search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • தன்னைத்தானே தாக்கி காயப்படுத்திக்கொண்டவர் இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    விருதுநகர் மேட்டுக்குண்டு சென்னல்குடியை சேர்ந்தவர் சேகர் (48). மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மனைவி மதுரைக்கு அழைத்து வந்தார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறங்கி நின்றனர். அப்போது சேகர் ஆவேசமாக கத்தியபடி தன்னைத்தானே தாக்கிக்கொண்டார்.இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மனைவி மாரீஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • உடையில் தீப்பிடித்து டெய்லர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    அவனியாபுரம் ஆசீர்வாதம் நகரைசேர்ந்தவர் செல்வகுமார் (57).இவர் காமராஜர்சாலை முனிச்சாலை பஸ் நிறுத்தம் அருகே டெய்லர்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையில் சாமிகும்பிட்டு பூஜை நடத்திக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பற்றியது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மகன் ஹரிஸ் கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

    • கடலில் மீன்பிடிக்க சென்ற முதியவர் பலியானார்
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    மணமேல்குடியை அடுத்த பத்தகாடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவர் நேற்று அதிகாலை அம்மாபட்டிணம் கடற்கரை கிராமத்திலிருந்து கடலில் மீன் பிடிக்க சென்றார். இவர் கைவீச்சு வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவர் கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது உடல் மணமேல்குடி கோடியக்கரையில் மிதப்பதாக வந்த தகவலின் பேரில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • அரவக்குறிச்சி அருகே 18 செம்மறி ஆடுகள் மர்மமாக இறந்தன.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி எல்லப்பநாயக்கன்புதுார் பகுதியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. விவசாயியான இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பெருமாள் சாமி என்பவரது தோட்டத்துக்கு அருகே மேய்ச்சலுக்கு சென்ற ராஜேஸ்வரிக்கு சொந்தமான 18 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கதிர்வேல் (வயது 60). தூக்கணாம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து வந்தார்.
    • சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த கதிர்வேலுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 60). தூக்கணாம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த கதிர்வேலுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கதிர்வேலை புதுவை மாநிலம், கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள வேணாநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாராஜ். இவரது மனைவி வினோதா(வயது 28). இவர்கள் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் திருமானூர் அருகே உள்ள கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த வினோதாவின் தந்தை நமச்சிவாயம், இவர்களோடு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளார். பின்னர் கடந்த இரண்டு வருடமாக சமாதானமாகி, பேச்சுவார்த்தையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் சுதாராஜ் அடிக்கடி குடித்துவிட்டு, வினோதாவோடு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர்களை நமச்சிவாயம் அவ்வப்போது சமாதானம் செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு நமச்சிவாயம், வினோதாவுக்கு அரை பவுன் தோடு வாங்கி கொடுத்துள்ளார். அந்தத் தோடையும் விற்று, சுதாராஜ் மது குடித்ததாக கூறி வினோதா அவரோடு தகராறில் ஈடுபட்டு, மீண்டும் தோடு வாங்கி கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதையடுத்து சுதாராஜ் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுவிட்டார்.

    இந்நிலையில் அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வினோதா வீட்டின் தாழ்வாரத்தில் தனது புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, நமச்சிவாயத்திற்கு சுதாராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த நமச்சிவாயம் தனது மகள் வினோதா சாவில் மர்மம் இருப்பதாக கூறி, இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து வினோதாவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தெய்வக்கனி மாடுகளை ஓட்டிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் தெய்வக்கனியை சேர்த்தனர்.

    நெல்லை:

    பாளை தியாகராஜ நகரை அடுத்த ராஜகோபாலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவருக்கு தெய்வக்கனி (வயது 50) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது.

    நேற்று தெய்வக்கனி வீட்டில் வளர்த்து வரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றுள் ளார். அங்கு அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த தெய்வக் கனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் செல்லையா (வயது60). இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.ஊழியர். இந்த நிலையில் இவர் மது பழக்கத்திற்கு அடிமை யானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் ரத்த காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார்.

    உறவினர்கள் அதுகுறித்து விசாரித்த போது தடுமாறி கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செல்லையாவின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் சுப்பையா (75). இவரது மகன் வளர்ந்த பெருமான். இருவரும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தங்கியிருந்து பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று அங்குள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் இருவரும் வேறு வேறு இடங்களுக்கு பலூன் விற்க சென்றனர். அப்போது கோவில் அருகே வளர்ந்த பெருமாள் மயங்கி கிடப்பதாக செல்லையாவுக்கு தகவல் வந்தது. அவர் உடனடியாக மகனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வளர்ந்த பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

    • மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
    • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    சிம்மக்கல் முத்து இருளப்பன் சந்தை சேர்ந்தவர் அருண் பாண்டி (27), கட்டிட தொழிலாளி. யாகப்பா நகர் பாண்டியன் தெருவில் உள்ள சங்கரன் (56) என்பவரது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அருண்பாண்டியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வழியிலேயே அருண்பாண்டி பரிதாபமாக இறந்தார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • சிறுவன் திடீர் பரிதாபமாக இறந்தான்
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அட்லாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் குமார். இவரது மகன் பிரணவ்யோசின் (வயது 8). இவன் முசிறி அருகே திருஈங்கோய்மலை பகுதியில் உள்ள மடத்துப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை என்பதால் குளித்தலை அருகே உள்ள மேல ஆரியம்பட்டியில் வசிக்கும் தனது பாட்டி அமிர்தம் வீட்டில் இருந்து வந்துள்ளான். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இச்சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து உறவினர்கள் சிறுவனை பெட்டவாய்த்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் நேற்று அதிகாலை இச்சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளான். இதையடுத்து உடனடியாக அச்சிறுவனை அவரது உறவினர்கள் பெட்டவாய்த்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு அச்சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் பிரணவ்யோசின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆனந்த் குமார் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெள்ளிங்கிரி மலைக்கு சென்றவர் மயங்கி விழுந்து சாவு
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்,

    சித்ரா பௌணர்மியையொட்டி கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலையில் ஏறி சுயம்பு லிங்கத்த வழிபாடு செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ெசல்வார்கள். கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் குமார் (வயது 40). இவர் வெள்ளிங்கிரி மலைக்கு சென்றார். அங்கு மலை ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தார். ஆறாவது மலைக்கு வந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு ஆம்புலன்சில் இருந்த உதவி மருத்துவர் குமாரை பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு ஆலை போர்மேன் திடீரென இறந்தார்.
    • மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் படந்தால் அருகே உள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 48), பட்டாசு ஆலை போர்மேன். இவருக்கு குடி பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் மனைவி கோபித்துக் கொண்டு ஒருவருடத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின்னர் தனியாக வசித்து வந்த காளிராஜிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உறவினர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காளிராஜ் மனைவி பொன்னுத்தாய் கொடுத்த புகாரின்பேரில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×