என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 225460"
- வித விதமான உணவு வகைகளையே அனைவரும் விரும்புவர்.
- சைவ உணவில் வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 1
சேனைக்கிழங்கு -1/2
மிளகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 கப்
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாழைக்காய் மற்றும் சேனைக்கிழங்கை தோல் நீக்கி நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் மற்றும் மிளகு தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.
முக்கால் கப் தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
நன்கு வெந்து வந்த சேனை மற்றும் வாழைக்காயில், அரைத்த விழுதுகளை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
தேங்காய் கலவை மற்றும் காய்கள் ஒன்றோடு ஒன்று நன்கு சேருமாறு வரும் வரையில் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
பிறகு, ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் மீதமுள்ள தேங்காய் துருவலை சேர்த்து கொண்டு சிவக்க வறுக்க வேண்டும்.
வறுத்தெடுத்த இந்த தாளிப்பு கலவையை குழம்பு உடன் சேர்த்து கொள்ளவும்.
பிறகு நன்றாக கிளறி கொண்டு அடுப்பை அணைத்து விடவும்.
தற்போது சுவையான வாழைக்காய் சேனைக்கிழங்கு எரிசேரி தயார்.
- நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
- கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 10
கொத்தமல்லித்தழை - 1 கப்
கறிவேப்பிலை - ¼ கப்
பச்சை மிளகாய் - 7
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய் - சிறு துண்டு
கடுகு - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
நெல்லிக்காயை சுத்தம் செய்து கொட்டைகள் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். மிதமான தீயில் நன்றாக வதக்கிய பின்பு அடுப்பை அணைக்கவும்.
பிறகு அதில் நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கலக்கவும்.
கலவை ஆறியதும் பசை போல அரைத்துக்கொள்ளவும்.
கடைசியாக உப்பு சேர்த்துக் கலக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.
இதை, தயாரித்து வைத்திருக்கும் கலவையில் கொட்டிக் கிளறவும். இப்போது 'நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி' தயார்.
- செரிமானக் கோளாறை நீக்கும்.
- சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய முறையில் இனிப்பு, புளிப்பு, உப்பு மற்றும் காரம் என நான்கு சுவையையும் ஒன்றாகக் கலந்து தயாரிக்கப்படுவது 'நெல்லி சுண்டா'. ஊறுகாயைக் குறிக்கும் சொல் 'சுண்டா'. 'நெல்லி சுண்டா' நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 7
வெல்லம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ¼ தேக்கரண்டி
சீரகத்தூள் - ½ தேக்கரண்டி
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
உப்பு - ½ தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காயை நன்றாக சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும். பின்பு அதை ஆறவைத்து விதைகளை நீக்கி துருவிக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில், நெல்லிக்காய் துருவலுடன் வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
வெல்லம் கரைந்த பிறகு அதில் இஞ்சி விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நெல்லிக்காய் பொன்னிறமாக மாறும் வரை அடிப்பிடிக்கவிடாமல் கிளறவும்.
பின்னர் அந்தக் கலவையில் பெருங்காயத்தூள் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைக்கவும்.
இப்போது சுவையான 'நெல்லி சுண்டா' தயார்.
இதைக் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி தினமும் சிறிது சாப்பிட்டு வரலாம்.
- காலிஃப்ளவரில் புரதச்சத்து, நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் - 1 பூ
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு.
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து வைக்கவும்.
கொதிக்க வைத்த நீரில் காலிஃப்ளவர், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் காலிஃப்ளவர் துண்டுகள் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.
அடுத்து அதில் மிளகாய்த்தூள், மிளகு, சீரகத்தூள், மல்லித்தூள் அனைத்தும் சேர்த்து பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
உப்பு சிறிது சேர்த்து, சரி பார்க்கவும்.
மசாலா வாடை நன்கு அடங்கி காலிஃப்ளவர் சுருண்டு வரும் போது நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டு அடுப்பை அணைக்கவும்.
சூப்பரான காலிஃப்ளவர் சுக்கா ரெடி.
- பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும்.
- இது பற்கள், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 2 பல்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
* இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
* பூண்டை தோல் நீக்கி நசுக்கிகொள்ளவும்.
* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* பன்னீரை துருவிக்கொள்ளவும்.
* ஒரு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் நசுக்கிய பூண்டு, இஞ்சி துருவல், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
* அடுத்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
* பிறகு துருவி வைத்துள்ள பன்னீர் சேர்த்து அதனுடன் மிளகுத் தூள், சேர்த்து கிளறி கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.
* இப்பொழுது சுவையான பன்னீர் பொடிமாஸ் தயார்.
- வித்தியாசமான இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கியதும் மசாலா தூள் வகைகள் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன் வேகவைத்து உதிர்த்த சிக்கன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
தண்ணீர் சுண்டி சிக்கன் சுருள வெந்தவுடன் மிளகு தூள் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
சுவைாயன பிச்சி போட்ட சிக்கன் வறுவல் ரெடி.
- இதயநோய் உள்ளவர்கள் வாரம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- டபுள் பீன்ஸில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
டபுள் பீன்ஸ் - 150 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்,
தேங்காய் - 5 சில்லு,
காய்ந்த மிளகாய் - 3,
வேர்க்கடலை - ஒரு ஸ்பூன்,
பொட்டுக்கடலை - ஒரு ஸ்பூன்,
சீரகம் - அரை ஸ்பூன்,
சோம்பு - ஒன்றரை ஸ்பூன்,
தனியா - அரை ஸ்பூன்,
கரம் மசாலா - அரை ஸ்பூன்,
மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - - ஒரு கொத்து,
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
டபுள் பீன்ஸ் பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்பூன் வேர்க்கடலையை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
தேங்காயைத் துருவி கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் ஊற வைத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அரை ஸ்பூன் சோம்பு, துருவிய தேங்காய், தனியா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஊறவைத்த டபுள் பீன்ஸை இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
பிறகு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்னர் குக்கரை மூடி, 6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியைத் திறந்து கொத்தமல்லி தழைகளைத் தூவி, ஒரு முறை கலந்து விட்டால் போதும்.
சுவையான டபுள் பீன்ஸ் கிரேவி தயாராகிவிடும்.
- சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இந்த ரெசிபி அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் கீமா - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
பட்டை, கிராம், ஏலக்காய் - சிறிதளவு
செய்முறை :
சிக்கன் கீமாவை சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி,ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கிய பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள் தயிர் சேர்த்து கிளறி விடவும்.
அடுத்து அதில் சிக்கனை சேர்த்து கிண்டி விட்டு மூடி போட்டு வேக விடவும்..
அடுத்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
ஒரு 15 நிமிடங்களுக்கு நீர் வற்றி திக்கான பதம் வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
இப்பொழுது நமக்கு சுவையான சிக்கன் கீமா ரெசிபி ரெடியாகிவிட்டது.
- பன்னீரில் கால்சியம் நிறைந்துள்ளது.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
வறுக்க:
தனியா - 2 1/2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்- 12
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200 கிராம்
தயிர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு
தனியா தூள் - அரை டீஸ்பூன்
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை
புளியை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாகநறுக்கி கொள்ளவும்.
பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
காஷ்மீர் மிளகாவை 1மணி நேரம் சூடு தண்ணிரில் போட்டு ஊற வைக்கவும்.
வாணெலியில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக போட்டு பச்சை வாசனை போகும் வரை வறுத்து ஆற வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் ஊறவைத்த மிளகாய், வறுத்த தனியா, வெந்தயம், மிளகு, சீரகம், காஷ்மீர் மிளகாய், கடுகு, 1 1/2 தயிர், புளிக்கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.
வாணெலியில் நெய்யை ஊற்றி சூடானதும் பன்னீரை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
வாணெலியில் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அரைத்த வைத்த பேஸ்டை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தேவையான உப்பு சேர்த்து 3 ஸ்பூன் நெய் ஊற்றி 5 நிமிடம் நன்றாக கிளற வேண்டும்.
பின் தனியா தூள், கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.
அத்துடன் வறுத்த பன்னீர் சேர்த்து பொறுமையாக கிளற வேண்டும்.
கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான பன்னீர் நெய் ரோஸ்ட் ரெடி.
- உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று சில்லி பொட்டேட்டோ செய்முறை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 5
சோள மாவு - 1/4 கப்
மைதா - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - விருப்பத்திற்கேற்ப
சாஸ் செய்ய
நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
நறுக்கிய குடைமிளகாய் - 1/2 கப்
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் சாஸ் - 1 மேசைக்கரண்டி
தக்காளி கெட்ச்அப் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
செய்முறை
உருளைக்கிழங்கு தோல்களை சீவி விட்டு நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் சோள மாவு, மைதா மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மிளகுத்தூள் மற்றும் தண்ணீரை படி படியாக சேர்த்து கரைத்துக்கொள்ளவும். சற்று தளர்வாக கரைத்து கொள்ளவும்.
நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கை கரைத்த மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் குடை மிளகாய், சில்லி சாஸ், பச்சை மிளகாய் சாஸ், தக்காளி கெட்சப், மிளகாய்த்தூள், வினிகர் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதக்கிய பின்பு இதில் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து அதில் தண்ணீரில் கரைத்த சோள மாவு கரைசலை சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவை திக்கான பதம் வந்ததும் பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான சில்லி பொட்டேட்டோ தயார்.
- பன்னீரில் அதிக கால்சியம் சத்து உள்ளது.
- சாப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
மல்லித் தூள் -1 ஸ்பூன்
சீரகப் பொடி -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலா -1ஸ்பூன்.
முந்திரி - 3 ஸ்பூன்
பாதாம் -3 ஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலைகள் -1 ஸ்பூன்
க்ரீம் - ½ கப்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
சர்க்கரை -1 ஸ்பூன்
செய்முறை:
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் பன்னீரை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் வறுத்த பன்னீரை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.15 நிமிடம் கழித்து, தண்ணீரை பிழிந்து தனி பாத்திரத்தில் பன்னீரை மாற்றவும்.
முந்திரி, பாதாமை நீரில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து பச்சை வாசனை விலகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, அரைத்த முந்திரி, பாதாம் பேஸ்ட், உப்பு ஆகியவை சேர்த்து கிளறி விடவும்.
அடுத்து அதில் தேவையான நீர் சேர்த்து பன்னீரை போட்டு மிதமான சூட்டில் 20 நிமிடம் வேக வைக்கவும்.
கடைசியில் உலர்ந்த வெந்தய கீரை மற்றும் க்ரீமை சேர்த்து கிளறி இறக்கினால் சூடான மலாய் பன்னீர் ரெடி...
- உடலில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடை செய்கிறது.
- பாசி பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
தேங்காய் - 2 துண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 2 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - தாளிக்க
செய்முறை
பச்சை பயிறை நன்கு சுத்தம் செய்து, நீரில் 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அதனுடன் ஊற வைத்துள்ள பச்சை பயிறை போட்டு அதனுடன் பூண்டு, புளி, தேங்காய் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
பின் அதில் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
இப்போது சூப்பரான பச்சை பயறு சட்னி ரெடி!!!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்