என் மலர்
நீங்கள் தேடியது "மாடுகள்"
- 10 மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டது.
- 60 கன்றுகளுக்கு குடல் புழு நீக்கம், மருந்து பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூர் ஊராட்சி சித்தாளத்தூர் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் உலக வங்கி நிதியுதவிதிட்டத்தின் கீழ் நீர்வள நிலவள திட்டத்தின்படி கால்நடை மலடி நீக்கம் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிக்கண்டன் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார்.
முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர் டாக்டர் மகேந்திரன் தலைமையில் ஆய்வாளர் சாந்தி, உதவியாளர் மகாலெட்சுமி, பிரசன்னா, மாதவன் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட சினைபிடிக்காத மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சையளிக்கப்பட்டது.
மேலும் தாது உப்பு கலவை மற்றும் தாது உப்பு கட்டி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் 10 மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டது.
மாடுகளுக்கான மடி வீக்கம் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
60 கன்றுகளுக்கு குடல் புழு நீக்கம், மருந்து பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
இந்த முகாமில் தேசிய வேளாண் திட்டமூலம் செயல்படுத்தப்படும் கருசிதைவு நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் நடைபெற்றது இதில் நான்கு முதல் எட்டு மாதம் வரை உள்ள கன்றுகளுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு இவைகளுக்கு காது வெள்ளைகள் பொருத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
- தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருவதால் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்த மாநகரமாக இருந்து வருகின்றது.
- சாலைகளில் மாடுகள் எந்தவித கட்டுப்பாட்டுகள் இன்றி சுற்றி திரிந்து வருகின்றன.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தின் தலைநகராக கடலூர் இருந்து வருகின்றது. மேலும் கடலூர் மாநகரில் பிரசித்தி பெற்ற கோவில்கள், கடலூர் சிப்காட் பகுதியில் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் அரசு தலைமை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி சென்னையில் இருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய அனைத்து வாகனமும் கடலூர் வழியாக சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருவதால் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்த மாநகரமாக இருந்து வருகின்றது.
மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடலூர் பஸ் நிலையத்திற்கும் வருகை தந்து அங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் முக்கிய நகரப் பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், பஸ் நிலையம் ,செம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் எந்தவித கட்டுப்பாட்டுகள் இன்றி சுற்றி திரிந்து வருகின்றன. இதன் காரணமாக கடலூர் முக்கிய சாலைகளிலும், பஸ் நிலையத்திலும் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இது மட்டும் இன்றி எந்தவித கட்டுப்பாடும் இன்றி சாலையில் சுற்றி திரியும் மாடுகள் திடீரென்று நடந்து செல்பவர்கள் மீதும் வாகனங்களில் செல்பவர்கள் மீதும் முட்டுவதால் உயிர்பலி ஏற்படும் அபாயமும் நிலவி வருகின்றது. மேலும் சிறுவர், சிறுமிகள் அழைத்துவரும் பெற்றோர்கள் மாடுகளை பார்த்து பீதி அடைந்து செல்வதையும் காண முடிகிறது. சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் சாலை ஓரங்களில் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதால் வியாபாரிகளுக்கும் கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது இதில் மிக முக்கியமாக சாலையில் செல்பவர்களை அடிக்கடி முட்டுவதும் , முட்டுவது போல் நெருங்கி செல்வதும் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றது ஆனால் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் மாடுகளை வெளியில் சுற்றி திரிய வைத்து பின்னர் இரவு நேரங்களில் பாதுகாப்பாக தங்கள் மாடுகளை அழைத்து செல்வதையும் காணமுடிகிறது.
இது சம்பந்தமாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, அனுமதி இன்றி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் கால்நடைகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் எந்தவித அச்சமும் இன்றி கால்நடை உரிமையாளர்கள் பொதுமக்களை அச்சுறித்திவரும் மாடுகளை சாலைகளில் சுற்றி திரிய வைக்கின்றனர். ஆகையால் கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை உடனடியாக பறிமுதல் செய்து அதிகளவில் அபராத தொகை வசூல் செய்து சுற்றி தெரியும் மாடுகளை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- திருப்புவனத்தில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் பெரிய பேரூராட்சி ஆகும். இங்குள்ள வைகைஆற்றின் மற்றொரு கரையில் மடப்புரம் காளிஅம்மன் மற்றும் முன்னோர்கள் திதி கொடுத்து வழிபடும் புஷ்பவனேசுவரர் கோவில்கள் உள்ளன.
கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மற்றும் திருப்புவனத்தை சுற்றி உள்ள ஏராளமான கிராம மக்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். அடிக்கடி போக்கு வரத்து நெருக்கடியும் ஏற்படும்.
தற்போது சாலைகளிலும், பஸ்நிறுத்தம் மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களிலும் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவு-பகலாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள் முட்டி பலர் காயம டைந்துள்ளனர்.
சிலநேரங்களில் மாடுகளுக்கிடையே ஏற்படும் சண்டையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் மீது முட்டி மோதி ஏராளமான வாகனங்கள் சேதமடை கின்றன.
மாடுகள் நிற்பதை அறியாத வெளியூர் பயணிகள் அவை முட்டி காயமடைந்துள்ளனர். திருப்புவனத்திற்கு பஸ்நிலையம் இல்லாததால் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் சாலைகளில் திரியும் மாடுகளால் அச்சமடை கின்றனர்.
சாலையில் திரியும் மாடுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- 6,000 காங்கேயம் இன கால்நடைகளில், 4,000 கால்நடைகள் விற்கப்பட்டன.
- சந்தையில் நடப்பாண்டு 20 கோடி ரூபாய்க்குமாடுகள் விற்கப்பட்டது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, ஓலப்பாளையம் அருகே கண்ணபுரத்தில் சித்திரை மாதத்தில் விக்ரம சோழீஸ்வரர் கோவில் சித்திரை பவுர்ணமி தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா விமரிசையாக நடக்கும்.
இதையொட்டி காங்கேயம் இனமாடுகள் சந்தை நடப்பது வழக்கம். ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சந்தை நடப்பாண்டு கடந்த மாதம் 8-ந் தேதி துவங்கியது.கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்,பசுமாடுகள், கன்றுகள், எருதுகள் என காங்கேய இன கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்தும்விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்தனர். அதே சமயம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து சந்தையை ரசித்து சென்றனர்.
சந்தை நிறைவடைந்த நிலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 6,000 காங்கேயம் இன கால்நடைகளில், 4,000 கால்நடைகள் விற்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.20 கோடி ரூபாய் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.சந்தையில் நடப்பாண்டு 20 கோடி ரூபாய்க்குமாடுகள் விற்கப்பட்டது விவசாயிகள்,வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சி, நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
- சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோவை மாநகராட்சியினர் பட்டியில் அடைக்க வேண்டும்.
- இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் தடுமாறி கீழே விழுவதை அன்றாடம் காண்கிறோம்.
குனியமுத்தூர்,
உக்கடம் பஸ் நிலையம் அருகே எந்த நேரமும் பஸ்களும், கார்களும், மோட்டார் சைக்கிள்களும் சென்று கொண்டே இருக்கும்.
இதனால் அந்த பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். அப்பகுதியை கடப்பதற்குள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போதும் போதும் என்றாகி விடும்.
இப்படி போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் சாலைகளில் வருபவர்கள், மாடுகளை பார்த்து பயந்து, கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் விபத்துக்களில் சிக்கி விடுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மாடுகளை வளர்ப்பவர்கள் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும். இது போன்று சாலையில் சுற்றி திரிய விடக்கூடாது. சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோவை மாநகராட்சியினர் பட்டியில் அடைக்க வேண்டும்.
மேலும் அந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த முடியும். ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் உக்கடம் பஸ் நிலையம் அருகே மாடுகள் சுற்றித் திரிவது மிகவும் கண்டனத்திற்குரியது.
இந்த நிலையானது தற்போது அல்ல காலகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் தடுமாறி கீழே விழுவதை அன்றாடம் காண்கிறோம். எனவே கோவை மாநகராட்சி விரைந்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- அமராவதிபாளையத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
- மொத்தம் 762 மாடுகள், எருமைகள், கன்று குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
திருப்பூர் :
திருப்பூர் பெருந்தொழுவு சாலை, அமராவதிபாளையத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த வாரம் நடந்த மாட்டு சந்தையில் பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்கு மாடுகள் கொண்டுவரப்பட்டன.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் திருப்பூர் மாட்டு சந்தை களைகட்டியது. இந்த சந்தைக்கு மொத்தம் 762 மாடுகள், எருமைகள், கன்று குட்டிகள் என சரக்கு வாகனங்களில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.கடந்த வாரத்தை விட இந்த வாரம் கன்று குட்டியின் விலை குட்டியை பொறுத்து ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விலை போனது. மாடுகள் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரை விலை போனது. காலை 8 மணி முதலே வியாபாரிகள் சந்தைக்கு வர தொடங்கினர்.
இதனால் பெருந்தொழுவு சாலையில் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கேரளாவில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கு வந்திருந்தனர். இதனால் விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது.
பொள்ளாச்சி, கோவை, மயிலாடுதுறை, கோபி, குன்னத்தூர், நம்பியூர், அவினாசி, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த வாரம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. 762 மாடுகளில் 53 மாடுகள் விற்பனையாகவில்லை. இதனால் கொண்டுவந்த மாடுகளை விவசாயிகள் திரும்ப அழைத்து சென்றனர். சந்தையில் விவசாயிகள், வியாபாரிகள், இடைத்தரகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழக்கத்தைவிட மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் விலை குறையவில்லை.
- அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
- தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினி யோகம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி:
நாகர்கோவிலில் பால்வ ளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் விவசாயிகளிடம் இருந்து தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினி யோகம் செய்யப்படுகிறது.
தற்போது 45 லிட்டர் பால் கையாளும் வசதி உள்ளது. அதை இந்த ஆண்டு 70 லட்சமாக லிட்டராக உயர்த்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அமுல் நிறுவனம் வியாபார நோக்குடன் வருவதாகவும், அது ஆவினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஆவின் போல கேரளா, கர்நாடாவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படு கின்றன. தற்போது பால் உற்பத்தி பகுதி மீறல் வந்து விட கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
எனவே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம். தமிழகத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு தான் இன்சூ ரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனைத்து மாடுகளையும் இன்சூரன்ஸ் செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடக்கிறது.
செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை கண்டறிந்து அது செயல்படாததற்கான காரணத்தை அறிந்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அச்சப்பட வேண்டாம். பாதிப்பு ஏற்ப டும் என பயப்பட வேண் டாம்.
பால் உற்பத்தி நிறுவ னங்கள் கூட்டுறவு சட்டப் படி பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பால் உற்பத்தி பகுதியில் விதி மீறல் ஏற்பட கூடாது. தற்போது பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல் போல தெரிகிறது. எனவே தான் 2 விஷயங்களை கூறி முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
ஆவினை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்றுமதி தேவை அதிகமாக உள்ளது. பால் உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகள் கொடுக்கப்பட உள்ளன.
ஆவினில் வே புரோட்டின் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் பொருட்களின் எண்ணிக்கை அதிகாரிக்கவும், சுவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ளது. மேய்ச்சல் நிலத்தை கண்டறிந்து மேம்படுத்தி பச்சை புல் தயாரிக்கும் திட்டம் கெண்டு வர ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியை பெருக்க என்ன நடவடிக்கை தேவை என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை.
பொதுவாக ஒரு மாநி லத்தில் செயல்படுகிற சங்கம் மற்றொரு மாநிலத்தில் தலையிடுவது இல்லை.
அமுல் நிறுவனம் கொள் முதல் விலையை உயர்த்தி தருவதாக கூறுகிறார்கள். ஆனால் ஆவின் சார்பில் இன்ஸ்சூரன்ஸ் உள்பட பல்வேறு விஷயங்கள் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் பால் உற்பத்தி யாளர்களின் கோரிக்கை களை வருங்காலங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பால்வளத்துறை மூலம் மாடுகள் இனச்சேர்க் கைக்கு உயர்ரக மாடுகளின் விந்துவை சேகரித்து விந்து உறைவைப்பு நிலையம் முறையாக செயல்படுத் தப்பட்டு வருகிறது. நாட்டு இன மாடுகளில் தரமான மாடுகளை கண்டறிந்து அபிவிருத்தி செய்து இனப் பெருக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஓரிரு வாரங்களில் அனைத்து ஆவின் எந்தி ரங்களின் செயல்பாடுகளை ஆராய வேலை நடக்கிறது. அது முடிந்ததும் எந்த எந்திரங்களை மேம்படுத்த முடியும், மாற்றி அமைக்க முடியும் என்பது ஆராயப் படும். ஆவினில் பால் வாங்குவது பாதுகாப்பானது. ஆவின் தரத்துக்கு போட்டி யாக எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 62 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
- அதிகபட்சமாக ரூ.72 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன காரி வகைப் பசு விற்பனையானது.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 62 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 42 மாடுகள் மொத்தம் ரூ.16 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.72 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன காரி வகைப் பசு விற்பனையானது.
- ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் காங்கேயம் இன மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 95 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
- அதிகபட்சமாக 3 மயிலைப் பசுக்கள் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்துக்கு விற்பனையாயின.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்துள்ள பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் காங்கேயம் இன மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 95 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 45 மாடுகள் ரூ.21 லட்சத்துக்கு விற்பனையாயின. அதிகபட்சமாக 3 மயிலைப் பசுக்கள் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்துக்கு விற்பனையாயின.
- பழையகோட்டையில் 101 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
- 60 மாடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்துக்கு விற்பனையாயின.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான இந்த பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 101 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் 60 மாடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.79 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- புலியை பிடிக்க வனத்துறையினர் புதுவியூகம்
- குமரி மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து புலியை பிடிப்பதற்கான நடவடிக்கை
கன்னியாகுமரி :
பேச்சிப்பாறை அருகே முக்கறைக்கல் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக புலிகள் அட்டகாசம் செய்து வருகிறது. அங்குள்ள ஆடு, மாடுகளை கடித்து கொன்று வருகிறது.
குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து நாய், ஆடுகளை கொன்றதால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதியில் சுற்றி தெரியும் புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 2 இடங்களில் கூண்டு அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் புலி சிக்கவில்லை.
இந்த நிலையில் புலியை பிடிக்க புது வியூகம் வகுத்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமையிலான குழுவினர் நேற்று அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை சந்தித்து பேசினார்கள்.
அப்போது ஆடு, மாடுகளை ஆங்காங்கே கட்டுவதால் புலிகள் கடித்து கொன்று வருகிறது. எனவே அவற்றை ஒரே இடத்தில் கட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மலைவாழ் மக்களிடம் கேட்டுக்கொண்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு மக்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் காம்பவுண்டின் உள்பகுதியில் ஆடு, மாடுகள் கட்டப்பட்டுள் ளது. சுமார் 20 மாடுகள், 40 ஆடுகள் ஒரே இடத்தில் கட்டப்பட்டு உள்ளது. அந்த பகுதியை வனத்துறை அதி காரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் புலியை பிடிக்கும் வகையில் ஆட்டுக்கொட்டகை போன்ற தோற்றம் உடைய கூண்டு ஒன்றை வடிவமைத்து 2 இடங்களில் வைத்துள்ளனர். அந்த கூண்டுக்குள் 2 ஆடுகளையும் கட்டி வைத்துள்ளனர். 24 மணி நேரமும் அந்த கூண்டை வனத்துறை கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் புலி பிடிப்பதற்கு வெளியூரிலிருந்து சிறப்பு குழுவினரை அழைத்து வரவும் நட வடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
கோவையில் இருந்து புலியை பிடிப்பதற்கு பயிற்சி பெற்ற குழுவினர் விரைவில் இங்கு வர உள்ளனர். அவர்கள் குமரி மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து புலியை பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.
- அதிகபட்சமாக ரூ.87 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் கூடிய மயிலைப் பசு விற்பனையானது.
- மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பழையகோட்டையில் காங்கேயம் மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 47 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ரூ.12 லட்சத்துக்கு 35 மாடுகள் விற்பனையாயின. அதிகபட்சமாக ரூ.87 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் கூடிய மயிலைப் பசு விற்பனையானது.