என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 224731"
- உக்ரைனை ஆக்கிரமித்த குற்றத்திற்காக ரஷியாவை தண்டிக்க வேண்டும்.
- ரஷியாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்க வேண்டும்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொலி மூலம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
உக்ரைனில் நடந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு இடம் பெயர்ந்தனர். போர் மூலம் உக்ரைன் நகரங்களை ரஷிய படைகள் அழித்தன. உக்ரைனுக்கு எதிராக குற்றம் நடந்துள்ளது, நாங்கள் நியாயமான தண்டனையை கோருகிறோம்.
எங்கள் பிரதேசத்தை திருட ரஷியா முயற்சித்ததற்காக உக்ரைன் தண்டனையை கோருகிறது. ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதற்காகவும், உக்ரைன் பெண்களை சித்திரவதை செய்தது மற்றும் அவமான படுத்தியதற்காகவும் தண்டனை வழங்க வேண்டும். எங்கள் நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பு குற்றத்திற்காக ரஷியாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உக்ரைனுக்கு இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும் என லிஸ் டிரஸ் உறுதி.
- இந்திய வம்சாவளி பெண், இங்கிலாந்து உள்துறை அமைச்சராக நியமனம்.
லண்டன்:
இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். வடக்கு அயர்லாந்தில் அமைதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
மேலும் ரஷியா அதிபர் புதின் நடத்தி வரும் போரினால் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார பிரச்சினைகளும் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து முழு ஆதரவளிக்கும் என்று டிரஸ் உறுதியளித்தார்.
இதனிடையே, லிஸ் ட்ரஸ் தலைமையிலான இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுயெல்லாவின் தாயார் உமா தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை கோவா வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ். 1960 ஆண்டு சுயெல்லாவின் குடும்பம் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தது.
- வோக் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல மாதாந்திர இதழாகும்.
- இந்த இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளனர்.
கீவ்:
உக்ரைனின் மீதான ரஷியாவின் போர் 150 நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். சுமார் 1 கோடி பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்காவின் பிரபல மாத இதழான வோக் இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளனர். அக்டோபர் மாதம் வெளியாகும் வோக் இதழில் இந்த நேர்காணல் இடம்பெறுகிறது.
இந்நிலையில், அதற்கான முன்னோட்ட படங்களை வோக் இதழ் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வோக் இதழ் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஒலனா போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிற்கும் படங்களும், ஜெலன்ஸ்கியும், ஒலனாவும் ஜோடியாக இருக்கும் படங்களும் உள்ளன.
இந்த புகைப்படங்களுக்கு வரவேற்பு ஒருபக்கம் இருந்தாலும், போர் நடக்கும் நேரத்தில் இப்படி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவசியமா என்ற எதிர் கேள்விகளும் எழுந்துள்ளன.
- ஒடேசா துறைமுகம் மீதான ரஷிய தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐ.நா.சபை கண்டனம்
- ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் அமைதியாக செயல்பட துருக்கி அறிவுறுத்தல்
உக்ரைன் ரஷியா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், தானியங்கள் ஏற்றுமதியை துறைமுகங்கள் வழியே மேற்கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. ஐ.நா.பொதுச்செயலாளர் முன்னிலையில் துருக்கி நாட்டில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், தெற்கு உக்ரைன் துறைமுகமான ஒடேசா மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. ஒடேசா துறைமுக உள்கட்டமைப்பை இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாகவும், மேலும் இரண்டு ஏவுகணைகள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், உக்ரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் சேர்கி ப்ராட்சுக் தெரிவித்துள்ளார்.
ரஷியா வழக்கம் போல் ஒப்பந்தங்களை மீறுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்க்ஸி குற்றம் சாட்டி உள்ளார். ரஷியா என்ன சொன்னாலும், வாக்குறுதி அளித்தாலும், அதை செயல்படுத்தாமல் இருக்க வழிகளைக் கண்டுபிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஒடேசா துறைமுகம் மீதான தாக்குதலுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். துருக்கியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவது அவசியம் என்று ரஷியாவை ஐ.நா.சபை வலியுறுத்தி உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் ரஷியா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்பட வேண்டும் என்று துருக்கி அறிவுறுத்தி உள்ளது.
- ஜி-7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார்.
- ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பெர்லின்:
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார்.
மாநாட்டில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. அதில் உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக இன்று கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசுகையில், குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
ஜி7 மாநாட்டில் பேசிய உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா கூறுகையில், ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் அளிக்க வேண்டும். ரஷியாவின் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
- ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
- உக்ரைனின் கோரிக்கை குறித்து அடுத்த வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என தகவல்
உக்ரைனின் தென்கிழக்கு கெர்சன் மற்றும் ஜபோரிஜியா பிராந்தியங்களில், ரஷிய படைகளிடம் இருந்து கிராமங்கள் மற்றும் நகரங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். எனினும், சிவியரோடோனெட்ஸ்க் பகுதியில் இன்னும் சண்டை தொடர்ந்து நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியைச் சந்தித்து பேசினார். அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான உக்ரைனின் கோரிக்கை குறித்து, அடுத்த வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று கூறிய நிலையில், ஜெலன்ஸ்கி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.
உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கும் முடிவு உக்ரைனை மட்டுமல்ல, முழு ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலுப்படுத்தும் என்றும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்