search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224799"

    • ஜூன் 5-ந்தேதி தேரோட்டம்
    • பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது

    கன்னியாகுமரி :

    சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் சுவாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா வருகிற 26-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவானது தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருக்கொடியை குரு பாலஜனாதிபதி ஏற்றி வைக்கிறார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    பள்ளியறை பணிவிடை களை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    2-ம் நாள் இரவு அய்யா வைகுண்டர் சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனியும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.

    வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்ன தானமும் நடைபெறு கிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 5-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.

    திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமைப்பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு 3 வேலைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • பாலதண்டாயுதபாணி கோவில் விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
    • பின்னர் பாலதண்டாயுத பாணிக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன்கோட்டையில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலின் 101-வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்து டன் தொடங்கியது.

    இதை யொட்டி பாலதண்டாயுத பாணிக்கு சிறப்புஅபிஷேக, ஆராதனை, அர்ச்சனை, அலங்காரம் செய்யப் பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் சேவல் கொடியேற்றி மயில் முன்பு சிறப்பு பூஜை செய்யப் பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காப்பு கட்டினர். அன்ன தானம் வழங்கப்பட்டது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாலா பிஷேகம் வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. அன்று வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மவுன குருசாமி மடத்தில் இருந்து புறப்பட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து அலகுகுத்தி, பூக்குழி இறங்கி 3 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக செல்கிறார்கள். பின்னர் பாலதண்டாயுத பாணிக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. 3-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து முருகன் பட்டுப்பல்லக்கில் எழுந்தருளி வல்லப கணபதி கோவிலில் வழிபாடு செய்து அம்பல காரர்திருக்கண் வந்து அபிஷேகம் செய்யப்படு கிறது. பின்னர் கள்ளர் திருக்கண் வந்து எழுந்தருளி இரவு தங்குகிறார். 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சீர்பாதம் தாங்கி களுக்கு பாத்தியப்பட்ட கள்ளர் திருக்கண்ணில் இருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவில் அருகில் ராமலிங்க சேர்வை தானமாக வழங்கிய இடத்தில் வைத்து மல்லிகை மலர்களால் பூப்பல்லக்கு அலங்காரிக்கப்படுகிறது.

    பின்னர் பாலதண்டாயுத பாணி இரவு 12மணிக்கு மேல் நகரின் முக்கிய வீதிகளில் பல திருக்கண்களில் எழுந்தருளி காட்சி அளித்து விட்டு விடிய விடிய வீதி உலா சென்று மறுநாள் காலை 11 மணிக்கு கோவிலை அடைகிறார்.

    3 நாட்களும் தினந்தோறும் இரவு நேரங்களில் ஆடல்பாடல், இசைக்கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள், வாடிப்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • வைகாசி விசாக பெருந் திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • கொடிமரக் கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்களால் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது

    கன்னியாகுமரி, மே.10-

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 23-ந் தேதி மாலையில் கோட்டார் இளங்கடை பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக நடக்கும் கொடிமரக்கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்களால் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து 1-ம் திருவிழாவான 24-ந் தேதி காலை 9-௩௦ மணிக்கு மேல் 10-30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இந்த திருவிழா ஜூன் மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இது தவிர விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இரவு சமய சொற்பொழிவு பாட்டுக் கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, வாகன பவனி, சப்பர ஊர்வலம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 9-ம் திருவிழாவான ஜூன் மாதம் 1-ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 8-30 மணி க்குமேல் 9 மணிக்குள் திருத்தேர்வடம் தொட்டு இழுத்து தேராட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் மனோதங்கராஜ், குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், 17-வது வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ்தாமஸ் ஆகியோர் தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைக்கிறார்கள்.

    10-ம் திருவிழாவான 2-ந்தேதி காலை 9-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் ஆராட்டு நிகழ்ச்சி முடிந்ததும் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாகஅம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் வறண்ட குளத்தின் கரையில் அம்மனை வைத்து பூஜைகள் நடத்துகிறார்கள். தெப்ப திருவிழா முடிந்த பிறகு நள்ளிரவில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சிநாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடக்கிறது. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் தேரிலும் கன்னியம்பலம் மண்டபத்திலும் கால் நாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) கவிதா பிரியதர்ஷினி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
    • கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    ராஜபாளையம்

    ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராஜபாளையம் மதுரைக்கடைத் தெருவில் கொடியேற்று விழா நடந்தது. நகரச்செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். நகரத் துணைச் செயலாளர்கள் அக்பர்அலி, லிங்கம், பூபதி, பொருளாளர் பிச்சைக்கனி, மாவட்டப்பிரதிநிதி புஷ்பவேல், குருமூர்த்தி முன்னிலை வகித்தனர். சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமன், மூத்த நிர்வாகி விநாயகமூர்த்தி, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னதாக விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ராமர், கிழக்கு ஒன்றியச் செயலாளர் வில்லிசை மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், தலைமைக்கழகச் சொற்பொழிவாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவின் 8-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான 8-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    முன்னதாக அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தக டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர்.

    இதில் கோவில் கண்காணிப்பாளர் மணி மேற்பார்வையில், விருதகிரி காசாளர் கலியராஜ், தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா, ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி தலைவர் ஜெயமாலதி சிவராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரானது 4 மாட வீதிகளையும் வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது.

    • சித்திரை பெருந்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி தீபாராதனை, சிறப்பு பூஜைகள், சுவாமி வாகனத்தில் வீதிஉலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    8-ம் நாளான இன்று (2-ந் தேதி) காலை 5 மணிக்கு சிறப்பு பூஜை, 7 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதிஉலா, 8 மணிக்கு கலச பூஜை, அபிஷேபகம், பகல் 12 மணிக்கு உச்சகால பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.

    9-ம் திருவிழாவான நாளை (3-ந் தேதி) காலை 9.05 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருத்தேரில் சுவாமி எழுந்தருளிச் செய்து தேர் திருவிழா நடைபெறுகிறது. அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் திருத்தேர் வடம் தொட்டு தொடங்கி வைக்கின்றனர். நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    • தேரில் பூண்டி அன்னையின் சுருபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெறும்.
    • வருகிற 15-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பூலோகம் போற்றும் பூண்டி மாதா என அழைக்கப்படும் இந்த பேராலயத்தில் ஆண்டு பெருவிழா வருகிற 6-ம்தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    பேராலய ஆண்டு திருவிழா தொடக்க நிகழ்வாக கொடியேற்றம் நிகழ்ச்சி வரும் 6-ம் தேதி மாலை நடைபெறுகிறது .

    பூண்டி அன்னையின் உருவத்துடன் கொடியை பக்தர்கள் ஜெபமாலை பாடல்களுடன் ஊர்வலமாக எடுத்து வருவார்கள்.

    ஊர்வலம் கொடி மேடையை வந்து அடைந்தவுடன் கொடி மரத்தில் அந்தமான் நிகோபார், போர்ட் பிளேர் மறை மாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்து மரியா- ஆறுதலின் அன்னை என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், துணைஅதிபர் ரூபன் அந்தோணி ராஜ் , தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும் அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் அருள் தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    வரும் 8-ம் தேதி (திங்கட்கிழமை) புதுமை இரவு வழிபாடு கும்பகோணம் மறை மாவட்ட அருட்தந்தை யூஜின் டோனி வழிநடத்து தலில் நடைபெறும்.

    பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா நாளான வரும் 14ஆம் தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தில் பணியாற்றி மறைந்த அருட் தந்தையர்கள் லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் அடிகளாரின் நினைவு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    மாலை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் மரியா -அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும் மின்விளக்கு களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூண்டி அன்னையின் சுருபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.

    தொடர்ந்து வாணவே டிக்கை நடைபெறும்.

    மே 15ஆம் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி கும்பகோணம் ஆயர் அந்தோ னிசாமி நிறைவேற்றுவார்.

    மாலையில் கொடி இறக்கத்துடன் பூண்டி திருத்தல பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது .

    திருவிழா விற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் அருட்தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • மே 2-ந்தேதி தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சியும், மே 6-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.
    • 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தன்னைத்தானே பூஜித்தல் வருகிற மே 2-ந்தேதியும், தொடர்ந்து, மே 6-ந்தேதி தேரோட்டமும், 7-ம் தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், வீதியுலா மற்றும் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து, 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • எமனை வதம் செய்து மீண்டும் எமனை உயிர்ப்பித்த தலம்.
    • கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரிஷப கொடியேற்றப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலகப் புகழ்வாய்ந்த ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.

    இங்கு மார்க்கண்டேயர் உயிரைக் காப்பாற்று வதற்காக இறைவன் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்து மீண்டும் எமனை உயிர்ப்பித்த தலம்.

    மார்க்கண்டேயர் என்றும் 16 (சிரஞ்சீவி) என்ற வரத்தை இவ்வாலயத்தில் பெற்றதால் இக்கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி வயதான தம்பதிகள் ஆயுள்சிய ஹோமம் செய்து திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

    பல்வேறு சிறப்புகள் உடைய தலங்களில் ஒன்றான இவ்வாலயத்தில் இறைவன் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்யும் ஐதீக நிகழ்வு நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

    சென்னையை சேர்ந்த இராஜேந்திரன், வாசுகி, ராஜராஜன் ஆகியோர் கொடியேற்று விழாவி ற்க்கான உபயதாரர்கள் ஆவார்கள். விநாயகர், முருகன், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர்.

    புனித நீர் அடங்கிய கடங்கள் பூஜிக்கப்பட்டது.

    கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் பல்வேறு அபிஷே கங்கள் செய்யப்பட்டு ரிஷபக் கொடியேற்றப்பட்டது.

    இவ்விழாவில் ஸ்ரீமத் சுப்ரமணிய கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாகத்தினர், கோயில் குருக்கள்கள், ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு அவதார வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 27-ம் தேதி அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் சாமி திருக்கல்யாணம், 30-ஆம் தேதி

    (ஞாயிற்றுக் கிழமை) இரவு காலசம்ஹாரமூர்த்தி

    எமனை வதம் செய்யும் ஐதீக திருவிழாவும்,மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
    • தேரோட்டம் வருகிற 3-ந்தேதி காலை நடைபெறுகிறது.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    சித்திரை திருவிழா

    விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. காலை 5.47 மணிக்கு சங்கர லிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷே கங்கள், தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சிகளை சரவணன்பட்டர் தலைமையிலான பட்டர்கள் செய்தனர்.

    இதில் தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., அறநிலை யத்துறை இணைஆணையர் அன்புமணி, துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், தொழிலதிபர் பி.ஜி.பி. ராமநாதன், கோமதி அம்பாள் மாதர் சங்க தலைவர் பட்டமுத்து, ஜோதிடர் குமார், வெள்ளத்துரை, ஜெயக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

    சித்திரை திருநாளில் சுவாமி அம்பாள் இரண்டு தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடு களைகோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படி தாரர்கள் செய்து வருகின்றனர்.

    • புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ெதாடங்கியது.
    • வருகிற 4-ந் தேதி பூக்குழி திருவிழா நடை பெறுகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் புதுப்பாளையம் பச்சமடம் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி பொங்கல் விழா ராஜூக்கள் சமூகத்தினர் சார்பில் கடந்த 9-ந் தேதி சிறப்பாக நடந்தது.

    அதன் தொடர்ச்சியாக பல்வேறு சமூகத்தினர் இணைந்து சிறப்பாக கொண்டாடும் சித்திரை பூக்குழி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி சுவாமி அம்பா ளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சிவாச்சா ரியார்கள் அலங்கரிக் கப்பட்ட கம்பத்தில் திரு விழா கொடியேற்றினர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொடி யேற்றம் தொடங்கியது முதல் ஒவ்வொரு சமூகத்தி னற்கு ஒரு திருவிழா என 11 நாட்கள் திருவிழா நடை பெறும். வருகிற 4-ந் தேதி பூக்குழி திருவிழா நடை பெறுகிறது.

    திருவிழாவில் புதுப் பாளையம் மாரியம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் ஆராதனைகள் செய்யப் பட்டு அம்மன் கண்ணாடி சப்பரம், பூ சப்பரம், பூத வாகனம், தண்டியல் தட்டு சப்பரம் உள்ளிட்ட வாக னங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார்.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவிராஜா தலைமையில் அறங்காவலர் குழு ரமேஷ்ராஜா,ராம்ராஜ்ராஜா,ஜெய்குமார்ராஜா, கார்த்திக்ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா 6-ந் தேதி நடைபெறுகிறது.
    • அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்கி ழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா அடுத்த மாதம் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து 29-ந் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    அன்று 6 ஊர்களில் இருந்து சாமிகள் கோவி லுக்கு வந்து சன்னதிக்கு முன்பு சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறும். அடுத்த மாதம் 3-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா 6-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பி கையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்று த்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டி யூர், திருப்பூந்து ருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தா னத்தில் சங்கமிக்கிறது.

    7-ந் தேதி பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழழ ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×