என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நிலையம்"

    • மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.
    • ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்தநிலையில் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இது தொடர்பாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.

    இதையடுத்து இன்று திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாவலர்கள் மூலம் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தையும் அகற்றினர். ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

    • பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
    • பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர்.

    பெங்களூரு:

    தெலுங்கு வருட பிறப்பான யுகாதி நாளை கொண்டாடப்படுகிறது. இதே போல் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக பெங்களூரு பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    குறிப்பாக பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஹூப்ளி, தார்வாட், பெலகாவி, பீதர், ராய்ச்சூர், கொப்பல், பெல்லாரி, கலபுரகி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெங்களூரு மெஜஸ்டிக் கெம்பேகவுடா பஸ்நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும் திரண்டனர். அவர்கள் அனைத்து ரெயில்கள் மற்றும் பஸ்களிலும் ஏறி இடம்பிடித்துக் கொண்டனர். இதனால் முன்பதிவு செய்தவர்கள் இடம் கிடைக்காமல் தவித்தனர்.

    சாளுக்யா வட்டம், ஆனந்த்ராவ் வட்டம், மைசூரு சாலை, யஷ்வந்த்பூர், ஆர்.எம்.சி. யார்டு, தும்கூர் சாலை மற்றும் ஓசூர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மெதுவாக நகர்ந்தன.

    பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர். மேலும் தனியார் பஸ்களும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி சென்றது. குறிப்பாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 17 பஸ்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரூ.9 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர். 

    • தீபாவளி தொடர்விடுமுறை முடிந்ததையடுத்து நேற்று காலை முதலே ஏராளமானவர்கள் மீண்டும் வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர்.
    • தென்காசி புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் முழுவதும் நிரம்பி சென்றது.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகை கடந்த 24-ந்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்வந்தனர். அந்தவகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏராளமானவர்கள் வந்தனர்.

    இந்நிலையில் தீபாவளி தொடர்விடுமுறை முடிந்ததையடுத்து நேற்று காலை முதலே ஏராளமானவர்கள் மீண்டும் வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர். இதற்காக சிறப்பு பஸ்களும் இயக்கபட்டது. இதனால் தென்காசி பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தென்காசி புதிய பஸ் நிலையத்தில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ் முழுவதும் நிரம்பி சென்றது.

    இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அனைத்து ெரயில்களிலும் மக்கள் போட்டி போட்டு முன்பதி வில்லாத பெட்டிகளில் இடம் பிடித்து பயணம் மேற்கொண்டனர்.

    • தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

    பல்லடம் :

    பல்லடம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ்நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான மேல ரோட்டில் பொது விநியோக அங்காடி அருகில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும்.
    • தெருக்களின் குறுக்கே செல்லும் வாய்க்கால்களுக்கு பாலம் அமைக்க வேண்டும்.

    பாபநாசம்:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க ல்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் மீன், இறைச்சி மார்க்கெட் தற்போது சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

    அதனை இடித்து விட்டு புதிய நவீன மீன் இறைச்சி மார்க்கெட் அதே இடத்தில் கட்டித் தர வேண்டும். நூலகம் கட்டித் தர வேண்டும். தெருக்களின் குறுக்கே செல்லும் வாய்க்கால்களுக்கு பாலம் அமைக்க வேண்டும்.

    பேரூராட்சி சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும். கடைவீதி, தெற்கு ராஜவீதி, சன்னதி தெரு பின்புறம் கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும்.

    அன்னுக்குடி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தூர்வார வேண்டும். தார் சாலை அமைக்க முடியாத இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    அய்யம்பேட்டை பேரூராட்சியில், நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான மேல ரோட்டில் பொது விநியோக அங்காடி அருகில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும்.

    மேலும் பக்தர்களுக்கான தங்கும் விடுதி அமைக்க வேண்டும். மெலட்டூர் பேரூராட்சியில் உள்ள 9-வது வார்டு ஏர்வாடி பகுதி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடிமகன்கள் மது வாங்கி கொண்டு வந்து பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் குடித்து வருகின்றனர்.
    • தட்டிக்கேட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் பஸ் நிலையத்திற்கு தினசரி ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன . பயணிகளும் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் 2 சப்வேக்கள் உள்ளன.

    இதில் மேல்புறமுள்ள மாடிக்கு செல்லும் படிக்கட்டில் 24 மணி நேரமும் குடிமகன்கள் மது வாங்கி கொண்டு வந்து பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் குடித்து வருகின்றனர். தட்டிக்கேட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அபிராமம் பஸ் நிலையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள கழிவறை கட்டிடத்தை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர.
    • இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது.

    அபிராமம்,

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பஸ் நிலையம் அருகே 10 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.

    தொடக்கத்தில் 2 ஆண்டுகள் மட்டுமே இந்த கழிவறையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இங்கு மோட்டார் பழுதடைந்து கிடப்பதால் அதை சரிசெய்து கொடுக்க வேண்டும், கழிவறையை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் இந்த கட்டிடம் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டங்களும் இங்கு அதிக அளவில் உள்ளன.

    இந்த கழிவறை அருகே பஸ் நிறுத்தம் இருப்பதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பயத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.

    எனவே இந்த கழிவறையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில், மதுரை, சென்னை, திருவனந்தபுரம் என பல்வேறு வழித்தடங்களில் 80 பஸ்கள் இயக்கப் படுகிறது
    • இரவு நேர கடைசி டிரிப் பஸ்கள் திருவட்டார் பஸ் நிலையத்திற்கு வராமல் சுமார் ½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்கரையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பணிமனைக்குச்சென்று விடுகின்றன

    கன்னியாகுமரி :

    1971-ம் ஆண்டு திருவட்டாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை திறக்கப்பட்டது. பின்னர் பஸ்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால் 35 ஆண்டுகளுக்கு முன்பு திருவட்டார் கேசவபுரம் ரோட்டில் ஸ்ரீராமன்கோணம் என்ற இடத்தில் புதியதாக பணிமனை மாற்றப்பட்டதை அடுத்து பணி மனை பஸ் நிலையமாக மாற்றப்பட்டது.

    திருவட்டார் பணிமனையில் இருந்து குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில், மதுரை, சென்னை, திருவனந்தபுரம் என பல்வேறு வழித்தடங்களில் 80 பஸ்கள் இயக்கப்படுகிறது. கன்னியா குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் அதிகமான பஸ்கள் இயக்கப்படுவதும் இங்கிருந்துதான்.

    சமீப காலங்களில் இரவு நேரம் குலசேகரம், பேச்சிப்பாறை, கடையாலு மூடு, குற்றியார் ஆகிய இடங்களுக்குச்சென்று திரும்பும் இரவு நேர கடைசி டிரிப் பஸ்கள் திருவட்டார் பஸ் நிலையத்திற்கு வராமல் சுமார் ½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்கரையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பணிமனைக்குச்சென்று விடுகின்றன.

    உதாரணமாக இரவு நேர கடைசி டிரிப் பஸ்சில் குலசேகரத்தில் இருந்து திருவட்டார் பஸ்ஸ்டாண்ட் பகுதிக்கு வருபவர் பஸ்சில் திருவட்டார் என்ற பெயர் பலகையைப்பார்த்து பஸ்சில் ஏறுவார். திருவட்டாருக்கு டிக்கெட்டும் எடுப்பார். ஆனால் பஸ் காங்கரை சந்திப்பு வந்ததும் கண்டக்டர் திருவட்டார் பஸ் நிலையத்திற்கு பஸ் போகாது இறங்குங்க என்றவாறு பயணிகளை கீழே இறங்க வற்புறுத்துவார்.

    வேறு வழியின்றி பயணிகள் பஸ்சிலிருந்து இறங்குவர். அவர்கள் வேறு ஆட்டோ பிடித்தோ, நடந்தோ தான் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள வீட்டுக்கு செல்ல முடியும். இது தொடர்பாக இரவு நேர கடைசி டிரிப் காங்கரை சந்திப்பில் வரும்போது அடிக்கடி டிரைவர், கண்டக்டர்களுக்கும் பஸ் பயணிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது.

    நேற்று முன் தினம் இரவில் திருவட்டார் பஸ் ஸ்டாண்ட் அருகில் வசிக்கும் வயதான தம்பதியை குலசேகரத்தில் இருந்து வந்த திருவட்டார் பெயர்பலகை போட்ட பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக காங்கரையில் வைத்து கீழே இறங்குமாறு கூற, அவர்கள் வேறு வழியின்றி அழுதுகொண்டே வண்டியில் இருந்து இறங்கி சிரமப்பட்டு நடந்து திருவட்டாருக்கு சென்று சேர்ந்தனர். இவ்வாறு அடிக்கடி நடப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இரவு நேரம் குலசேகரம் பகுதியில் இருந்து திருவட்டார் வரும் அனைத்து பஸ்களும் திருவட்டார் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பின்பு, பணிமனைக்குச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ள அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்களுக்கு இலவசம் வழங்கக் கூடாது எனக் கூறும் பா.ஜனதா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை கருத்தில் கொண்டு இலவசங்களை அறிவித்து வருகிறது.
    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சியில் உள்ள 3 பஸ் நிலையங்களும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடந்தது.

    விழாவிற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பஸ் நிலையங்கள் புணரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் தலை நகராக நாகர்கோவில் விளங்கி வருகிறது. இந்த மாநகராட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக ரூ.8 கோடி மதிப்பில் இங்குள்ள 3 பஸ் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் ஆகியவை தலா ரூ. 2 கோடி மதிப்பிலும், கிறிஸ்டோபர் பஸ் நிலையம் ரூ. 4 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்பட உள்ளது.

    இந்தப் பணிகள் முடியும் போது பஸ் நிலையங்கள் பொதுமக்கள் பயன்படுத்தவும் பார்க்கவும் மிக நன்றாக அமையும்.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சர்வர் பிரச்சினை ஏற்படுவதாக கூறுகின்றனர். கடந்த காலங்களில் முறையாக பராமரிக்காமல் விட்டதால் தான் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

    தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 1½ ஆண்டுகளில் பல்வேறு சர்வர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு உள்ளன. விரைவில் அனைத்து நிலைகளும் சரியாகும்.

    ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் அரசு எடுக்கும் முடிவை காலதாமதம் செய்யும் தவறான முன்னுதாரணம் வருத்தம் அளிக்கிறது. மக்களை பாதிக்கக் கூடிய வகையில் கவர்னர் கிடப்பில் போட்டு இருப்பதின் உள்நோக்கம் குறித்து பா.ஜனதா தலைவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    மக்களுக்கு இலவசம் வழங்கக் கூடாது எனக் கூறும் பா.ஜனதா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை கருத்தில் கொண்டு இலவசங்களை அறிவித்து வருகிறது. அவர்கள் இந்த இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், என்ஜினியர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. கலை இலக்கிய பகுத்த றிவு பேரவை செயலாளர் தில்லைசெல்வம், ஒன்றிய செயலாளர் மதியழகன், செயற்குழு உறுப்பினர் சதா சிவம், மாநகர செயலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இறந்த 80 வயது மதிக்கத்தக்கவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர்? என்று விவரம் தெரியவில்லை
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் காணப்பட்டார் இது குறித்து சமூக சேவகர் ராஜகோபால் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    உடன் அவரது வாகனத்தில் குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றார் ஆனால் இவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர்? என்று விவரம் தெரிய வில்லை. மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இரவு நேரங்களில் வெளியூர்க ளுக்கு செல்பவர்களும் அதிக அளவு வந்து செல்வ தால் எப்பொழுதும் பஸ் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழியும்.
    • கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும்.

    காலை, மாலை நேரங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கூட்டம் அதிக மாக இருக்கும். இரவு நேரங்களில் வெளியூர்க ளுக்கு செல்பவர்களும் அதிக அளவு வந்து செல்வ தால் எப்பொழுதும் பஸ் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் வடசேரி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.பஸ்நிலையத்திற்குள் புற காவல் நிலையம் அமைக்கப பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு பஸ் நிலையத்தை யொட்டியுள்ள உழவர் சந்தை பகுதியில் ரோட்டோரத்தில் கணவன்-மனைவி படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென ரோட்டோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து அந்தப் பெண் கூச்சலிட்டார். உடனே பக்கத்தில் படுத்து இருந்த அவரது கணவர் கண்விழித்தார். அப்போது மனைவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட முதியவரிடம் அவர் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் அந்த முதியவரை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    இதையடுத்து கணவன் மனைவி இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்ட னர். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இது பற்றி தகவல் அறிந்த தும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதிய வரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. குடிபோதையில் ரோட்டோரத்தில் படுத்தி ருந்த பெண்ணிடம் சில்மி ஷத்தில் ஈடுபட்டதும் முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் முதியவரை கத்தி யால் குத்தி விட்டு தப்பி ஓடிய கணவன் மனைவியை தேடி வருகிறார்கள்.

    நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    • பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
    • ஒரு நாளைக்கு 100 இளைஞர்கள் வரை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    குனியமுத்தூர்,

    கோவை காந்திபுரத்தில் நகர பஸ் நிலையம் ெசயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இது எப்போதுமே பரபரப்பாக காணப்படும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.

    இப்படி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இளைஞர்களை குறித்து வைத்து பெண் புரோக்கர்கள் சிலர் பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    இந்த செயல்களில் ஈடுபடும், பெண் புரோக்கர்கள் தோளில் பேக் ஒன்றை மாட்டிக் கொண்டு சுற்றி திரிகின்றனர்.

    இவர்கள் அந்த வழியாக வரும் 20 முதல் 25 வயதுடைய இளைஞர்களை பார்த்து வழிமறிக்கின்றனர்.

    அவர்களிடம் அழகான பெண்கள் உள்ளனர் என்று ஆசை வார்த்தையை உதிர்க்கின்றனர். அழகான பெண் என்றவுடன் இளசுகளுக்கு சபலம் ஏற்பட்டு மூதாட்டி கூறுவதை மேலும் ேகட்க தொடங்கி விடுகின்றனர்.

    உடனே பெண் புரோக்கரும், இளை–ஞர்களை உசுப்பேற்றும் வகையில் மூதாட்டியின் செல்போனில் போன் செய்து, இளைஞர்களிடம் கொடுக்கிறார்.

    அப்போது மறுமுனையில் பெண் ஒருவர் பேசுகிறார். இதனால் உண்மை தான் என நம்பி இளைஞர்களும் அவர்களுடன் பேசி கொண்டே இருக்கின்றனர்.

    அப்போது எதிர் முனையில் ேபசும் பெண், நீங்கள் எந்த கலர் சட்டை அணிந்து இருக்கிறீர்கள். எங்கு நிற்கிறீர்கள் என விசாரிக்கின்றனர். நீங்கள் நிற்கும் இடத்திலேயே நில்லுங்கள் நான் ஒரு அரை மணி நேரத்தில் வந்து விடுவேன் என கூறுகிறார்.

    இளம்பெண் கூறியதை கேட்டதும் வாலிபரும் தன்னை மறந்து அப்படியே இளம்பெண்ணை பார்ப்பதற்காக அவரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.

    அப்போது அந்த பெண் புரோக்கர் இளைஞரிடம் எனக்கு உண்டானபணத்தை கொடுத்து விடு. நான் புறப்படுகிறேன். அந்த பெண் வந்ததும் நீ சந்தித்து கொள் என கூறி நச்சரிக்கிறார். இளைஞர்களும், அதனை நம்பி ரூ.200 முதல் ரூ.500 வரை பணத்தை கொடுத்து விடுகின்றனர்.

    ஆனால் இளைஞர் பல மணி நேரம் காத்திருந்தும் யாரும் வரவில்லை. பெண் வருவாள். அவளை சந்திக்கலாம் என ஆசையோடு காத்து நின்ற இளைஞர்கள் தாங்கள் ஏமாந்ததை யாரிடமும் சொல்லாமல், அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகின்றனர்.

    இதுபோன்ற சம்பவத்தால் ஒரு நாளைக்கு சராசரியாக 100 இளைஞர்கள் வரை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறிய தாவது:-

    இளைஞர்கள் இது போன்ற பெண் புரோக்கர்களை உடனே காவல்துறையில் பிடித்து ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் சபலம் அதை தடுத்து விடுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தும் பெண் புரோக்கர்கள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதித்து விடுகின்றனர்.

    ஒவ்வொரு பெண் புரோக்கருக்கும் 2, 3 பேர் செல்போனில் பேசுவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ஒரு பெண் புரோக்கர் அழைத்தால், மற்ற புரோக்கர்கள் தயார் நிலையில் இருந்து போனில் பேசுகின்றனர். இது அவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம். ஆனால் இது தெரியாத வாலிபர்கள் பணத்தை இழந்து ஏமாறுகிறார்கள்.

    இத்தகைய பெண் புரோக்கர்களை போலீசார் அடையாளம் கண்டும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே இளைஞர்களின் நலன் பாதுகாக்கப்படும். அவர்கள் ஏமாறும் நிலை தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×