search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225460"

    • பச்சை மிளகாய் காரம்தான் என்றாலும் அதன் நன்மைகள் எண்ணற்றது.
    • தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இது அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 20

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    உளுந்து - 2 டீஸ்பூன்

    பூண்டு - 10

    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

    சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு, கறிவேப்பிலை

    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நன்றாக கழுவி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கியபின் இறக்குவதற்கு முன் புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

    அனைத்தையும் ஆற வைத்து மிக்சியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த சட்னியில் கொட்டவும்.

    அவ்வளவுதான் சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் சட்னி தயார்.

    • பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இன்று சிக்கன் சுக்கா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - ½ கிலோ

    வெங்காயம் - 1

    பட்டை - 1 துண்டு

    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

    மிளகு - 2 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    சோம்பு - 1 ஸ்பூன்

    இஞ்சி - 1 துண்டு

    பூண்டு - 10 பல்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

    * மிக்ஸியில் பட்டை, சீரகம், மிளகு, சோம்பு, இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக அரைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசறி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    * ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஊற வைத்த சிக்கனை போட்டு வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும்.

    * இதற்கு சிக்கனில் உள்ள தண்ணீரே போதுமானது. தண்ணீர் சேர்க்கக்கூடாது. சிக்கனில் தண்ணீர் வற்றிய பிறகு சிறு தீயில் வைத்துக் கிளறினால் உப்பு, காரம் சிக்கனில் சேர்ந்து இருக்கும்.

    * எண்ணெய் பிரிந்து வரும் போது சிக்கனை கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    * சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல் ரெடி.

    • கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
    • ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    கேரட் - கால் கிலோ

    எலுமிச்சை பழம் - ஐந்து

    பச்சை மிளகாய் - பத்து

    பெருங்காயம் - அரை டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி

    கடுகு - ஒரு தேகரண்டி

    உப்பு - தேவைகேற்ப

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.

    சூப்பரான கேரட் ஊறுகாய் ரெடி.

    • எல்லோருக்கும் ஹோட்டல் சட்னி மிகவும் பிடிக்கும்.
    • இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் - 1 கப் (துருவியது)

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - 1 சிறிய துண்டு

    சீரகம் - ஒரு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பிறகு அதை சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.

    • சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்த ரெசிபி அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ

    எண்ணெய்/நெய் - 5 டேபிள் ஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - 1 பெரிய துண்டு

    பெரிய வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் - 1 கப்

    உப்பு - சுவைக்கேற்ப

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்

    சீரகத் தூள் - 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 2 டீஸ்பூன்

    காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி - ஒரு கையளவு

    செய்முறை:

    * கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சிக்கன் ஒரு பதத்திற்கு வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    * பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

    * பின் அதில் சிக்கனை சேர்த்து, சிக்கனில் மசாலா நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.

    * பின்னர் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

    * சிக்கன் நன்கு வெந்ததும், அதில் காய்ந்த வெந்தய கீரை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான தயிர் சிக்கன் கிரேவி தயார்.

    • வாரம் ஒருமுறை முட்டைகோஸ் சாப்பிட்டால் புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம்.
    • முட்டைக்கோஸ் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவும்.

    தேவையான பொருட்கள்

    முட்டைகோஸ் - 150 கிராம்

    பச்சை மிளகாய் - 2

    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

    புளி - எலுமிச்சை பழம் அளவு

    உப்பு - தேவைகேற்ப

    இஞ்சி - சிறு துண்டு

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    தாளிக்க:

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    கடுகு - கால் டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை

    முட்டைகோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாயை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.

    வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புளி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் கொட்டி பரிமாறவும்.

    • தயிர், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
    • குழந்தைகளுக்கு இந்த மீன் மிளகு மசாலா மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    துண்டு மீன் – அரை கிலோ

    வெங்காயம் – 200 கிராம்

    பச்சை மிளகாய் – நான்கு

    இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

    சீரகம் – ஒரு டீஸ்பூன்

    மிளகு தூள் – நான்கு டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் – ஐந்து

    கொத்தமல்லி இலை – ஒரு கப்

    மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

    உப்பு – தேவைகேற்ப

    எண்ணெய் – தேவைகேற்ப

    கறிவேபில்லை – சிறிதளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேபில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

    பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டி விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும்.

    மீன் வெந்ததும், மிளகுதுளை சேர்த்து கிளறவும்.

    நறுக்கிய கொத்தமல்லி இலையை மீனை இறக்குவதற்கு முன் சேர்த்து கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான மீன் மிளகு மசாலா ரெடி.

    • காலிஃப்ளவரில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ரெசிபி சாம்பார், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    காலிஃப்ளவர் - 1

    நெய் - 1 டீஸ்பூன்

    கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிது

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    மிளகு - 1டீஸ்பூன்

    சீரகம் - 1டீஸ்பூன்

    செய்முறை

    காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.

    மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு காலிஃபிளவரைப் போட்டு மிதமான தீயில் வதக்கவும்.

    காலிஃப்ளவர் நன்றாக வெந்ததும் பொடித்து வைத்த மிளகு சீரகம் தூள் தூவி இறக்கவும்.

    சூப்பரான காலிஃப்ளவர் பெப்பர் பிரை ரெடி.

    • ஊறுகாய் பிரியர்களுக்கு வித்தியாசமான சுவை கொண்ட சிக்கன் ஊறுகாய் செய்து கொடுக்கலாம்.
    • பாரம்பரிய ஊறுகாயைப் போல பதப்படுத்தும் செயல்முறை இதற்குத் தேவையில்லை.

    பண்டையகாலம் முதலே, ஊறுகாய் நமது உணவுமுறையில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. சிறு அளவு ஊறுகாய், முழு உணவுக்கும் புது சுவை சேர்த்துவிடும். எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய் ஆகிய ஊறுகாய்களை ருசித்து சலித்தவர்களுக்கு, வித்தியாசமான சுவை கொண்ட 'சிக்கன் ஊறுகாய்' செய்து கொடுக்கலாம். மற்ற பாரம்பரிய ஊறுகாயைப் போல பதப்படுத்தும் செயல்முறை இதற்குத் தேவையில்லை. அசைவ பிரியர்களுக்கு பிடிக்கும் 'சிக்கன் ஊறுகாய்' செய்முறை இதோ...

    பொரிப்பதற்குத் தேவையானவை:

    எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி - 500 கிராம்

    மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக் கரண்டி

    எண்ணெய் - தேவையான அளவு

    மசாலா தயாரிக்கத் தேவையானவை:

    எண்ணெய் - 2 மேசைக் கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக் கரண்டி

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    மிளகாய்த்தூள் - ¼ கப்

    கடுகுத்தூள் - 1 மேசைக் கரண்டி

    வெந்தயத்தூள் - ¼ தேக்கரண்டி

    எலுமிச்சம்பழம் - அரை மூடி

    தாளிப்பதற்குத் தேவையானவை:

    எண்ணெய் - 2 மேசைக் கரண்டி

    வெந்தயம் - 1 தேக்கரண்டி

    காய்ந்த மிளகாய் - 5

    கறிவேப்பிலை - 10

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பெரிய பாத்திரத்தில், சுத்தம் செய்த கோழிக்கறி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு, நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். ஊறவைத்த கோழிக்கறியை சிறிது சிறிதாக அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகவும், மிருதுவாகவும் மாறும் வரை பொரித்தெடுக்கவும்.

    மற்றொரு வாணலியில், மசாலா தயாரிக்கத் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.

    பின்பு அதில் இஞ்சிப் பூண்டு விழுதைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

    அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கடுகுத்தூள் மற்றும் வெந்தயத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

    இந்த மசாலா கலவையுடன் வறுத்த சிக்கனைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    மற்றொரு வாணலியில் தாளிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த தாளிப்பைச் சிக்கனுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.

    பிறகு, அதை சூடு தணியும் வரை ஆறவைக்கவும்.

    பின்பு இந்த சிக்கன் ஊறுகாயில் எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழிந்து, பரிமாறுங்கள்.

    • நாளை நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • ஓணம் சத்யா ஸ்பெஷல் அவியல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சௌசௌ - 150 கிராம்

    உருளைக்கிழங்கு - 150 கிராம்

    கேரட் - 150 கிராம்

    பூசணிக்காய் - 150 கிராம்

    வாழைக்காய் - 150 கிராம்

    வெங்காயம் - 150 கிராம்

    தேங்காய் - 1/2 கப்

    பச்சை மிளகாய் - 4

    தயிர் - 1/2 கப்

    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * காய்கறிகள், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அனைத்து காய்கறிகளையும் போட்டு, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் விட்டு, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.

    பின்னர் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, காய்கறிகளில் உள்ள தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் சிறிது உப்பை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    * பின் அதில் தயிரை ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த, பின் வெங்காயம் சேர்த்து, அதனை பொன்னிறமாக வதக்கி, அத்துடன் அந்த காய்கறி கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு, கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடவும்.

    * இப்போது சுவையான அவியல் ரெடி!!!

    * அவியல் தொக்கு போல் வேண்டும் என்பவர்கள் காய்கறி தண்ணீரை வற்ற விடாமல் தேங்காய் சேர்த்து செய்ய வேண்டும்.

    • ஓணம் சத்யா விருந்தில் பல்வேறு சுவையான ரெசிபிக்கள் சமைக்கப்படும்.
    • இன்று இதில் ஒன்றான ஓலன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    நீர் பூசணி/வெள்ளை பூசணி - 1 1/2 கப்

    தட்டைப்பயறு - 1-2 கப்

    பச்சை மிளகாய் - 2

    மிகவும் நீர் போன்ற தேங்காய் பால் - 1 கப்

    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

    கறிவேப்பிலை - சிறிது

    தேங்காய் எண்ணெய் - 1 டீபூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    * பச்சை மிளகாயை நீளவாக்கி நறுக்கி கொள்ளவும்.

    * நீர் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    * தட்டை பயறை நீரில் ஒரு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொண்டு, பின் அதை குக்கரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் ஊற்றி, அத்துடன் ஒரு கப் நீர் போன்றுள்ள தேங்காய் பால் ஊற்றி, அதோடு நீர் பூசணிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, காயை நன்கு வேக வைக்க வேண்டும்.

    * நீர் பூசணி நன்கு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, பின் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பே அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் ஊற்றினால், ஓணம் சத்யா ஸ்பெஷல் ஓலன் தயார்.

    குறிப்பு

    * நீர் பூசணிக்காய் மற்றும் தட்டைப் பயறு நன்கு மென்மையாக வெந்திருந்தால் தான், அது தேங்காய் பாலை நன்கு உறிஞ்சியிருக்கும்.

    * கெட்டியான தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது திரிய ஆரம்பித்துவிடும்.

    * சமைத்து முடித்த பின் குறைந்தது அரை மணிநேரம் கழித்து சாப்பிட பரிமாறினால் தான், தேங்காய் பாலுடன் காய்கறிகள் நன்கு ஊறி இருக்கும்.

    • முருங்கை கீரையில் பொரியல் செய்வது வழக்கம்.
    • முருங்கை கீரையுடன் வாழைத்தண்டை சேர்த்து பொரியல் செய்தால் அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்கீரை - 1 கப்

    வாழைத்தண்டு - சிறிய துண்டு

    வெங்காயம் - 1

    தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1

    சிகப்பு மிளகாய் - 1

    கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

    எண்ணெய் - 2 ஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    செய்முறை :

    * முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாழைத்தண்டை நாரை எடுத்து விட்டு மெல்லி துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி மோரில் போட்டு வைக்கவும். இவ்வாறு மோர் கலந்த நீரில் வாழைத்தண்டு துண்டுகளை போட்டு வைப்பதால் நிறம் மாறாமல் இருக்கும்.

    * வாணலியை அடுப்பின் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் வாழைத்தண்டு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.

    * வாழைத்தண்டு சற்று வெந்ததும் முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.

    * இரண்டும் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

    * சுவையும் சத்தும் நிறைந்த முருங்கைக்கீரை வாழைத்தண்டு பொரியல் தயார்.

    * சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

    ×