search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • கடைக்கு சென்ற ராஜ் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை கடக்க முயன்றபோது கால் தவறி சாக்கடைக்குள் விழுந்து விட்டார்.
    • உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கோட்டுவீராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் (50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாயுடன் வசித்து வந்தார்.

    உடல் நலம் பாதித்ததால் ராஜ் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு சென்றவர் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை கடக்க முயன்றபோது கால் தவறி சாக்கடைக்குள் விழுந்து விட்டார். அப்போது காயம் எதுவும் இல்லாததால் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி மாலை அவருக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 3 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை 

    கோவை துடியலூரை அடுத்த நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் ஜகுகாரியா (வயது 42).

    இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 3 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ஜகுகாரியா அளவுக்க அதிகமாக மதுகுடித்ததாக தெரிகிறது. பின்ர் அவர் கைகளை கழுவுவதற்காக அருகில் உள்ள வரண்ட கிணறு அருகே சென்றார்.

    அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அவர் தவறி அந்த கினற்றில் விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாம்பு கடித்து பெண் உயிரிழந்தார்
    • வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட செட்டிகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் அங்கையர் செல்வி (வயது 35). இவர் வயலில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அங்கையர் செல்வி யை பாம்பு கடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக அங்கையர் செல்வி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாம்பு கடித்து விவசாயி இறந்தார்
    • விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

    புதுக்கோட்டை

    அன்னவாசல் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60) விவசாயி. இவர் நேற்று அன்னவாசல் பெரியகுளம் அருகே உள்ள தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, சுப்பிரமணியனை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழை தோட்டத்தில்,வேலை செய்து கொண்டிருந்த போது எதிர் எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று கடித்து விட்டதாக தெரிகிறது.
    • சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பரமத்தி வேலூர்:

    திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர், கணேசன். இவரது மனைவி பானுமதி ( 47) .இவர் மோகனூர் அடுத்த ஒருவந்தூர் புதூரில் ஒரு வாழை தோட்டத்தில்,வேலை செய்து கொண்டிருந்த போது எதிர் எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று கடித்து விட்டதாக தெரிகிறது.

    அருகில் இருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி பெற்று நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து நாமக்கலில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் ( 27) மோகனூர் போலிசில் கொடுத்த புகாரின் பேரில், மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல், மற்றும் சிறப்பு சப்-இ ன்ஸ்பெக்டர், தமிழ ழகன், ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்கள்.

    • மோகனூரில் இருந்து லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வேலைக்கு தனியார் பஸ்ஸில் சென்றுள்ளார்.
    • அப்போது பஸ்சை விட்டு இறங்கும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பாலத்தை காயம் ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் படையாட்சி நகரை சேர்ந்தவர் தனபால் . இவரது மனைவி கனகா (வயது 60). இவர் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் துப்புரவு வேலை பார்த்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மோகனூரில் இருந்து லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வேலைக்கு தனியார் பஸ்ஸில் சென்றுள்ளார்.

    அப்போது பஸ்சை விட்டு இறங்கும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பாலத்தை காயம் ஏற்பட்டது. இதனால் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனை சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் , இது குறித்து அவரது மகன் மூர்த்தி (வயது 30) என்பவர் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்கள்.

    • மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்
    • பணி செய்து கொண்டிருந்த போது சம்பவம்

     கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்தார். கரூர், காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 26). திருமணமாகாத இவர், மணல்மேடு அடுத்துள்ள டெஸ்க் பார்க் பகுதியில் தனியார் டெக்ஸ் நிறுவன கட்டடத்தில் ஒப்பந்த அடிப்படையில் மொசைக் பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மொசைக் இயந்திரத்தில் ஏற் பட்ட மின் கசிவால் பழனிவேல் மீது மின் சாரம் பாய்ந்தது. இதில் துடிதுடித்து சுருண்டு விழுந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பழனிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறுத்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்றிரவு திருச்சியில் இருந்து ஓசூருக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார்.
    • இன்று அதி காலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது அவ ருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.

    சேலம்:

    திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் கிரில் தேவராஜ் (வயது 48), இவர் நேற்றிரவு திருச்சியில் இருந்து ஓசூருக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார். அந்த பஸ் இன்று அதி காலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது அவ ருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போரா டினார். இதனை பார்த்த பஸ் கண்டக்டர் 108 ஆம்பலன்சுக்கு தகவல் தெரி வித்தார். 108 ஆம்புலன்ஸ் குழு வினர் விரைந்து வந்து பரிசோதனை செய்த போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது . பின்னர் அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டு ள்ளது.

    இது குறித்து உறவினர்க ளுக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. அவர்கள் கத றிய படி சேலம் விரைந்து ள்ள னர். இந்த சம்ப வம் இன்று காலை பஸ் நிலை யத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • கேரள லாரி டிரைவர்- மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    கேரள மாநிலம் கொல்லம் லேபர் காலனியை பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார்(வயது42). இவர் சென்னை தனியார் லாரி சர்வீஸ் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் லாரியை சென்னையில் விட்டுவிட்டு கொல்லத்திற்கு வரும்போது திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பகுதிக்கு வந்து உள்ளார்.

    ஆலம்பட்டி பகுதியில் திலீப்குமார் நடந்து வந்து கொண்டிருந்தபோது பெரிய பூலாம்பட்டி கிராமத்தில் இருந்து திருமங்க லம் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெருங்குடி போலீஸ் சரகம் பரம்புபட்டி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தது யார்? என்றும் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குளியல் அறையில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    கரூர்:

    கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம், அண்ணாநகரை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 52). இவர் சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் தவறி விழுந்தார். அவரது சத்தம் கேட்ட, குடும்பத்தினர் ஓடிச்சென்று, ரங்க சாமியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரங்கசாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விஷம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்
    • குடும்பத்தில் கருத்து வேறுபாடு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி டவுன் தென்னகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன். (வயது 35) இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனம் விரக்தியில் இருந்து பத்மநாதன், விஷம் குடித்து மயங்கியுள்ளார். உடனே அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அளவுக்கு அதிகமாக மது குடித்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 48). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்த மாடசாமி இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை மகன் மகேந்திரன் ேதடினார். அப்போது சாலையோரத்தில் மயங்கிய நிலையில் மாடசாமி கிடந்தார்.

    அவரை அங்கிருந்து மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் மகேந்திரன் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மாடசாமி பரிதாபமாக இறந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×