search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226238"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்
    • உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி நடக்கிறது

    நாகர்கோவில் :

    பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி பசுமை மாவட்டம் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் காடு வளர்ப்பை அதிகரிக்கவும், கடலோர கிராமங்களில் கடலரிப்புக்கு எதிரான இயற்கை அரணை உருவாக்கவும், மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோரை கொண்டு ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நாளை (4-ந்தேதி) பிற்பகல் 3 மணி அளவில் தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை காருண்யபுரம் கடற்கரை பகுதியில் 'வனமே நம் வளமே" என்ற தலைப்பில் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுமார் 12 கி.மீ. அளவில் பனைமர விதைகள் மற்றும் புன்னை, தென்னை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் முகாம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    அதனைத்தொடர்ந்து அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளான கோவளம், மணக்குடி, பள்ளந்துறை, முட்டம், மிடாலம், இனயம் புத்தன்துறை, பைங்குளம், தூத்தூர், கணபதிபுரம், புத்தளம், குளச்சல், கொல்லங்கோடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

    இம்முகாம்களில் அனைத்து பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்று வதற்கான முன்னெடுப்பு பணிகளை மேற்கொள்ளு மாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
    • இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர்.

    குளச்சல்:

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி, சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர்ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் நேற்று நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்கியது.

    இன்று (1-ந்தேதி) காலை முதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி உள்ளன. அவை மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். மீன் பிடி தடைக்காலத்தில் உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாது. ஆனால் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்லும்.

    விசைப்படகுகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் குமரி மேற்கு கடலோர பகுதிகளில் மீன்வரத்து குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர். கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் இன்று காலை மீன் பிடிக்க சென்றன. கரை திரும்பிய கட்டுமரங்களில் நெத்திலி மீன்கள், வேளா மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    • கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.
    • போதிய மீன்கள் கிடைக்காததால் மீன்களின் விலை உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி ;

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்பட குகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது.

    குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றன. ஒரு விசைப்ப டகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட் களை விசைப்படகில் எடுத்து செல்வர்.

    இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் ஜூன் 1-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் தடைக்காலம் தொடங்குகிறது. இதை யொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. பெரும்பான்மை யான விசைப்படகுகள் கரை திரும்பி விட்டன.

    கடந்த 3 நாட்களாக மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. அவை மீன் பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாது. ஆனால் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்லும். இவற்றுள் போதிய மீன்கள் கிடைக்காததால் மீன்களின் விலை உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர

    • பிரபாசபட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோவில் அமைந்துள்ளது.
    • துவாரகாபுரியை ஆண்ட கிருஷ்ணர் சோமநாதரை வணங்கி போற்றி “புருஷோத்தமன்” என்ற உயர்ந்த பதவியை அடைந்தார்.

    சோமநாதபுரம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், மேற்கே அரேபியன் கடலும், வடக்கே கச்சு வளைகுடாவும், தெற்கே காம்பே வளைகுடா எல்லைகளாக, அமைந்துள்ள சௌராட்டிர தேசத்தில், 'வேராவல்' எனும் நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013 அன்று ஜீனகாட் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை பிரித்து, 15-08-2013இல் புதிதாக அமைக்கப்பட்ட கிர்சோம்நாத் மாவட்டம் எனும் மாவட்டத்தில், பிரபாசபட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோவில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.

    புராணக் கதைகள்: பிரபாசப்பட்டின கடற்கரையில் சோமநாதர் கோவில்

    சந்திரன் தனது 27 மனைவியரில் உரோகிணியிடம் மட்டும் அளவு கடந்த அன்பு பாராட்டி மற்ற மனைவியர்களைப் புறக்கணித்தான். தனது 26 மகள்களின் துயரத்தைக் கண்டு சீற்றங்கொண்ட தந்தை தட்சப்பிரசாபதி, சந்திரனுக்கு காச நோயினால் தேய்ந்து போகக் கடவது என்று சாபமிட்டார். ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்த சந்திரன் இறுதியில் சௌராட்டிரத்தின் கடற்கரையில் உள்ள பிரபாச தீர்த்தத்தில், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை சரணடைந்து நோய் நீங்கி சுகமடைந்தான். அதன்படி சந்திரன் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது. துவாரகாபுரியை ஆண்ட கிருஷ்ணர் சோமநாதரை வணங்கி போற்றி "புருஷோத்தமன்" என்ற உயர்ந்த பதவியை அடைந்தார். பாண்டவர்கள் இங்கு வந்து பிதுர் கடன்கள் செய்து சோமநாதரை வழிபட்டனர் என்று மகாபாரதம் கூறுகிறது.

    பெயர்க் காரணம்: சோமநாதர் கோவில், நுழைவாயில்

    சந்திரனே முதன்முதலில் இங்கு சிவலிங்கத்திற்கு பொற்கோவில் கட்டி வருடம் முழுவதும் அமிர்தத்தை பொழிந்து திருமுழுக்கு வழிபாடு செய்த காரணத்தால் இந்த ஜோதிர்லிங்கத்திற்கு 'சோமநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. எனவே இவ்விடத்தை சோமநாதபுரம் என்றும் அழைப்பர். பின்னர் இராவணன் அதை வெள்ளியிலும், கிருஷ்ணர் அதனைச் சந்தன மரத்திலும், குஜராத்தின் சோலங்கி அரசனான பீமதேவன் கல்லாலும் கட்டினார்கள் என்று கூறப்படுகின்றது.

    சோமநாதபுர ஆலயத்தை இடித்தவர்கள் விவரம்

    உருவ வழிபாட்டினை முழுவதுமாக எதிர்க்கும் இசுலாமிய மன்னர்கள் பல முறை சௌராஷ்ட்டிர பகுதி மீது படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை ஆறு முறை அடியோடு இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றனர். சோமநாதரின் ஆலயத்தை இடித்த இசுலாமிய மன்னர்கள் பெயர்கள் பின்வருமாறு.

    முதல் முறையாக கி.பி. 725ல் சிந்து மாநில இசுலாமிய அரபு ஆளுனரின் கட்டளைப்படி சோமநாதபுரம் கோயிலை, உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமியப் படைகள், சௌராட்டிர தேசத்தை ஆண்டு கொண்டிருந்த, பிரதிஹர குல மன்னன், இரண்டாம் நாகபாதர் காலத்தில் சோமநாதபுரம் கோவில் இடிக்கப்பட்டது.

    கி.பி. 1025, டிசம்பர் மாதம், கஜினி முகமது என்றழைக்கப்படும், ஆப்கானிஸ்தானில் கஜினி என்ற குறுநிலத்தை ஆண்ட முகமது என்ற குறுநில மன்னர், இசுலாமியர்களின் தலைமை மதத்தலைவரான கலீபாவின் அனுமதியுடன், இசுலாமிய கொள்கைக்கு எதிராக உள்ள உருவ வழிபாட்டு இடங்களை அழிக்கு பொருட்டு சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன், ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று, 20,000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். நாட்டில் இந்துக்கள் உயிருடன் வாழ வேண்டுமானால் கட்டாய வரி செலுத்த ஆணையிட்டார். சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்து, அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள், தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றார்.

    24.02.1296ல் குஜராத்தை ஆண்ட இராசாகரன் என்ற மன்னர் காலத்தில், அலாவுதீன் கில்ஜி என்ற தில்லி சுல்தான், குஜராத் பகுதி மீது படையெடுத்து சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார். பின்னர் 'காம்பத்' அரசை ஆண்ட இரண்டாம் கர்ணதேவ வகேலா மன்னரை கொன்று, அவரின் மனைவி கமலாதேவியை மதமாற்றம் செய்வித்து மணந்து கொண்டு அவரை பட்டத்து அரசியாக்கினார். கமலாதேவியின் அந்தரங்க பணிப்பெண்னையும் (திருநங்கை) தன்னுடன் தில்லிக்கு கொண்டு சென்றார் கில்ஜி. அந்த திருநங்கைக்கு, மாலிக் கபூர் என்று பெயர் சூட்டி தன் ஆருயிர் நண்பனாக்கி, படைத்தலைவர் தகுதி வழங்கினார் அலாவுதின் கில்ஜி. கில்ஜி, 50,000 ஆயிரம் பேரைக் கொன்று, 20,000 பேரை அடிமைகளாக பிடித்துச் சென்றதுடன் அப்பகுதியில் இருந்த கால்நடைகளையும் கவர்ந்து சென்றார். இந்த செய்தியை ஹாசன் நிஜாமைச் சேர்ந்த தாஜ்-உல்-மாசிர் என்ற வரலாற்று அறிஞர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    கி.பி. 1375ல் ஜினாகாட் சுல்தான், முதலாம் முசாபர்ஷா, உருவ வழிபாட்டினை அவமதிக்கும் பொருட்டு, சோமநாதபுரம் ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினார்.

    கி.பி. 1451ல் ஜினாகாட் சுல்தானாக இருந்த முகமது பேக்டா என்பவர் சோமநாதரின் ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார்.

    கி.பி. 1701ல் மொகலாயர் மன்னர்கள் காலத்தில், இசுலாமிய நெறிப்படி வாழ்ந்த மற்றும் உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்த்த, மொகலாய மாமன்னர் அவுரங்கசீப் சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றார்.

    சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி சீரமைத்தல்

    முதல் முறையாக கி.பி. 649ல் சௌராட்டிர தேசத்து வல்லபீ புர யாதவகுல மன்னர், சோமநாதபுர ஆலயத்தை அதே இடத்தில் இரண்டாம் முறையாக சோமநாதரின் ஆலயத்தை சீரமைத்து கட்டினார்.

    மூன்றாம் முறையாக கி.பி. 815 -இல், கூர்சர பிரதிஹர வம்சத்தின், இரண்டாம் நாக பாதர் மன்னர், சோமநாதபுர ஆலயத்தை மறுபடியும் சீரமைத்து கட்டினார்.

    நான்காம் முறையாக மாளவ நாட்டு போஜராஜனும், பட்டான் (ஜீனாகாட்டு) நாட்டு சோலங்கி மன்னரும் 1042 -இல் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்கள்.

    ஐந்தாம் முறையாக கி.பி 1308 -இல் சூதசமாவம்ச அரசன் மகிபாலன் என்பவர் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டினார். அவர் மகன் கேன்கர் என்பவர் 1326-1351 -க்குள் கோயிலில் லிங்கத்தை பிரதிட்டை செய்தார்.

    ஆறாம் முறையாக 1783 -இல் இந்தூர் நாட்டு அரசி அகல்யாபாய் ஹோல்கர், நாக்பூர் மன்னர் இராஜா போன்ஸ்லே, கோலாப்பூர் மன்னர் சத்ரபதி போன்ஸ்லே மற்றும் குவாலியர் மன்னர் ஸ்ரீமந் பாடில்புவா ஷிண்டே ஆகியோர் ஒன்று சேர்ந்து, சிதைந்த போன பழைய சோமநாதபுரம் கோவில் அருகே புதிய சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்.

    ஏழாம் முறையாகவும், இறுதியாகவும், விடுதலை பெற்ற இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலும் உணவு அமைச்சராக இருந்த கே. எம். முன்ஷியும் இணைந்து பொது மக்களிடம் நிதி திரட்டி, சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்ட துவங்கினர். முதலில் சோமநாதபுரம் கோவில் இடிபாடுகளை அக்டோபர் மாதம்,1950 -இல் அகற்றினர். சோமநாதபுரம் கோயிலை இடித்துக் கட்டிய இடத்தில் இருந்த மசூதியை சில மைல் தூரத்திற்கு அப்பால் இடம் மாற்றி அமைத்தனர். சோமநாதபுர கோயிலைப் புனரமைக்க தொடங்கும் விழாவை (பூமி பூஜை விழா) நடத்தி, மே மாதம், 1951ல், இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். இராசேந்திரப் பிரசாத் தலைமையில், கோவில் அத்திவாரக்கல் நடப்படும் விழா நடைப்பெற்றது. புதிதாக கட்டப்பட்ட சோமநாதரின் ஆலயத்தை இந்தியக் குடியரசுத் தலைவர், சங்கர் தயாள் சர்மா தலைமையில் ஜனவரித் திங்கள் 1ஆம் நாள், 1995ஆம் ஆண்டு (01-01-1995) பொது மக்களின் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

    கோவிலின் கட்டிடக் கலை அம்சங்கள்

    சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் இறுதியாக கட்டப்பட்ட சோமநாதர் கோவில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது.

    • கடற்கரையில் ஓசோன் காற்று அதிகம் வீசப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
    • தூய்மை பணி மேற்கொள்ள பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்றாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் ராட்சத பலூன்களை பறக்க விட்டனர்.

    அப்போது கலெக்டர் மகாபாரதி பேசியதாவது,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால் பூம்புகார் சுற்றுலா தளம் ரூ.24 கோடி செலவில் பூம்புகார் சுற்றுலா தளம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதேபோல தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மேம்படுத்தும் பணி மிக விரைவில் தொடங்கப்படும். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை தற்போது அருங்காட்சியமாக உள்ளது.

    மேலும் இங்கே கடற்கரையில் ஓசோன் காற்று அதிகம் வீசப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    இத்தகைய தரங்கம்பாடி சுற்றுலா தளத்தை பிரபலப்படுத்தும் விதமாக ஓசோன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ஓசோன் என்பது ஆக்சிஜனின் மூலக்கூராகும். தூய்மை பண்ணி மேற்கொ ள்ள பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்றாகும்.

    சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வந்து செல்வதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சா ர்பில் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல அமைப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாதவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா, தரங்கம்பாடி பேரூராட்சி துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
    • துறைமுகம் வெறிச்சோடியது

    கன்னியாகுமரி :

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.

    இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கட லில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியா குமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியா ன கன்னியாகுமரிமுதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க இன்று முதல் தடை அமலுக்கு வந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தை தள மாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளது.

    இதனால் சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகம்களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. எப் போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தை களும் வெறிச்சோடி கிடக் கின்றன.

    இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரை யேற்றி பழுது பார்க்கும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த மீன்பிடி தடைக்காலங்களில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

    இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமை யாக உயர வாய்ப்பு உள்ளது.

    இந்த மீன்பிடி தடை காலத்தினால் கன்னி யாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட சுமார் 10 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மீன வர்கள் வேலை வாய்ப் பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • பலர் பூங்கா, கடற்கரை மணலில் பொழுதை போக்கினாலும், சிலர், கடலின் ஆழம் தெரியாமல் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்
    • மதிய வேளையில், போலீசாருக்கு தெரியாமல் வெயிலின் தாக்கத்தை தணிக்க பலர் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    தொடர் விடுமுறை காரணமாக, காரைக்கால் மாவட்ட ஆன்மீக தலங்கள், கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. இவர்களில் பலர் பூங்கா, கடற்கரை மணலில் பொழுதை போக்கினாலும், சிலர், கடலின் ஆழம் தெரியாமல் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர். அண்மைக்காலமாக, காரைக்கால் கடலில் குளித்து, கடல் அலையில் சிக்கி பலர் இறந்துள்ளனர். இதன்காரணமாக, கடலில் குளிப்பதை போலீசார் அனுமதிப்பதில்லை. மதிய வேளையில், போலீசாருக்கு தெரியாமல் வெயிலின் தாக்கத்தை தணிக்க பலர் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர். நேற்று மாலை திரளான மக்கள் கூட்டம் கடலில் இறங்கி குளிப்பதை பார்த்த போலீசார், அவர்களிடம் கடலின் ஆழம் குறித்து எடுத்துகூறி,குளிக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தினர். போலீசாரின் அறி வுறுத்தலை பெரிதுபடுத்தாத சிலர், போலீசார் இல்லாத இடமாக பார்த்து குளிக்கத் தொடங்கினர்.

    இதனால், பொறுமை இழந்த போலீசார், கடலில் இறங்கி, குளிப்பவர்களை அப்புறப்படுத்தினர். கடல் ஆழம் என்றால் குறிப்பிட்ட தூரம் தடுப்பு வேலி அமைத்து, ஆழம் இல்லாத கரையில் குளிக்க போலீசார் அனுமதிக்கவேண்டும். வெயில் காலம் என்பதால் கடல் குளியல் அவசியம். இதை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    • துவாரகாபதி கடற்கரையில் ஆமை முட்டைகள் பொரிப்பகம் வனத்துறை யினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது
    • 120 ஆமை குஞ்சுகள் கடலில் பாதுகாப்பாக விடப் பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பில் துவாரகாபதி கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட வன அலுவலர் இளையராஜா முன்னிலையில் ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் பணியினையும், கடற்கரையினை சுத்தப்படுத்தும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டம், துவாரகாபதி கடற்கரையில் ஆமை முட்டைகள் பொரிப்பகம் வனத்துறை யினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடற்கரை மணலில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து, முட்டைகள் பொரிப்பதற்கு கொண்டு செல்லப்படும். அங்கு ஆமை முட்டைகளை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை தேதி வாரியாக பாதுகாப்பாக வைத்து, முட்டைகள் பொரிக்க வசதிகள் உருவாக்கப்பட் டுள்ளது. கடந்த வருடம் இங்கு 5993 ஆமை முட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டதில் 3708 ஆமை குஞ்சுகள் பொரித்து கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது.

    இந்த வருடம் 9491 ஆமை முட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டதில் தற்போது வரை 1673 ஆமை குஞ்சுகள் பொரித்து கடலில் பாதுகாப்பாக விடப் பட்டுள்ளது. இந்த ஆமைக்குஞ்சுகளை கடலில் விடுவதால், மீன்வளம் பெருகுவதற்கு வழிவகை செய்வதோடு, கடல் நீரை தூய்மைப்ப டுத்தவும் மிகவும் உதவியாக இருக்கும். இன்றைய தினம் சேகரித்து வைக்கப்பட்ட ஆமை முட்டைகளில் பொரித்து வெளி வந்த 120 ஆமை குஞ்சுகள் கடலில் பாதுகாப்பாக விடப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, வனத்துறையினரால் வெளியிடப்பட்ட கையேட்டினை கலெக்டர் ஸ்ரீதர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கியதோடு, வனத்துறையினர் மற்றும் மாணவ, மாணவி கள் இணைந்து உருவாக்கப்பட்ட ஆமை மணற் சிற்பத்தினை பார்வையிட்டார்.

    தொடர்ந்து, கலெக்டர் ஸ்ரீதர் மாணவ, மாணவி களுடன் கடற்கரையில் நெகிழி மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை தொடங்கி வைத்தார். உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், உதவி கலெக்டர் (பயிற்சி) சுகாஷ் காடே, (கேரள மாநிலம்) வனச்சர கர்கள், மாணவ, மாணவி கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கடற்கரையை ஒட்டிய அலை அடிக்கும் பகுதிகள் செம்மண் நிறமாகவும் காட்சி தருகிறது
    • தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் மணவாளக்குறிச்சி, சின்ன விளை, பெரியவிளை மண்டைக்காடு, புதூர், கொட்டில் பாடு வரையிலான கடல் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நிறம் மாறி காணப்படுகிறது.

    கடற்கரையை ஒட்டிய அலை அடிக்கும் பகுதிகள் செம்மண் நிறமாகவும் காட்சி தருகிறது. பெரும் மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சேறு சகதிகளுடன் கடலில் கலந்தால் எப்படி இருக்குமோ அதைவிட மேலாக நிறம் மாறி கடலின் தன்மை மாறி காணப்படுகிறது.

    மேலும் இந்த தண்ணீர் மணலுடன் கலந்த பின்னர் அந்த பகுதியில் நிறமாற்றம் குறைகிறது. பின்னர் மீண்டும் அந்த பகுதியில் நிறமாற்றம் தொடர்ந்து ஏற்படுகிறது. இது கடற்கரையோர மக்களையும், மண்டைக்காடு புதூர் கடற்கரைக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளையும் கவலை கொள்ள செய்துள்ளது. தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து புதூரை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் இப்போது பெருமழை இல்லை. ஆறுகளில் வெள்ளம் இல்லை. வேறு எங்கிருந்தும் கழிவு நீர் கடலில் கலக்கவில்லை. தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றி அது கடலில் கலப்பதால் தான் இந்த மாற்றம் வருகிறது. அப்படி என்றால் கடல் மாசுபட்டு விட்டால் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் சுற்றுச்சூழ லும் கெட்டுவிடும். எனவே ஆபத்தான கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மீனவர்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வட சென்னை பகுதி மக்கள் மெரினா கடற்கரையில் உள்ளதை போன்று இனி காசிமேடு கடற்கரையில் பொழுதை கழிக்கலாம்.
    • புதிய கடற்கரையை உருவாக்குவதற்காக ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    திருவொற்றியூர்:

    சென்னையில் மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர் கடற்கரைகள் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக உள்ளன. அனைத்து நாட்களிலும் கூட்டம் அலை மோதும். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட 2 மடங்கு கூட்டம் இருக்கும்.

    இதற்கிடையே காசிமேடு- எர்ணாவூர் பாரதி நகர் இடையேயான ஒரு பகுதியை அழகுபடுத்தி சென்னை நகர மக்களின் பொழுதுபோக்கும் மற்றொரு கடற்கரையாக மாற்ற அரசு திட்டமிட்டு உள்ளது. இது வட சென்னை மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஆகும். இதனால் வரும் சில மாதங்களில் வட சென்னை பகுதி மக்கள் மெரினா கடற்கரையில் உள்ளதை போன்று இனி காசிமேடு கடற்கரையில் பொழுதை கழிக்கலாம். இதனால் சென்னை நகருக்கு மேலும் ஒரு கடற்கரை வசதி கிடைக்க உள்ளது.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையின் 3-வது மாஸ்டர் பிளானுக்காக சி.எம்.டி.ஏ.ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் காசிமேடு- எர்ணாவூர் பாரதி நகர் இடையே புதிய கடற்கரையை உருவாக்குவதற்கான திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து புதிய கடற்கரையை உருவாக்குவதற்காக ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இன்னும் 2 நாட்களில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) மூத்த அதிகாரிகள் காசிமேடு பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர். இதில் புதிய கடற்கரை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு பற்றி விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து காசிமேடு பகுதி மக்கள் கூறும்போது, காசிமேட்டில் புதிய கடற்கரை திட்டத்தால் வடசென்னையின் முகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். எனினும் முழு பகுதியையும் கடற்கரையாக உருவாக்க முடியாத நிலை உள்ளது. எனவே அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வடசென்னையில் மெரினா கடற்கரை போன்று கடற்கரையை உருவாக்க திட்டமிடப்பட்ட உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் நடைபயிற்சி செய்ய வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை.

    கடற்கரை பகுதியில் நடைபாதை, அமர வசதியாக பெஞ்சுகள் கொண்ட ஓய்வு இடம், யோகா வசதி, குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த உடற்பயிற்சி கூடம், மெரினா கடற்கரையில் உள்ளதைப் போன்ற உணவுக் கடைகள் போன்றவை அமைக்கப்படும்.குழந்தைகளின் நலனுக்காக ஸ்கேட்டிங் மைதானமும் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது என்றனர். வடசென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, காசிமேட்டில் புதிய கடற்கரை உருவாக்குவதற்கான சி.எம்.டி.ஏ.வின் திட்டம் வரவேற்கதக்கது. அதிகாரிகளின் முதல் கட்ட ஆய்வுக்குப் பிறகு சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பிரபலமான மற்ற நிறுவனங்களின் நிபுணர்களும் விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.

    இந்த பகுதியில் கடல் ஆழமாக உள்ளது. கடல் அரிப்பை தடுக்க கல் போடப்பட்டு உள்ளது.மேலும் திருவொற்றியூர் டோல்கேட் முதல் எர்ணாவூர் பாரதியார் நகர் வரை கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவும் உள்ளது. எனவே முழுவதையும் கடற்கரையாக கொண்டு வர முடியாது.

    இதேபோல் திருவொற்றியூர் மஸ்தான்கோவில் அருகே சூறை மீன்பிடி துறைமுகமும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.

    • கடல் உப்பு காற்றினால் சிதிலமடைந்த பகுதிகளில் சிமெண்ட் கலவை பூச்சு
    • காமராஜர் அஸ்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் 2000ம் ஆண்டு காமராஜருக்கு மணி மண்டபம் திறக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 1975-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அதில் ஒரு அஸ்திகலசம் கன்னியா குமரிக்கு எடுத்து வரப்பட்டது.

    அந்த அஸ்தி கலசம் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவுமண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த அஸ்தி கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கரைக்கப்பட்டது.இதனை நினைவு கூறும் வகையில் காமராஜர் அஸ்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் 2000ம் ஆண்டு காமராஜருக்கு மணி மண்டபம் திறக்கப்பட்டது.

    காமராஜர் மணிமண்ட பத்தில் காமராஜரின் மார்பளவு வெண்கலச் சிலை அமைந்து உள்ளது. மேலும் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் அபூர்வ புகைப்பட கண்காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த மணி மண்டபம் திறக்கப்பட்டு 23 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வெள்ளி விழாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் காமராஜர் மணிமண்டபம் கடல் உப்பு காற்றினால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே சிதிலமடைந்து வெடிப்பு விழுந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து காமராஜர் மணிமண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பயனாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபம் பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு மூலம் ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணியாக மணிமண்டபத்தின் வெளிப்புறப் பகுதியில் மூங்கில் கம்புகளினால் சாரம் அமைக்கப்பட்டு சிதில மடைந்து வெடிப்புவிழுந்து காணப்படும் பகுதிகள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல கூட்டம் அலைமோதியது

    கன்னியாகுமரி, பிப்.26-

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள்கூட்டம்அலை மோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில்அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட "கியூ"வில் காத்திருந்தனர். காலை 8 மணிக்குபடகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார்வை யிட்டனர். கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளானஇன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவர த்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்தபோலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டுஇருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    ×