என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 225460"
- இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும்.
- குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 5
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தாளிக்க
உப்பு - சுவைக்கு
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விட்டு கீறி வைக்கவும்.
வாணலியில் வெண்ணெய்விட்டு உருகியதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து முந்திரி பருப்பு சேர்க்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து குழைய வேக வைக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு இறக்கி ஆறவைக்கவும்.
பிறகு, இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மீண்டும் மற்றொரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..
பிறகு, அரைத்து வைத்த விழுது, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
கூடவே, முட்டையை நான்கு பக்கத்தில் கீறிவிட்டு கலவையுடன் சேர்த்து கிளறி சுமார் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
இந்த கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.
அவ்ளோதாங்க.. சுவையான முட்டை பட்டர் மசாலா ரெடி..!.
- இட்லி, தோசைக்கு இந்த சட்னி அருமையாக இருக்கும்.
- இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். ருசியோ அருமை.
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு பல் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
சுவையான காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி தயார்.
இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
- சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த ரெசிபி செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - சிறியது 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
கொத்தமல்லி - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
வறுத்து அரைப்பதற்கு...
மல்லி விதைகள் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய - 3
பட்டை - 1 இன்ச்
செய்முறை:
* வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* தக்காளியை அரைத்து கொள்ளவும்.
* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், குடைமிளகாயை சேர்த்து ஒருமுறை வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவி பின்னர் அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியைப் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் மீதமுள்ள வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
* பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, 1 கப் நீர் ஊற்றி மூடி வைத்து 10-15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் அல்லது குக்கரில் போட்டு 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.
* இறுதியில் குக்கரைத் திறந்து, கிரேவி அதிகம் வேண்டுமானால் தேவையான அளவு நீர் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு, வதக்கி வைத்துள்ள குடைமிளகாயையும் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கடாய் சிக்கன் கிரேவி தயார்.
- பன்னீரில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவும்.
- தினசரி பன்னீர் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 300 கிராம்
ஷாஹி ஜீரா - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 6
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 5
இஞ்சி நீளவாக்கில் - சிறிய துண்டு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு, நெய், எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க
பட்டை
கிராம்பு
பச்சை ஏலக்காய்
கருப்பு ஏலக்காய்
அன்னாசி பூ
பிரியாணி இலை
செய்முறை:
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் நறுக்கிய பன்னீரை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நெய்யில் வறுத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கடலை மாவு, உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
பின்பு அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போய் சுருண்டு வரும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் அடித்த தயிர், கரம் மசாலா தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட்ட பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து மசாலாவில் கஸ்தூரி மேத்தி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
கடைசியாக வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்..
இப்போது தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்.
- குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கனை ஊறவைக்க...
சிக்கன் லெக் பீஸ் - 7
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்
தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
முட்டை - 1
சோள மாவு - 1 டீஸ்பூன்
மைதா - 1 டீஸ்பூன்
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
சாஸ் செய்ய
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
இஞ்சி - 2
சிவப்பு மிளகாய் - 2
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்
தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
வெங்காய தால் - கார்னிஷ் செய்ய
செய்முறை
பூண்டு, சிவப்பு மிளகாய், வெங்காய தாள், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி கெட்ச்அப், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள், முட்டை, சோள மாவு மற்றும் மைதா மாவு போட்டு நன்றாக கலந்து அதில் சிக்கனை போட்டு நன்றாக பிரட்டி 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
ஒரு மணி நேரம் நன்றாக ஊறியதும், அதனை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். சிக்கன் பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும்.
ஒரு காடாயினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி, புதிய சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் சோயா சாஸ், மிளகாய் சாஸ் மற்றும் தக்காளி கெட்ச்அப் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கடைசியாக அதில் வறுத்த சிக்கன் போட்டு மசாலா சிக்கனை சேரும் படி 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
இறுதியாக, அதில் வெங்காய தாள் தூவி இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான சிக்கன் லாலிபாப் மசாலா ரெடி.
- இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
ஈரல் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 5
மிளகுத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த ஈரலை போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஈரல் கலவையை சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். அப்பொழுது தான் ஈரல் மென்மையாக இருக்கும். ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும்.
பின்னர் மீதமுள்ள மிளகு தூளை தூவி கரண்டி போட்டு கிளற வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
கடைசியாக அதன் மீது கொத்தமல்லித்தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.
- முருங்கை கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி துவையல் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
துளிர் முருங்கைக் கீரை - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 8
புளி - நெல்லிக்காய் அளவு
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பல்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில்காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்த பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து கிளறி கொள்ளவும்.
10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து வாணலியை இறக்கி விட வேண்டும்.
வதக்கிய பொருட்கள் ஆறியவுடன் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.
இந்த துவையலை சூடான சாதம், இட்லி, தோசை ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- பன்னீரில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவும்.
- சிறு வயதிலே மூட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பன்னீர் சிறந்த தீர்வு.
தேவையான பொருட்கள்
முட்டை - 5
பன்னீர் - அரை கப்
பச்சை மிளகாய் - 4
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், ப.மிளகாய், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடித்து வைத்த முட்டையை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான பன்னீர் ஆம்லெட் ரெடி.
- இந்த சட்னி இரண்டு நாட்கள் வரை கெட்டு போகாது.
- இட்லி தோசைக்குக் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வரமிளகாய் - 7 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
புளி - சிறிது,
பூண்டு - 5 பல்
உப்பு- 1 /2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய் என ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிச்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த அரைத்த சட்னியில் ஊற்றி கிளறி பரிமாறவும்.
இப்போது காரசாரமான மிளகாய் சட்னி தயார்.
இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.
- வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும்.
- முட்டைப் பிரியர்களுக்கு கரண்டி ஆம்லெட் நல்ல மாற்று.
தேவையான பொருட்கள் :
முட்டை - 1
சின்ன வெங்காயம் - கைப்பிடி
ப.மிளகாய் - 1
கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சின்னவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், கறிவேப்பிலை, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு குழிக்கரண்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.
இப்போது சூப்பரான கரண்டி ஆம்லெட் ரெடி.
ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இது போன்று செய்து கொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக் கல்லிலேயே குழிகள் அமைக்கப்பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.
- ஒரு முட்டையில் 72 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் இருக்கிறது.
- முட்டையை வைத்து ஏராளமான உணவு வகைகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
வேக வைத்த முட்டை- 4
சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள்- 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்
சோள மாவு- ஒரு டீஸ்பூன்
வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்
மல்லித் தூள்- 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு- 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை- சிறிதளவு
எண்ணெய்- தேவையான அளவு
மசாலா செய்ய :
வெங்காயம் - 1
சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட்- ஒரு டீஸ்பூன்
வெண்ணெய்- 2 டீஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு- 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை- சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
வேக வைத்த முட்டையை துருவிக் கொள்ளவும்.
துருவிய முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காய விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த கலவையில் சோள மாவு சேர்த்து உருண்டையாக பிடிக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
இதே தோசைக்கல்லில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.
இதனோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
ஒரு கொதி வந்தவுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடலாம்.
கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவவும்.
இந்த சமயத்தில் நாம் தயார் செய்து வைத்த முட்டை கபாபை சேர்த்து விடலாம்.
அவ்வளவு தான்… ருசியான முட்டை கபாப் தயார்.
- சப்பாத்தி, சாம்பார் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.
- பத்தே நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் - 1
தக்காளி - 150 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
காலிஃப்ளவரை நீரில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் காலிஃப்ளவரை தனியாக தட்டில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை தண்ணீர் ஊற்றி வேக வைத்து தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
அடுத்து மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் அதில் காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.
மசாலா நன்றாக காலிஃப்ளவரில் சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் போது மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான காலிஃப்ளவர் சுக்கா ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்