என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 225460"
- பிரண்டைத் துவையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- பிரண்டைத் துவையலை 4 நாட்கள் வரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை - 1 கட்டு
உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 துண்டு
காய்ந்த மிளகாய் - 5 முதல் 6
தேங்காய் - 1 துண்டு
புளி - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கால் டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் பூண்டு, இஞ்சி, புளி, பெருங்காயத்தூள், தேங்காய் என ஒவ்வொன்றாக வறுத்து ஆற வைக்கவும்.
அடுத்து அதில் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து வதக்கவும். பிரண்டையை நன்கு வதக்க வேண்டும். பிரண்டையை வதக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
சூடு ஆறிய பின் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். சுவையான சத்தான பிரண்டை துவையல் தயார்.
- சோயாவில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று சோயா லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீல்மேக்கர் - கால் கப்
உருளைக்கிழங்கு - 1
ப.பட்டாணி - ஒரு கைப்பிடி
பெ.வெங்காயம் - 1
கேரட் - 1
குடை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
ஐஸ் குச்சிகள் - 5
செய்முறை :
வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட் துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து அதில் சோயாவை போட்டு கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் தண்ணீரை அப்புறப்படுத்திவிட்டு மிக்சியில் லேசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய், கேரட், பட்டாணியை கொட்டி வதக்கவும்.
அவை நன்கு வதங்கியதும் சோயாவை போட்டு கிளறி இறக்கவும்.
நன்கு ஆறியதும் சோயா கலவையுடன் மசித்த உருளைக்கிழங்கு, மிளகு தூள் கலந்து உருண்டைகளாக தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொரித் தெடுக்கவும்.
பின்னர் உருண்டைகளின் நடுவில் ஐஸ் குச்சிகளை சொருகினால் சோயா லாலிபாப் ரெடி.
- குழந்தைகளுக்கு காலிபிளவர் சில்லி மிகவும் பிடிக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிபிளவர் - 1
மைதா - அரை கப்
சோள மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
செய்முறை :
காலி பிளவர் பூவை தனித்தனியாக பிரித்தெடுத்துக்கொள்ளவும்.
கடாயில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து காலிபிளவரை கொட்டி சிறிது நேரம் வேகவைத்து இறக்கவும்.
வேக வைத்த காலிபிளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரட்டி வைத்த காலிபிளவர் பூவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
இப்போது ருசியான காலிபிளவர் சில்லி ரெடி.
- முளைகட்டிய கடலை பருப்பை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.
- கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்து அதிகமுள்ளது.
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - 150 கிராம்,
பெரிய வெங்காயம் - 2 ,
பெரிய தக்காளி - ஒன்று,
கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 5,
லவங்கம், பட்டை, ஏலக்காய் – தலா 2,
பிரிஞ்சி இலை - ஒன்று,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - விருப்பத்திற்கேற்ப,
பொட்டுக் கடலை மாவு - 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
பிறகு அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன், வேக வைத்த கடலைப் பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
கடைசியில் பொட்டுக் கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பத்துடன் பரிமாறலாம்.
- மாம்பழம், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடியது.
- ஊறுகாய், அல்வா, பர்பி, சாக்லெட் என்று ஏராளமான உணவுகளை மாம்பழத்தில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மாம்பழத்தை பொரிப்பதற்கு:
மாம்பழம் (விருப்பமான ரகம்) - 1
மைதா - ¼ கப்
சோள மாவு - ¼ கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
மசாலா தயாரிப்பதற்கு:
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
முந்திரி - 10
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
இதர பொருட்கள்:
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா மற்றும் சீரகப்பொடி தலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
கசூரி மேத்தி - சிறிதளவு
பிரஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், மைதா, சோளமாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கட்டியில்லாமல், தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இதில், நறுக்கி வைத்துள்ள மாம்பழத் துண்டுகளைப் போட்டு, புரட்டிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய்யை சூடாக்க வேண்டும். அதில் மாம்பழத் துண்டுகளைப் போட்டு, மேற்புறம் மட்டும் பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும்.
இந்த மேல்மாவில் விரும்பினால், முட்டையின் வெள்ளைக் கருவையும் கலந்துகொள்ளலாம்.
பின்னர் அடுப்பில், மற்றொரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு வெண்ணெய் போட்டு, உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, முந்திரி, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சூடு ஆறியதும், சிறிதளவு தண்ணீர் விட்டு, பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் மீண்டும், வாணலியை வைத்து, அதில் வெண்ணெய் போட்டு, உருகியதும், காஷ்மீர் மிளகாய்த் தூள் கலந்து 30 விநாடிகள் வதக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா மற்றும் சீரகத்தூள், தேவையான உப்பு கலந்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.
5 நிமிடம் கழித்து, மசாலாவின் ஓரத்தில் வெண்ணெய் பிரிந்து வரும்.
அந்த சமயத்தில், பொரித்த மாம்பழத் துண்டுகளை அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
பின்பு அதில் கசூரி மேத்தி, பிரஷ் கிரீம் கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
இப்போது சுவையான 'மேங்கோ பட்டர் மசாலா' ரெடி.
- வாயு தொல்லை இருப்பவர்கள் இந்த துவையல் சாப்பிடலாம்.
- இந்த துவையலை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 4,
மாங்காய் இஞ்சி - 50 கிராம்,
கொத்துமல்லித் தழை - கைப்பிடி,
பச்சை மிளகாய் - 2,
புளி - சிறு அளவு,
துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும்.
நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு: இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான 'மாங்காய் இஞ்சி - நெல்லிக்காய் சாதம்' தயார்.
- இந்த ரெசிபி சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
- சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கீமா - 1 கிலோ (நன்கு நீரில் அலசிக் கொள்ளவும்)
வெண்ணெய் - 1 கப்
தயிர் - 500 கிராம்
இஞ்சி பேஸ்ட் - 3 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 2
கிராம்பு - 5-7
பட்டை - 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் - 2
பச்சை ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 6-7
பிரியாணி இலை - 2
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கீமாவை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் வெண்ணெயை சேர்த்து நன்கு பிரட்டி, மற்றொரு அடுப்பில் உள்ள வாணலியில் போட்டு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு கீமாவை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து கீமா தயிரை முற்றிலும் உறிஞ்சியதும், அடுப்பில் இருந்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பட்டர் கீமா மசாலா ரெடி!!!
- குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும்.
- சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும்.
தேவையான பொருட்கள்
சுறா மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 4
பூண்டு - 20 பல் பெரியது
இஞ்சி - 1 பெரிய துண்டு
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - ½ ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கடுகு - ½ ஸ்பூன்
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.
இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும்.
மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.
மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும். இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும்.
இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.
- குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் விங்ஸ் - 7
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - பாதி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
மைதா மாவு - 1/4 கப்
சோள மாவு - 1/4 கப்
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* சிக்கன் விங்ஸ்களை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அந்த சிக்கன் துண்டுகளில் மூன்று பாகம் இருக்கும் அதில் கீழே இருக்கும் சிறிய பகுதியை வெட்டி விடவும், அதன் பின்னர் அதில் இருக்கும் எலும்புகளின் சதையை கத்தியால் மேலே தள்ளி லாலிபாப் போன்ற வடிவத்திற்கு கொண்டு வரவும்.
* ஒரு பாத்திரத்தில், சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, அரை எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
* இதில் தயார் செய்து வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, அவற்றின் அனைத்து பகுதிகளிலும் மசாலா படுமாறு நன்றாக தடவி 30 நிமிடத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
* இன்னொரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, முட்டை, சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஓரளவிற்கு கெட்டியான பதத்தில் கிளறி கொள்ள வேண்டும்.
* ஊற வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை இந்த கலவையில் முக்கி, எண்ணெயில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
* தற்போது சுவையான ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் லாலிபாப் தயார்.
- வெறும் பாலக்கீரை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது.
- கீரையில் முட்டை சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை - 2 கப்
முட்டை -3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 1 கொத்து
பச்சைமிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
செய்முறை :
பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .
வெங்காயம் , தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய் , கறிவேப்பில்லை, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.(உப்பு சேர்க்கும் பொழுது கவனம் தேவை ஏனெனில் ஏற்கனவே கீரைக்கு சேர்த்துள்ளோம் அதை நினைவில் கொள்ளவும்). முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார் .
சுவையான பாலக் முட்டை புர்ஜி தயார் !!!!
- கத்திரிக்காயை வைத்து பல சமையல் வகைகள் செய்யலாம்.
- இன்று கத்திரிக்காய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 200 கிராம்
தக்காளி - 3
பெ. வெங்காயம் - 1
ப. மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 4
கடுகு, உளுந்து - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தே.அளவு
கறிவேப்பில்லை - தே.அளவு
உப்பு - தே.அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கத்திரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், தக்காளி, ப. மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
பின்னர் ஆவி அடங்கியதும் தக்காளியின் தோலை நீக்கிய பின் மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை தேவையான தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இப்பொழுது இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி தயார்.
- பச்சை பயிறு கிரேவி குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- பச்சை பயறில் நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்தது
தேவையான பொருட்கள்
பச்சை பயறு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு, இஞ்சி விழுது - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ மேஜைக்கரண்டி
சீரகம் - ½ மேஜைக்கரண்டி
கரம் மசாலா - 1 மேஜைக்கரண்டி
மல்லி தூள் - 1 மேஜைக்கரண்டி
சீரக தூள் - ½ மேஜைக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1
மிளகாய் தூள் - தேவையான அளவு
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை பயறை நன்கு சுத்தம் செய்து கழுவி 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, சீரகத்தை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி குழையும் வரை வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்ததும் நாம் ஊற வைத்திருக்கும் பச்சை பயரை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி போட்டு சுமார் 5 விசில் வரும் வரை வேக விடவும்.
5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அதை எடுத்து சப்பாத்தியுடன் சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சத்தான பச்சை பயறு கிரேவி தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்