search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணிக்கை"

    • வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூரில் ஆதிகாலத்தில் தொடங்கப்பட்ட பழக்கமல்ல.
    • இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    தலைமுடி காணிக்கை

    மேல்மலையனூர் அங்காளம்மனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் மலையனூர் மாகாளி முன்பு செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இத்தலத்தில் வைத்தே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையை மேல்மலையனூருக்கு அழைத்து வந்து முதல் மொட்டை போட்டு தலை முடியை காணிக்கையாக கொடுக்கவும் பக்தர்கள் தவறுவது இல்லை.

    அதிலும் குறிப்பாக இந்த ஆடி மாதம் முழுவதும் இத்தலத்துக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்வோர்கள் ஏராளம். அங்காளம்மனை தீவிரமாக நேசிப்பவர்கள் குடும்பத்தோடு மொட்டை போட்டுக் கொள்வதுண்டு.

    அது போல சிறுமியருக்கு காது குத்துவதையும் பெரும்பாலான பக்தர்கள் இந்த தலத்திலேயே வைத்து நடத்துகிறார்கள்.

    பொங்கல் வழிபாடு

    ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் அம்மன் கேட்ட வரங்கள் மட்டுமின்றி கேட்காத வரங்களையும் அள்ளி தருவாள் என்று பெண்கள் நம்புகிறார்கள். இதனால்தான் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அதிகளவில் அம்மன் ஆலயங்களில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடுகள் செய்வதுண்டு.

    மேல்மலையனூர் தலத்திலும் அம்மனுக்கு பொங்கல் வழிபாடு வைப்பது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. சமீப ஆண்டுகளாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் மலையனூர் மாகாளிக்கு பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

    இதையடுத்து மேல்மலையனூர் தலத்தில் பொங்கல் வைப்பதற்காகவே தனிப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெளியூர் செல்பவர்கள் அங்கு பொங்கல் வைத்து அங்காளம்மனை மனதார வழிபட்டு வரலாம். அதிகாலை முதல் மாலை வரை பொங்கல் வைத்து வழிபடலாம்

    என்றாலும், ராகு காலத்தில் மட்டும் பொங்கல் வைத்து வழிபட வேண்டாம் என்று சொல்கிறார்கள். பொங்கல் பிரசாதம் படைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதை வீடுகளுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள்.

    ஆனால் பொங்கல் நைவேத்தியத்தை அங்காளம்மனுக்கு படைத்து வழிபட்ட பிறகு அதை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பகிர்ந்து அளிப்பது நல்லது. பக்தர்களுக்கு இந்த பிரசாதத்தை வினியோகிப்பது மூலம் பொங்கல் வழிபாடு செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    ஆடு&கோழி பலி

    மேல்மலையனூர் தலத்தில் ஆடி மாதம் ஆடு, கோழி பலியிடுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் கோவிலுக்குள் எத்தகைய பலி வழிபாடுகளும் நடப்பதில்லை. கோவிலுக்கு வெளியே தூரத்தில்தான் அவற்றை செய்கிறார்கள்.

    மேல்மலையனூர் தலத்தில் காவல் தெய்வமாக இருக்கும் பாவாடைராயனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் சமர்ப்பிப்பார்கள். அங்காளம்மன் ஒருதடவை, "எனக்கு படைக்கப்படும் உணவுகள் உன்னைச் சாரும்" என்று, பாவாடைராயனிடம் கூறி இருந்தாளாம். எனவே இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    ஆடி மாதம் அங்காளம்மனை வழிபடுபவர்கள் மறக்காமல் பாவாடைராயனையும் வழிபட்டு வர வேண்டும். அவர் நம் வழிப்பயணத்துக்கு துணை இருப்பார் என்பது ஐதீகம்.

    ஆடு& கோழி சுற்றி விடுதல்

    சமீப காலமாக பக்தர்கள் ஆடு, கோழி பலியிடுவதை குறைத்து வருகிறார்கள். அதற்குபதிலாக கோவில் அருகில் சென்று ஆடு, கோழிகளை சுற்றி விட்டுவிட்டு வந்து விடுகிறார்கள்.

    இதன் மூலம் தங்கள் பிரார்த்தனை நிறைவுபெறுவதாக நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த சுற்றிவிடும் வழிபாடு மிக எளிய பரிகாரமாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த வழிபாட்டை பின்பற்றுகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக மேல்மலையனூர் தலத்தில் ஆடு, கோழி மட்டுமின்றி மாடுகளையும் கூட சுற்றி விட்டு நேர்த்தி கடன் செய்கிறார்கள்.

    வேப்பஞ்சேலை வழிபாடு

    அங்காளம்மனை வழிபடும் பெண்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றகோரி ஆலயத்தில் வேப்பஞ்சேலை அணிந்து வழிபாடு செய்வதுண்டு. பொதுவாக வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூர் கோவிலில் ஆதிகாலத்தில் இருந்து தொடங்கப்பட்ட பழக்கமல்ல. சென்னை அருகே உள்ள பெரியபாளையம் கோவிலில்தான் இந்த வழிபாடு அதிகஅளவில் நடக்கிறது.

    சமீப காலமாக மேல்மலையனூர் கோவிலுக்கு வரும் பெண்களும் இந்த வழிபாட்டை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இந்த வழிபாடு செய்தால் அம்மன் மனம் இறங்கி வேண்டும் வரம் தருவாள் என்பது நம்பிக்கை.

    தீச்சட்டி ஏந்துதல்

    மலையனூரில் பிரார்த்தனைக்கு வருபவர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து வழிபடுவதுண்டு. ஆடி மாதம் தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நேர்த்திகடன் செய்பவர்கள் முதலில் அக்னி குளத்தில் நீராடி அங்கிருந்து தீச்சட்டி ஏந்தி வருவார்கள். சிலர் அழகு குத்தியும் தீச்சட்டி ஏந்தி வருவதுண்டு.

    பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் அம்மன்

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆடி அமாவாசை தினமாகும். இந்த நாள் மறைந்த முன்னோர்களான பித்ருகளை நினைத்து வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள்.

    நாளை காலை புண்ணிய தீர்த்தங்கள், நதிகள், கடலோர பகுதிகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அதன் பிறகு வீடுகளிலும் முன்னோர்களுக்கு சிலர் படையல் செய்து வழிபடுவது உண்டு.

    ஆனால் பித்ரு தர்ப்பணம் செய்த பிறகு வீட்டிற்கு வராமல் நேரடியாக மேல்மலையனூர் அங்காளம்மன் தலத்துக்கு சென்று அம்மனை வழிபட்டால் பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் பலன் கிடைக்கும்.

    அதாவது நாம் பித்ருக்களுக்கு செய்த தர்ப்பணங்கள் முழுமையாக அவர்களை சென்று சேர அங்காளம்மன் உதவுவாள் என்பது ஐதீகம். ஆதிகாலத்தில் அங்காளம்மன் இத்தலத்தில் அவதாரம் எடுத்து பல்வேறு ஆத்மாக்களுக்கு ஞானம் வழங்கி உயர்வு கொடுத்தாள்.

    எனவேதான் பித்ரு தர்ப்பணத்திற்கு பிறகு அங்காளம்மனை வழிபடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

    மஞ்சள் ஆடை

    ஆடி மாதம் மலையனூர் தலத்துக்கு செல்பவர்கள் அம்மனுக்கு புடவை சாத்தி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு மிகவும் உகந்தது மஞ்சள் நிற உடையாகும். அது கிடைக்காத பட்சத்தில் சிவப்பு கலரில் புடவைகள் வாங்கி சாத்தலாம்.

    புற்றை சுற்றினால் பித்து நீங்கும்

    மேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் இந்த அபிஷேகத்தை செய்தால் மிகவும் நல்லது. அங்காளம்மனுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய இயலாது. மற்ற சாதாரண நாட்களில்தான் இந்த வழிபாட்டை நடத்த முடியும்.

    அம்மனுக்கு அபிஷேகம் சாதாரண நாட்களில் எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் நேரத்திலே அமைத்து கொள்ள முடியும். இந்த வழிபாடு செய்வதால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    அதுபோல அங்காளம்மன் தலத்தில் உள்ள புற்றுக்கும் அபிஷேக வழிபாடுகள் செய்யலாம். புதிய புற்று மண் தூவி அதன் மேல் மஞ்சள் தண்ணீர் தெளித்து குங்குமம் பூசுவார்கள். இதுவும் அம்மனை குளிர வைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புற்றுக்கு அபிஷேகம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகமாகும்.

    மலையனூரில் உள்ள புற்றை சுற்றி வந்து வணங்கினால் பித்து நீங்கும் என்பது பலமொழியாக சொல்லப்பட்டு வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து சென்று ஓர் இரவு தங்க வைத்தாலே போதும் குணம் அடைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி பலன் அடைந்தவர்கள் ஏராளமானவர்கள் ஆவர்.

    • அவதானப்பட்டி கோவிலில் ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதம் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு அவதானப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களை ஓட்டி செல்லும் டிரைவர்கள் பலரும் இங்கு வாகனங்களை நிறுத்தி சாமியை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், தக்கார் பிரபு, செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் மேற்பார்வையில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 30-க்கும் மேற்பட்டோர் உண்டியல்களை பிரித்து பணத்தை எண்ணினார்கள்.

    இது குறித்து அறநிலைய துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அவதானப்பட்டி கோவிலில் ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதம் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதற்கு முன்னதாக கோவில் உண்டியல் திறக்கப்பட்ட காணிக்கைகள் எண்ணப்படும். கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை. தற்போது திருவிழா நடைபெற உள்ளதால், கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதன்படி, உண்டியலில் ரூ-.39 லட்சத்து 19 ஆயிரத்து 976 ரொக்கம், 96 கிராம் தங்கம், 170 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    உண்டியல் காணிக்கை எண்ணியதை முன்னிட்டு கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில், கிருஷ்ணகிரி அணை போலீஸார் 20 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • குன்றத்தூரில் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
    • பக்தர் தங்கத்தாலான 3 அடி உயரம் கொண்ட தங்க சேவல் கொடியை முருக பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்.

    குன்றத்தூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் குன்றத்தூரை சேர்ந்த முருக பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்து வேண்டி உள்ளார். வேண்டுதல் நிறைவேறினால் தங்கத்தால் சேவல் கொடியை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டியிருந்தார். வேண்டுதல் நிறைவேறிய நிலையில் தான் சொன்னபடி ரூ.65 லட்சத்தில் 1 கிலோ 400 கிராம் எடை கொண்ட தங்கத்தாலான 3 அடி உயரம் கொண்ட தங்க சேவல் கொடியை முருக பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்.

    இதனை குன்றத்தூர் முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் பெற்றுக்கொண்டார். அவருடன் முருகன் கோவில் அறங்காவலர்கள் குணசேகர், ஜெயக்குமார் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் கோவில் செயல் அலுவலர் கன்னியா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    தற்போது காணிக்கையாக வழங்கப்பட்ட இந்த தங்க சேவல் கொடியை தினமும் முருகபெருமான் சன்னதியில் வைத்து பூஜை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • 6 கிராம் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

    கடலூர்:

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், விருத்தகிரீ்ஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மாலா முன்னிலையில், கோவில் மேலாளர் பார்த்தசாரதி மேற்பார்வையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    கோவிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 1 திருப்பணி உண்டியல் என 10 உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. இதில் 9 லட்சத்து 18 ஆயிரத்து, 53 ரூபாய் ரொக்கம், 6 கிராம் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் எண்ணும் பணி முடிந்தபின் காணிக்கைகளை கோவில் ஊழியர்கள் கோவிலின் வங்கிக் கணக்கில் செலுத்தினர்.

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது
    • 3 கிலோ 973 கிராம் தங்கமும் கிடைத்தது

    மண்ணச்சநல்லூர்:

    சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்கும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதமிருமுறை எண்ணப்படுகின்றன. கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. திருக்கோவில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி தங்கம், வெள்ளி நகைகள், அயல்நாட்டு கரன்சிகளை கணக்கெடுத்தனர். கணக்கெடுப்பின் முடிவில் உண்டியலில் ரொக்கமாக ரூ.1 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரத்து 687 பணம், 3 கிலோ 973 கிராம் தங்க நகைகள், 7 கிலோ 645 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.

    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
    • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவில் வாரந்தோறும் திங்கள், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திறந்திருக்கும். உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்தது. இந்த அபிஷேகம் மே 22-ந்தேதி முடிவடைந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி 3 தற்காலிக கோவில் உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்து சமய அறநிலையத்துறையின் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, சரக ஆய்வாளர்கள் தீபாதேவி, வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக 3 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவை எடுக்கப்பட்டு தனித்தனியாக எண்ணப்பட்டது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க ஆன்மிக மெய்யன்பர்கள் 47 பேரும், கோவில் பணியாளர்கள் உள்பட 60 பேர் ஈடுபட்டனர். இதில் ரூ.25 லட்சம் பணமும், 192 கிராம் தங்கமும், 148 கிராம் வெள்ளியும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

    • பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
    • கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் பகவதிபடி பகுதியை சேர்ந்தவர் சசிதரன்பிள்ளை மகள் சங்கீதா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனி கோவிலுக்கு வந்தார். பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.

    பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர். உண்டியல் சட்டத்தின்படி உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்க வழியில்லை. ஆனால் பக்தரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவில் அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ரூ.1லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17.460 கிராமம் எடையுள்ள புதிய தங்கசங்கிலியை வழங்கினார்.

    கோவில் தலைமை அலுவலகத்தில் சங்கீதாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

    • விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில் உண்டியலில் ரூ.3.92 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்
    • செயல் அலுவலர் முத்துராமன், ஆய்வாளர் யசோதா, மேற்பார்வையாளர் மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது

    விராலிமலை,

    புதுக்கோட்டை விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக போற்றப்படும் இக்கோயிலில் வருடம் முழுவதும் மார்கழி, சித்திரை உள்ளிட்ட மாதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் முக்கிய விழாக்கள் நடைபெறும்.இதில் பல்வேறு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து இருந்து அம்மனுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள். இந்த நிலையில் இக்கோயில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    செயல் அலுவலர் முத்துராமன், ஆய்வாளர் யசோதா, மேற்பார்வையாளர் மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 3 லட்சத்தி 92 ஆயிரத்தி 189 ரொக்கம் மற்றும் 5.8 கிராம் தங்கம், 291 கிராம் வெள்ளி என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் அருள்முருகன், மாதவன்,கோயில் மகளிர் குழுக்கள், மற்றும் கோகிலா கலைக்கல்லூரி மாணவர்கள், விளக்குபூஜை மகளிர் குழுவினர், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ரூ.49½ லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது
    • கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக அன்பர்கள் ஈடுபட்டிருந்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். மேலும் அந்த உண்டியல்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவதும் வழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் 5-ந்தேதி கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றதால் மார்ச் மாதம் உண்டியல்கள் திறந்து எண்ணப்படவில்லை.

    இந்தநிலையில், நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலின் உதவி ஆணையர் ஹரிகர சுப்பிரமணியன் தலைமையில், மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, சரக ஆய்வாளர் தீபாதேவி ஆகியோர் முன்னிலையில் கோவிலில் உள்ள மொத்தம் 7 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

    இதில், ரூ.49 லட்சத்து 63 ஆயிரத்து 77-ம், 261 கிராம் தங்கமும், 845 கிராம் வெள்ளியும், டாலர், தினார் உள்ளிட்ட 167 எண்ணிக்கையிலான வெளிநாட்டு பணமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக அன்பர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்பு கோவில் உண்டியல் கடந்த டிசம்பர் மாதம் திறந்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இறைவன் தானாகவே விரும்பிவந்து எழுந்தருளி தலங்கள் மிகவும் சிறப்புக்குரியவை.
    • பக்தர்கள் உண்டியல்காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 6அடிஉயரத்தில் 4 பிரமாண்டமான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது

    கடலூர்:

    இறைவன் தானாகவே விரும்பிவந்து எழுந்தருளி தலங்கள் மிகவும் சிறப்புக்குரியவை.அப்படிசிவபெருமான்விரும்பிஎழுந்தருளிபிரசித்திப்பெற்றதுதிருவதிகை வீரட்டானேஸ்வரர்கோவில். இங்கு அருள்பாலிக்கும் வீரட்டானேஸ்வரரை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியல்காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 6அடிஉயரத்தில் 4 பிரமாண்டமான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

    சாமியை தரிசனம் செய்து விட்டு, வெளியே வரும் வழியில் தான் காணிக்கைஉண்டியல் வைக்கப்பட்டுள்ளது.இந்த காணிக்கை உண்டியல்கள் திறப்பு கோவில் நிர்வாகத்தினர், கிராம பொதுமக்கள், கட்டளைதாரர்கள் முன்னிலையில் இன்று காலை நடந்தது

    • அறநிலையத்துறையின் உதவி ஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • தங்கம் 47 கிராம், வெள்ளி 3.5 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    அவிநாசி :

    அவிநாசி அருகேயுள்ள மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது.இக்கோவிலில் இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் 7 லட்சத்து 58 ஆயிரத்து 888 ரூபாய் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது. இதுதவிர தங்கம் 47 கிராம், வெள்ளி 3.5 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் ஆய்வாளர் செல்வபிரியா, செயல் அலுவலர் சந்திர சுந்தரேஸ்வரன், அறங்காவலர் குழு தலைவர் ராமகிருஷ்ணன், அறங்காவலர் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கருவலூர் மாரியம்மன் கோவிலிலும் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 839 ரூபாய் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இது தவிர தங்கம் 44 கிராம், வெள்ளி 202 கிராம் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது. மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், அறங்காவலர் அர்ஜுனன், செயல் அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    • விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதியை காணிக்கையாக வழங்கின்றனர்.
    • 5 டன் காய்கறிகள், பழங்கள், 108 மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு கேள்வி நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தெற்கு பொய்கை நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதி பொருட்களை விவசாயிகள் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

    இந்நிலையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையக்கூடிய கத்திரிக்காய், மாங்காய், வெண்டைக்காய், பாகற்காய், கீரை பனங்கிழங்கு, எலுமிச்சை, நார்த்தங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ராட்சத யாககுண்டம் அமைத்து சுமார் 5 டன் காய்கறிகள் பழங்கள், 108 மூலிகை பொருட்கள் 2000 லிட்டர் நெய் கொண்டு 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாக கேள்வி நடத்தினர்.

    அதை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது

    தொடர்ந்து தங்கள் கிராமத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் திருவாரூர் கும்பகோணம் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காய்கறி விவசாயம் செழிக்க வேண்டியும் இயற்கையிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய தொடர்ந்து 10வது ஆண்டாக இந்த காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×