search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி"

    • முக்கிய சந்திப்புகளில் கூடுதல் கண்காணிப்பு
    • ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு

    நாகர்கோவில்:

    கோவை மதுரை சேலம் பகுதிகளில் பாரதிய ஜனதா பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கல்யாண சுந்தரம் (வயது 55) என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கல்யாணசுந்தரம் வீட்டில் குண்டு வீசியது தொடர்பான வழக்கில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து குளச்சல் பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகி றார்கள்.

    இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகி றார்கள். ஆரல்வா ய்மொழி களியக்காவிளை அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    இதேபோல் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வாகன சோதனை நடந்து வருகிறது. போலீசார் இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலோர கிரா மங்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    முக்கிய சந்திப்புகள் மற்றும் கலெக்டர் அலுவலக பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பாரதிய ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி வெள்ளாடிச்சி விளையில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்பட முக்கிய நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பாரதிய ஜனதா பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு எதிெராலி
    • கோவில்கள், தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு

    நாகர்கோவில்:

    கோவையில் பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது‌.

    இதைத்தொடர்ந்து மதுரை, சேலம், பகுதி களிலும் பாரதிய ஜனதா பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டு உள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. இதை யடுத்து தமிழகம் முழு வதும் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்திலும் பாது காப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    இதையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். நாகர்கோவில் கன்னி யாகுமரி குளச்சல் தக்கலை சப் டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு போலீசார் 2 ஷிப்டுகளாக ரோந்து சுற்றி வந்தனர். இன்று காலையிலும் பாது காப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.

    நாகர்கோவிலில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கிறார்கள். வடசேரி, பார்வதிபுரம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டி குளம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, அண்ணா சிலை, ஒழுகினசேரியில் உள்ள பெரியார் சிலை, வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலை உட்பட நாகர்கோவில் நகரில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகரில் உள்ள முக்கிய சாலைகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட முக்கிய மான கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். கன்னியா குமரியிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிரா மங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், திருவட்டார் ஆதிகேச பெருமாள் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டது. ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களில் போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.

    வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களை சோ தனை செய்தனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    • மணல் கடத்தலுக்கு உடந்தையாய் இருந்ததால் நடவடிக்கை
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பவங்கள் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அஞ்சுகிராமம் பகுதியில் செம்மண் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    செம்மண் கடத்தல் கும்ப லோடு அஞ்சுகிராமம் போலீஸ் நிலைய தலைமை காவலர் லிங்கேஷ் என்ப வருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இந்த நிலையில் தலைமை காவலர் லிங்கேஷ் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பிறப்பித்து உள்ளார்.

    • கலெக்டர் அரவிந்த் வழங்கினார்
    • மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாண வியர்களுக்கிடையே நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய போது கூறியதாவது:-

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போ ட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிர மும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயி ரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், சிறப்பு பரிசாக தலா 2 நபர்களுக்கு ரூ.2 ஆயிரமும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு ப்போட்டி மற்றும் கட்டு ரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில், கலைஞர் பிறந்த நாளை யொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் பேயன்குழி அரசு உயர்நி லைப்பள்ளி மாணவி ஹரிசபரிஷா முதல் பரிசும், நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர் லீனஸ்ஷேரன் 2-ம் பரிசும், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தனா 3-ம் பரிசும், மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி ஸ்ரீமதி மற்றும் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி பபினாசெர்லின் ஆகி யோருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

    மேலும், கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டிகளில் இந்துக்கல்லூரி மாணவி ஈஸ்வரபிரியா முதல் பரிசும், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மாணவி சுப்புலெட்சுமி, 2-ம் பரிசும், முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி விஜித்ரா மூன்றாம் பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மேலும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரை ப்போட்டியில் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி பிறைஸ்னீம் முதல் பரிசும், கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பிரம்ம அக் ஷயா 2-ம் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிவபிரியா, 3-ம் இடத்தை பெற்றார்கள்.

    பேச்சுப்போட்டிகளில் நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ரஷ்மி முதல் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுகைனா பாத்திமா 2-ம் இடத்தையும், தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அகஸ்தியா மூன்றாம் பரிசும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    நடைபெற்ற போட்டி களில் பரிசு பெற்ற அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை தெரி வித்துக்கொள்வதோடு, இதுபோன்று மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    நிக ழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பி ரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, தனித்துணை கலெ க்டர் (ச.பா.தி) திருப்பதி, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • புத்தன் அணையில் 21.6 மி.மீ. பதிவு
    • மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சாரல் மழை பெய்து வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.

    பேச்சிப்பாறை, பெரு ஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் நேற்று மழை பெய்தது. புத்தன் அணை பகுதியில் ஒரு மணி நேரத்து க்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    அங்கு அதிகபட்சமாக 21.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கொட்டா ரம், குழித்துறை, கோழிப்போர்விளை, அடை யாமடை, முள்ளங்கினா விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    சுசீந்திரம், சாமிதோப்பு, கொட்டாரம் பகுதிகளில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் மிதமான அளவும் தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை கள் நீர்மட்டம் முழு கொள்ள ளவை எட்டி உள்ள நிலையில் அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.56 அடியாக உள்ளது. அணைக்கு 699 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.10 அடியாக உள்ளது. அணைக்கு 45 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 575 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு1 அணை நீர் மட்டம் 12.33 அடியாகவும், சிற்றாறு2 அணையின் நீர் மட்டம் 12.43 அடியா கவும் பொய்கை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்பழ த்துறையாறு அணையின் நீர்மட்டம் 38.30 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி, சிற்றாறு1 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகி றது. நாக ர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்ம ட்டம் 14.20 அடியாக உயர்ந்துள்ளது.

    • பூஸ்டர் தடுப்பூசியை அதிகமானோர் போட்டுக்கொண்டனர்
    • தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்பணி மீண்டும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    தடுப்பூசி முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    குமரி மாவட்டத்திலும் 1660 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் முதல் டோஸ் தடுப்பூசி 82 சதவீதம் மட்டுமே செலுத்தி உள்ளனர். 2-வது தவணை தடுப்பூசி 72 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர். செலுத்தாதவர்கள் விவர ங்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கழிந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு அதிகமான இளைஞர்கள், இளம்பெண்கள், வாலிப ர்கள் வந்திருந்தனர்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மிக குறைவான நபர்களே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். முதல் டோஸ் தடுப்பூசி 39 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 140 பேரும், 3-வது தவணை தடுப்பூசி 1112 பேரும், 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒருவரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் 9 பேர் என 1301 மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    மேல்புறம் யூனியனில் அதிகபட்சமாக 2656 பேருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2319 பேர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி உள்ளனர்.

    தோவாளை தாலுகாவில் குறைந்தபட்சமாக 1154 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் 949 பேர் பூஸ்டர் தடுப்பூசியும், 50 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 153 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த தடுப்பூசி முகாமில் 995 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 1880 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும், 14683 பேர் 3-வது தவணை தடுப்பூ சியும் செலுத்தியுள்ளனர்.

    15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 22 பேரும், 12 முதல் 14 வயது உட்பட்டவர்கள் 88 பேரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 17668 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்னும் அதிகமான நபர்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளது தெரியவந்துள்ளது தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள சிறப்பு மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை கொட்டியது.

    குறிப்பாக அணை பகுதி களிலும் மலையோர பகுதி களிலும் கொட்டி தீர்த்த மழையின் காரண மாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அணைகள் நிரம்பி வந்ததையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.

    பேச்சிப்பாறை, அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது மழை சற்று குறைந்ததையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டு உள்ளது. மதகுகள் வழியாக மட்டும் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார், தக்கலை பகுதிகளில் நேற்றிரவும் சாரல் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.32 அடியாக உள்ளது. அணைக்கு 827 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 283 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.25 அடியாக உள்ளது. அணைக்கு 501 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 575 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.46 அடியாக வும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.56 அடியாகவும் உள்ளது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அணையில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வரு கிறார்கள்.விடுமுறை தினமான இன்று குமரி மாவட்ட மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்று லா பயணிகள் திற்பரப்பு அருவியில் குவிந்திருந்தனர்.

    • 13 மணி நேரத்தில் 55 கிலோ மீட்டர் பயணம்
    • எளிமையான பழக்கத்தால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை ராகுல்காந்தி கடந்த 7-ந் தேதி தொடங்கினார்.குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக அவர் பாத யாத்திரை மேற்கொண்டார்.55 கிலோ மீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் கடந்து நேற்று கேரளா எல்லை பகுதிக்கு ராகுல் காந்தி சென்றார்.

    இன்று காலை ராகுல் காந்தி குமரி மாவட்ட எல்லையான செருவார கோணத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்ட போது சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அவரை கண்டுகளித்தனர்.

    சாலையின் இரு புறமும் நின்று கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விளையாட்டு வீராங்கனைகள், பள்ளி மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பி னருடனும் ராகுல் காந்தி செல்பி எடுத்து மகிழ்ந்தார். தொண்டர்களையும் அவர் உற்சாகப்படுத்தினார். தினமும் ஓய்வு நேரங்களில் ஒவ்வொரு தரப்பு மக்க ளையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்ட றிந்தார். விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசு ஊழியர்கள், மீனவப் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் ராகுல் காந்தியிடம் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவரும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தரப்பினரிடமும் உறுதி அளித்து உள்ளார்.

    100 நாள் வேலைத்திட்ட பெண்களிடம் கலந்துரை யாடிய ராகுல்காந்தி அவர்களுடன் தரையில் அமர்ந்து பேசினார்.இது பார்ப்பவர்களை கவரும் வகையில் இருந்தது. பாத யாத்திரையின்போது சாலை யோர டீக்கடை ஒன்றிலும் டீ குடித்து அசத்தினார். இளநீர் பருகியும் தனது தாகத்தை தீர்த்துக் கொண்டார்.

    குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் ராகுல் காந்தியை சந்தித்து உள்ள னர். மாவட்ட எல்லையான தலச்சன்விளையில் குமரி மாவட்ட பாத யாத்திரையை நிறைவு செய்து பேசிய ராகுல் காந்தி தமிழக மக்கள் மீது தனக்கு தனி ஈடுபாடு உண்டு என்றும், உங்களை விட்டு பிரிந்து செல்வது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும் பேசியது தொண்டர்களை மட்டுமின்றி பொது மக்க ளையும் கவர்ந்தது.

    ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையானது 2024 பாராளுமன்ற தேர்தலை நோக்கியே மேற்கொண்டு உள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஏற்க னவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்து வருகிறது. பத்மநாபபுரம் தொகுதி காங்கிரஸ் கூட்டணியான தி.மு.க. வசம் உள்ளது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூ பிக்க ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஒரு உத்தி யோகமாக இருக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ராகுல்காந்தியின் பாத யாத்திரையானது காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்துள்ளது.

    • அமைச்சர் மனோதங்கராஜ்-மேயர் மகேஷ் கூட்டறிக்கை
    • தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை செல் கிறார். இந்த நிகழ்ச்சி நாளை கன்னியாகுமரியில் தொடங்குகிறது. இந்த பாத யாத்திரையை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக் கிறார். இது குறித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ருமான மனோதங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான வக்கீல் மகேஷ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரியில் நடை பெறும் காங்கிரஸ் பேரியக் கத்தின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாத யாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக நாளை (7-ந்தேதி) குமரிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குமரி வருகிறார். குமரி வருகை தருவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்க மாக குமரிக்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சருக்கு குமரி எல்லையான காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் வைத்து குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் எங்களது தலைமையில் காலை 11 மணிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    ஆகவே குமரிக்கு வருகை தரும் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சரை வரவேற்பதற் காக மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளைக்கழக நிர்வாகிகளும் மற்றும் அனைத்து அணிகளின் நிர் வாகிகளும், பொதுமக்க ளும் பெருந்திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும், அதன்பிறகு மாலையில் நடைபெறும் ராகுல்காந்தி யின் பாதயாத்திரை நிகழ்ச்சி யில் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி யிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் அவர்கள் கூறி உள்ளனர்.

    • கே.எஸ்.அழகிரி இன்று பார்வையிட்டார்
    • ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.பாதயாத்திரை தொடக்க விழா வருகிற 7- தேதி கன்னியாகுமரியில் நடக்கிறது.

    இதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குமரி மாவட்டத்தில் முகாமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

    ராகுல் காந்தியை வரவேற்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுக்களுடன் கே.எஸ் அழகிரி நாகர் கோவிலில் ஆலோசனை நடத்தினார்.

    இதை தொடர்ந்து இன்று காலை கன்னியாகுமரிக்கு சென்ற கே.எஸ்.அழகிரி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடப்பதை அழகிரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், எம்.பி.க்கள் விஜய் வசந்த், திருநாவுக்கரசு, ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • இம்மாத்திரைகள் உட்கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு குடற்புழுக்கள் இருந்தால் ரத்த சோகை ஏற்பட்டு எடை குறைவுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

    மேற்கண்ட குறை பா டுகளை களைவதற்கு வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை கொடுப்பதுடன் கை கழுவுதல், கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் தன் சுத்தம் பேணுதல் ஆகி யவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்ப டும் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபா டுகளை நீக்கலாம்.

    இந்த வருடம் வருகிற 9-ந்தேதி அன்று 1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வய திலுள்ள பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல் பண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கைஎடுக் கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தினை முழுமையாக நல்ல முறையில் செயல்ப டுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை, கல்வித் துறை மற்றும் ஊட்டச்சத்து துறை இணைந்து செயல் பட அறிவுறுத்தப்பட்டுள் ளனர். அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற் றும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், கல்லூரி யில் பயிலும் மாணவர் களுக்கு கல்லூரியில் வைத்து மதிய உணவுக்குப்பின் ஒரு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பள்ளி கும், 20 வயது முதல் 30 வயது உள்ள பெண்கள், கல்லூரி செல்லா பெண் களுக்கு ஊட்டச்சத்து மையத்திலும், துணை சுகாதார நிலையத்திலும் 9 மணி முதல் 2 மணி வரை வழங்கப்படுகிறது. மாணவர்கள் மாத்திரைகள் உட்கொண்டார்கள் என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட் டுள்ளது. இந்த மாத்தி ரையை கடித்து சுவைத்து சாப்பிடவேண்டும்.

    குமரி மாவட்டத்தில் சுமார் 6,19,455 குழந்தைகளும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 75,043 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 94 ஆயிரத்து 498 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான மாத்தி ரைகள் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நல்ல முறையில் செயல்படுத்தும் விதமாக நேற்று மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் அனைத்து துறைகளையும் சார்ந்த அலுவலர்களின் ஒருங் கிணைப்பு குழு கூட்டமானது நடைபெற்றது.

    இம்மாத்திரைகள் உட் கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்ப டுவதில்லை. மாத்திரை வழங்கப்படும் வருகிற 9-ந்தேதி அன்று உடல் நலக்குறைவோ அல்லது மற்ற காரணங்களால் மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு 16-ந்தேதி அன்று மாத்திரை வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதனை உறுதி படுத்தி அவர்களது நல் வாழ்விற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை
    • பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    12 மாநிலங்கள் வழியாக 150 நாள் பயணமாக இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி வருகிற 7-ந் தேதி மாலை 3மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது .

    இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்த வும் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.

    பின்னர் ராகுல் காந்தி அன்று கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறார்.குமரி மாவட்டத்தில் 7,8,9,10-ந் தேதிகளில் அவர் பாதயா த்திரை மேற்கொள்கிறார்.

    11-ந் தேதி காலை திருவனந்தபுரம் வழியாக கேரளா செல்கிறார். குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி 4 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குமரி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

    இதைத்தொடர்ந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் இங்கே முகாமிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி குமரி மாவட்டம் வந்தார்.நாகர்கோவிலுக்கு வந்த அவர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்று வரும் பணி களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அங்கு 2-வது நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ராகுல் காந்தி அந்த மைதானத்தில் கேரவன் வேனில் தங்கு கிறார்.

    ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை வரும் நிர்வாகிகள் தங்குவதற்கும் அங்கு பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.அந்த பணிகளை கே.எஸ்.அழகிரி இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள இடங்க ளை பார்வையிட்ட அவர் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் விவரங்களையும் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வை யாளர் குண்டு ராவ், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, செல்லக்குமார், ஜெயக்குமார், எம்.எல். ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், மாவட்டத் தலை வர்கள் நவீன் குமார், கே.டி. உதயம், பினுலால்சிங் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையின் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை அவர் மேற்கொள்ள உள்ள பாதயாத்திரை நிகழ்ச்சி களில் சாலையின் இருபுற மும் கட்சியினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் இதற்காக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழகிரி கேட்டுக்கொண்டார்.

    ராகுல் காந்தி வரவேற்பு ஏற்பாடுகளை கண்காணிக்க 18 எம்.பி. எம்.எல். ஏ.க்கள் தலைமையில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

    ×