search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கள்"

    • தமிழ் புத்தாண்டு விழா நாளை 14-ந்தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது
    • பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன.

    கடலூர்:

    தமிழ் புத்தாண்டு விழா நாளை 14-ந்தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்பட்டது.       இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 300 ரூபாய்க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு மல்லி 600 ரூபாய்க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ 300 ரூபாய்க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட அரும்பு 500 ரூபாய்க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ தற்போது 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க சென்றனர். மேலும், தொடர்ச்சியாக விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

    • சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பூக்கள் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.
    • சேலம் பூ சந்தையில் இருந்து தினமும் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இதைத்தவிர பழைய பஸ் நிலையத்தை யொட்டி மேலும் ஒரு பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதைத்தவிர தரும புரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

    சேலம் பூ சந்தையில் இருந்து தினமும் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிைலயில் தை மாதத்தில் திருவிழாக்கள், பல்வேறு சுப நிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் வருகிற 5-ந்தேதி தைப்பூசம் பண்டிகை தினமாகும். இதனால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

    இதனிடையே இன்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பூக்கள் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.

    இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இதுபோல் ஜாதி மல்லிகை ரூ.800-க்கும், காக்கட்டான் ரூ.320-க்கும், கலர் காக்காட்டான் ரூ.320, மலை காக்கட்டான் - ரூ.240, சாதா சம்பங்கி ரூ.80, உயர் ரக சம்பங்கி ரூ.50, அரளி -ரூ.70, வெள்ளை அரளி ரூ.70, மஞ்சள் அரளி- ரூ.70, செவ்வரளி ரூ.140, ஐ.செவ்வரளி-ரூ.100, நந்தியாவட்டம் ரூ.150, சி.நந்தியாவட்டம் ரூ.400, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது.
    • பொங்கல் பண்டிகை இரு நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து தேவை குறைந்து, பூக்கள் விலை குறைந்து வருகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகை இரு நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து தேவை குறைந்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்து வருகிறது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய (20. 1.23) பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) : மல்லிகை - ரூ.1600, முல்லை - ரூ.1600, ஜாதி மல்லி - ரூ.1200, காக்கட்டான் - ரூ.600, கலர் காக்கட்டான் - ரூ.600, மலை காக்கட்டான் - ரூ.500, சி.நந்தியா வட்டம் - ரூ.90, சம்பங்கி - ரூ.100, சாதா சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.200, வெள்ளை அரளி - ரூ.200, மஞ்சள் அரளி - ரூ.200, செவ்வரளி - ரூ.220, ஐ.செவ்வரளி - ரூ.220, நந்தியா வட்டம் - ரூ.90, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
    • கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

    கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக மல்லிகை பூ கிலோ இன்று ரூ.2000- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மற்ற பூக்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது குறித்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) வருமாறு :-

    மல்லிகை - ரூ.2000, முல்லை - ரூ.2000, ஜாதி மல்லி - ரூ.1000, காக்கட்டான் - ரூ.1000, கலர் காக்கட்டான் - ரூ.1000, மலை காக்கட்டான் - ரூ.900, சி.நந்தியா வட்டம் - ரூ.150, சம்பங்கி - ரூ.100, சாதா சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.360, வெள்ளை அரளி - ரூ.360, மஞ்சள் அரளி - ரூ.360, செவ்வரளி - ரூ.400, ஐ.செவ்வரளி - ரூ.400, நந்தியா வட்டம் - ரூ.150.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது.
    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.300-க்கும் ஏலம் போனது. இந்நிலையில் நேற்று அமாவாசை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏல‌த்தில், குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும் ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலா யுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.160-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், காக்கட்டான் ரூ.200-க்கும் ஏலம் போனது.

    இந்நிலையில் நேற்று அமாவாசை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏல‌த்தில், குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 80-க்கும், அரளி கிலோ ரூ.240-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.120-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.450-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடும் பனிப்பொழிவு-முகூர்த்தம் காரணமாக உயர்வு
    • ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய்மொழி,காவல் கிணறு,புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன் கோவில், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லி கைப்பூவும் வருகின்றன.

    சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட பூக்களும் தினமும் விற்பனைக்கு வருகின்றன.

    இங்கிருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரளாவுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன. எனவே தோவாளை சந்தை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தி ருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதே நேரம் தேவை அதிகமாக உள்ள தால் பூக்களின் விலை கிடு கிடு உயர்வை சந்தித்து உள்ளது.

    தோவாளை சந்தையில் இன்று மல்லிகைப் பூ கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ.1750-க்கும் விற்கப்பட்டது.அரளிப் பூ கிலோ ரூ.250, சேலம் அரளி ரூ.220, சம்பங்கி ரூ.125-க்கு விற்கப்பட்டன.

    மஞ்சள் கேந்தி ரூ.60, சிகப்பு கேந்தி ரூ.70, மரிக்கொழுந்து ரூ.150, பட்டர் ரோஸ் ரூ.150,கோழிப்பூ ரூ.50, துளசி ரூ.50 என விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்திற்கு பூக்களின் வரத்து குறைவும், அதிக அளவிலான முகூர்த்த ங்கள் நாளை இருப்பதுமே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கார்த்திகை மாத அமாவாசையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • கோவில்கள், வீடுகளில் பூஜைக்காக அதிகளவில் பயன்படுத்துவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    அன்னதானப்பட்டி: 

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இன்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி கோவில்களுக்கும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள் அதிகளவில் மக்கள் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக சேலத்தில் உள்ள பூ , மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே பூக்கள் விற்பனை களை கட்டியது.

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்):-

    மல்லிகை - ரூ.1000, முல்லை - ரூ500, ஜாதி மல்லிகை - ரூ.280, காக்கட்டான் - ரூ.280, கலர் காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.80, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.220, வெள்ளை அரளி - ரூ.220, மஞ்சள் அரளி - ரூ.220, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து வருகிற வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமையில் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கடும் குளிர் காலநிலையிலும் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த மாதம் ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த மல்லி இன்று கிலோவுக்கு ரூ.600 வரை விலை குறைந்து ரூ.600 என விற்கப்பட்டு வருகிறது. அதே போல ரூ.600 க்கு விற்ற முல்லை ரூ.200வரை விலை குறைந்து இன்று ரூ.400 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோவுக்கு) வருமாறு :-

    மல்லிகை- ரூ.600, முல்லை- ரூ.400, ஜாதி மல்லி- ரூ.280, காக்கட்டான்- ரூ.200, கலர் காக்கட்டான் - ரூ.200, சி.நந்தியா வட்டம் - ரூ.180, சம்மங்கி- ரூ.15, சாதா சம்மங்கி- ரூ.30, அரளி- ரூ.150, வெள்ளை அரளி- ரூ.150, மஞ்சள் அரளி- ரூ.150, செவ்வரளி- ரூ.180, ஐ.செவ்வரளி- ரூ.180, நந்தியா வட்டம்- ரூ.180. தற்போது ஐப்பசி மாத நிலவரப்படி குளிர் காலநிலை நிலவுகிறது.

    வருகிற கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடும் குளிர் காலநிலை நிலவும். அதற்கடுத்து தை மாதம் பொங்கல் பண்டிகை வரை பூக்கள் விற்பனை சீசன் நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்–பட்டது.
    • கல்லறைகள் தூய்மை செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து வழிபட்டனர்.

    பூதலூர்:

    கிறிஸ்தவர்கள் தங்கள் இறந்த மூதாதையர்களின் நினைவு கூறப்படும் நாள் கல்லறை திருநாள் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்–பட்டு இறந்த தங்களின் உறவினர்கள் மற்றும் மூதாதையர்களைநினைத்து வழிபடுவார்கள்.

    கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாளில் இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்–பட்டது. திருப்பலியில் பேராலயஅதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் ஆன்மீக தந்தையர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்கள்.

    திருப்பலி முடிந்ததும் பூண்டி மாதா பேராலயத்தில் அருட் தந்தையாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் பேராலயத்தின் உள்ளே அமைந்துள்ள லூர்து சேவியர் கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. லூர்து சேவியர் கல்ல–றையை பேராலய அதிபர் சாம்சன்புனிதம் செய்து வழிபட்டார்.

    அதனை தொடர்ந்து புள்ளி மாதா பேராலய கல்லறை தோட்டத்தில் அமைந்துள்ள அருட்தந்தை ராயப்பர் கல்லறை புனிதம் செய்தனர்.இதனை தொடர்ந்து பூண்டி பேராலய இணைந்து உள்ள கிராமங்களில் சென்று அங்குள்ள கிறிஸ்தவர்களின் கல்லறைகள்புனிதம் செய்யப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி பூதலூர் பகுதியில் உள்ள கிறித்துவ கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் தூய்மை செய்து வெடிவெடித்து மெழுகுவர்த்தி ஏந்தி மலர் மாலை அணிவித்து வழிபட்டனர்.

    • பிச்சி பூ கிலோ ரூ.1400-க்கு விற்பனை
    • நாளை தீபாவளி பண்டிகை

    கன்னியாகுமரி:

    தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் ஊட்டி, பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும், பண்டிகை நாட்களில் இங்கு பூக்கள் வாங்க பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களா கவே பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாளை (24-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையா கவும் வாங்குவதற்கு ஏராள மானோர் திரண்டனர். பூ மார்க்கெட்டில் வியாபா ரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பூக்களின் விற்பனை அதிகரிப்பால் அதன் விலை அதிகரித்து காணப்படுகிறது.

    கிலோ ஒன்றுக்கு அதன் விலை வருமாறு:-

    பிச்சி ரூ.1400, மல்லிகை ரூ.900, முல்லை ரூ.1250, சேலம் அரளி ரூ.250, சம்மங்கி ரூ.100, பட்டர் ரோஸ் ரூ.180, மஞ்சள் மற்றும் சிகப்பு கேந்தி ரூ,60, கொழுந்து ரூ.110, மரிக்கொழுந்து ரூ.120, துளசி ரூ.35.

    • பூக்களின் வரத்து குறைவாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை‌ உயர்வு.
    • பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கபிலர்மலை, தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், நாகப்பாளையம், செல்லப்பம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, அரளி, செண்டுமல்லி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள், பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகே செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் குண்டுமல்லிகை ரூ.400- க்கும், சம்பங்கி கிலோ ரூ.40- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.150- க்கும், முல்லை ரூ.400- க்கும், செவ்வந்தி ரூ.150- க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குண்டு மல்லிகை கிலோ ரூ.1500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300- க்கும், அரளி கிலோ ரூ.300- க்கும், ரோஜா கிலோ ரூ.300- முல்லை கிலோ ரூ.1500-க்கும், பச்சை முல்லை ரூ.1500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    பூக்களின் வரத்து குறைவாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை‌ உயர்வு அடைந்து உள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மல்லி ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது
    • வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

    கோவை

    கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் பல்வேறு விதமான பூக்கள் விற்பனையாகி வருகின்றன.

    கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த மாத தொடக்கத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இந்தப் பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம். இதன் காரணமாக மாதத்தின் தொடக்கத்திலேயே பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மல்லிகைப்பூ மட்டும் கிலோ 4,000 ரூபாய் வரை விற்பனையானது.

    இந்த நிலையில் தற்போது நவராத்திரி பண்டிகை தொடங்கி உள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் 10 நாட்கள் வீட்டில் கொலு அமைத்து தெய்வங்களுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.

    இதனால் கடந்த இரண்டு வாரங்களாக குறைந்திருந்த பூக்கள் விலை தற்போது மீண்டும் அதிகரித்து இருந்தது. மேலும் நாளை மறுநாள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

    அதன்படி மல்லி ஒரு கிலோ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.320, அரளி ரூ.300, தாமரை ஒன்று ரூ.20, கோழி பூ ரூ.100, மருகு ரூ. ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம்ரூ.200, சம்பங்கி ரூ.30, செண்டுமல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.100, பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.160- ஆக அதிகரித்து இருந்தது.

    அதேபோன்று வெள்ளை பூசனி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.15 முதல் 30 வரையும், சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.220, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்பில்லை என்றும், அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×