search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225386"

    • ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதை வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் நாளை (19-ந் தேதி) முதல் ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திலிருந்து ஈரோடு வரும் அனைத்து பஸ்கள் மட்டும் அண்ணமார் பெட்ரோல் பங்க் வந்தடைந்து நாடார் மேட்டிலிருந்து இடது புறமாக திரும்பி ரீட்டா பள்ளி, சாஸ்திரி நகர் மற்றும் ரெயில்வே மேம்பாலம் வழியாக வந்து சென்னிமலை ரோடு வழியாக மாநகர் பகுதியை அடையலாம்.

    இதேபோல் ஈரோட்டில் இருந்து கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் காளைமாடு சிலை, லோட்டஸ் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

    அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளும் ரிங்ரோடு வழியாக முத்துகவுண்டன் பாளையம், ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் ஆர்ட்ஸ் காலேஜ் வழியாக திண்டல் வந்தடைந்து மாநகருக்குள் செல்லலாம்.

    இதேபோல் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதையான அண்ணமார் பெட்ரோல் பங்க், நாடார் மேடு, சாஸ்திரி நகர் வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பணி நடந்தது.
    • கலெக்டர் மணிவண்ணன் தலைமையில், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இருந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியினை சரிபார்த்து, பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நடந்தது.

    கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன.

    இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒன்றான வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியினை சரிபார்த்து பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடடுள்ளது.

    அதனடிப்படையில், 1,288 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியும், 17 வாக்குப்பதிவு எந்திரங்களும், 49 கட்டுப்பாட்டுக்கருவிகள் என மொத்தம் 1,354 எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த பணிகள் சிவகங்கை வட்டாட்சியார் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்வில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர்சுகிதா, வட்டாட்சியர்கள் தங்கமணி, ராஜா உட்பட அரசியல் கட்சிப்பிரமுகர்கள் கலந்து கொண்டனா்.

    நரசிங்கபுரம் நகராட்சியில் கூட்டு துப்புரவு பணி நடந்தது.

    ஆத்தூர்:

    எனது குப்பை எனது பொறுப்பு என்ற தமிழக அரசின் திட்டப்படி நரசிங்கபுரம் நகராட்சியில் கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர், நகர்மன்ற தலைவர் அலெக்சாண்டர், நகர்மன்ற துணைத்தலைவர் தர்மராஜ், நகர செயலாளர் வேல்முருகன், 4-வது வார்டு உறுப்பினர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    நரசிங்கபுரம் நகராட்சி 4-வது வார்டில் உள்ள தக்காளி மண்டி பின்புறம் உள்ள நகராட்சி பூங்கா இடத்தில் குப்பைகள் தேங்கி கிடந்தன.

    தூய்மை பணியாளர்களை கொண்டு அந்த குப்பைகள் அகற்றப்பட்டன. பின்பு அந்த இடத்தில் மரக்கன்று நடப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கும் மற்றும் அனைத்து நபர்களுக்கும் 4-வது வார்டு உறுப்பினர் ஜோதி சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது.

    • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முன்னாள் மக்கள் நல பணியாளர்களுக்கு பணி ஒதுக்கப்படுகிறது.
    • 13-ந் தேதி பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நலப்பணியாளர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    எனவே 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்கள் விருப்ப கடிதம் சமர்ப்பித்து பணியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இதுதொடர்பாக தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்பட உள்ள பணியில் சேர்ந்து பணியாற்றுவதற்கான விருப்ப கடிதத்தையும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) யிடம் வருகிற 13 முதல் 18-ந் தேதிக்குள் வழங்கிட தெரிவிக்கப்படுகிறது.

    அவ்வாறு விண்ணப்பிப் பவர்கள் மட்டும் இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால் இந்த அறிவிப்பிற்கேற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • கோடை விடுமுறை முடிந்து 13-ந் தேதி திறப்பு பள்ளி வகுப்பறைகள் தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • இதேபோல் பள்ளி திறப்பை ஒட்டி மாணவ ர்களின் பள்ளி பேக், பள்ளி சீருடை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் மாணவர்க ளுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதை யடுத்து பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தப்படு த்தும் பணி நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து பள்ளிகளை தயார்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    பள்ளி வளாகத்தில் படர்ந்திருக்கும் மரம், செடி கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது. வகுப்பறையில் கிருமி நாசினி தெளிக்க ப்பட்டு வருகிறது. மாணவ ர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தூய்மை ப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மாணவர்கள் குடிநீர் வசதிக்காக நீர்த்தேக்க தொட்டியில் மருந்து தெளித்து அதை சுத்த மாக்கும் பணி நடை பெறுகிறது. அந்தந்த பள்ளி களில் அந்தந்த தலைமை யாசிரியர்கள் மேற்பா ர்வையில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் பள்ளி திறப்பை ஒட்டி மாணவ ர்களின் பள்ளி பேக், பள்ளி சீருடை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    • வருவாய்த்துறை அமைச்சர் உத்தரவின்படி ரூ. 2.42 கோடி செலவில் தொடங்கியது.
    • இந்த பாலப்பணி இரவு பகலாக நடந்து வருகிறது. தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலம் ஒரு கோடியே 32 லட்சம் செலவில் நடக்கிறது. இந்தப் பாலம் 40 அடி நீளத்திற்கும் 32 அடி அகலத்திற்கும் அமைய உள்ளது.

    நாகர்கோவில்:

    தேரூரில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்கள் தேரூரில் உள்ள பெரிய குளத்திலிருந்து பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளத்திற்கு தட்டையார் குளம், மாணிக்க புத்தேரி குளம் ஆகிய குளத்திலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தேரூர் குளத்தின் நடுவே வெள்ளமடத்திலிருந்து சுசீந்திரம் செல்லும் சாலை உள்ளது. தேரூர் குளம் மேற்கு பகுதியில் இருந்து தேரூர் கிழக்கு பகுதியில் உள்ள குளத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் சாலையின் குருக்கே இரு இடங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    இந்த குழாய்கள் அடைப்பட்டு தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. தேரூர்குளம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் தண்ணீரை வற்றவைத்து குழாயில் அடைபட்டிருந்த அடைப்பை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழையால் இந்த குளத்தின் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த இடத்தை பார்வையிட்ட வருவாய்த்துறை அமைச்சர் 2 இடங்களில் பாலம் அமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தேரூர் குளத்தின் இரு இடங்களில் பாலம் அமைக்கும் பணி ரூ. 2 கோடியே 42 லட்சம் செலவில் தொடங்கியது.

    தற்போது இந்த பாலப்பணி இரவு பகலாக நடந்து வருகிறது. தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலம் ஒரு கோடியே 32 லட்சம் செலவில் நடக்கிறது. இந்தப் பாலம் 40 அடி நீளத்திற்கும் 32 அடி அகலத்திற்கும் அமைய உள்ளது.

    வட்டார கல்வி அலுவலகத்தின் சார்பாக தலைமை சிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் பணி நிறைவு பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலகத்தின் சார்பில் பணிநிறைவு பாராட்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீனிவாஸ், மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    பணி நிறைவு பெறும் கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம், பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.மேலும் இவர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். முக்கியமாக கொரோனா காலத்தில் வீடு வீடாகச் சென்று பாடம் நடத்தியது, மரக்கன்றுகள் வழங்கியது, மாணவர்களுக்கு உண்டியல் பரிசுத்தொகை வழங்கியது போன்றவற்றால் பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றார்.

    பள்ளி இறுதி நாளில் பள்ளியில் உள்ள அனைத்து இடங்களிலும் கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இவரது சேவையை பாராட்டி என்.டி.செல்வத்திற்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் கலெக்டர் ரோகிணியிடம் 2 விருதுகளையும், பல்வேறு அமைப்புகள் மூலம் நிறைய விருதுகள் பெற்றவர்.

    இவருக்கும், வாழக்கோம்பை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பச்சமுத்து, ஆனையாம்பட்டி புதூர் தலைமை ஆசிரியர் நாஸ்லின்பேகம் ஆகியோருக்கு வட்டாரக்கல்வி அலுவலர் ஸ்ரீனிவாஸ், வட்டாரக் அலுவலர் மகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டிப் பேசினார்கள்.

    பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர்களான செல்வம், பச்சமுத்து, நாஸ்லின்பேகம் ஏற்புரை நிகழ்த்தினர். கெங்கவல்லி வட்டாரத்தில் வட்டாரக்கல்வி அலுவலர்களால், ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் முதல் விழா என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    மத்திய அரசின் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது.

    சேலம்:

    இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் உள்ள பொது மருத்துவ அலுவலர், கோட்ட உதவி மருத்துவ அலுவலர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு -2022 அறிவிப்பு யு.பி.எஸ்.சி. கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி அறிவித்தது. இதற்கான கல்வித் தகுதி எம்.பி.பி.எஸ். படித்திருக்க வேண்டும்.

    எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்தகைய விண்ணப்ப–தாரர்கள் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வில் தேர்ச்சி பெற்றதும் எம்.பி.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் ரத்து செய்யப்படும்.

    சேலம், நாமக்கல்..

    இதனை தொடர்ந்து மத்திய அரசின் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் படித்து முடித்த டாக்டர்கள் பலர் விண்ணப்பித்தனர்.

    குறிப்பாக தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள், கூடுதல் மருத்துவ கல்வி தகுதி பெற்ற டாக்டர்கள், மருத்துவ துறைகளில் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள், மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வரும் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

    ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. மேலும் விண்ணப்பங்களை 04.05.2022 முதல் 10.05.2022 மாலை 6 மணி வரை திரும்ப பெற வாய்ப்பும் வழங்கப்பட்டது.

    அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்வு இந்த நிலையில் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு மையம் அமைத்துள்ளது. இதனால் இந்த 2 தேர்வு மையங்களிலும் தேர்வு நாளன்று டாக்டர்கள் கூட்டம் அதிக எண்ணக்கையில் இருக்கும். விண்ணப்பதாரர்களுக்கு இ-அட்மிட் கார்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.

    தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டுடன் ஒரு புகைப்பட அடையாள அட்டை கையில் வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் அல்லது மாநில, மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

    இந்த புகைப்பட அடையாள அட்டையின் விவரங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தபோது கொடுத்த தகவலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    ×