search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணிக்கை"

    • திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோவில் விளங்குகிறது.
    • 72.100 கிராம் தங்கம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் உண்டியல்கள் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் செந்தில்குமாா், ஊத்துக்குளி சரக ஆய்வாளா் ஆதிரை, தக்காா் பெரியமருதுபாண்டியன், செயல் அலுவலா் காளிமுத்து ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் ரூ.16 லட்சத்து 40ஆயிரத்து 701 ரொக்கம், 72.100 கிராம் தங்கம், 60.700 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். திருப்பூா் மகா விஷ்ணு சேவா சங்கத்தினா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

    • அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
    • 32 கிராம் தங்கம், 3 கிலோ 430 கிராம் வெள்ளி யை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கே.சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரிகள் சோ.செந்தில்குமார், மாதவன் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    இதில், ரூ.54 லட்சத்து 40 ஆயிரத்து 097 ரொக்கம், 32 கிராம் தங்கம், 3 கிலோ 430 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள்  காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    • உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், உள்பட 200-க்கும் மேற்பட்டோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • ரூ.22 லட்சத்து 73 ஆயிரத்து 717-ம், 51 கிராம் தங்கமும், 261 கிராம் வெள்ளியும், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பணமும் இருந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 17 உண்டியல்கள் அமைக்கப்–பட்டுள்ளன. இந்த உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கடந்த 2022ம்ஆண்டு ஆகஸ்டு மாதம் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, சுவாமிமலை துணை ஆணையர் உமாதேவி முன்னிலையில், ஆய்வாளர் தனலெட்சுமி மற்றும் கோவில் செயல்அலுவலர் கோ.கிருஷ்ணக்குமார் மேற்பார்வையில் முன்தினம் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது.

    உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், கோவில் பணியாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் காணிக்கையாக ரூ.22 லட்சத்து 73 ஆயிரத்து 717-ம், 51 கிராம் தங்கமும், 261 கிராம் வெள்ளியும், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பணமும் இருந்தது.

    • முனியாண்டி கோவில் பரம்பரை ஜமீன்தார் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினால் குடும்பம் தலைத்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே சுக்காம்பட்டி மூங்கில்மலை அடிவாரத்தில் முனியாண்டி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று சிறப்பு வழிபாடு செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

    முனியாண்டி கோவில் பரம்பரை ஜமீன்தார் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு களிமண்ணால் ஆன நாய், குதிரை, மாடு உள்ளிட்ட உருவ பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர்.

    இது போல் காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினால் குடும்பம் தலைத்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். எனவே பாரம்பரியமாக இதனை பின்பற்றி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோ விலில் சமீபத்தில் நடந்த தைப்பூச தேர்திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது.
    • இதனையடுத்து கோவில்களில் உள்ள 11 உண்டியல்களை திறந்து எண்ண முடிவு செய்யப்பட்டது. அதன் படி உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோ விலில் சமீபத்தில் நடந்த தைப்பூச தேர்திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது.

    இதனையடுத்து கோவில்களில் உள்ள 11 உண்டியல்களை திறந்து எண்ண முடிவு செய்யப்பட்டது. அதன் படி உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது . இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இளையராஜா மற்றும் ரமணி காந்தன் மற்றும் போலீஸ் அதிகாரி கள் முன்னிலையில் உண்டி யல்கள் திறக்கப்பட்டன.

    காணிக்கைகளை எண்ணும் பணியில் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என பலரும் ஈடுபட்டனர். முதல் கட்டமாக பிரதான 4 உண்டியல்கள் திறந்து எண்ணப் பட்டது.

    மீதமுள்ள 7 உண்டி யல்கள் திறந்து எண்ணும் பணி தொடரும் என அறநி

    லையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உண்டியல் எண்ணும் பணியை புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர் குழு தலை வர் தங்கமுத்து மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

    • மகா பெரியவரின் உருவச்சிலைக்கு அணிவிக்கும் வகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.
    • உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், வைரக்கல் பதித்த தங்ககவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் திருஉருவச் சிலைக்கு வெளி நாட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வைரக்கல் பதித்த தங்க கை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்யப்படுகிறது.

    இதுதொடர்பாக காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி யாக உள்ள ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளார். இவரது ஜெயந்தி உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்கி வரும் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த 3 நாட்களும் வேதபாராயணம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரிகள் ஆகியன சங்கர மடத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி விஜயேந்திரரின் பிறந்த நாளும் அதே நாளில் சிவராத்திரி விழாவும் சங்கர மடத்தில் கொண்டாடப்படுகிறது.

    அன்றைய நாளில் சங்கர மடத்தின் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் ஒன்றிணைந்து மகா பெரியவரின் உருவச்சிலைக்கு அணிவிக்கும் வகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதியில் இருந்து வைரக்கை பக்தர்களால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சங்கர மடத்துக்கு வந்து சேரும்.

    இதன் பின்னர் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் மகாபெரியவர் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், வைரக்கல் பதித்த தங்ககவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும்.

    விஜயேந்திரர் ஜெயந்தி நாளன்று அவர் முகாமிட்டுள்ள விசாகப்பட்டினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்டியல் எண் ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் சேவகர்கள் ஈடுபட்டனர்.
    • காலை 9 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 4 மணி வரை நீடித்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவதற்காக வேண்டி கோவிலில் உள்ள உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்து வது வழக்கம். இதற்காக வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜய குமார், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேச பெரு மாள் கோவில் ஆய்வா ளர் ஹேமதர் ரெட்டி, விஜிலென்ஸ் அதிகாரிகள் அசோக் குமார், சூரிய நாராயணா மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

    இந்த உண்டியல் எண் ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் சேவகர்கள் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 4 மணி வரை நீடித்தது. இதில் வருமானமாக ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் வசூல் ஆகி இருந்தது.

    • மற்ற 4 கோவில்களுக்கும் எத்தனை வீணான செலவுகள் செய்யப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    • தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் ஒரு வேளை பூஜைக்குக்கூட வழியில்லாமல் ஏராளமான கோவில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மகா சிவராத்திரி விழாக்களுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை அதிகாரிகள் செலவழிக்கக்கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் 5 பெரு நகரங்களில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாட முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த விழாவை நடத்துவதற்காக செல்லும் அமைச்சா்கள், அரசுத் துறை அதிகாரிகளுக்கு விமான பயணக் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் நிா்வாகம் செலவிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகவே மற்ற 4 கோவில்களுக்கும் எத்தனை வீணான செலவுகள் செய்யப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    கோவில்களுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தொகையை அநாவசியமாக செலவழிப்பது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் ஒரு வேளை பூஜைக்குக்கூட வழியில்லாமல் ஏராளமான கோவில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில் இத்தகைய வீண் செலவுகள் தேவையா என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.மேலும் மகா சிவராத்திரி விழாவுக்கு கோவில் நிதியைப் பயன்படுத்தாமல் அனாவசியச் செலவுகள் இல்லாமல் நன்கொடையாளா்கள் மூலமாக முறையான கணக்குகளுடன் செலவு செய்ய இந்து சமய அறநிலையத் துறை முன்வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் காணிக்கை உண்டியல் மூலம் ரூ.1.47 கோடி கிடைத்தது.
    • உண்டியல் திறப்பின் போது ரூ.1 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 642 கிடைத்தது.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் செயல் அலுவலர் அருணாசலம் முன்னிலையில் இந்த கோவில் மற்றும் 11 உப கோவில்களின் காணிக்கை உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது.

    இதில் திருப்பரங்குன்றம், முருகன் கோவில் துணை ஆணையர், மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார் பிரதிநிதி, கண்கா ணிப்பாளர், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு மற்றும் கள்ளிக்குடி ஆய்வர்கள், கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    உண்டியல் திறப்பின் போது ரூ.1 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 642 கிடைத்தது. மேலும் பலமாற்று பொன் இனங்கள் 465 கிராமும், வெள்ளி இனங்கள் 890 கிராமும், அயல்நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 497 எண்ணமும் கிடைத்தன.

    • உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
    • 6 கிலோ 39 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

    இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கே.சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. ரூ.53 லட்சத்து 33 ஆயிரத்து 781 ரொக்கம், 7 கிராம் 500 மில்லி கிராம் தங்கம், 6 கிலோ 39 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    • தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணங்களும் குவிந்தன
    • உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்தக் கோவில் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    இது தவிர இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டுவருகிறது. ஆனால் இதில் நிரந்தர உண்டியல்கள் மட்டும் கடந்த 3மாதங்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 3மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும்நேற்று திறந்து எண்ணப்பட்டன.

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர்தர்மேந்திரா ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது.மாலை4மணி வரை நடந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் குமரி மாவட்டத்தில்உள்ள திருக்கோவில் பணியா ளர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் ஈடுபட்டனர்.

    இதில் உண்டியல் மூலம் ரூ.28 லட்சத்து 39 ஆயித்து 163 ரொக்கபணம் வசூலாகி உள்ளது. இதுதவிர 11 கிராம் தங்கமும் 193 கிராம் 600 மில்லி கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகிஉள்ளது. இது தவிர கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னதான திட்டத்துக்கான அன்னதான உண்டியலும் திறந்து என்னபட்டது.

    இந்த அன்னதான உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 866 வசூல் ஆகி உள்ளது. ஆக மொத்தம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.28 லட்சத்து 32 ஆயிரத்து 346 ரொக்க பணம் காணிக்கை யாக வசூல் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    • 137.500 கிராம் தங்கம், 137.00 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
    • திருப்பூா் மகா விஷ்ணு சேவா சங்கத்தினா் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் உண்டியல்கள் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் செல்வராஜ், ஊத்துக்குளி கோவில் ஆய்வாளா் ஆதிரை, தக்காா் பெரியமருதுபாண்டியன், செயல் அலுவலா் காளிமுத்து ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் பக்தா்கள் ரூ.13 லட்சத்து 84 ஆயிரத்து 264 ரொக்கம், 137.500 கிராம் தங்கம், 137.00 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.பெருமாநல்லூா் கே.எம்.சி. பப்ளிக் பள்ளி, திருப்பூா் மகா விஷ்ணு சேவா சங்கத்தினா் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

    ×