search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225556"

    • உலக செவிலியர் தின விருது வழங்கப்பட்டது.
    • செவிலியர் வீராம்மாள் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முகவை தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலங்களில் பங்காற்றிய செவிலியர்களை கவுரவிக்கும் வகையில் அப்துல்லா விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நூருல் சமது தலைமை தாங்கினார். செவிலியர் ராஜசேகரன் வரவேற்றார். மருத்துவர் கண்ணகி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக செய்யதம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் சரளா, இந்திராகாந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். செவிலியர் வீராம்மாள் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு.
    • மாரடைப்பு சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்துள்ளது.

    ஜப்பான், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதனை மற்றவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த 5 வயதான குமி என்கிற மங்கிரோல் வகை நாய் இடைவிடாமல் குரைத்து கவனத்தை ஈர்த்தது.

    அங்கிருந்தவர்கள் நாயின் அருகில் சரிந்து கிடந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபர் சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி உயிரை காப்பாற்றப்பட்டார்.

    இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்தது. இந்நிலையில், மாரடைப்பால் சரிந்து கீழே விழுந்த நபரின் உயிரை காப்பாற்றிய குமு நாய்க்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

    • மார்ச் 31-ந்தேதி அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.
    • வருகிற 31-ந்தேதி மாலை 4 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்து ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, "முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது" ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.

    15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

    அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது.

    இந்த விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

    15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் அல்லது பெண் ஆகியோர் இந்த விருதுக்கு விண்ணப்பி க்கலாம்.

    2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி அன்று 15 வயது நிரம்பியவராகவும், இந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

    கடந்த நிதியாண்டில் (2022-2023) அதாவது 1-4-2022 முதல் 31-3-2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

    விருதிற்கு விண்ணப்பி க்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.

    (சான்று இணைக்கப்பட வேண்டும்) விண்ணப்ப தாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறி யப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். கடைசி நாள் மத்திய அல்லது மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்று பவர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு இவ்விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    இதற்கான விண்ணப்பபடிவத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    கடைசி நாள் வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்க அலுவலகத்திற்கு 04362-235 633 என்ற எண்ணிலும், 7401703496 என்ற கைபேசி எண்ணிலும் அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
    • அண்ணா பல்கலைக்கழக சிறந்த நாட்டு நலப்பணி திட்ட விருதை பெற்றார்.

    கும்பகோணம்:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் நாட்டு நலப்பணி திட்டத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா பல்கலைக்கழக விவேகா னந்தா கலையரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

    இதில் கும்பகோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ராஜஸ்ரீ அண்ணா பல்கலைக்கழக சிறந்த நாட்டு நலப்பணி திட்ட விருதை பெற்றார்.

    அப்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    அரசு என்ஜினீயரிங் கல்லூரி தலைவர் செந்தில்குமார், ஆலோசகர் பேராசிரியர் கோதண்டபாணி, முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் ருக்மாங்கதன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஆனந்த குமார் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் மாணவியை பாராட்டினர்.

    • நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது.
    • இதற்காக 2022-23 ம் ஆண்டு செயல்திட்டத்தில், ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்டுள் ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசின் சார்பில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது.

    இதற்காக 2022-23 ம் ஆண்டு செயல்திட்டத்தில், ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்டுள் ளது.எனவே 2022-23 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள தகுதி யான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மணிமேகலை விரு துக்கான முன்மொழிவுகளை வருகிற மே மாதம் 5-ந்தே திக்குள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மக ளிர் திட்டம்) அலுவலகம், இரண்டாம் தளம், அறை எண் : 207, மாவட்ட ஆட்சிய ரகம், சேலம்-636 001 என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 27 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் இயக்கிய அரசு பஸ் ஓட்டுனருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
    • ஓட்டுனர் ரவிச்சந்திரன் கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரனை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்

    கரூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் கரூர் மண்டலம் குளித்தலை கிளையில் பணிபுரியும் ஓட்டுனர் ரவிச்சந்திரன் (வயது58). இவர் கடந்த 27 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் சிறப்பாக பணி புரிந்ததற்காக டெல்லியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு தேசிய விருது விழாவில் ரவிச்சந்திரனுக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி சிறந்த ஓட்டுநருக்கான விருதினை வழங்கினார். இவ்விருதினை பெற்ற ஓட்டுனர் ரவிச்சந்திரன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து ஓட்டுனர் ரவிச்சந்திரன் கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரனை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின் போது துணை மேலாளர் (வணிகம்&தொழில்நுட்பம்) சுரேஷ்குமார், உதவி மேலாளர் (தொழில்நுட்பம்) சேகர் மற்றும் உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


    • முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
    • விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை கொண்டது.

    அதன்படி 2023-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மாநில இளை–ஞர் விருது வரு–கிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விரும்புபவர்கள், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். 1-4-2022 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31-3-2023 அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    கடந்த 1-1-2022 முதல் 31-3-2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்க வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். தொண்டு கண்டறியப்படக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் வருகிற மே மாதம் 31-ந் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    • இளம் தொழில் முனைவோர் ‘டெட்கோ’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இதற்கான விழா சிக்கந்தர்சாவடியில் நடக்கிறது.

    மதுரை

    தமிழ்நாடு பொருளாதார முன்னேற்ற கழகம் சார்பில் நடப்பாண்டு தொழில்துறையில் சாதனை படைத்த 22 பேருக்கு டெட்கோ விருதுகள் வழங்கப்படுகிறது.

    இதற்கான விழா சிக்கந்தர்சாவடி ஏ.எப்.டி.சி வளாகம், சிற்றவை அரங்கில் அடுத்த மாதம் 14-ந் தேதி நடக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் https://forms.gle/xomKBGpcLiQRsnG67, tedco.org.in என்ற இணைய தளங்களில் மேற்கண்ட விருதுக்கு விண்ணப் பிக்கலாம்.

    22 விருதுகளின் தலைப்புகள், விண்ணப்பிக்கும் விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள 98657 55880 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று டெட்கோ விருது குழு தலைவர் ஜே.கே.முத்து, துணைத் தலைவர் ராஜமூர்த்தி, பொருளாளர் வேணுகோபால், நிர்வாகிகள் காசிராஜன், பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்தனர்.

    • பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் சிறந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகத்திற்கு மஞ்சள் பை விருது வழங்கபடும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரித்துள்ளார்
    • முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்க் தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாரம்பரிய பயன்பாட்டை ஊக்குவித்த சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த 3 பள்ளிகள், சிறந்த 3 கல்லூரிகள் மற்றும் சிறந்த 3 வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் இந்த விருது வழங்கப்படுகிறது.

    முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கலெக்டர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தில் தனிநபர், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (சிடி) பிரதிகள் இரண்டை மாவட்ட ஆட்சியரிடம் மே 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
    • வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெ டுத்து செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் 2022-23-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையில மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார்.

    இது ஒருமுறைபயன்ப டுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்கு விக்கவும், தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் களுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூ ழலுக்கு உகந்தமாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

    முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

    இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டு ப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியான திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.

    இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் (https://Tiruvarur.nic.in) கிடைக்கும். விண்ணப்பபடிவத்தில் தனிநபர், நிறுவன தலைவர் முறையாக கையொப்பமிடவேண்டும்.

    கையொப்பமிட்ட பிரதிகள் 2 மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணிமேகலை விருது வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்புற கூட்டமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மணிமேகலை விருது பெற தகுதியுள்ள சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை முறையான கூட்டம் நடத்துதல், சேமிப்பு செய்ததை முறையாக சேமித்தல், வங்கி கடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருத்தல், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேலும், மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார இயக்க மேலாளரிடமும், நகர்ப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கமுதாய அமைப்பாளர்களிடம் தொடர்புகொண்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 25.4 2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது
    • விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி விருதினை பெற்றுக்கொண்டார்.

    திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இவ்வாறு இயக்கப்படும் விமான நிலையங்களில் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு இடையேயான 28 விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் தலைசிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டது இது குறித்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டினார் இந்த நிலையில் இதற்கான விருது வழங்கும் விழா நேற்று புதுடில்லியில் நடைபெற்றது இந்த விழாவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு பெற்ற திருச்சி விமான நிலையத்திற்கு விமான நிலைய ஆணைய குழுவின் தலைவர் சஞ்சீவ் குமார் விருதினை வழங்கினார் இதனை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி பெற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினார்

    ×