search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • மரக்கிளையில் சிக்கி மான் உயிரிழந்தது
    • மானை வனப்பகுதியில் புதைத்தனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், வெளிப்பிரிங்கியம் வனப்பகுதியில் உள்ள ஒரு மரக்கிளை இடையே ஒரு மான் சிக்கி இறந்த நிலையில் காணப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அரியலூர் வனத்துறை அதிகாரி முத்துமணி, வனத்துறை காப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த மானை கைப்பற்றினர். பின்னர் கீழப்பழுவூர் கால்நடை மருத்துவர் உதவியுடன், அந்த மானை உடற்கூறு பரிசோதனை செய்து, பின்னர் மானை வனப்பகுதியில் புதைத்தனர்.

    • முதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • அரும்பாவூர் போலீசார் விசாரணை

    பெரம்பலூர்

    பெ ரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் பெருமாயி (வயது 64). இவர் சம்பவத்தன்று வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழிவறையில் மயங்கி கிடந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கல்யாண் நகர், கீத்துக்கடை பகுதியை சேர்ந்தவர் சர்வானந்தம். இவரது மகள் கிரிஜா (வயது 27). இவர் பி.எஸ்.சி. பி.எட். முடித்து விட்டு தனது தாய் ஆனந்தி, அண்ணன் ஸ்ரீராம்குமாருடன் வசித்து வந்தார். கிரிஜாவுக்கு உடலில் அடிக்கடி கட்டிகள் வருவதும், மறைவதுமாகவும் இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான கிரிஜா கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமலும், சரியாக சாப்பிடாமலும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற கிரிஜா வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கழிவறையின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கிரிஜா மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிரிஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரிஜா எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீக்குளித்த இளம் பெண் மூச்சு திணறி உயிரிழந்தார்
    • உதவி கலெக்டர் விசாரணை செய்து வருகிறார்

    திருச்சி:

    சென்னை சூளை திடீர் நகர் கண்ணப்பா திடல் பகுதியைச் சேர்ந்தவர் பாலன்.இவரது மகள் ஷர்மிளா (வயது 24). இவருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணபுரம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் கடந்த 2018 ல் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமண நடந்தது. பின்னர் சர்மிளா கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சர்மிளா தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரது பெற்றோர் மகளை சென்னைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் கடந்த 7ம் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து ஷர்மிளா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை செய்து வருகிறார். மேலும் காந்தி மார்க்கெட் உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தியும் விசாரணை நடத்தி வருகின்றார்.இது தொடர்பாக கோட்டை அனைத்து மகளிர் 

    • போட்டோகிராபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
    • கிரகப்பிரவேச விழாவுக்கு சென்ற போது சம்பவம்

    திருச்சி

    திருச்சி உறையூர் குழு–மணி மெயின் ரோடு சுப்பி–ரமணியர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 50). போட்டோகிரா–பரான இவர் திருச்சி சன்னா–சிப்பட்டியில் நடைபெற்ற புதிய வீடு கிரகப்பிரவேச விழாவுக்கு புகைப்படம் எடுக்கச் சென்றார்.

    இந்த நிலையில் அங்குள்ள பாத்ரூமில் சுரேஷ்குமார் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சுரேஷ்குமார் ஏற்க–னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அவரது மனைவி ஜோதி ராம்ஜி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நெஞ்சு வலி காரணமாக அவர் உயிர் இழந்தார்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே கண்டன்விளையில் உள்ள ஒரு ஆலயத்தில் பிரார்த்த னைக்காக பலரும் வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார்.

    அவர் தீடிரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. இதற்கிடையில் சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த செல்வதாஸ் (வயது 50) என்பதும் நெஞ்சு வலி காரணமாக அவர் உயிர் இழந்தார் என்பதும் தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் என்ஜினியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
    • கர்ப்பமாக இருந்தார்

    திருச்சி

    திருச்சி கே.கே. நகர் அம்மன் நகரை சேர்ந்தவர் பிரதீப் ராஜ். இவரது மனைவி சந்தியா (வயது 23). என்ஜினியர். இவருடைய கணவர் பிரதீப் ராஜ் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்தியா அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது சந்தியாவிற்குமயக்கம் வந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சந்தியாவை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் சந்தியா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.மேலும் உடல் நிலைக்கு வேறு எந்பாதிப்பும் இல்லை என்றும் கூறினார். இந்த நிலையில் கே கே நகர் அம்மன் நகரில் உள்ள வீட்டில் தனியாக இருந்த சந்தியாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது .இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சந்தியா திடீரென இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து சந்தியாவின் தந்தை வெள்ளைச்சாமி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் மர்ம சாவு என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயங்கி விழுந்த ஊழியர் உயிரிழந்தார்
    • பணிபுரிந்து கொண்டிருந்த போது சம்பவம்

    கரூர்:

    சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி கலிங்கா சாலையை சேர்ந்த நடேசன் மகன் ரமேஷ் குமார் (வயது 42) இவர், கரூர் ஆண்டாங்கோவிலில் உள்ள, தனியார் கம்ப்யூட்டர் நிறு வனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் குமார், தான் வேலை செய்து வந்த நிறுவ னத்தில் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரமேஷ் குமாரின் மனைவி ஜெனிக் பிரேம் குமாரி கொடுத்த புகாரின் படி, கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
    • உடலை மீட்டு போலீசார் விசாரணை

    கரூர்:

    நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை இந்திராகாலனியை சேர்ந்தவர் கணேசன், (வயது 55). லாரி டிரைவர். சம்பவத்தன்று இரவு இவர், காரைக்குடியில் இருந்து தைல மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு, சின்னரெட்டிப் பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் தைலமரக்கட்டைகளை இறக்கிவிட்டு, அதிகாலையில் க ாகித ஆலைக்கு வெளியே வந்தார். பின்னர் லாரியை சாலையோரம் ஒரு இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு உறங்கிவிட்டார்.

    இதையடுத்து மற்றொரு டிரைவரான ஜெயராஜ் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது லாரியின் உள்பகுதியில் கணேசன் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், இது குறித்து தோகைமலை போலீசில்

    புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஷ செடியை அரைத்து குடித்த பெண் உயிரிழந்தார்.
    • வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி செந்தமிழ்செல்வி(வயது 57). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று காலை செந்தமிழ்செல்விக்கு வயிற்றுவலி அதிகரிக்கவே தனது வீட்டிற்கு அருகில் இருந்த விஷசெடியை அரைத்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் செந்தமிழ்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு செந்தமிழ்செல்வியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் காசிநாதன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."

    • பூ வியாபாரி உயிரிழந்தார்
    • காவிரி படித்துறைக்கு குளிக்க சென்றார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் துவாரகன் (வயது 65) பூ வியாபாரி. இவர் திருவரங்கம் பூ மார்க்கெட்டில் மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்வது வழக்கம். அது போல் இன்று காலை திருவரங்கம் பூ மார்க்கெட்டிற்கு வந்து பூ வாங்கினார். பூக்களை வாங்கிவிட்டு அம்மா மண்டபம் ரோடு மேல வீரேஸ்வரம் படித்துறை பகுதிக்கு வந்தார். இன்று கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி என்பதால் குளித்துவிட்டு வியாபாரத்துக்கு செல்லலாம் என்று எண்ணி படித்துறைக்கு குளிக்க வந்தார். அப்போது படித்துறையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி இறந்து கிடந்தார்
    • எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை

    திருச்சி:

    திருச்சி அரசு பொது மருத்துவமனையில் உள்ள பழைய தீவிர சிகிச்சை பிரிவு வார்டு அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு சோதனை செய்த போது அவர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×