டும்.

    சேகரிக்கும் தேவையற்ற பொருட்களை உடனடியாக துப்புரவு பணியாளர்கள் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லவேண்டும்.

    நீர் சேகரித்து வைக்கும் பாத்திரங்களில் கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் கண்ட பகுதிகளில் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் கொசு மருந்து கண்டிப்பாக அடிக்க வேண்டும்.

    வீட்டிற்கு உட்பகுதியில் புகை மருந்து அடித்து 15 நிமிடங்கள் வரை வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.

    அனைத்து பகுதி களிலும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தூய்மைபணியாளர்கள் இணைந்து தேவையற்ற பொருட்களை அப்புற ப்படுத்தி நீர் தேங்கியுள்ள மற்றும் அசுத்தமான பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளித்து நோய் தொற்று ஏற்படாமல் செய்ய வேண்டும்.

    மேலும் அனைத்து மேல்நிலைத் தொட்டிகளிலும், மாதம் இரு முறை சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட வேண்டும். வீடுகளில் கொசுப்புழு ஒழிப்பு பணி செய்யும் போது வீடுகளில் காய்ச்சல் கண்டறியபட்டால் உடனடியாக சுகாதார ஆய்வாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கி ணைந்து பணியாற்றி டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) சோமசுந்தரம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சூர்யா, மாநகர நல அலுவலர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க.நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவன் ஆகியோர் வழிகாட்டுதலோடு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நியமனம் செய்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க.நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    சிந்தனையாளர் பிரிவு-செந்தில், பொருளாதார பிரிவு, நாகநாதன், வெளிநாடு வாழ் பிரிவு-கிரி சங்கர், பிற மொழி பிரிவு-சுப்புராஜ், மாவட்ட செயலாளர்கள் கனகவேல் ராஜ், ஆதிராஜ், தங்கேஷ்வரன், ராமலிங்கம், மதன் காமராஜன், திவ்யா, கந்தசாமி, ராமச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் பிரபாகர், பாலு, மாவட்ட பொதுச்செயலாளர் மாயகிருஷ்ணன்.

    மண்டல அணி

    மகளிரணி தலைவி-அமைதி, இளைஞரணி தலைவர்-சரண்ராஜ், ஆதிதிராவிடர் அணி-பிரேம்குமார், பழங்குடியினர் அணி- ஹரிகரசுதபாண்டியன், சிறுபான்மையினர் அணி-ஜேம்ஸ், விவசாய அணி -பாபு, இதர பிற்படுத்தப்பட்டோர் அணி-ராம்குமார், அரசு தொடர்பு பிரிவு அணி-மாரீஸ்வரன், சமூக ஊடக பிரிவு-மணிகண்டன், வக்கீல் பிரிவு-அஜித்குமார், நகர திட்ட பிரிவு-பிரவீன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு- மணிமாறன், தரவு மேலாண்மை பிரிவு-செந்தில்குமார், ஆன்மீக மேம்பாடு பிரிவு-அழகர், கூட்டுறவு பிரிவு சரஸ்வதி, தொழில்நுட்பபிரிவு-ரமேஷ்குமார், பிற மொழி பிரிவு-சுரேஷ், விருந்தோம்பல் பிரிவு-சண்முகம்.

    மேற்கண்ட நிர்வாகிகளை மாநில தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவன் ஆகியோர் வழிகாட்டுதலோடு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நியமனம் செய்துள்ளார்.

    • திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடானது அடுத்த மாதம் 4-ந்தேதி திருவாரூரில் நடைபெறும்.
    • இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் திராவிட கழகம் சார்பில் சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடு நேற்று நடைபெறுவதாக இருந்தது.

    இதில் தி.க.தலைவர் வீரமணி, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உட்பட தி.மு.க கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு பேசுவதற்காக திருவாரூர் வந்தடைந்தனர்.

    ஆனால் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நேரத்தில் திருவாரூரில் தொடர் மழை பெய்தது.

    இதையடுத்து கூட்டம் செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தி.க. தலைவர் வீரமணி செய்தியா ளர்களிடம் பேசும்போது கூறியதாவது,

    மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடானது அடுத்த மாதம் 4ந்தேதி திருவாரூரில் நடைபெறும்.

    இதில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

    அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

    இந்த தீர்ப்பை எதிர்த்தும் உச்சநீதிமன்ற செல்ல வாய்ப்புள்ளது. அந்த தடையையும் தகர்த்தெறிவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • சிவகாசி தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இதே போல் துணை தலைவர்கள், துணைச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி மாநகரத்துக்கான தி.மு.க. பகுதி கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    1-வது பகுதி அவைத்தலைவராக நாகேந்திரன், செயலாளராக செல்வம், பொருளாளராக சீனிவாச பெருமாள், 2-வது பகுதி அவைத்தலைவராக ராஜய்யா, செயலாளராக கருணாநிதி பாண்டியன், பொருளாளராக அண்ணாதுரை தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர்.

    3-வது பகுதி அவைத்தலைவர் சிவனேசன், செயலாளர் மாரீஸ்வரன், பொருளாளர் சின்னத்துரை, 4-வது பகுதி அவைத்தலைவராக மாரியப்பன், செயலாளராக அப்துல் முத்தலீப், பொருளாளராக சிவராம்குமார், 5-வது பகுதி அவைத்தலைவராக செல்வராஜ், செயலாளராக காளீராஜன், பொருளாளராக கார்த்திஸ்வரன், 6-வது பகுதி அவைத்தலைவராக கருப்பசாமி, செயலாளராக ஞானசேகரன், பொரு ளாளராக விஜ யகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போல் துணை தலைவர்கள், துணைச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட அறிவிப்பை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.

    • வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக கே.டோமினிக் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிய மாவட்ட செயலாளருக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், நண்பர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    திருச்சி,

    வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக கே.டோமினிக் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான உத்தரவினை மாநகர் மாவட்ட தலைவர் தங்க ரத்தினகுமார் பரிந்துரையின் பேரில், கழக மாநில பொதுச் செயலாளர் வேளச்சேரி எஸ். ரவிராஜ் மாதவன்,மாநில மகளிர் அணி தலைவி தென்மண்டல அமைப்பாளர் ஜி. அன்னலட்சுமி சகிலா கணேசன் ஆகியோரின் ஆலோசனைப்படி கழகத்தின்

    நிறுவனத் தலைவர் ஆர். வி.ஹரி ஹரூண் பிள்ளை வழங்கி உள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டோமினிக் செல்வத்துக்கு கழக நிர்வாகிகள் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    புதிய மாவட்ட செயலாளருக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், நண்பர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
    • மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன் விவரம் வருமாறு:-

    விருதுநகர் வடக்கு மாவட்ட மேற்கு ஒன்றிய அவை தலைவர்-சிவா னந்தம், செயலாளர்- ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ., பொருளாளர்-பால்பாண்டி. வடக்கு ஒன்றிய அவை தலைவர்-சங்கர்ராஜ், செயலாளர் ஆவுடை யம்மாள், பொருளாளர்-ரவிக்குமார்.சிவகாசி வடக்கு ஒன்றிய அவை தலைவர்-கதிரேசன், செயலாளர்-தங்கராசா, பொருளாளர்-அண்ணாமலை.

    சிவகாசி தெற்கு ஒன்றிய அவை தலைவர்-சாகுல்அமீது, செயலாளர்-விவேகன்ராஜ், பொருளாளர்-செல்வம். சிவகாசி கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-சுப்பராஜ், செயலாளர்கோபிகண் ணன், பொருளாளர்-முத்துராஜ்.

    திருச்சுழி வடக்கு ஒன்றிய அவை தலைவர்-அழகன், செயலாளர்- சந்தன பாண்டியன், பொருளாளர்-சாமிகண்ணு. திருச்சுழி தெற்கு ஒன்றிய அவை தலைவர்-சம்சுதீன், செயலாளர்-பொன்னுச்சாமி, பொருளாளர்-முத்து.

    நரிக்குடி வடக்கு ஒன்றிய அவை தலைவர்-ஆண்டி மூப்பன், செயலாளர்-கண்ணன், பொருளாளர்-மகாலிங்கம். நரிக்குடி தெற்கு ஒன்றிய அவை தலைவர்-தியாகராஜன், செயலாளர்-போஸ், பொருளாளர்-கோபாலகிருஷ்ணன்.

    காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-மகேந்திரசாமி, செயலாளர்-செல்வம், பொருளாளர்-அழகுமலை. காரியாபட்டிமேற்கு ஒன்றிய அவை தலைவர்-ரமேஷ், செயலாளர்-கண்ணன், பொருளாளர்-ஜெயசூரியன்.

    விருதுநகர் தெற்கு மாவட்ட கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-அல்ேபான்ஸ்ராஜ், செயலாளர்-செல்லப்பாண்டியன், பொருளாளர்-அழகர்சாமி. அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய அவை தலைவர்-அழகர்சாமி, செயலாளர்-பொன்ராஜ், பொருளாளர்-பிரேம்குமார்.

    அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய அவை தலைவர்-கே.வி.கே.ஆர்.பிரபாகரன், செயலாளர்-பாலகணேசன், பொருளாளர்-உதயசூரியன்.

    சாத்தூர் கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-ரா‌ஜூ, செயலாளர்-முருகேசன், பொருளாளர்-காசிராஜன். சாத்தூர் மேற்கு ஒன்றிய அவை தலைவர்-தர்மராஜ், செயலாளர்-கடற்கரைராஜ், பொருளாளர்-முத்துவேல் பாண்டியன்.

    ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-குருசாமி, செயலாளர்-சரவணமுருகன், பொருளாளர்-விவேகானந்தன். ராஜபளையம் மேற்கு ஒன்றிய அவை தலைவர்-நடராஜன், செயலாளர்-தங்கப்பாண்டி, பொருளாளர்-ஜஸ்டின் சவுரிராஜ்.

    ராஜபளையம் தெற்கு ஒன்றிய அவை தலைவர்-முருகேசன், செயலாளர்-ஞானராஜ், பொருளாளர்-ராமகிருஷ்ணன்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய அவை தலைவர்-காளிதாசன், செயலாளர்-ஆறுமுகம், பொருளாளர்-முருகன்.

    வத்திராயிருப்பு ஒன்றிய அவை தலைவர்-கண்ணன், செயலாளர்-முனியாண்டி, பொருளாளர்-மதிவாணன். வெம்பக்கோட்டை ஒன்றிய அவை தலைவர்-புஷ்பராஜ், செயலாளர்-கிருஷ்ணகுமார், பொருளாளர்-செல்வராஜ்.

    வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அவை தலைவர்-திருப்பதி, செயலாளர்-ஜெயபாண்டியன், பொரு ளாளர்-விவேகானந்தன்.

    மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. இேத போல துணைச்செயலாளர்கள், துணைத்தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
    • புதியதாக தேர்ந்தெ–டுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் தெற்கு, வடக்கு ஆகிய பகுதிகளுக்கான தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடந்தது.இதனடிப்படையில் தி.மு.க. தலைமை கழகம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தெற்குப்பகுதிக்கு புதிய நிர்வாகிகளாக அவைத் தலைவர் திருப்பாலைக்குடி முகமது உமர் பாரூக், செயலாளராக பனிக்காேட்டை மோகன், ஒன்றிய துணைச்செயலாளராக உகந்தங்குடி ராமநாதன், பால்குளம் அர்ச்சுனன், மோர்ப்பண்ணை லதா சரவணன், பொருளாளர் ரகுநாதமடை மாணிக்கம், மாவட்ட பிரதிநிதிகளாக சீனாங்குடி நாகமுத்து, திருப்பாலைக்குடி- பழங்கோட்டை சபரிநாதன், ஆர்.எஸ்.மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் (ஓய்வு) மணிமாறன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுபோல் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய வடக்குப் பகுதிக்கான புதிய நிர்வாகிகளாக அவைத்தலைவர் புல்லமடை ஆறுமுகம், செயலாளர் புதுக்குறிச்சி கண்ணன் (எ) ராமசுப்பிரமணியன், துணை செயலாளர்கள் சனவேலி மேழிச்செல்வம், வரவணி முத்தரசு, ஆயங்குடி மாதரசி கருணாநிதி, பொருளாளர் துக்கனாங்கரை நாக–நாதன், மாவட்ட பிரதி–நிதிகள் ஆயிரவேலி வெங்கடாஜலபதி, கீழ்மருதங்குளம் விவேகானந்தன், ஆப்பிராய் சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதியதாக தேர்ந்தெ–டுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மகப்பேறு டாக்டர், மயக்கவியல் நிபுணர் ஆகியோர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்.
    • விண்ணப்பங்களை 20-ந்தேதிக்குள், பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் டி.எஸ்.கே., நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மகப்பேறு டாக்டர், மயக்கவியல் நிபுணர் ஆகியோர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பங்களை கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி என்ற முகவரிக்கு 20-ந்தேதிக்குள், பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். நேர்முக தேர்வு 25 ம் தேதி நடக்குமென மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள, தற்காலிக நகர்ப்புற சுகாதார செவிலியர் பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பதிவு தபால் மூலமாக கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி என்ற முகவரிக்கு, 20ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • மழை சேதங்களை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
    • முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா பேச்சு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா இன்று அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொண்டார். தென்மேற்கு பருவமழை மற்றும் தற்பொழுது பெய்து வரும் மழையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆனந்தமோகன், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் மற்றும் தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் வருவாய் துறை, மீன்வளத்துறை, மின்சார வாரியம், பொதுப் பணித்துறை உட்பட அனைத்து துறை அதிகாரி களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜோதி நிர்மலா பேசியதாவது-

    குமரி மாவட்டத்தில் தற்பொழுது பெய்துவரும் மழை மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும்.

    தற்பொழுது கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது‌. இந்த அறிவிப்பு அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு சம்பந்த ப்பட்ட மீனவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் உடனடியாக கரை திரும்பியுள்ளார்களா? என்பது குறித்த தகவல்களை மீன்வளத்துறை அதிகாரிகள் சேகரிக்க வேண்டும்.

    மின்வாரிய அதிகாரிகள் தாழ்வான பகுதியில் உள்ள மின் கம்பங்களை கணக்கெடுத்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளில் நீர் இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.இரவு பகலாக அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் கண்கா ணிப்பு அதிகா ரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×