search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • தனியார் நிறுவன ஊழியர்-முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • நெல்லை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த நரேன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி பாண்டி யன்நகரை ேசர்ந்தவர் கமலக்கண்ணன்(வயது36). இவர் விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தினமும் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு கமலக்கண்ணன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    விருதுநகர்-மதுரை ரோட்டில் வந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் கமலக்கண்ணன் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உடல்நிலை மோசமாகவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் வழியலேயே கமலக்கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவரது மனைவி சேர்மா தேவி கொடுத்த புகாரின்பே ரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    முதியவர்

    சாத்தூர் அருகே உள்ள பெரிய ஓடைப்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ்(67). இவர் சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். சாத்தூர்- கோவில்பட்டி ரோட்டை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சுப்புராஜ் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நெல்லை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த நரேன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் அழுகிய நிலையில் கூலி தொழிலாளி பிணம்
    • தூங்க சென்றவரின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு

    திருச்சி,

    திருச்சி வடக்கு தாராநல்லூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் மூக்க பிள்ளை. இவரது மகன் வரதராஜ் (வயது 35) இவர் திருமணமாகாதவர். கூலி தொழிலாளி. மதுவுக்கு அடிமையானவர். வீட்டில் வரதராஜன் முதல் தளத்தில் வசித்து வந்தார். கீழே அவரது தாயார் அம்சவல்லி மற்றும் சகோதரி கோமதி அவரது கணவர் சரவணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டின் அறையில் தூங்கிய வரதராஜ் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை.இந்த நிலையில் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த தாய் அம்சவல்லி முதல் தளத்தில் உள்ள வரதராஜ் அறைக்கு சென்றுபார்த்த பொழுது அவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்சவல்லி உடனடியாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இதை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காந்தி மார்க்கெட் போலீசார் வரதராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜ் இறந்தது எப்படி? என்ன காரணம்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் காந்தி மார்க்கெட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    • வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்
    • இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் குளித்தலை அருகே உள்ள மேலவதியம் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மனைவி சின்னபிள்ளை (வயது 65). இவர் சம்பவத்தன்று அதிகாலை நடுவதியத்தில் இருந்து வதியம் பகுதிக்கு டீ குடிக்க சென்றுள்ளார். வதியம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த சின்ன பிள்ளையை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ைச ெபற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சின்னபிள்ளை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி திடீரென இறந்தார்.
    • முனியாண்டியின் மனைவி சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யுள்ள அச்சம் தவிர்த்தான் கீழத்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி(வயது28). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது அவ ருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முனியாண்டியின் மனைவி சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெயிலில் அடிபட்டவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், புகலூர் ஹோம் சிக்னல் அருகே உள்ள ரெயில்பாதையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், அவ்வழியாக சென்ற ரெயிலில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த ரெயில்நிலை அதிகாரி சீனிவாசன், கரூர் ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு வேலாயுதம்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிராக்டர் டிப்பர் கதவு அடித்ததில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.
    • போலீசாா்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சிறுகளப்பூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பு. இவரது மனைவி விஜயா(வயது 70). இவர் கடந்த 23-ந் தேதி பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் கிராமத்தில் நடந்த கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர் சுரேஷ் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது இரவில் விஜயா இயற்கை உபாதை கழிப்பதற்காக நொச்சியத்தில் இருந்து சிறுவாச்சூருக்கு செல்லும் குறுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நொச்சியத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் டிராக்டர் ஓட்டி வந்தார்.

    அந்த டிராக்டர் பின்னால் உள்ள டிப்பரில் (பெட்டி) திறந்த நிலையில் இருந்த கதவு சாலையோரம் நின்று கொண்டிருந்த விஜயா மீது அடித்தது. இதில் படுகாயமடைந்த விஜயாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக விஜயாவின் மகன் செல்வராசு கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசாா் டிராக்டர் டிரைவர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய்ப்பால் குடித்து விட்டு தூங்கிய பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • இது குறித்து பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்;

    கரூர் மாவட்டம், குளித்தலை கிரி தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி பவித்ரா (வயது 27). இ்ந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிறந்து 29 நாட்களான இவர்களது 3-வது பெண் குழந்தையான மானஷ்வினிக்கு, பவித்ரா தாய்ப்பால் கொடுத்துவிட்டு தூங்கியுள்ளார்.பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்த போது அந்த குழந்தை எந்த ஒரு அசைவும் இன்றி உடம்பு குளிர்ந்த நிலையில் இருந்துள்ளது.

    இதையடுத்து குழந்தையை அவரது பெற்றோர் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளித்தலை அருகே பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்தார்
    • தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    குளித்தலை அடுத்த பொருந்தலுார் பஞ்., கண்ணல்வடநாயக்கனுாரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). இவர் கடந்த 3 ஆண்டுகளாக தெலுங்கப்பட்டியில் உள்ள நாராயணன் என்பவரின் தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தின் காய்ந்த மட்டைகளை அப்பறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது தென்னை மட்டையில் மறைந்திருந்த பாம்பு ஒன்று பழனிசாமியை கடித்தது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

    பின்னர் அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பழனிசாமியை பரிசோதனை செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து பழனிசாமியின் மகன் ராமசாமி கொடுத்த புகார்படி தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிசாமியின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமையல் தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.
    • திருமண மண்டபத்தில் படுத்து இருந்தார்

    கரூர்:

    கரூர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மதுராந்தக நல்லூர் அழகாத்த குலத்தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் என்கிற சதீஸ்(வயது 48). சமையல் தொழிலாளியான இவர், கரூர் மாவட்டம் புகழூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சமையல் வேலை செய்வதற்காக வந்திருந்தார். சம்பவத்தன்று இரவு சமையல் வேலை செய்துவிட்டு தூங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சக தொழிலாளர்கள் சக்திவேலை எழுப்ப முயன்றபோது அவர் இறந்துகிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலாயுதம்பாளையம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • லால்குடி அருகே முன்னாள் ராணுவ வீரர் பலியானார்
    • மதுவுக்கு அடிமையான முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் ஏற்கனவே பலமுறை அதிக மது போதையில் பல இடங்களில் விழுந்து கிடந்துள்ளார்

    திருச்சி,

    லால்குடி அருகே உள்ள அரியூர் ஓதத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அதிக மது போதைக்கு அடிமையாகி உள்ளார்.இந்நிலையில் நேற்று ரமேஷ் லால்குடி கோப்பவாளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகாமையில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.பக்கத்து வீட்டை சேர்ந்த யுவராஜ் என்பவர் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் ரமேஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, மதுவுக்கு அடிமையான முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் ஏற்கனவே பலமுறை அதிக மது போதையில் பல இடங்களில் விழுந்து கிடந்துள்ளார். தற்போதும் மது போதையில் மயங்கி விழுந்ததில் அவரது வலது கை, மார்பு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். முன்னாள் ராணுவ வீரர் ரத்த காயங்களுடன் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்தார்
    • கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

    திருச்சி,திருச்சியை அடுத்த கல்லக்குடி ஆலம்பாக்கம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 80). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூழ்கினார். இது பற்றி தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து முதியவரை பிணமாக மீட்டனர்.

    இது குறித்து அவரது மனைவி அருள் மேரி கல்லக்குடி போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • மண்ணச்சநல்லூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை கொலையா? தற்கொலையா ? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்

    மண்ணச்ச நல்லூர்,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் அகிலாண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 78). இவர் தனியாக வசித்து வந்தார். இவரின் உறவினர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுவாமிநாதன் ( 39). இவர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போனில் நலம் விசாரித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் வழக்கம் போல், கடந்த 19-ந்தேதி அன்று, சுவாமிநாதன் ராஜகோபாலை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. இந்நிலையில், ராஜகோபால் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்தது.இதையடுத்து சுவாமிநாதன் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ராஜகோபால் தனது பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பிணமாமக கிடந்த ராஜகோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராஜகோபால் எப்படி இறந்தார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×