search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி"

    • 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான கடனுதவிகளை வழங்கினார்.
    • நபார்டு வங்கியில் திட்ட பணிகள் குறித்து விரிவாக பேசினார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி -கண்டியூர் சாலையில் அமைந்துள்ள கருப்பூர் கவ்டசி தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் நபார்டு வங்கியின் திட்டப்பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தஞ்சை நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் அனீஸ் குமார் தலைமை தாங்கி 5மகளிர் குழுக்களுக்கு ரூ 10 லட்சத்திற்கான கடன் உதவிகளை வழங்கி நபார்டு வங்கியில் திட்டப் பணிகள் குறித்து விரிவாக பேசினார்.

    கலந்தாய்வு கூட்டத்தில் தஞ்சை மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஜெகதீசன், உதவி பேராசிரியர் ஜெயகாந்தன், நடுக்காவேரி யூனியன் வங்கி மேலாளர் ஜெகன், திருப்பூந்துருத்தி கால்நடை மருத்துவர் பிரீத்தி, மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

    கவ்டெசி தொண்டு நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நபார்டு வங்கியோடு இணைந்துகவ்டசி தொண்டு நிறுவன பணியாளர்கள் சுபாஷினி, கோமதி, கணேஷ் வரி, ஆர்த்தி, ராஜா, ரூபன் செய்திருந்தனர்.

    தொடக்கத்தில் கவ்டெசி தொண்டு நிறுவன தலைவர் மாவடி யான் வரவேற்றார்.

    வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • விவசாயம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கான பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது.
    • கடன் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு வாகன சேவை தொடங்கியது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தனியார் வங்கியின் சார்பில் வழங்கப்படும் விவசாயிகளுக்கான கடன் வசதி குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இதையடுத்து, இம்மாவட்டத்தில்கிராமப்புறங்களில் விவசாயிகளின் விவசாயம் சார்ந்த உள்கட்ட மைப்பு மற்றும் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக தனியார் வங்கியின் சார்பில் டிராக்டர் கடன், கிசான் கோல்டு கார்டு, தங்க நகைக் கடன், சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, கார் கடன், இருசக்கர வாகன கடன், நுகர்வோர் பொருள்களுக்கான கடன், விவசாயகடன், விவசாயம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கான குறு மற்றும் நீண்ட கால கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது.

    இந்த கடன் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் விதமாக அவ்வங்கியின் சார்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு வாகன சேவை தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி பிரச்சார வாகனத்தை துவக்கிவைத்து விவசாயிகளுக்கு விழி ப்புணர்வை ஏற்படுத்தினர். ஒன்றிய ஆணையர் அன்பரசன், மேலாளர் ஜெயராமன், உடன் இருந்தனர்.

    இதில் தனியார் வங்கியின் மண்டல மேலாளர் வசந்தன், கிளை மேலாளர் சந்தோஷ்குமார், உதவி மேலாளர்கள் ஹரிகிருஷ்ணன், சதீஷ்கு மார், திருமூர்த்தி, பிரேம்குமார், சந்தோஷ்கு மார், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சுப்பிரமணி அடமானமாக வைத்த நில பத்திரம் மற்றும் ஆவணங்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • அவரது உண்மையான பெயர் கண்ணம்மா என்பதும், அவர் தனது பெயரை மாற்றி வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து கூட்டாக சேர்ந்து கடன் பெற்று மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது.

    திருச்சி,

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் காந்திநகர் நவல்பட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் திருவெறும்பூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் தனக்கு சொந்தமான நில பத்திரத்தை அடமானமாக வைத்து கடந்த 2002-ல் ரூ.3 லட்சம் கடனாக பெற்றார்.

    அதன் பின்னர் கடன் தொகையில் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.50,000 மட்டும் திருப்பி செலுத்தி உள்ளார். அதன் பின்னர் கடன் தொகை திருப்பி செலுத்தவில்லை. வங்கியில் இருந்து பல முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் சுப்பிரமணி அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    இதையடுத்து சுப்பிரமணி அடமானமாக வைத்த நில பத்திரம் மற்றும் ஆவணங்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் கடன் தொகைக்கு ஜாமீன் அளித்த திருச்சி காட்டூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ண கவுண்டர் மனைவி பத்மாவதியை தேடிச் சென்றனர்.

    அப்போது அவரது உண்மையான பெயர் கண்ணம்மா என்பதும், அவர் தனது பெயரை மாற்றி வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து கூட்டாக சேர்ந்து கடன் பெற்று மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வங்கியின் கிளை மேலாளர் ராஜ செல்வகுமார் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் கடன் தொகை பெற்று மோசடி செய்த சுப்பிரமணி அவருக்கு உடந்தையாக ஜாமீன் கையெழுத்திட்ட கண்ணம்மா, திருச்சி பெரிய கம்மாளர் தெரு பகுதியைச் சேர்ந்த பஞ்சநாதன் மனைவி பத்மாவதி ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் அவர்கள் அடமானம் வைத்த நிலப்பத்திரத்தின் உண்மை தன்மை தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. போலியான பத்திரம் தயார் செய்து அதனை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • 5 நிமிடங்களில் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.

    திருப்பூர் :

    தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கி, டாடா ஏ.ஐ.ஜி., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் 18 முதல் 65 வயது உள்ளவர்கள் சேரலாம், தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர் மூலம் விரல் ரேகையை பதிவு செய்து ரூ. 399 செலுத்தி5 நிமிடங்களில் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர மற்றும் பகுதி ஊனம், பக்கவாதம் ஏற்பட்டால், 10 லட்சம் வரையிலும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வழங்கப்படும்.புற நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் 30 ஆயிரம், விபத்தில் மரணம் பக்க வாதம் ஏற்பட்டவரின் இரு குழந்தைகள் கல்வி செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். விபத்து நேரங்களில் ஏற்படும் நிதி நெருக்கடி உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தினரின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். திருப்பூர் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • தனது ஓய்வூதிய பணம் சுமார் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை எடுக்க வங்கிக்கு வந்தார்.
    • அப்போது அவர் வைத்திருந்த பணப்பையை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு தப்பினர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கோவிந்தகுடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 72).

    இவர் வேளாண்மை பொறியியல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்.

    இவர் தனது ஓய்வூதிய பணம் சுமார் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை எடுக்க வங்கிக்கு வந்தார்.

    இதை நோட்டமிட்ட இரண்டு வாலிபர்கள், அவர் சென்ற இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து, வலங்கைமான் அருகே உள்ள மின்பொறியாளர் அலுவலகத்தில் முன்பு சென்ற போது பணம் கீழே கிடப்பதாக அவரின் கவனத்தை திசை திருப்பினர்.

    இதனை உண்மை என்று நம்பிய கிருஷ்ணமூர்த்தி கீழே குனிந்தார். அப்போது அவர் வைத்திருந்த பணப்பையை அந்த மர்ம நபர்கள் திருடி கொண்டு தப்பினர்.

    இது குறித்து கிருஷ்ணமூர்த்தி வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார்.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுங்கான்கடை அடுத்த களியங்காடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 44). இவர் பரசேரியில் தனியார் பள்ளிக்கூடம் மற்றும் நகை அடகு பிடிக்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 6ம் தேதி காலை நகை அடகு பிடிக்கும் கடைக்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நகை அடகு வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது பணியில் இருந்த ஐஸ்வர்யா அவர் கொடுத்த சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    பின்னர் அந்த நபரின் நடத்தையில் சந்தேகமடைந்த ஐஸ்வர்யா நகைகளை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த நபர் கொடுத்த நகை மற்றும் முகவரி போலி என தெரியவந்தது. இதுகுறித்து சிதம்பரம் இரணியல் போலீசில் புகாரளித்தார்.

    புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகள் வைத்து ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • லோன் மேளா தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி, நகர்ப்பபுற கூட்டுறவு வங்கிகளில் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறும்.
    • விண்ணப்பங்களை பெற்று கடன் வழங்க தொடர்புடைய ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து பொருளாதார மேம்பாடு அடைந்து பயன் பெறலாம்.

    தரங்கம்பாடி :

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறைமாவ ட்டத்தில் பிற்படுத்த ப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டிற்கான TABSEDCO மற்றும் TAMCO கழக திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நகர்ப்பபுற கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கிட ஏதுவாக லோன் மேளா நடைபெற்று வருகிறது.

    லோன் மேளா தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி, நகர்ப்பபுற கூட்டுறவுவங்கிகளில் வருகிற 15.8.2022 வரை நடைபெறும். மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் லோன் மேளா வருகிற 10.8.2022 வரை நடைபெறும்.

    மேற்படி கழகம் வழங்கும் கடன் திட்டம் மூலம் பயன் பெற விரும்புவோர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கி, நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் விண்ணப்பங்களை பெற்று கடன் வழங்க தொடர்புடைய ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து பொருளாதார மேம்பாடு அடைந்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில் செய்ய விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்கும் முகாம் நடந்தது.
    • வருகின்ற 16-ந்ேததி காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண்.12-ல் நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது- மாற்றுத்திறனாளி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம் (PMEGP), வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), சிறுதொழில் மற்றும் பெட்டி கடை வைப்பதற்கான வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டம், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (NHFDC) மூலமாக கடன் வழங்கும் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த திட்டங்களால் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் "வங்கி கடன் முகாம் வருகின்ற 16-ந்ேததி காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண்.12-ல் நடைபெற உள்ளது.எனவே, வங்கி கடன் பெற்று தொழில் செய்ய விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெள்ளகோவில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    • கஞ்சா மற்றும் புகையிலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், வெள்ளகோவில் போலீசார் கஞ்சா மற்றும் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, புகையிலை மற்றும் கஞ்சா பொருட்களை கைப்பற்றி சம்மந்தப்பட்ட நபர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்.

    வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி கஞ்சா மற்றும் புகையிலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை மேற்கொண்டதில் வெள்ளகோவில் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட 8 நபர்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இன்னும் 8 நபர்கள் வங்கி கணக்கு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளகோவில் பகுதியில் கஞ்சா மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    • 150 பேரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையிலான வங்கி கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி 18 முதல் 50 வயது வரை உள்ள 150 மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    இதில் 120 மனுக்கள் மீது வங்கிகளுக்கு பரிந்துரைத்து உடனடியாக கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இன்று (சனிக்கிழமை) ஆலத்தூர் தாலுகா, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் வேலை வாய்ப்பு அளிக்க உள்ளனர்.

    எனவே அந்த முகாமிலும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் ேகட்டுக்கொண்டார்."

    • ஆதரவற்ற விதவைகளுக்கான கடன் போன்ற அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டதொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், கூட்டுறவு சங்கத்தின் திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன். கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கடன் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன் போன்ற அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையுடன் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட விவசாயிகள் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நிலவுடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக வி.ஏ.ஓ . அடங்கல் சான்று. பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதரக் கடன்கள் பெற்று பயனடையலாம்.

    சென்ற ஆண்டில் 49,671 விவசாயிகளுக்கு ரூ.509.14 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன்களை உரிய தேதியில் திருப்பி செலுத்தினால் வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது. வட்டியில்லா பயிர்கடன்களை அனைத்து விவசாயிகளும் பெற ஏதுவாக கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகளுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் 0421-2971184, திருப்பூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகம் 0421-2216355, தாராபுரம் சரக துணைப்பதிவாளரை 04258-221795 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

    ×