search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறக்கட்டளை"

    • ரூ. 530 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    திருமலை:

    திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டில் ரூ.500 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

    இந்த அறக்கட்டளை மூலம் வரும் பணம், மீனவர்கள், எஸ்.சி, எஸ்.டி.க்கள் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையான் கோவில்களை கட்டவும், நலிந்த கோவில்களை மராமத்து செய்யவும், தீப, தூப நைவேத்தியங்களுக்கு உதவவும் மட்டுமே பயன்படுத்துவதாக தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

    ஆனால், இதுவரை எத்தனை கோவில்கள் கட்டப்பட்டது? எவ்வளவு செலவு செய்தனர் என்பது குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதில் ரூ. 530 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்டிட காண்டிராக்ட் வழங்கியதிலும் கோடிக் கணக்கில் முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    ஆதலால், அப்போதைய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் திருப்பதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அப்போதைய அறங்காவலர் குழு தலைவருமான கருணாகர் ரெட்டியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஆண்டுக்கு ரூ. 300 கோடி வரை மட்டுமே கான்டிராக்ட் பணிகள் நடத்தப்படும். ஆனால் இவர்களது நிர்வாகத்தில் மட்டும், சிம்ஸ் தேவஸ்தான மருத்துவ மனைக்கு ரூ. 77 கோடி, கோவிந்தராஜ சத்திரம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் காம்ப்ளக்ஸ் கட்ட ரூ. 420 கோடி ஒதுக்கப்பட்டன.

    மேலும் இதுபோல் பல சிவில் பணிகளுக்கும் கோடி கணக்கில் நிதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கமிஷன் பல கோடி பெற்றுள்ளதாக வந்த புகார்களின் பேரில் தர்மாரெட்டி மற்றும் கருணாகர் ரெட்டிக்கும், தேவஸ்தான ஆடிட்டர் பாலாஜி, முன்னாள் அறங்காவலரான ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன.

    • இவர் இப்போது ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார்.
    • இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்றவுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்

    நடிகர் ராகவா லாரன்ஸ், பல வருடங்களாக பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இவர் இப்போது 'மாற்றம்' என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்றவுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார் அது தொடர்ந்து செஃப் வினோத், அறந்தாங்கி நிஷாவும், KPY பாலா இணைந்து செயல்பட உள்ளனர்.

    இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள், தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், 10 டிராக்டர்கள், 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த அறக்கட்டளை தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.

    இந்நிலையில் 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் ராகவா லாரன்சுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், "வணக்கம் லாரன்ஸ் மாஸ்டர்! நீங்கள் பல வருடமாக நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள். இப்பொழுது இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக 'மாற்றம்' என்கிற அறக்கட்டளையை ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் இன்னும் பல ஆயிரம் ஏழை மக்களுக்கு உதவி செய்யணும். அதற்கு அந்த ஆண்டவனுடைய அருள், மக்களுடைய துணை எப்போதும் இருக்கணும். வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், "தலைவர், என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துகளைப் பெற்றேன். உங்கள் நிலையான ஆதரவால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. குருவே சரணம்" என்று தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து தற்பொழுது எஸ்ஜே சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் ராகவா லார்ன்ஸ்-க்கு வாழ்த்து தெரிவித்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ், வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் மற்றும் வெற்றி மாறனின் எழுதிய கதையான அதிகாரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மூத்தோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்குதல்,கல்வி பரிசளிப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
    • 100 க்கு 100 மற்றும் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    உடுமலை,செப்.25-

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பூமாலை சந்தில் ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரங்கத்தில் தேவாங்கர் சமூக நல மன்றம் மற்றும் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் மூத்தோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்குதல்,கல்வி பரிசளிப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.முன்னதாக ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதில் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 75 வயது நிறைவடைந்த மூத்தவர்கள் கௌரவிக்கப் பட்டனர். தொடர்ந்து 2023 -ம் ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு- சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அதன்படி 10-ம் வகுப்பில் 11 மாணவர்களுக்கும், பிளஸ்-2வகுப்பில் 6 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.அத்துடன் 100 க்கு 100 மற்றும் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மேற்படிப்புக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேஜிக் ஷோ நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தேவாங்கர் சமூக நல மன்றத்தலைவர் மாணிக்கம்(பொறுப்பு), செயலாளர் திருமலைசாமி(பொறுப்பு), பொருளாளர் சீனிவாசன், தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் சீனிவாசன்,செயலாளர் சௌந்தரராஜன், பொருளாளர் ஞானமணி உள்ளிட்ட நிர்வாகிகள் ,தேவாங்கர் சமூக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை மேட்டுநீரேத்தான் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
    • கிராம பொதுமக் கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் மேட்டு நீரேத்தான் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    கடந்த கல்வியாண்டில் பள்ளியில். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

    வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான அசோக் மற்றும் அப்பகுதியை சேர்ந்த அருணா அம்மா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.

    இதில் பள்ளியின் தலைமையாசிரியர் தமயேந்தி, வாடிப்பட்டி பேரூராட்சி கவுன் சிலர்கள் இளங்கோவன், கீதா சரவணன், சூர்யா அசோக்குமார், பிரியதர்ஷினி, பஞ்சம்மாள், வெங்கடேஸ்வரி, கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன.
    • இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

     தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை மற்றும் மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து வந்த பெண்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன.

    ஜோதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் அணிந்து வந்த பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற உத்தரவை பின்பற்றி வந்தமைக்காக அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ( சுமார் 50 பெண் இரு சக்கர வாகன ஓட்டிகள் ) ஒவ்வொருவருக்கும் வெள்ளி நாணயங்களை வழங்கி வாழ்த்தினார். மேலும் இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்து வாகன ஓட்டிகளிடமும் பொதுமக்களிடமும் விளக்கினார் .

    மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும், ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கையில் அமர்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

    இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கும்போது விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மட்டு மல்லாமல் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தலைகவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து நடத்திவருகிறோம். சென்ற மாதம் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைகவசம் அணிந்து வந்த பெண்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில்லாமல் வழங்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக தற்போது தலைகவசம் அணிந்து வந்த பெண்களுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து தலைகவசம் அணிந்து பயணிப்பவர்களை கவனித்து விரைவில் அவர்களுக்கு தங்க நாணயம் வழங்கி ஊக்கப்படுத்தி அவர்களை பார்த்த பிறகாவது மற்றவர்களும் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது தலைகவசம் பயன்படுத்த தொடங்குவார்கள் என்று நம்புவதாகவும் தொடர்ந்து இது போன்ற நூதன வகையில் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சிக்கானஏற்பா டுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் கரோலின் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .

    • செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.
    • செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தன்னலமற்ற சேவையை வழங்கி வரும் செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக 'விளக்கேந்திய மங்கை' , 'கை விளக்கேந்திய காரிகை' என்று உலகம் முழுவதும் போற்றப்படுபவரும் , நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத சேவையை கவுரவிக்கும் விதத்தில் தஞ்சை நகர பொதுமக்கள் சார்பில் செவிலியர்கள் தின கொண்டாட்டம் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் நடைபெற்றது .

    ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் , செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டினர்.

    மேலும் அவர் பேசுகையில் " சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பாசத்துடனும், பரிவுடனும் நடந்து கொண்டு கனிவான சேவையை வழங்கி வரும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.

    முன்னதாக தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி , தஞ்சை மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா சரவணன் ஆகியோர் செவிலியர்களுக்கு இனிப்புகளை வழங்கி செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபுராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் மாலதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ராம்கோ குரூப் அறக்கட்டளை சார்பில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • மலைவாழ் குழந்தைகள் கொண்டாடிய 19-ம் ஆண்டு விழா நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ குரூப் அறக்கட்டளைகளில் ஒன்றான பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்ட் சார்பில் மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் குழந்தைகள் கொண்டாடிய 19-ம் ஆண்டு விழா நடந்தது.

    பரம பூஜ்ய ஸ்வாமி ஸ்ரீமத் தயானந்த சரஸ்வதி ஆலோசனைப்படி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிர மணியராஜாவும், அவரது துணைவியார் சுதர்சனமும் இணைந்து 2004-ம் ஆண்டு பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்ட் சார்பில் ராஜபாளையத்தில் ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவ-மாணவிகள் விடுதியை தொடங்கினர்.

    கல்வி அறிவு என்பதே இல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மலைவாழ் குழந்தைகளை ராஜபாளையம் அழைத்து வந்து பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைத்தனர். இந்த விடுதியில் தற்போது 51 மாணவர்கள், 54 மாணவிகள் என மொத்தம் 105 பேர் கல்வி கற்று வருகிறார்கள்.

    இதன் 19-ம் ஆண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்த விடுதியில் நர்சிங் படித்த ராம் நகர் பகுதி மாணவி மகாலட்சுமியை நான் மலை கிராமத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது சந்தித்து பேசினேன். இந்த சமூகத்தில் ஒரு மாணவி படித்து வேலை பார்த்து வருவது மகிழ்ச்சியாக இருந்தது, மேலும் சிலர் வனத்துறையில் வேலை பார்த்து வருவதாக அறிந்தேன். இந்த சமூகம் முன்னேற ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா செய்து வரும் பணிகளை பாராட்டுகிறேன் என்றார்.

    ராம்கோ குரூப் சேர்மன் துணைவியார் நிர்மலாராஜ் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்டின் டிரஸ்டி யும், விஷ்ணு சங்கர் மில் மேனேஜிங் டிரஸ்ட்டியுமான சாரதா தீபா தலைமை தாங்கினார்.

    ராம்நகர், அத்திகோவில், ஜெயந்த்நகர், வள்ளியம்மாள் நகர், செண்பகத்தோப்பு, அய்யனார்கோவில், தலை யணை, மொக்கத்தான்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் 200 குடும்பங்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் புதிய ஆடைகள் வழங்கினார். மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் வாழ்த்தி பேசி னார். விடுதி மேலாளர் முருகேசன் வரவேற்றார். பி.ஏ.சி ராமசாமி ராஜா கல்வி தர்மஸ்தாபன கல்வி நிறுவனங்களின் தாளாளர் என்.கே.ஸ்ரீகண்டராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ராம்கோ டிரஸ்ட்களின் செயலாளரும், விஷ்ணு சங்கர் மில் துணைத் தலைவருமான குருசாமி, ஸ்ரீமதி லிங்கம்மாள் சாஸ்திர ப்ரதிஷ்டா டிரஸ்ட் முதன்மை பொது மேலாளர் ராஜ்குமார், பி.ஏ.சி.ஆர்.கல்வி தர்ம ஸ்தாபனத்தின் சி.இ.ஓ. வெங்கட்ராஜ், ஜி.எம்.கூடலிங்கம், பி.ஏ.சி.ஆர். அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரோகிணி, பி.ஏ.சி.எம். ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, பி.ஏ.சி.ஆர். சேதுராமம்பாள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணா, டி.ஏ.கே.எம்.ஆர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாரதா, ராம்கோ பாலவித்தியா பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதா, மற்றும் பலர் பங்கேற்றனர். ஆண்கள் விடுதி காப்பாளர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • கீழக்கரையில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    உலகக் கல்வியுடன் திருக்குரானை மனப்பாடம் செய்து முடித்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில் நடந்தது. அதாயி கல்வி குழுமத்தின் சார்பில் சுப்ரீம் நிறுவனர் முஹம்மது நிசார் பாஜில் ஜமாலி, சென்னை மற்றும் கீழக்கரை அதாயி பெண்கள் ஹிப்ளு பள்ளி தலைவர் ஹபிபுல்லாகான், கீழக்கரை அதாயி இஸ்லாமிக் பள்ளி தலைவர் ஜஹுபர் கமால், கீழக்கரை சுன்னத்துல் ஜமாத் பவுண்டேஷன் ஒபூர் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் தலைவர்-தொழிலதிபர் ஹபிபுல்லா கான் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். இதில் குரானை மனப்பாடம் செய்த 25 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார். விழாவில் கீழக்கரை பல்வேறு ஜமாத், சங்க நிர்வாகிகள், பிரமுகர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

    • ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் நடந்தன.
    • அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் விவேகானந்த கேந்திரமும், என்.ஏ. ராமச்சந்திரராஜா அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் விவேகானந்த கேந்திர கிளையும் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவிலான நகர்ப்புறப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டுப்போட்டிகளை அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கேந்திர கிளை தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திராஜா தலைமை தாங்கினார். ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா குத்து விளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். கிளை பொருளாளரும். தலைமையாசிரியருமான ரமேஷ் வரவேற்றார். விவேகானந்த கேந்திர மாவட்ட பொறுப்பாளர் பேச்சியப்பன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை மாணவர்களுக்கு ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, வினாடி-வினா போட்டிகளின் விவரங்களை கூறி நடுவர்களை அறிமுகப்படுத்தினார்.

    இதில் 32 பள்ளிகளில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் கே.ஆர்.விஸ்வநாதன், தங்கமயில் ஜூவல்லரி மேலாளர் பாலாஜி, பாபு ஆகியோர் மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். முதலிடம் பிடித்த மாணவர்கள் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறவிருக்கும் 2 நாள் முகாமில் கலந்துகொண்டு மாநில அளவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா, ராகஜோதி, என்.கே.ராம்வெங்கட் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கிளை செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
    • விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்துள்ளோம்.

    தஞ்சாவூர்:

    ஸ்ரீவிஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் நிறுவனரும் ஓம் ஸ்ரீ நாகம்மாள் அறக்கட்டளை, அகில இந்திய சாதுக்கள் இயக்கம் மாநிலத் தலைவருமான டாக்டர் ஸ்ரீராம ரெங்கசாமி சுவாமிகள் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-

    தரணி போற்றும் தஞ்சாவூரில் விரைவில் பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்துள்ளோம்.

    அனைவருக்கும் பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பார்வை திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • நன்கொடை மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மிகத் தரமான கட்டிடம் கட்டப்பட்டு ஐந்து மாதங்களில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிக்காக சிங்கப்பூரை சேர்ந்த அறக்கட்டளை சார்பில் ரூ.27 லட்சத்தை நன்கொடையாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வழங்கப்பட்டது.

    இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் இயங்கி வரும் பார்வை திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவை என பள்ளி தலைமை ஆசிரியை சோபியா மாதவி வைத்த கோரிக்கையை ஏற்று சிங்கப்பூரை சேர்ந்த அன்னை வராகி அறக்கட்டளை சார்பில் உறுப்பினர்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.27 லட்சத்துக்கான காசோலையை அறக்கட்டளை நிர்வாகி குருஜி வராகி மைந்தன், இந்திரயோகன் ஆகியோர் வழங்கி உள்ளனர்.

    இந்த நன்கொடை மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மிகத் தரமான கட்டிடம் கட்டப்பட்டு ஐந்து மாதங்களில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் ‌.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சோபியா மாதவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை எம்.டி.சமுதாய அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை எம்.டி. சமுதாய அறக்கட்டளை பெண்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த அறக்கட்டளையின் சார்பில் விசாலாட்சி புரத்தில் உள்ள சித்து மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    முகாமில் கணினி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் பார்வை குறைபாடு, கண் நரம்பு சிகிச்சை. கண்பார்வை சோதனை, கண் அழுத்த சோதனை, கண்புரை, நீரழிவினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, அடிக்கடி தலைவலி, கண் நரம்பு ஆகியவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்பட்டது. இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்க ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி யின் தாளாளர் சுகன்யா ஜெகநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் கவுரி சாலமன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் எம்.டி. சமுதாய அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர். இ.ஜெரினா நன்றி தெரிவித்தார்.

    ×