என் மலர்
நீங்கள் தேடியது "slug 225386"
- சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.
- இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.இவை மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.
தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர். இதனால் அதிக அளவில் வெல்லம் தேவைப்படுவதால், வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வெல்ல சிப்பங்களை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். எனவே வெல்லம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொழிலாளர்கள் இரவு, பகலாக உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயார் செய்து அவ்வப்போது வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.
- சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தென் மண்டல ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.
- இந்த இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளான ஜோதி மணி (60), சங்கரபாண்டியன் (65)இருவரும் எம்.டி.ஆர்.நகர் 2-வது தெருவில் வசித்து வந்த நிலையில் கடந்த 18.7.22 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அறிவுறுத்தலின் பேரில் சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத் தலைமையில் சிறப்பு படை நியமிக்கப்பட்டு இரட்டை கொலை செய்த குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.
சம்பவம் நடந்த வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகள் மூலம் போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த கொலை வழக்கில் ஜோதி புரம் 7-வது தெருவில் வசிக்கும் தனியார் மில் ஊழியர் சங்கர் (42), அவரது மனைவி பொன்மணி (35) ஆகியோரை கைது செய்தனர்.
ஆசிரியர் தம்பதிகளை சங்கர் பணத்திற்காக கொலை செய்தார். இதற்கு அவரது மனைவி உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கணவன்-மனைவி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிறப்பு காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாத், காவல் ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் நாகராஜ பிரபு, தலைமை காவலர் அன்பழகன் மற்றும் காவலர்களை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
- துப்பாக்கி சுடுதல், கலவர தடுப்பு, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது.
- பயிற்சி நிறைவு பெற்ற, 97 போலீசாரும் கோவையில் உள்ள சிறப்பு காவல் படைக்கு செல்ல உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு தேர்ச்சி பெற்ற 97 இரண்டாம் நிலை போலீசார் கடந்த மார்ச் மாதம் முதல் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இவர்களுக்கு கவாத்து, சட்டப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், கலவர தடுப்பு, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 7மாதமாக அளிக்கப்பட்ட பயிற்சி நிறைவு பெற்றது.
பயிற்சி நிறைவு விழா மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி, திருப்பூர் எஸ்.பி., சஷாங் சாய் ஆகியோர் பங்கேற்றனர். போலீசாரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.மேலும், பயிற்சி நிறைவு பெற்ற, 97 போலீசாரும் கோவையில் உள்ள சிறப்பு காவல் படைக்கு செல்ல உள்ளனர்.
- நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதலின் படி நவீன தகன மேடை அமைக்கும் பணி ரத்தானது.
- நூலகம் கட்ட நிலம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானம் கூட்ட த்தில் நிறைவேற்ற ப்பட்டது.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் செகானாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் செல்வராஜ், துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.
பணிகள் ரத்து
கீழக்கரை இந்துக்கள் மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்களால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை ஏற்று பணி உத்தரவு மற்றும் பணி ஒப்பந்தம் ஆகியவற்றினை ரத்து செய்ய மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்க ப்பட்டது.
கீழக்கரை நகரில் அமைந்து உள்ள நூலகம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத இட நெருக்கடி யான வாடகைக் கட்டி டத்தில் இயங்கி கொண்டி ருக்கிறது. எனவே நகராட்சிக்கு சொந்தமான கீழக்கரை செம்பி ஆயில் கம்பெனி அருகில் உள்ள இடத்தில் நூலகம் கட்ட நிலம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானம் கூட்ட த்தில் நிறைவேற்ற ப்பட்டது.
கூட்டத்தில் நகர் மன்ற துணை தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் பேசுகையில், கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் சில வார்டுகளை தவிர மற்ற வார்டுகளுக்கு சரிவர பணிகள் நிறைவேற்ற வில்லை. அனைத்து கவுன்சி லர்களிடமும் நகராட்சி தலைவர் ஆலோசனை செய்து பாரபட்சமில்லா மல் நிதியை அனைத்து வார்டு களுக்கும் பகிர்ந்து ஒதுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கவுன்சிலர்கள் ஷேக் ஹுசைன், முகமது பாதுஷா ஆகியோர் பேசினர். அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கை நிறைவேற்ற விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் செகா னாஸ் ஆபிதா கூறி னார்.
பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, மேலாளர் தமிழ்ச் செல்வன், உதவியாளர் உதயா, நகராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் எம்.எம்.கே. முகமது காசிம், சுஐபு, மீரான் அலி, நசீருதீன், பயாஸ்தீன், நவாஸ் உள்பட அனைத்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- மேட்டூர் அருகே பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி 7-வது வார்டு கருப்புரெட்டியூர் வண்டிக்காரன்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பாதை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
- பொதுமக்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றம்.
சேலம்:
மேட்டூர் அருகே பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி 7-வது வார்டு கருப்புரெட்டியூர் வண்டிக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுவாதி. இவரும், அப்பகுதி பொதுமக்களும் தங்களுக்கு பாதை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி மாவட்ட கலெக்டர் கார்மேகம் மேற்பார்வையில் சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர், மேட்டூர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர், 7-வது வார்டு உறுப்பினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட அலுவலர்கள் கடந்த 11-ந் தேதி சம்பந்தப்பட்ட வண்டிக்காரன்காடு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்களுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று பொதுமக்களின் வசதிக்காக ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரி வித்துள்ளார்.
முன்னதாக, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மண் சாலை அமைத்து கொடுக்கும் பணியை தொடங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்தநிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை 8மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு-20,அவினாசி-38.40, பல்லடம் -45, ஊத்துக்குளி-4, காங்கயம்-1.40, தாராபுரம்-20, மூலனூர்-40, குண்டடம்-27, அமராவதி அணை-2, உடுமலை-2, மடத்துக்குளம்-4, திருப்பூர் கலெக்டரேட்- 16, வெள்ள கோவில்-6, திருப்பூர் தெற்கு-5, கலெக்டர் முகாம் அலுவலகம்-45.50. மொத்தம் 276.30 மி.மீ. மழை பெய்துள்ளது.
இதனிடையே திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணியில் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன.
- 3 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க மண் பரிசோதனை பணி தீவிரம்
- போக்குவரத்து நெரிசலை தவிர்க்க
திருச்சி:
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.ேநரு, திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் மூன்று இடங்களில் உயர் மட்டப் பாலம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பும் வெளியானது. தமிழக நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்டம் சார்பில் அண்ணாசிலை முதல் ஜங்சன் மற்றம் போஸ்ட் ஆபீஸ் முதல் அரசு தலைமை மருத்துவமனை வரை என இரண்டு உயர்மட்ட பாலம் பணிகளையும், தமிழக நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்டம் சார்ப்பில் காவரி பாலம் முதல் குடமுருட்டி வரையிலான உயர்மட்டப் பாலப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன..
விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக நிலம் ஆர்ஜித கணக்கெடுப்பு மற்றும் மண்ணின் உறுதித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர் மட்டப் பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 2 வாரங்களாக இந்த வழித்தடங்களில் 25 முதல் 50 மீட்டர் வரையிலான இடைவெளியில் மண் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக அண்ணா சிலை முதல் ஜங்சன் வரை ரூ.2.7 கோடியும், போஸ்ட் ஆபீஸ் முதல் அரசு மருத்துவமனை வரையில் ரூ.1.24 கோடியும், காவிரி பாலம் முதல் குடமுருட்டி வரை ரூ.1.20 கோடி என மொத்தம் ரூ.5.14 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும் போது, உயர்மட்ட பாலம் அமைக்க நில ஆர்ஜிதம் செய்வதற்கான கணக்கெடுப்பு பணிகள், மண் பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். டி.பி.ஆர். தயாரான பிறகுதான் பாலம் கட்ட எத்தனை கோடி செலவாகும் என தெரியவரும்.
மேலும் திருச்சி நகரில் உள்ள ப ாலக்கரை, புத்தூர் சுரங்கப்பாதைகளுக்கு மேல் உயர்மட்ட பாலம் அமைய உள்ளது. 9 மீட்டர் அகலத்தில் இரு வழிப்பாதையில் இப்பாலம் அமைக்கிறது. இந்த உயர்மட்டப்பாலம் வந்தால் திருச்சியின் தோற்றம் புதுப்பொலிவு பெறுவதோடு, போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்றார்.
- மாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது.
- ரூ.10 லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது. இது சிறுக, சிறுக மண் அரிப்பு ஏற்பட்டு இந்த கரைகள் முற்றிலும் சேதமானது. இதனால் மழை நீர் வந்தால் தேங்காமல் வீணாக சென்று விடுகிறது.
இதனை புதிதாக கரை கட்டி தண்ணீர் சேமித்து வைக்க இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, ஊராட்சி தலைவி புஷ்பா இதற்கான முயற்சி எடுத்து, ரூ.10 லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏரியில் மழை நீர் நின்றால், இப்ப குதி விவசாய கிணறுகளில் நீர் பெருகும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து போர்வெல்களில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலை யில் இருக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் கவலையில்லாமல் விவசாயம் செய்ய உதவியாக இருக்கும். கால்ந டைகளுக்கும் போதுமான குடிநீர் கிடைக்கும்.
- இரண்டு காவலர்கள் முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காரணம் இல்லாமல் வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சீர்காழி :
தமிழகத்தில் கோவையில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் என ஏழு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சரண்ராஜ் மற்றும் தென் பாதி வ.உ.சி தெருவில் வசிக்கும் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், திருவெண்காடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரது இல்லங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
1 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு காவலர் என இரண்டு காவலர்கள் முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரம் போலீஸ் ஒன்று பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் தேவை இன்றி உரிய காரணங்கள் இல்லாமல் வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சீர்காழி பகுதியில் பெட்ரோல் பங்குகளில் கேன்கள் மற்றும் பாட்டில்களில் சில்லரை பெட்ரோல் விற்பனை செய்ய காவல்துறை தடை செய்து அறிவித்துள்ளது.
இதனால் பெட்ரோல் நிலையங்களில் சில்லறை பெட்ரோல் விற்பனை இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
- கரியகோவில் அணைக்கு தினமும் 50 கன அடி நீர் கூடுதலாக கிடைக்கும் கைக்கான்வளவு திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.
- இதில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பாப்பநாயக்கன்பட்டியில் 188.76 ஏக்கரில் கரியகோவில் அணை கட்டப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழ்நாட்டில் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பாபநாசம், பெருஞ்சாணி, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, முல்லைப் பெரியாறு, திருமூர்த்தி, வைகை உள்பட 100-க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகள் தமிழகத்தின் நீர்வளத்தை பாதுகாக்கின்றன.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கரியகோவில், ஆனைமடுவு உள்ளிட்ட முக்கிய அணைகள் உள்ளது. இதில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பாப்பநாயக்கன்பட்டியில் 188.76 ஏக்கரில் கரியகோவில் அணை கட்டப்பட்டுள்ளது. அதன்மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணைக்கு கூடுதல் தண்ணீர் பெற 2020-ல் கைக்கான்வளவு நீரோடை திட்டம் அமைப்பது குறித்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். ெதாடர்ந்து 7.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணியை 18 மாதங்களில் முடிக்க அரசு அறிவுறுத்தியது.
மதகுகள் அமைப்பு
அதன்படி 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணி தொடங்கப்பட்டது. செப்டம்பர் பருவ மழைக்கு பின், 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் பணி தொடங்கப்பட்டது. கரியகோவில் அணைக்கு கைக்கான்வளவு நீரோடையில் இருந்து புதிதாக ஓடை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. அங்கு மதகுகள் அமைத்து, அைணக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் (நீர்வளம்) கூறியதாவது:-
கைக்கான்வளவு திட்டத்தில் சீரான இடைவெளியில் 8 தொட்டிகள் அமைத்து, அங்கிருந்து நீர் வர, 295 மீட்டர் தூரம் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்படுகிறது. கால்வாய் கட்டுமானப்பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. குறிப்பாக 90 சதவீத பணி முடிந்துள்ளது.
நவம்பரில்...
நவம்பரில் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் கரியகோவில் அணைக்கு பருவ மழையின்போது தினமும் 50 கன அடி நீர் கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியை மேற்கொள்ள நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வடசேரி பஸ் நிலையத்தில் தூய்மை பணியை மேயர் மகேஷ் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த எந்திரத்தின் மூலமாக கழிவறைகள் நவீன முறையில் சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மேயர் மகேஷ் பொன்னப்ப நாடார் காலனியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான சாலை பணியையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆணை யாளர் ஆனந்த மோகன்,தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர் நவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . வ.உ.சி. பிறந்த நாளையொட்டி தாழக்குடியில் உள்ள அவரது சிலைக்கு மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- கழிவு நீர் வாய்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது
- 9-வது வார்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடந்தது
கரூர்:
கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் உள்ள குளத்து பாளையம், திட்ட சாலை, பெரியார் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, சந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவையால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன் மழை நீர் வெளியேறியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை பார்வையிட்டு அதனை மாநகராட்சியின் சிறிய பொக்லைன் இயந்திரம் வரவழைத்து உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய்களை சரி செய்து கொடுத்த மாநகராட்சி உறுப்பினர் ஸ்டீபன் பாபு க்கு நன்றி கூறினர்