search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225460"

    • முட்டை கிரேவி மஞ்சூரியன் செய்வதற்கும் மிகவும் எளிமையானது.
    • இது சப்பாத்தி, நாண், பிரைடு ரைஸ்க்கு அசத்தலான சைடிஷ் .

    தேவையான பொருட்கள்

    முட்டை - 3

    மைதா மாவு - 3 டீஸ்பூன்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - ½ டீஸ்பூன்

    மிளகு சீரகப்பொடி - 1 டீஸ்பூன்

    ஆனியன், குடைமிளகாய் - தலா 1

    சிவப்பு மிளகாய் சாஸ் - 1 டீஸ்பூன்

    பச்சைமிளகாய் சாஸ் - 1 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    ஸ்பிரிங் ஆனியன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், குடைமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.

    ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் மிளகு சீரகப்பொடி, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்..

    ஒருகிண்ணத்தில் எண்ணெய் தடவி முட்டையை ஊற்றிக் கொள்ளவும். இதனை இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் கிண்ணத்தை வைத்து 10 முதல் 12 நிமிடம் வரை வேக வைக்கவும்.

    முட்டை வெந்ததும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கெட்டியான இட்லி மாவு பதத்தில் கலந்துகொள்ளவும்.

    ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் துண்டுகளாக நறுக்கிய முட்டைகளை மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    பின்பு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து அரை பாகம் வேகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் சிறிதளவு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சிவப்பு மிளகாய் சாஸ், பச்சைமிளகாய் சாஸ், சோயா சாஸ், தக்காளி சாஸ், கரைத்து வைத்த சோள மாவு தண்ணீரை ஊற்றவேண்டும்.

    அத்துடன் உப்பு சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறவும்.

    கிரேவி நன்கு திக்கான பதம் வதக்கியதும், மேலே ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கினால் சூப்பரான முட்டை மஞ்சூரியன் கிரேவி ரெடி.

    • இதில் புரோட்டின் சத்து அதிகம் உள்ளது.
    • இந்த சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

    தேவையான பொருட்கள் :

    கருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    முட்டை - 3

    மிளகுத் தூள், சீரகத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்

    ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லித் தழை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வையுங்கள். மறுநாள் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வையுங்கள்.

    வாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள்.

    முட்டை உதிரியாக வந்ததும் வேக வைத்த கடலையைச் சேர்த்து சிறு தீயில் சிறிது நேரம் வையுங்கள்.

    கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரியுங்கள்.

    புரோட்டின் சத்து அதிகம் உள்ள இந்த சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

    • குழந்தைகளுக்கு மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று மீன், தேங்காய் சேர்த்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    துண்டு மீன் - 250 கிராம்

    சோளமாவு - 2 ஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்

    எலுமிச்சை பழம் - பாதி

    மிளகு பொடி - 1 ஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    தேங்காய் துருவல் - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.

    அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.

    • வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது.
    • நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 250 கிராம்

    கடலைமாவு - நான்கு மேசைக்கரண்டி

    துருவிய தேங்காய் - கொஞ்சம்

    கொத்தமல்லி - கொஞ்சம்

    பச்சைமிளகாய் - இரண்டு

    பூண்டு - 2 பல்

    வெங்காயம் - ஒன்று

    இஞ்சி - ஒரு துண்டு

    தனியாப்பொடி - ஒரு மேசைக்கரண்டி

    எண்ணெய் - 6 மேசைக்கரண்டி

    சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி

    மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி

    மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெண்டைக்காய் காம்பை நறுக்கிய பிறகு காயைக் கீறி வைத்துக் கொள்ள வேண்டும். சற்று நீளமாக ஒரு பக்கமாக கீறவும்.

    பூண்டு, தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், இவற்றை அரைத்து கடலை மாவுடன் நன்றாகக் கலக்கவும்.

    உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு முதலியவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.

    வெண்டைக்காய்குள் இக்கலவையை பிளந்துவிடாத படி அடைக்கவும். விதைகள் உள்ளே முற்றியிருந்தால் எடுத்துவிடலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்த வெண்டைக்காயைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். கரகரப்பாக இருக்கும்படியும் எடுக்கலாம்.

    இப்போது சூப்பரான ஸ்டஃப்டு வெண்டைக்காய் ரெடி.

    • அதிக நார்ச்சத்து உள்ள வாழைப்பூ மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது.
    • மூலநோய், மூல புண்கள், இரத்தம் வெளியேறுதல் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பூ - 1

    கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    புளி - எலுமிச்சை அளவு

    காய்ந்த மிளகாய் - 4

    துருவிய தேங்காய் - கால் கப்

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    செய்முறை:

    வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வையுங்கள்.

    அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள்.

    மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    கடைசியாக பின் வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி கலந்து விடவும்.

    இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.

    • வெற்றிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
    • இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வெற்றிலை - 10

    காய்ந்த மிளகாய் - 4

    வெங்காயம் - ஒன்று

    தேங்காய் துருவல் - சிறிதளவு

    பூண்டுப் பல் - 3

    புளி - கோலிக்குண்டு அளவு

    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    வெற்றிலைத் துவையல்

    வெற்றிலைத் துவையல்

    செய்முறை:

    வெற்றிலையில் காம்பு, நடு நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.

    அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், வெற்றிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்த துவையலாக அரைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான வெற்றிலைத் துவையல் ரெடி.

    • சிக்கனில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம்.
    • தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    சர்க்கரை - 1 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    வரமிளகாய் - 2

    கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    அரைத்த தக்காளி - 1 கப்

    நெய் - 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)

    கறிவேப்பிலை - சிறிது.

    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து தாளிக்க வேண்டும்.

    பின்னர் அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கிய பின் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    நெய்யானது பிரிய ஆரம்பித்தால், அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிக்கன் துண்டுகள், உப்பு, கரம்மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    பிறகு அதில் 1/2 கப் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    பின் மூடியைத் திறந்து, அதில் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

    சிக்கனானது நன்கு வெந்தது நெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி, அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!!

    • பீனட் பட்டரை கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்..
    • பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட்ட பழக்கம் போய் இன்று பீனட் பட்டர் தான் பலருடைய சாய்ஸ்.

    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை - 2 கப்

    கடலை அல்லது ரைஸ் ப்ராண்ட் எண்ணெய் - 6 டீஸ்பூன்

    உப்பு - 1 சிட்டிகை

    தேன் - 2 டீஸ்பூன்

    செய்முறை :

    வறுத்த வேர்க்கடலையாக இருந்தாலும் அதன் தோலை நீக்கிவிடுங்கள். முழு காய்ந்த கடலை இருந்தாலும் அதை உரித்து கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளுங்கள்.

    பின் அதன் தோலை நீக்கிவிட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

    வறுத்த வேர்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    வேர்க்கடலை கொஞ்சம் மசிந்ததும் அதனுடன் எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும்.

    அடுத்து அதில் தேன், உப்பு சேர்த்து மீண்டும் மைய அரையுங்கள்.

    அவ்வளவுதான் பீனட் பட்டர் தயார்.

    இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

    • கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது.
    • நம் உணவில் அதிகமான கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    கறிவேப்பில்லை - ஒரு கப்

    உளுத்தம் பருப்பு - இரண்டு டீஸ்பூன்

    கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    பச்சை மிளகாய் - இரண்டு

    புளி - சிறிதளவு

    தாளிக்க:

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    கடுகு - கால் டீஸ்பூன்

    உடைத்த உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை:

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.

    பிறகு, அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

    மிக்சியில் வறுத்த பொருட்களை போட்டு அதனுடன் புளி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.

    இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி ரெடி.

    • சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்:

    எலும்பில்லாத மட்டன் - 300 கிராம்

    சின்ன வெங்காயம் - 20

    பூண்டு - 20 பற்கள்

    இஞ்சி - 1 இன்ச்

    குண்டு வரமிளகாய் - 10

    தக்காளி - 1

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை தட்டிக் கொள்ளவும்.

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

    பின் அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி பிரட்டி விட வேண்டும்.

    மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வதக்கிய பின் எஞ்சிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

    பிறகு குக்கரை திறந்து, அதனை வாணலியில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான செட்டிநாடு உப்பு கறி தயார்!

    • சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு - 1/2 கப்

    உளுத்தம் பருப்பு - 1/2 கப்

    கடலைப் பருப்பு - 1/2 கப் (நீரில் ஊற வைத்தது)

    வெங்காயம் - 2

    முட்டை - 2

    இஞ்சி - 1 இன்ச்

    பூண்டு - 6-8 பற்கள்

    தக்காளி - 1

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    வர மிளகாய் - 2

    பிரியாணி இலை - 2

    பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    நெய் - 1 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    தக்காளி, 1 வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் மூன்று பருப்புக்களையும் நன்கு நீரில் அலசி போட்டு, தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி,லேசாக கடைந்து கொள்ள வேண்டும்.

    இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, வர மிளகாய்,பச்சை மிளகாய் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும்.

    பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியதும் வெங்காய பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    பிறகு தக்காளி, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    பின் அதில் வேக வைத்துள்ள பருப்புக்களை சேர்த்து கிளறி, சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

    மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து, நன்கு கிளறி இறக்கி விட வேண்டும்.

    இறுதியில் அந்த முட்டையை பருப்பில் சேர்த்து கிளறி இறக்கினால், முட்டை தட்கா தால் ரெடி!!!

    • தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ.

    முருங்கைக்காய் - 4.

    வெங்காயம் - 200 கிராம்.

    தக்காளி - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 4.

    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்.

    மிளகுத் தூள் - 4 டீ ஸ்பூன்.

    மிளகாய் தூள் - தேவைக்கேற்ப

    மிளகாய் வற்றல் - 6.

    கொத்தமல்லி இலை - 1 கப்.

    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.

    உப்பு - தேவையான அளவு.

    எண்ணெய் - 1 குழிக்கரண்டி.

    செய்முறை:

    சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    முருங்கைக்காயையும் துண்டுகளாக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, முருங்கைக்காய், சிக்கன் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

    சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.

    கிரேவி திக்கான பதம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    இப்போது முருங்கைக்காய் பெப்பர் சிக்கன் கிரேவி ரெடி.

    ×