search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226724"

    • மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.
    • எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    மதுரை:

    வெங்காயம் இல்லாத உணவை வீடுகளில் பார்க்க முடியாது. சமையலின் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் தமிழகத்தில் போதிய அளவு விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    மதுரையில் கீழவெளி வீதியில் வெங்காயம் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயம் பல்வேறு பகுதிகளுக்கு மூட்டை மூட்டையாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    வெங்காயம் குளிர்கால பருவ பயிராகும். தற்போது இந்தியா முழுவதும் கோடை காலம் என்பதால் வெங்காய பயிர் விளைச்சல் குறைந்துள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்து மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.

    அவ்வாறு வரும் வெங்காயம் இங்கு நிலவும் அதிக வெப்ப சூழ்நிலை காரணமாக அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் இருந்து மதுரைக்கு லாரிகளில் வந்த சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் அழுகிவிட்டன. இதன் காரணமாக அதனை வைத்துக் கொள்ள முடியாமல் வியாபாரிகள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டினர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறோம். ஆனால் இங்கு நிலவும் வெப்பம் காரணமாக வெங்காயம் தாக்குபிடிக்க முடியாமல் அழுகி விடுகிறது. இதனால் எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என கவலையுடன் தெரிவித்தனர்.

    • மேற்கூரை அமைத்து தர விவசாயிகள் வலியுறுத்தல்
    • மார்க்கெட் வளாகத்தில் உள்ள 75 கடைகளை பார்வையிட்டார்.

    கன்னியாகுமரி:

    தோவாளை பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள 75 கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்படும் வியாபாரத்தையும் பார்வையிட்டார்.

    தோவாளை பூ மார்க்கெட் வளாகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொள்ளும்போது தோவாளை மார்க்கெட் வளாகத்தில் மேற்கூரை அமைத்து தர விவசாயிகள் மற்றும் வணிகர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். வேளாண் விற்பனைக்குழு மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் செண்பகரா மன்புதூரில் அமைந்துள்ள தென்னை மதிப்புக் கூட்டு மையத்திலுள்ள மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் எந்திரம், கரித்தூள் தயாரிக்கும் எந்திரம், தேங்காய் பவுடர் தயாரிக்கும் எந்திரம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தென்னை மதிப்புக்கூட்டு மையத்திலுள்ள எந்தி ரங்களை இந்த மாத இறு திக்குள் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.தொடர்ந்து, செண்பகரா மன்புதூர் நேரடி கொள் முதல் நிலையத்தை பார்வை யிட்டார். கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிட வசதி செய்து தர விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துடன் பேசி முடிவெ டுப்பதாக தெரிவித்தார்.

    பின்னர் செண்பகரா மன்புதூரில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சோலார் பம்ப்செட் மற்றும் சொட்டுநீர் பாசனத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் மூலம் திருப்பதிசாரம் கிராமத்தில் மண் ஆய்வுக்கூட வேளாண்மை அலுவ லர்களால் நடத்தப்பட்ட மண் ஆய்வு முகாமில் கலந்துகொண்டு மண் ஆய்வுக்கு மண் எடுக்கும் முறையை பார்வையிட்ட தோடு, மண் ஆய்வுக்கூடம், நடமாடும் மண் ஆய்வுக் கூடம், உரப்பரிசோ தனை நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

    ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் ஹனிஜாய் சுஜாதா, தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சில்வெஸ்டர் சொர்ணலதா, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தினசரி மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரும்போது, வெயில், மழை காலங்களில் சிரமமின்றி வியாபாரம் செய்ய முடியும்.
    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வசதிக்காக தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சியில் வாரந்தோறும் ஞாயிறு அன்று வார சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வசதிக்காக கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் 2021 -22, திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த தினசரி மார்க்கெட்டில் 147 கடைகள் மற்றும் பாதுகாவலர் அறை, குடிநீர் வசதி, ஏடிஎம் அறை, உணவகம், கழிப்பறை, பாதுகாப்பு அறை, வாகன நிறுத்தம், சாலை வசதி ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த தினசரி மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரும்போது, வெயில், மழை காலங்களில் சிரமமின்றி வியாபாரம் செய்ய முடியும். இந்த பணியானது மே மாதம் இறுதிக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

    • கோவை டி.கே.மார்க்கெட்டில் தொடர் ெகாள்ளை சம்பவம் அரங்கேறியது
    • கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் தொழிலாளியின் மண்டையை உடைத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கோவை,

    தூத்துக்குடியை சேர்ந்தவர் மணி (35). இவர் கோவை டி.கே மார்க்கெட்டில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று இரவு மணி கடையில் தூங்கி கொண்டிருந்தார்.அப்போது மர்மநபர்கள் 3 பேர் கடைக்குள் புகுந்து பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்தனர்.

    இதை பார்த்த மணி அவர்களை பிடிக்க முயற்சித்தார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் மணியின் மண்டையை உடைத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக மணி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்த பகுதியில் தொடர்ந்து திருட்டு மற்றும் ெகாள்ளை சம்பவங்கள் நடப்பதாக வியாபாரிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதையடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, போலீ–ஸ்காரர்கள் கார்த்தி, பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சாதாரண உடையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் டி.கே. மார்க்கெட்டில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    சம்பவத்தன்றும் தனிப்படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்த போது, ஒரு கடையில் 3 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து கொண்டு இருந்தனர்.

    உடனடியாக போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று, 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த ரபீக் (வயது 50), ஈரோட்டை சேர்ந்த முத்துகுமார் மற்றும் கோகுல் என்பதும், இவர்கள் 3 பேரும் டி.கே. மார்க்கெட்டில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த கும்பலுக்கு ரபீக் தலைவனாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன. ரபீக் கடந்த சில வருட–ங்களுக்கு முன்பு கோவை டி.கே மார்கெட்டில் கூலி வேலை பார்த்துள்ளார்.

    ஆனால் அதில் அவருக்கு போதுமான வருமானம் கிடைக்காததால், கஞ்சா விற்க தொடங்கி உள்ளார். கஞ்சா வழக்கில் ரபீக் கைது செய்ய ப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார். அப்போது அவருக்கு, ஈரோட்டை சேர்ந்த முத்துகுமார் மற்றும் கோகுல் என்பவர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடுவது மற்றும் பூட்டு உடைப்பதில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.

    ரபீக் அவர்களுடன் நண்பராகி உள்ளார். அப்போது, அவர்களிடம், நீங்கள் மோட்டார் சைக்கிள் திருடுவதில் அதிகளவு சிரமம் உள்ளது. நாம் 3பேரும் சேர்ந்து கடைகளில் கொள்ளையடிக்கலாம் என கூறியுள்ளார்.

    அதற்கு அவர்கள் எங்கு போய் அடிப்பது என்று கேட்டதற்கு, ரபீக் நான் டி.கே. மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளேன். அங்கு ஏராளமான கடைகள் உள்ளன. அங்ககு பணமும் அதிகளவில் இருக்கும். நாம் அங்கு சென்று கொள்ளையடித்து ஜாலியாக வாழலாம் என கூறியுள்ளார்.

    அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். உடனே ரபீக் நான் முதலில் வெளியில் சென்று நீங்கள் தங்குவதற்கு இடம் மற்றும் கொள்ளையடிக்கும் திட்டத்தை தயார் படுத்தி வைக்கிறேன். நீங்கள் வந்த பின்னர் 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்கலாம் என கூறியுள்ளார்.

    அதன்படியே வெளியில் வந்த ரபீக் நேராக கேரளாவில் தனது மகன் வேலை பார்க்கும் ரப்பர் தோட்டத்தில் வீடு பார்த்தார்.

    இவர் விடுதலையான சில தினங்களில் கோகுலும், முத்துக்குமாரும் விடுதலையானார்கள். வெளியில் வந்த அவர்கள் 2 பேரும், ஈரோட்டில் மோட்டார் சைக்கிளை திருடி விட்டு நேராக அட்டப்பாடி வந்தனர்.

    அவர்களை ரபீக் தனது வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அப்போது புத்தாண்டை இங்கு கொண்டாடி விட்டு, அதற்கு மறுநாள் சென்று கொள்ளையடிக்கலாம் என 3 பேரும் திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி கேரளாவில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு மறுநாள் கோவை வந்து டி.கே.மார்க்கெட்டில் பொருட்கள் மற்றும் பணத்தை எடுத்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதேபோல் டி.கே.மார்க்கெட்டில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த குனியமுத்தூரை சேர்ந்த அரவிந்த் (32), விமல்ராஜ் (25) என்பவர்களையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் வியாபாரிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    • வண்டியில் எடுத்து செல்லும் போது கீழே விழுகின்றன.
    • உரிமையாளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் நெல்லித்துறை ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த மண்டிகளுக்கு கர்நாடகம், குஜராத், கோலார், நீலகிரி, கர்நாடக மாநிலம் ஹாசன் ஆகிய பகுதியில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் உருளைக்கிழங்கு வருகிறது. இந்தக் கிழங்குகளை தரம் பிரித்து மொத்தமாகவும் சில்லரையாகவும் தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தரம் பிரிக்கும் போது ஏற்படுகின்ற கழிவுகளை மண்டிகளில் கொட்டி வைத்து அதனை தினமும் ஊட்டி சாலையில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் உள்ள நேஷனல் பள்ளியின் பின்புறம் உள்ள ஒரு தோட்டத்தில் கொட்டி வருகின்றனர். அப்படி எடுத்துச் செல்லு ம்போது கழிவுகள் செல்லும் வழிகளில் எல்லாம் கொட்டுகின்றன. இதனால் கழிவுகளில் ஈ மொய்ப்பதுடன், துர்நாற்றமும் வீசி வருகிறது.

    இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.இதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

    இதுகுறித்து கிழங்கு மண்டி உரிமையா ளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகமும், மேட்டுப்பாளையம் தாசில்தார், நகராட்சி, மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிச்சி பூ கிலோ ரூ.1400-க்கு விற்பனை
    • நாளை தீபாவளி பண்டிகை

    கன்னியாகுமரி:

    தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் ஊட்டி, பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும், பண்டிகை நாட்களில் இங்கு பூக்கள் வாங்க பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களா கவே பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாளை (24-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையா கவும் வாங்குவதற்கு ஏராள மானோர் திரண்டனர். பூ மார்க்கெட்டில் வியாபா ரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பூக்களின் விற்பனை அதிகரிப்பால் அதன் விலை அதிகரித்து காணப்படுகிறது.

    கிலோ ஒன்றுக்கு அதன் விலை வருமாறு:-

    பிச்சி ரூ.1400, மல்லிகை ரூ.900, முல்லை ரூ.1250, சேலம் அரளி ரூ.250, சம்மங்கி ரூ.100, பட்டர் ரோஸ் ரூ.180, மஞ்சள் மற்றும் சிகப்பு கேந்தி ரூ,60, கொழுந்து ரூ.110, மரிக்கொழுந்து ரூ.120, துளசி ரூ.35.

    • வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது
    • குமரி மாவட்டத்திற்கு திண்டுக்கல் பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது .

    நாகர்கோவில்:

    சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லதாகும்.இதனால் பெண்கள் சமையலுக்கு அதிக அளவில் சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    சமீபகாலமாக சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தை உட்பட கடைகளில் சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து உள்ளது.

    குமரி மாவட்டத்திற்கு திண்டுக்கல் பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது .அங்கு கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தி குறைய தொடங்கியுள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து உள்ளது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 30 முதல்ரூ. 40க்கு விற்கப்பட்டது. தற்பொழுது வரத்து குறைய தொடங்கியதையடுத்து விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ 80 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று வெங்காயத்தின் விலைரூ. 120 ஆக உயர்ந்துள்ளது. தக்காளியின் விலையும் கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ. 40க்கு விற்கப்பட்டு வருகிறது .

    இதே போல் பீன்ஸ் கேரட் வெள்ளரிக்காய் புடலங்காய் உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக 100 மூட்டை வெங்காயம் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 10 மூட்டை வெங்காயம் மட்டுமே வருகிறது. வரத்து 90 சதவீதம் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது என்றார்.

    • பொதுமக்கள் பொரி, பழங்கள், பூக்களை வாங்கி சென்றனர்
    • கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூமார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    கோவை:

    நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டா– டப்படுகிறது. இதனை–யொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூக்கள், பழங்கள், பொரி, அவல், கடலை, சுண்டல் படைத்து வழிபடுவார்கள்.

    இதேபோல் அனைத்து நிறுவனங்களிலும் ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படும். இதற்கு தேவையான பொருட்களை கடந்த சில தினங்களாக மக்கள் வாங்கி வந்தனர்.நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் உள்ள கடை வீதிகள், மார்க்கெட்டுகளில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூமார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.மக்கள் அங்கு சாமி கும்பிடுவதற்கு தேவையான எலுமிச்சம் பழம், பொரி, அவல், கடலை, பனஓலை, மாவிலை, வாழைகுலை, தேங்காய் மல்லி, செவ்வரளி, முல்லை, ரோஸ் என பல்வேறு வகையான பூக்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    இதுதவிர ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளும் வாங்கினார்கள். ஆயுதபூஜை பண்டிகை காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் மற்ற நாட்களை விட சற்று உயர்ந்து காணப்பட்டது.

    கோவை பூ மார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை கிேலாவில் வருமாறு:-

    மல்லிகைப்பூ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.360, அரளி ரூ.350, தாமரை பூ ஒன்று ரூ.20, கோழி பூ ரூ.100, மருகு ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம்ரூ.200, சம்பங்கி ரூ.350, செண்டுமல்லி ரூ.80, வாடாமல்லி ரூ.80-க்கும் விற்பனையானது.

    இதுதவிர பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.120க்கும், வெள்ளை பூசணி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.25 முதல் 30 வரையும், பொரி 1 பக்கா ரூ.20க்கும், மாலை இலை 1 கட் ரூ.20க்கும் விற்பனையானது.

    சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.200, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது.இதேபோன்று கோவையில் உள்ள கடைவீதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு மக்கள் சாமி கும்பிடுவதற்கு தேவையான பூஜை பொருட்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    இதேபோல் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளிலும் காலை முதலே மக்கள் கூட்டமாக காணப்பட்டது. அங்கு மக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதன் காரணமாக பல இடங்களிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதியாகும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.
    • வாகனங்களையும் கீழே தள்ளி சேதப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது

    ஊட்டி 

    குன்னூர் நகரின் முக்கிய வீதிகளாக மவுண்ட்ரோடு, வி.பி., தெரு, டி.டி.கே., சாலை உள்ளன.

    இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதியாகும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த சாலைகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.

    அவ்வாறு சுற்றி திரியும் கால்நடைகள் சாலைகளில் செல்லும் வாகனங்களையும் மறித்து விடுகிறது. சில நேரங்களில் குறுக்கே வந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இதேபோல் குன்னூர் மார்கெட் பகுதி, குன்னூர் கேஷ்பஜார், சாமண்ணா பூங்கா, வி.பி., தெரு, கிருஷ்ணாபுரம் உட்பட பகுதிகளிலும் மாடுகள் உலா வருகிறது.

    மார்க்கெட் பகுதியில் சுற்றிதிரியும் கால்நடைகள், அங்குள்ள கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் காய்கறி மற்றும் பழங்களை சேதப்படுத்தி வருகிறது.

    அத்துடன் அங்கு நிறுத்த படும் வாகனங்களையும் கீழே தள்ளி சேதப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது சில சமயங்களில், நகரின் மையப்பகுதியான பஸ் ஸ்டாண்டில் கூட கூட்டமாக சுற்றி திரிகின்றன. எனவே சாலைகள் மற்றும் குன்னூர் மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தஞ்சை மாநகராட்சியில் பல இடங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை.
    • வெள்ளை பிள்ளையார் கோவில் ரவுண்டானாவில் இருந்து சரபோஜி மார்க்கெட் வரை செல்லும் சாலை பழுதடைந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு மேயர்.சண் ராமநாதன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன்:-

    திருவையாறு பஸ் நிறுத்தத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டில் உள்ளதா? எந்த நிலையில் உள்ளது என்று கேள்வி கேட்டார்.

    கவுன்சிலர் கோபால்:‌‌

    தஞ்சை மாநகராட்சியில் பல இடங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை.

    உடனே அனைத்து தெரு விளக்குகளையும் எரிய வைத்து அதனை முறையாக கண்காணிக்க வேண்டும்.

    கவுன்சிலர் காந்திமதி:

    கீழ அலங்கத்தில் 12 வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    அவர்கள் மாநகராட்சியில் பணிபுரிபவர்கள். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

    உடனடியாக அந்த 12 வீடுகளில் வசிப்பவர்களுக்கு அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வல்லம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்க வேண்டும்.

    வெள்ளைப் பிள்ளையார் கோவில் ரவுண்டானாவில் இருந்து சரபோஜி மார்க்கெட் வரை செல்லும் சாலை பழுதடைந்து உள்ளது.

    அதனைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் ரம்யா சரவணன்:

    3-வது மண்டலத்தில் உள்ள அண்ணாநகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு இயற்பியல் ஆய்வுக்கூடமும், கூடுதல் வகுப்பறை கட்டிடமும், தொடக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளும், வண்டிக்கார தெரு மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கிய மேயர், துணை மேயர், ஆணையர் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

    தொடர்ந்து கவுன்சிலர்கள் கேசவன், ஜெய்சதீஷ், கன்னுக்கினியாள் உள்ளிட்ட பலரும் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

    இதற்கு பதில் அளித்து மேயர் சண். ராமநாதன் பேசும்போது:-

    திருவையாறு பஸ் நிறுத்த வாகன நிறுத்தும் இடம் தற்போது இலவசமாக வானங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை வரை இந்த நிலை தொடரும்.

    அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

    நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டம் கடந்து சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதில் தினமும் ஆய்வு செய்ததில் சாலை வசதி, பாதாள சாக்கடை பிரச்சனை, பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.

    இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிக்கு நிதி கூறப்பட்டுள்ளது.

    அதாவது வார்டு 1 முதல் 13-வரை உள்ள முதல் டிவிசனுக்கு ரூ.120 கோடியிலும், வார்டு 14 முதல் 28 வரையிலான இரண்டாம் டிவிசனுக்கு ரூ.155.44 கோடியிலும், வார்டு 29 முதல் 41 வரையிலான மூன்றாம் டிவிசனுக்கு ரூ.466.94 கோடியிலும், வார்டு 42 முதல் 51 வரையிலான நான்காம் டிவிசனுக்கு ரூ.211.40 கோடி என மொத்தம் நான்கு டிவிசனுக்கும் சேர்த்து ரூ.1100 கோடிக்கு வளர்ச்சி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கான நிதி வந்தவுடன் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்படும்.

    காமராஜர் மார்க்கெட் கடைகள் அமைப்பதற்கான ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    விரைவில் காமராஜர் மார்க்கெட், சிவகங்கை பூங்கா ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • 5 ஆண்டுகள் கடந்தும் கடைகள் கட்டப்படாததால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
    • மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடியின் மையப்பகுதியில் இயங்கி வந்த காந்தி மார்க்கெட்டிற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    புதிய கடைகள் கட்டும் வரை தற்காலிகமாக அரசு மருத்துவமனை அருகில் இயங்கி வந்தது. 5 ஆண்டுகள் கடந்தும் கடைகள் கட்டப்படாததால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இந்தநிலையில் நகர்மன்ற கூட்டத்தில் இடிக்கப்பட்ட காந்தி மார்க்கெட் பழைய இடத்தில் கட்டுவதற்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பழைய இடத்திலேயே மார்க்கெட் கட்டுமான பணிகள் மேற்கொள்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. எனவே இது குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கருத்துக் கேட்க நேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சதன்திருமலை குமார் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன், தி.மு.க. நகர செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான அந்தோணிசாமி, மார்க்கெட் வியாபாரிகள், நகர வர்த்தக சங்கத்தினர், கவுன்சிலர்கள் அரசியல் பிரமுகர்கள், சமூகஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அனைவரும் பழைய இடத்திலயே கடைகள் கட்டப்பட வேண்டும். மேலும் இது நகரின் மைய பகுதியில் இருப்பதால் அனைத்து பகுதி மக்களும், வெளியூர் மக்களும் வந்து செல்ல ஏற்ற இடம் என்று பல்வேறு காரணங்களை எடுத்து கூறினர்.

    பின்னர் பேசிய மாவட்ட கலெக்டர் உங்கள் அனைவரின் கோரிக்கைகளும் அரசுக்கு எடுத்து சொல்லப்படும். அனைவரின் விருப்படியே பழைய இடத்தில் கடைகள் கட்டுவதற்க்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் குமார் சிங், பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, மானேஜர் செந்தில் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • குறிப்பாக ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.
    • ஆவணி மாதம் முழுவதும் மாரியம்மனை வேண்டி பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் பிரசித்தி பெற்றது.

    ஆவணி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும்.

    குறிப்பாக ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

    மேலும் ஆவணி மாதம் முழுவதும் மாரியம்மனை வேண்டி பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம்.

    அதன்படி ஆவணி மாதம் தொடங்கி விட்டதால் பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கினர். இந்த நாட்களில் விரதம் இருக்கும் பக்தர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பர்.

    இதன் காரணமாக இன்று தஞ்சையில் உள்ள பெரும்பாலான இறை ச்சி, மீன் கடை களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

    தஞ்சையில் உள்ள மீன் மார்க்கெட்டில் இன்று வழக்கத்தை விட குறைவான அளவிலேயே பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது‌ .

    இதேபோல் இறைச்சி கடைகளிலும் கூட்டம் குறைந்தது. 

    ×